காஸாவில் 22 இலட்சம் பேருக்கு உணவு தேவைப்படுகிறது – ஐ.நா

காஸாவில் 22 இலட்சம் பேருக்கு உணவு தேவைப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

 

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பாலஸ்தீனத்தின் காஸாவில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது எதிர்பாராத திடீர் தாக்குதல் நடத்தினா்.

 

இதில் இஸ்ரேலை சோ்ந்த சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா். மேலும், இஸ்ரேலில் இருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்களை பணயக்கைதிகளாக ஹமாஸ் படையினா் பிடித்துச்சென்றனா்.

 

இதைத் தொடா்ந்து, காஸா மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

 

காஸாவில் உள்ள மருத்துவமனைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தற்போது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே தற்காலிக போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

 

இந்நிலையில், காஸா நிலவரம் குறித்து தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்து வரும் நிலையில், ஐ.நா. உணவு அமைப்பு, காஸாவில் தற்போது 22 இலட்சம் பேருக்கு உணவு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.

 

மேலும், அங்கு மக்கள் உணவு, எரிபொருள் இன்றி தவிப்பதாகவும் அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.

 

தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், மருத்துவமனைகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் எகிப்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

மருத்துவமனையை ஹமாஸ் அமைப்பினர் தங்களது செயற்பாட்டிற்காக பயன்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டி வரும் இஸ்ரேல் இராணுவம், மருத்துவமனைகளில் சோதனை நடத்தி வருகிறது.

 

இரண்டு மூன்று சுரங்கங்கள் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *