இலங்கை அரசு அறிவித்துள்ள தாக்குதல் நிறுத்தத்தை விடுத லைப்புலிகள் முறைப்படி அனு சரித்துச் செயற்பட்டால், போர் நிறுத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர அது உதவும் என்று இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கை தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தமை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்று கொண்டுவரப் படவேண்டும் என்று இந்தியா இலங்கையைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தது.
போர் நிறுத்தம் இரு தரப்புகளும் சம்மதித்தாலேயே நடைமுறைப்படுத்த முடியும் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த அறிவிப்பை உடன் வெளியிடவேண்டும். தாக்குதல் இடைநிறுத்தம் இரு நாள்களில் முடிவடையாமல் தொடரவேண்டும் என்பதனையே சமாதானத்தை விரும்பும் அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள்.
தாக்குதல் இடைநிறுத்தம் சிறிய அளவிலாளன செயற்பாடுதான். ஆனால் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும். நாம் தொடர்ந்து வழங்கிய அழுத்தத்தினாலேயே இலங்கை அரசு இரண்டு நாள்களும் தாக்குதல் இடைநிறுத்தத்தை அறிவித்தது. ஆனால் விடுதலைப்புலிகளும் இந்தியாவின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டால், நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர நாம் எடுக்கும் முயற்சி பலன் தரும் என்றார் அமைச்சர் சிதம்பரம்.