சற்று நேரத்துக்கு முன்னர் இலங்கையின் பல பகுதிகளிலும் நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வினை உணரக் கூடியதாக இருந்தது.
இந்த நில அதிர்வானது பண்டாரவளை, அட்டாம்பிட்டிய, நுவரெலியா, பொத்துவில், அம்பாறை, கல்முனை, கண்டி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கம் தொடர்பான உத்தியோகபூர்வமான செய்திகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இது குறித்த மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக, இலங்கை நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.