ஹமாஸ் அல் கொய்தாவை விட பயங்கரமான அமைப்பு என்பதில் சந்தேகமே இல்லை – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலானது அல் கொய்தாவை விட பயங்கரமானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 8 நாட்களாக ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலிற்கும் கடுமையான போர் நடைபெற்று வருகின்ற நிலையில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட பல நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது பெரிய போர் கப்பலை இஸ்ரேல் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது. இந்தநிலையில், இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல் குறித்த முழு விவரங்களை கேட்க கேட்க, அல் கொய்தாவை விட ஹமாஸ் பயங்கரமான அமைப்பு என்பதில் சந்தேகமே இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது,

“நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம் என்பதிலும் சந்தேகமே வேண்டாம். அமெரிக்க உள்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் மற்றும் இராணுவ செயலர் லாயிட் ஆஸ்டின் இஸ்ரேலுக்கு நேரில் சென்றுள்ளனர். அதேவேளை, பதில் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்க தயாராக உள்ளது. பாலஸ்தீனத்தின் பெரும் பகுதி மக்கள் ஹமாஸிற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது.

இப்போரில் காணாமல் போயிருக்கும் அமெரிக்கர்களை குறித்து அவர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு நான் ஆறுதல் கூறியுள்ளேன். அத்தோடு, அவர்களை மீட்க அமெரிக்கா அனைத்தையும் செய்ய தயாராக உள்ளது என நம்பிக்கை தெரிவித்துள்ளேன்” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *