தற்போது ஏற்பட்டுள்ள தோல்வியை முழுமையாக ஏற்றுக் கொண்டு ஆயுதங்களை கீழே வைத்து விட்டு அரசாங்கத்திடம் சரணடைவதற்கு இந்த தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு அரிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு பாரிய துன்பங்களுக்கு முகங்கொடுத்து வரும் அப்பாவி மக்கள் தேசியப் புத்தாண்டைப் பொருத்தமான முறையில் கொண்டாட வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.
இதன் காரணமாகப் புத்தாண்டு காலப் பகுதியில் அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாத்திரம் அதிக கவனம் செலுத்தும்படி படை நடிவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது