புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டங்களின் போது நடைபெற்ற விபத்துக்களில், 202 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை 6.00 வரையான 24 மணி நேரத்தில் மட்டும் 75 பேர் மேற்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.