இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதி – சாதனை படைத்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாதுரி நிரோசன் !

இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண்மணி ஒருவர் தேர்வாகியுள்ளார்.

 

வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாதுரி நிரோசன் எதிர்வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

யா/சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 31வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இலங்கை வரலாற்றில் ஓர் இளம் தமிழ் பெண் நீதிபதியாக மாதுரி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளமை தமிழ் மக்கள் அனைவராலும் பெருமைப்படத்தக்க விடயமாகும்.

 

இந்நிலையில் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில், மாதுரி அகில இலங்கை ரீதியில் இவர் 12ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். இந்நிலையில் பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *