அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்: பிரதமர் மன்மோகன் சிங்

singh.jpgமும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளின் தொடர்பு நிச்சயம் உள்ளது. அவர்களின் உதவி இல்லாமல் தீவிரவாதிகளால் இந்த செயலை செய்திருக்க முடியாது. தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் (06) உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான மாநில முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். இதில் பிரதமர் பேசுகையில், சில பாகிஸ்தான் அமைப்புகள், அதிகாரிகளின் உதவி இல்லாமல் மும்பைத் தாக்குதல் நடந்திருக்க முடியாது. மும்பைத் தாக்குதல் நடந்த விதம், அதில் ஈடுபட்டோர் செயல்பட்ட விதம் ஆகியவற்றைப் பார்க்கும்போது, நிச்சயம் சில பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அதில் தொடர்பு இருப்பது நிரூபணமாகிகிறது.

தீவிரவாதத்தை ஒரு கொள்கையாகவே பாகிஸ்தான் வைத்துள்ளது. தீவிரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது பாகிஸ்தான். அதேபோல வடகிழக்கில் ஊடுறுவும் தீவிரவாதிகள் நமக்கு அருகாமையில் உள்ள இன்னொரு நாட்டிலிருந்துதான் (வங்கதேசம்) வருகின்றனர். அந்த நாடு, தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து புகலிடமாக திகழ்கிறது.

நமது அண்டை நாடுகளில் தீவிரவாதத்திற்கு ஆதரவான நிலை நிலவுகிறது. சில நாடுகளில் நிலைமை சரியில்லை. தீவிரவாதிகளை அவர்கள் கட்டுப்படுத்துவதில்லை. மும்பை போன்ற தீவிரவாத செயல்களை தடுப்பதற்கு நிரந்தரமான நெருக்கடி நிலை நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. நமது புலனாய்வு அமைப்புகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் அவசியமானது, முக்கியமானதாகும் என்றார் மன்மோகன் சிங்.

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது

batti-mayer.jpgமட் டக்களப்பு மாவட்டத்தில் ஞயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த இரண்டு நாள் இடம்பெற்ற இந்து இளைஞர் பயிற்சி முகாமில் பங்குபற்றிவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது.
 
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் 174 அறிநெறி பாடசாலைகள் இயங்குகின்றன. ஞாயிற்று கிழமைககளில் தனியார் வகுப்புக்கள் இடம்பெறுவதால் அறநெறி பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையல்ல

kili-04.jpgஎமது பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளிடமிருந்து கிளிநொச்சியைக் கைப்பற்றியது தமிழ் மக்களுக்கோ சிறுபான்மை இனத்தவர்களுக்கோ எதிரான வெற்றியன்றி அனைத்து மக்களுக்குமான தேசிய வெற்றியாகும். அன்று தெற்கில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தெற்கு மக்களுக்கு எதிரான நடவடிக்கையல்ல அதுபோல் இன்று வடக்கின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. இன்று வடபகுதியில் இடம்பெறுவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளின் போராட்டமன்றி நாட்டின் இறைமை, சுதந்திரம், ஐக்கியம், தேசியத்தைக் காப்பாற்றுவதற்கான தேசிய போராட்டமாகும் என மேல்மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

மேல் மாகாண பிரதம செயலாளர் பணிமனையின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை இடம்பெற்ற கிளிநொச்சியை வெற்றிகொண்ட பாதுகாப்புப் படையிரைப் பாராட்டி ஆசீர்வதிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

நாட்டின் சுதந்திரம் ஐக்கியத்தைக் காப்பதற்காக கிராமப் புறங்களைச் சேர்ந்த வறிய குடும்பங்களின் புத்திரர்கள் உயிர்த் தியாகம் செய்கின்றனர். பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்கின்றனர். எமது படையினரின் வெற்றி அன்று போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்து 500 வருட கால ஆக்கிமிப்பிலிருந்து நாடு பெற்ற வெற்றிக்குச் சமனாகும். வெற்றி பெற முடியாது எனக் கூறப்பட்ட முப்பதாண்டு கால யுத்தத்தைத் வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும் ஜனாதிபதி தேசத்தின் அரச பரம்பரையில் உருவான ஒரு அரசனாவார். தீவிரவாதிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றுக்கு அடிபணியாத ஜனாதிபதியை நாம் பாராட்டல் வேண்டும்.

நாடொன்றின் அபிவிருத்திக்கு பொருளாதாரக் கொள்கைகள் மாத்திரம் போதாது. தேசப்பற்றும் அபிமானமும் அவசியமுமாகும். உலக பொருளாதார நெருக்கடியால் தற்போது உச்ச நிலையிலிருந்த நாடுகள் கூட கீழ் நோக்கி இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எம்முடைய நாடு என்ற சித்தாந்தத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமானதாகும். பொருளாதார சிந்தனைகளுடன் தேசாபிமான சிந்தனைகளால் தான் தேசமொன்றை அபிவிருத்தி செய்ய முடியும். பல உலக நாடுகளும் இவ்வாறு தான் அபிவிருத்தியடைந்துள்ளன என்றார்.

புலிகளுக்கு தடை – பேச்சுகளுக்கான கதவை ஒருபோதும் மூடவில்லை -அரசாங்கம் அறிவிப்பு.

pre-con.jpgவிடுதலைப் புலிகள் இயக்கம் (எல்.ரி.ரி.ஈ.) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்றிரவு (07) முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (07) இது தொடர்பில் சமர்ப்பித்துள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியதையடுத்து உடனடியாக அவ்வியக்கம் தடை செய்யப்பட்டதாக அரசாங்கம் நேற்றிரவு அறிவித்தது.

இத்தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டுப் புலிகள் இயக்கம் பேச்சுக்கு வரமுடியுமென அறிவித்துள்ள அரசாங்கம் மீதான இத்தடை அரசியல் ரீதியான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எவ்விதத்திலும் தடையாக அமையாதெனவும் தெரிவித்தது. அமைச்சரவையின் மேற்படி தீர்மானத்தை ஊடகவியலாளர்களுக்கு அறிவிககும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றிரவு தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இம்மாநாட்டில் அமைச்சர்கள் மைத்திரி பாலசிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, ரோஹித போகொல்லாகம, ஏ. எல். எம். அதாவுல்லா, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்த சமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர்கள், விடுதலைப் புலிகளை இலங்கையில் ஒழித்து விடலாம். எனினும் சர்வதேச ரீதியில் அவ்வமைப்பின் சகல செயற்பாடுகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்த இத்தடை உறுதுணையாக அமையுமென தெரிவித்தனர்.

உலக நாடுகள் பயங்கரவாதத்துக்கெதிராக மும்முரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுடன் 24 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய யூனியனும் புலிகளைத் தடை செய்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்நாடுகளோடு இணைத்து செயற்படவும் இந்தடை பெரும் வாய்ப்பாக அமையும் எனவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் 2009/1 ஆம் இலக்க சரத்துக் கிணங்கவே புலிகள் மீதான இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

maithiri-pala.jpgவிடுதலைப் புலிகளை தடை செய்வதற்கான பிரதான காரணம் குறித்து அமைச்சரவையின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான மைத்திரிபால சிறிசேன  கூறுகையில்;  இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் அப்பாவிப் பொதுமக்களை வரையறுக்கப்பட்டதொரு பிரதேசத்திற்குள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி பலவந்தமாக பிடித்து வைத்துக் கொண்டு அம் மக்களின் உயிர்களையும் சுதந்திரத்தையும் ஆபத்துக்குள்ளாக்க வேண்டாமென்றும் பொதுமக்களுக்கு வழங்கும் அவசர நிவாரணங்களுக்கும் மனிதாபிமான உதவிகளுக்கும் தடங்கல்களை விளைவிக்க வேண்டாமென்றும் இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் விடுதலைப் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தன.

விடுதலைப் புலிகளால் சட்ட விரோதமாக நிர்வகிக்கப்படும் பிரதேசத்தினுள் சிறை பிடித்தோ அல்லது ஏதாவது இடத்திற்குள் மட்டுப்படுத்தியோ வைத்திருக்கும் பொது மக்களை, அப்பிரதேசத்திலிருந்து பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்களுக்கு செல்ல இடமளிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தினால் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் அவர்கள் அதனை அலட்சியம் செய்துள்ளனர்.

அத்துடன், விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சாதாரண மக்களை சட்ட விரோதமாக சட்ட விரோதமான முறையில் அந்த அமைப்பின் போராளிகளாக பலவந்தமாக இணைத்துக் கொண்டதன் மூலம் அம் மக்களின் உயிர்களுக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளனர். இவற்றின் அடிப்படையிலேயே இந்த தடை குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இன்று (நேற்று) முதல் புலிகள் தடை செய்யப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படுகிறது’ என்றும் அமைச்சர் சிறிசேன சுட்டிக்காட்டினார்.

anura-priyatharsana.jpgஇதேநேரம், இங்கு விளக்கமளித்த ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அநுரபிரியதர்சன யாப்பா தெரிவிக்கையில்; “இந்த ஒழுங்கு விதியானது 2009 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசர கால (தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யும்) ஒழுங்கு விதியென அடையாளம் காட்டப்படும். இதன் மூலம் “தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்ற பெயரும் அதனைப் பெயராகக் கொண்டிருக்கும் அமைப்பும் தடைசெய்யப்படுகிறது. எனவே, இலங்கையிலோ அல்லது அதற்கு வெளியிலோ எவராவது ஒருவர் விடுதலைப் புலிகளுக்காகவோ அல்லது அந்த அமைப்புக்காக செயற்படும் நிறுவனத்திலோ உறுப்பினர் அல்லது சிப்பாயாவது அல்லது தலைமைத்துவம் வழங்குவது, சீருடை, அடையாளம், இலட்சினை, கொடி போன்றவற்றை அணிதல், காட்சிப்படுத்தல், உயர்த்துதல் அல்லது தன்வசம் வைத்திருத்தல்; கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்வது, கூட்டம் கூட்டுவது அல்லது அதில் கலந்துகொள்வது; அங்கத்துவம் பெறுவது அல்லது இணைவது; உறுப்பினருக்கோ, சிப்பாய்க்கோ அல்லது வேறு நெருங்கியவருக்கோ புகலிடம் வழங்குதல், அவரை பாதுகாத்து வைத்திருத்தல், அவருக்கு உதவியளித்தல்; ஊக்குவித்தல், மேம்படுத்தல், உதவியளித்தல், ஆலோசனை வழங்குதல் மற்றும் அதற்காக செயற்படுதல் போன்ற ஏதாவதொரு செயற்பாட்டையோ அல்லது நிகழ்வை ஏற்பாடு செய்தல் அல்லது அதில் கலந்து கொள்ளல்; பணம் அல்லது பொருள் அன்பளிப்பு செய்தல் அல்லது அதற்கு பங்களிப்பு செய்தல்; பொருட்களை விநியோகித்தல், களஞ்சியப்படுத்தல், போக்குவரத்தில் ஈடுபடுத்தல் அல்லது பகிர்ந்தளித்தல்; ஆதாரத்துக்கோ அல்லது பிரதிநிதித்துவத்துக்கோ உதவியளித்தல் போன்ற ஏதாவதொரு கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுதல்; அதற்காக தகவல்களை பிரசாரப்படுத்தக்கூடாது.

இந்த விதிகளை மீறி செயற்படுவோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கொழும்பில் செயற்படும் மேல் மாகாண மேல் நீதி மன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் பட்சத்தில் 20 வருடங்களுக்கும் மேற்படாத சிறைத் தண்டனை வழங்கப்படும்’ என்று கூறினார். இதேநேரம், இந்த விதிகளுக்கு அமைய தவறிழைத்தல், தவறிழைக்க முயற்சித்தல், அதற்கான உதவி உபகாரங்களை வழங்குதல் அல்லது அதற்கான சூழ்ச்சியில் ஈடுபடுவோர் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு 10 வருடங்களுக்கும் மேற்படாத சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எவராவது ஒருவர் இந்த விதிகளின் கீழ் ஏதேனும் தவறிழைக்கும் பட்சத்தில் அதன்போது தவறை இழைக்க நேரடியாக பொறுப்பு கூற வேண்டியவருக்கு அப்பால் சம்பந்தப்பட்ட நடவடிக்கையுடன் தொடர்புடைய அனைவரும் குறித்த தவறுக்கான குற்றவாளிகளாகவே கருதப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. அது மட்டுமல்லாது தடை செய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கும் ஏதாவது நிதியோ, வைப்போ அல்லது கிடைக்க வேண்டிய கடனோ எவரது பொறுப்பிலும் இருக்கும் பட்சத்தில் அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் அமைச்சரின் எழுத்துமூல நியமத்தினூடாக அவரது பொறுப்பிலுள்ள மற்றும் நியமத்தின் பின்னர் பொறுப்பின் கீழ் வரவிருக்கும் நிதியோ, வைப்போ அல்லது கிடைக்க வேண்டிய கடனோ மற்றும் அந்த அமைப்பிற்குரிய வேறு ஏதேனும் அசையும் மற்றும் அசையா சொத்துகளும் அரச உடமையாக்கப்பட வேண்டும் என்றும் இந்த விதிகள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இதேநேரம், சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கையில்; புலிகள் சமாதான பேச்சுகளுக்கு வருவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. ஆயுதங்களை கீழே வைத்து விட்டு வருமாறு ஜனாதிபதி புலிகளுக்கு பல தடவைகள் அழைப்பு விடுத்தார். எனினும், அவர்கள் அதைப் புறக்கணித்து செயற்பட்டமையாலேயே இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டி நேர்ந்தது. புலிகளுக்கு வாய்ப்புகள் பல வழங்கியும் அவர்கள் அதற்கு செவிமடுக்காததாலேயே வேறு மாற்று வழியின்றி அரசாங்கம் இந்த கடுமையான நடவடிக்கைக்குள் சென்றது.

மனிதாபிமான உதவிகளுக்கு பாதிப்பில்லை

இதேநேரம், அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தினால் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. அவசர வைத்திய சிகிச்சை வசதிகள், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்கு எந்தப் பாதிப்பும் இதனால் ஏற்படாது.

பேச்சுகளுக்கான கதவை அரசாங்கம் ஒருபோதும் மூடவில்லை

எவ்வாறிருப்பினும் பேச்சுகளுக்கான கதவை அரசாங்கம் ஒருபோதும் மூடவில்லை. பேச்சுகளுக்கு புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு வர வேண்டும். ஜனாதிபதியும் ஏற்கனவே பேச்சுகள் பற்றிய நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். எனவே, இப்போதும் எந்த தாமதமும் இல்லை. புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பேச்சுகளுக்கு வரலாம்’ என்று கூறினார்.

0301-ltte.jpgவிடுதலைப் புலிகள் 1998 ஆம் ஆண்டு கண்டி தலதா மாளிகை மீது மேற்கொண்ட வாகனக் குண்டுத் தாக்குதலையடுத்து இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதுடன், 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் 2002 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 6 வருடங்களின் பின்னர் மீண்டும் விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கம் நேற்று நள்ளிரவு முதல் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலிகள் அமைப்பை தடைசெய்வது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் -அமைச்சர் கெஹலிய

kkhaliya.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்வது தொடர்பான முடிவு இன்று புதன்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தின்போது எடுக்கப்பட விருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். விடுதலைப்புலிகளை இலங்கை அரசு தடைசெய்ய வேண்டுமென நீண்டகாலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும் புலிகள் ஜனநாயக வழிக்கு திரும்புவதற்காக போதுமான கால அவகாசத்தை அரசாங்கம் வழங்கியது. ஆனால், அவர்கள் அதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டனர். இப்போது புலிகளை தடைசெய்தேயாக வேண்டிய நேரம் வந்துவிட்டது.

விடுதலைப்புலிகளை தடைசெய்வது அவசரகால விதிகளின் கீழா அல்லது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அடிப்படையிலா என்பது குறித்து அரசாங்கம் சட்டஆலோசனைகளை தற்போது ஆராய்ந்து வருகின்றது. இன்று புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடும் அமைச்சரவைக்கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படவிருக்கிறது எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி கண்டி தலதா மாளிகையை புலிகள் தாக்கியபோது அந்த இயக்கத்தை அரசு தடைசெய்திருந்தது. அதன்பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்து கொண்டதால் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுக்கும் பொருட்டு 2002 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி தடைநீக்கப்பட்டது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைக்காத பயங்கரவாத இயக்கமாகவே புலிகள் இயக்கம் தொடர்ந்து காணப்படுகின்றது. அவர்களுக்கு அவர்களின் பாஷையிலேயே பதிலளிக்கப்பட வேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மீட்பு வெற்றி ஐ.தே.கட்சிகே சொந்தமானது – எஸ்.பி. திஸாநாயக்க

sbdisanayakka.jpg“தமிழீழ விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுக்கு அழைத்து பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம்” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியை கைப்பற்றிய படையினர் மற்றும் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம். படையினர் பெற்ற வெற்றி பாராட்டுக்குரியதுதான். ஆனால் இந்த வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசேயாகும்.

2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டுடன் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்து விடுதலை புலிகளை சமாதான பேச்சு நடத்தியமையால்தான் வடக்கு – கிழக்கு மாகாணத்தை இன்று படையினரால் மீட்க முடிந்தது. அப்போது செய்துகொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அமைச்சர்களும் விமர்சித்தார்கள். ஆனால் இன்று அதன் பயனை அவர்கள் அனுபவிக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ அரசு இதனை மறந்து விடக்கூடாது. இன்று படையினர் பெற்ற வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சியும் காரணம் – என்றார் அவர்.

வன்னிப் பாடசாலைகளில் அகதிகள்; மாணவர்களின் கல்வி பாதிப்பு

school-2.jpgவன்னியில் இந்த வருடத்திற்கான பாடசாலைத் தவணைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு இடம்பெயர்ந்து இருக்கும் சுமார் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் பாடசாலைகளில் தங்கியுள்ளனர். 200 பாடசாலைகள் இடம்பெயர்ந்துள்ளன.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள பாடசாலைகளும் ஏனைய பாடசாலைகளிலேயே இயங்குகின்றன. அவற்றில் மக்களும் தங்கியுள்ளனர். அதனால் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாமல் உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் தொடர்ந்து இடம்பெயரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள பாடசாலைகளை இப்போதைக்கு ஆரம்பிக்க முடியுமா என்பது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
 
 

கொழும்பின் கேந்திரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

check1.jpgவன்னியில் படையினர் தொடர்ந்தும் முன்னேறிவரும் நிலையில் விடுதலைப் புலிகள் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தாக்குதல்களை நடத்தலாமெனத் தகவல்கள் கிடைத்திருப்பதையடுத்து கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர். அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேடுதல்கள், சுற்றிவளைப்புகள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில்; ”புலிகளின் தாக்குதல்களைத் தடுப்பதற்காக விசேட பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. புலனாய்வுத் தகவல்களின் படி புலிகள் முக்கிய பிரமுகர்கள் மீதும் முக்கிய கேந்திர நிலைகள் மீதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதையடுத்து முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாதுகாப்புத் தரப்பினர் படைநடவடிக்கைகளுக்கு சனசமூக நிலையங்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுக்கள், ஆட்டோ சாரதிகள் உதவியும் கோரப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்பை விட இவர்களும் விழிப்புடன் செயற்பட முடியும். பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சந்தைகள் போன்ற மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இ‌ந்‌தியா‌வி‌ல் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு இட‌ம் இ‌ல்லை: ‌சித‌ம்பர‌ம்

cidam.jpgஇ‌ந்‌தியா‌வி‌‌ல் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம் பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ம் இட‌ம் இ‌ல்லை எ‌ன்று உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌ம் எ‌ச்ச‌ரி‌த்தா‌ர். அ‌ஸ்ஸா‌மி‌ல் கு‌ண்டு வெடி‌ப்புகளு‌க்கு‌ப் ‌பிறகு ‌நிலவு‌ம் சூ‌ழ்‌நிலை கு‌றி‌த்து இர‌ண்டாவது நாளாக (06) ஆலோசனை நட‌த்‌திய அமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌ம் குவஹா‌ட்டி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், ஒருமை‌ப்பா‌ட்டி‌ற்கு‌ம் அமை‌தி‌க்கு‌ம் அ‌ச்சுறு‌த்த‌ல் ‌விளை‌வி‌க்கு‌ம் யாரு‌க்கு‌ம் இ‌ங்கு இட‌‌மி‌ல்லை எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

“நா‌ன் பேசுவதை இ‌ப்போது கே‌ட்டு‌க்கொ‌ண்டிரு‌க்கு‌ம் அ‌ல்லது நாளை ஊடக‌ங்க‌‌ளி‌‌ல் படி‌க்க‌ப்போகு‌ம் தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட இய‌க்க‌ங்க‌ளி‌ன் தலைவ‌ர்க‌ள், உடனடியாக‌த் த‌ங்க‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்‌றி‌க்கொ‌ண்டு பே‌ச்சு நட‌த்த மு‌ன்வர வே‌ண்டு‌ம். இ‌ல்லை எ‌ன்றா‌ல் அவ‌ர்களு‌க்கு எ‌திராக‌க் கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம்” எ‌ன்றா‌ர் அவ‌ர்.

மேலு‌ம், இராணுவ‌‌த்‌தின‌ர், துணை இராணுவ‌த்‌தின‌ர், மா‌நில‌க் காவ‌ல்துறை‌யின‌ர் ஆ‌கியோரு‌க்கு, அமை‌தி‌க்கு‌ம் ஒருமை‌ப்பா‌ட்டி‌ற்கு‌ம் அ‌ச்சுறு‌த்தலாக உ‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌த் தேவையான உ‌த்தரவுகளு‌ம் அ‌றிவுறு‌த்த‌ல்க‌ளு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளன எ‌ன்று‌ம் ‌சித‌ம்பர‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர். 
 

கிழக்கில் சுதந்திர வர்த்தக வலயம்: அம்பாறையில் பிராந்திய அலுவலகம்

ftz-srilanka.jpgகிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சு உருவாக்கவுள்ளதாகவும், இது தொடர்பான பிராந்திய அலுவலகம் அம்பாறையில் திறக்கப்படவுள்ளதாகவும் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் எம். எச். சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார். மாகாண சுதந்திர வர்த்தக வலயத்தை ஆரம்பிப்பதற் காக அரசாங்கம் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இம் மாகாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதற்கும், கைத்தொழில், விவசாயத்துறை உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இவ்வர்த்தக வலயம் ஆரம்பிக்கப்படுகிறது.

இவ்வர்த்தக வலயம் ஊடாக சிவப்பரிசி, அரிசிமா, பச்சை மரக்கறி வகைகள், பழவகைகள், மீன், கருவடு, மட்பாண்ட உற்பத்திகள் என்பவற்றை சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் எனவும் தெரிவித்த அமைச்சர், பெப்ரவரி மாதம் உத்தேச மாகாண வர்த்தக வலயம் செயற்பட ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்தார்.