வன்னியில் உள்ள மக்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அறிவிக்கப்பட்ட 48 மணி நேர போர் நிறுத்த காலத்தில் இன்று 40 பொதுமக்கள் மாத்திரமே படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் வடமராட்சி கிழக்கிலிருந்து படகு மூலம் வடமராட்சி, பருத்தித்துறை முனைப் பகுதிக்கு கடல் மார்க்கமாக 26 பேரும், வவுனியாவுக்கு தரை மார்க்கமாக 14 பேரும் வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பருத்தித்துறைக்குச் சென்ற 26 பொதுமக்களும் தென்மராட்சியிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக யாழ். செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.