அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

திருமலையில் ஈபிடிபியினர் மக்களுக்காக இரத்த தானம்

blood.jpgமுல்லைத் தீவு பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியுடன் கப்பல்கள் மூலம் அழைத்துவரப்பட்டு திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த மற்றும் நோயாளர்களுக்கு தேவைப்படும் குருதித் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கோடு திருமலை மாவட்ட ஈபிடிபியினர் இன்று இரத்ததானம் வழங்கியுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் இரத்ததானம் செய்ய விரும்பும் பொதுமக்களை இரத்த தானம் செய்யுமாறு  பொதுவான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தனர். நேற்றைய தினம் ரெலோ அமைப்பினரும் திருமலை வைத்தியசாலையில் இரத்ததானம் செய்திருந்தனர். திருமலை வைத்தியசாலையில் 778 பேர் வன்னியிலிருந்து அழைத்துவரப்பட்டு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

373 சிவிலியன்கள் பாதுகாப்புப்புத் தேடி வந்துள்ளனர்.

vanni.jpgவிடுவிக் கப்பட்ட பகுதியையான விஸ்வமடு, குரவிக்குளம் பகுதியை நோக்கி பாதுகாப்புத் தேடி மேலும் 373 சிவிலின்கள் கடந்த 48மணித்தியாலத்துக்குள் வந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை ( பெப்:11) 254 சிவிலியன்கள் விஸ்வமடு வடக்கிலிருந்து வந்துள்ளனர்.அவர்களை 58வது டிவிசன் படையினர் வரவேற்றனர். 9 ஆண்கள்,9பெண்கள், 15 சிறுவர்கள் அடங்கலாக 33பேர் குரவிக்களப்பகுதிக்கு வந்தனர்.அவர்களை 57வது டிவிசன் படையினர் வரவேற்றனர்.மேலும் குப்பியக்குளம் பகுதியை நோக்கி வந்த 33பேர் வந்தனர் அவர்களை இரண்டாவது செயலணி படையினர் வரவேற்றனர்.

சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் அடங்கலாக 53பேர் 58வது டிவிசன் படையினரிடம் நேற்று (பெப்:12) வந்து தஞ்சம் புகுந்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் செல்ல அனுமதி

kelani_.jpgகளனி பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 14 பேரையும் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. ஒவ்வொருவரையும் தலா 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையில் செல்ல கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள திலகரட்ண அனுமதி வழங்கியுள்ளார்.

இவர்களுக்கு எதிராக, சட்டவிரோதமாக ஒன்று கூடியமை, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியமை, பல்கலைக்கழக உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இந்த மோதல் இடம் பெற்றதாகவும் பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கைதானவர்களில் 9 பேர் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதுடன், எந்தவொரு நிபந்தனையின் பேரிலேயாவது, அவர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்

வடபகுதி ரயில் சேவை ஓமந்தை வரை நீடிக்கப்படும்

sri-lanka-railway.jpgவட பகுதிக்கான ரயில் சேவை வவுனியா ஓமந்தை வரை நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வவுனியா வரை நடைபெறும் யாழ்தேவி ரயில் சேவையை ஓமந்தை வரை விஸ்தரிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அநுராதபுரத்திலிருந்து வந்த ரயில்வே பொறியியலாளர் குழு ஓமந்தை வரை சென்று ரயில் பாதை தொடர்பான நிலைமைகளை அவதானித்துள்ளனர். புதிதாக பாதை நிர்மாணிக்க மதிப்பீடுகளையும் மேற்கொண்டதாக வவுனியா ரயில் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வடக்கின் பெரும் பகுதி படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் ரயில் சேவையை விஸ்தரிப்பது தொடர்பாக உயர்மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ரயில்வே திணைக்களத்திற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தந்த சேவை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது

ரோஹித போகொல்லாகமவுடன் டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் உரையாடல்

rohitha-bogollagama.jpgவடக்கில் தற்பொழுதுள்ள சமகால நிலையினை கலந்துரையாடுவதற்காக டென்மார்க்கின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பெர் ஸ்டிக்மொலர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். நாட்டிய பரப்பப்படும் திரிபுபடுத்தப்பட்ட சில தகவல்கள் பற்றி நேரடியாக விளக்கமளிப்பதற்கு தமக்கு சந்தர்ப்பமொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக ரோஹித போகொல்லாகம கூறினார்.

வடக்கில் அல்லலுறும் பொது மக்கள் பற்றிய டென்மார்க் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் கவலை மற்றும் அவரது யுத்த நிறுத்தத்திற்கான அழைப்பு என்பவற்றிற்கு பதிலளித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், பாதுகாப்பு மற்றும் நலனோம்புகை என்பன இலங்கை அரசாங்கத்திற்கு மிக அவசியமானவை எனக் கூறினார்.

அரசாங்கம் வடக்கிற்கு பொருட்களை வழங்குதலை தொடர்தல் மற்றும் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு சிவிலியன்களை செல்ல அனுமதித்து பாதுகாப்பு பிரதேசமொன்றை ஒதுக்கியுள்ளமை என்பன அரசாங்கம் பொது மக்களின் மேல் கொண்டுள்ள அக்கறையினை எடுத்துக் காட்டுவதாக கூறினார். புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் சுருங்கிச் செல்லும் அதேவேளை, பொது மக்கள் வாழ்வதற்கான நிலப்பரப்பு அதிகரித்துச் செல்கின்றது எனவும், அன்றாடம் மாற்றம் பெறும் நிலைவரம் பற்றிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர், இலங்கை பல்லின சமூக சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதுடன், ஜனநாயக கட்டுக்கோப்பின் கீழ் அதிகார பரவலாக்கத்தை மத்தியிலிருந்து சகல பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கான செயல்முறையினை முன்னெடுப்பதாகவும் கூறினார்.

அமெரிக்காவில் உள்ள ‘தமிழ் பவுண்டேஷன்’ தடை செய்யப்பட்டுள்ளது.- அமெரிக்காவுக்கு இலங்கை பாராட்டு

u-s-a-flag.jpgஅமெரிக் காவின் மெரிலான்ட் பகுதியில் செயற்பட்டுவந்த தமிழ்கள் அமைப்பின் சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்துள்ளது. அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணிவந்ததாகக் கூறியே இந்த அமைப்பை அமெரிக்கா தடைசெய்துள்ளது.

இந்த அமைப்புடன் எந்தவிதமான வங்கிச் செயற்பாடுகளையோ, வர்த்தகச் செயற்பாடுகளையோ பேணக்கூடாதென அமெரிக்கா அறிவித்துள்ளது.

“தமிழீழ விடுதலப் புலிகளும் ஏனைய பயங்கரவாத அமைப்புக்களைப் போன்றதொரு அமைப்பே. அறக்கட்டளைகளை உருவாக்கி நிதிசேகரித்து அவற்றை வன்முறையுடன்கூடிய தமது கொள்கைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர்” என அமெரிக்க திறைசேரியின் வெளிநாடுகளின் சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் அலுவலகத்தின் பணிப்பாளர் அடம் சுய்பின் கூறினார்.

இதேவேளை, அமெரிக்காவிலிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கடந்த 2007ஆம் ஆண்டு வெள்ளைமாளிகையின் உத்தரவுக்கமைய தடைசெய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் பவுண்டேஷனின் சொத்துக்களை முடக்கிய அமெரிக்காவுக்கு இலங்கை பாராட்டு

எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுக்கு உதவி வழங்கும் தமிழ் பவுண்டேசனின் சொத்துக்களை முடக்குதவற்குத் தீர்மானித்த அமெரிக்க அரசாங்கத்துக்கு இலங்கை பாராட்டுத் தெரிவித்ததுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக எந்தவொரு அமெரிக்க பிரஜைக்கும் தமிழ் பவூண்டேஷனோடு எந்தவிதக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதும் தடைசெய்யப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இயங்கும் அரக்கட்டளை தமிழ் நிறுவனங்கள் மூலம் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள் தமது நடவடிக்கைகளுக்கான நிதி சேகரிக்கின்றனா என அமெரிக்க அதிகாரிகள் குற்றம்  சுமத்தியூள்ளனா;.

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாதிகளின் பட்டியலில் 1997 ஆம் ஆண்டில் அமெரிக்கா இணைத்தது. தமிழா புனாவாழ்வூக் கழகமும் புலிகளுக்கு உதவியதால் 2007 ஆம் ஆண்டில் அதன் சொத்துக்களையூம் அமெரிக்க முடக்கியது என்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

செயற்கைக்கோள்கள் விண்வெளியில் மோதின

iridium.jpgஅமெரிக்க தொலைதொடர்பு செயற்கைக்கோள் ஒன்றும் ரஷ்ய செயற்கைக்கோள் ஒன்றும் விண்வெளியில் மோதிக்கொண்டுள்ளன. விண்வெளியில் மனிதன் அனுப்பிய பொருட்கள் உடைந்த சம்பவங்களிலேயே இந்த அளவுக்கு மிகப் பெரிய அளவில் ஒரு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல்முறை என்று கருதப்படுகிறது.

இரிடியம் என்ற அமெரிக்க வர்த்தக செயற்கைக்கோள் ஒன்று பயன்பாட்டில் இல்லாத ரஷ்ய செயற்கைக்கோள் ஒன்றுடன் மோதியிருக்கிறது. வடதுருவத்திற்கு அருகில் சைபீரியாவில் எண்ணூறு கிலோ மீட்டர் உயரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மோதல் நடந்துள்ளது என அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாஸா கூறியுள்ளது.

முல்லைத்தீவை கைப்பற்றிய பின்னரும் இனப்பிரச்சினைக்கு மகிந்த அரசினால் தீர்வை முன்வைக்க முடியாதுள்ளது – ரணில்

ranil-wickramasinge.jpgநாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அரசாங்கமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் என்ன தீர்வினை முன்வைத்துள்ளனரென கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவினை கைப்பற்றி யுத்தத்தில் வெற்றிபெற்றும் அரசினால் இனப்பிரச்சினைக்குத் தீர்வினை முன்வைக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்டி பொதுச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

போர்வீரர்களின் வெற்றியை நிலைநாட்ட வாக்களியுங்கள் என ஜனாதிபதி வாக்கு கேட்டுள்ளார். இன்று போர்வீரர்கள் முல்லைத்தீவினையும் கைப்பற்றியுள்ள நிலையில் இனி ஏன் வெற்றிக்காக வாக்களிக்க வேண்டும்.  தம்மைப் பலப்படுத்தவே வாக்கு கேட்கின்றனர். மிகின் எயார், கொழும்பில் பாலங்கள் அமைத்தல் கிராமங்களில் மகநெகும, கமநெகும திட்டங்கள் முலம் அரசாங்கம் பணம் சம்பாதிக்கின்றது இதற்காகவே வாக்கு கேட்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டார். ரிவிர பத்திரிகை ஆசிரியர் தாக்கப்பட்டார். சிரச எரிக்கப்பட்டது. லசந்த கொலை செய்யப்பட்டார். ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர், கடத்தப்பட்டனர், இதனையே மூன்று வருடமாக இந்த அரசு செய்தது. இவ்வாறு ஊழல் புரிந்த குடுகாரர்கள், கொள்ளையர்கள், ஏமாற்றுக்காரர்கள், கொலைகளை மூடிமறைக்க போர்வீரர்களது வெற்றியைக் காட்டி வாக்குக் கேட்கின்றனர். இதற்கு எதிராக இலங்கை தேசிய தொழிலாளர் முன்னணி ஐ.தே.க., முஸ்லீம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி அனைத்தும் இணைந்து எஸ். பி. திஸ்ஸநாயக்கா தலைமையில் ஒரு குழுவினரை நியமித்துள்ளோம்.

பொருட்களின் விலை அதிகரிப்பு, விவசாயமுலப்பொருட்களின் விலை அதிகரிப்பு இதற்கு மக்களுக்கு மானியங்கள் வழங்கப்படவேண்டும். இந்த நாட்டு மக்கள் ஜனநாயக உரிமைகளை, அரசியல் அமைப்பு உரிமைகளை பெற்றுக்கொள்ள ஐ.தே.க. வுக்கு வாக்களியுங்கள் இதற்காக திஸ்ஸநாயக்காவை வெற்றிபெறச் செய்யுங்கள் என்ன நடந்தாலும் மகிந்த அரசு இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. இந்த நாட்டைக் காப்பாற்ற ஐ.தே.க. ஆட்சியினாலேயே முடியும் எனத் தெரிவித்தார்.

அரசின் முயற்சியை புலிகள் குறைத்து மதிப்பிட்டதால் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட தீர்மானித்தோம். – தாய்லாந்தில் பிரதமர் ரத்ணசிறி

pm-srianka.jpgஇலங் கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய அரசுகள் புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தின. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைகளினால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கமும் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.

எனினும் அரசாங்கத்தின் முயற்சியை புலிகள் குறைத்து மதிப்பிட்டதால் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவது என்ற தீர்மானத்தை மேற்கொண்டோம் என பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.

பௌத்த சமய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக 5 நாள் விஜயம் மேற்கொண்டு தாய்லாந்துக்குச் சென்றுள்ள பிரதமர் நேற்று பெங்கொக் நகரில் அந்நாட்டுப் பிரதமர் அபிசிட் விஜ்ஜாஜிவாவை சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்கிலுள்ள அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளை மேற்கொண்டபோதும் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் அவர்களைத் தொடர்ந்தும் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றது. இலங்கையின் வட பகுதியில் இன்று புலிப்பயங்கரவாதிகள் குறுகிய பிரதேசத்துக்குள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளனர்.  இந்தப் பிரதேசத்தில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வர முயற்சிக்கும் அப்பாவிப் பொதுமக்கள் மீது புலிகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருவகின்றனர் என்றும் பிரதமர் அங்கு மேலும் தெரிவித்தார்.

யாழ். இ. போ. சபையை முன்மாதிரி சபையாக தரமுயர்த்த அரசு தீர்மானம்! -அமைச்சர் டலஸ்

dalas_alahapperuma.jpgயாழ்ப் பாணத்திலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையை முன்மாதிரி போக்குவரத்துச் சபையாக தரமுயர்த்த அரசாங்கம் தீர்மாணித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட வேண்டுகோளுக்கு இணங்க தரமுயர்த்தப்படவுள்ள யாழ். போக்குவரத்துச் சபையின் ஆரம்ப வைபவம் இம்மாத இறுதியில் பிரமாண்டமான முறையில் நடத்தப்படவுள்ளது. யாழ்.குடா நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை விருத்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்தின்படி முதற்கட்டமாக 25 புதிய பஸ் வண்டிகள் அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. தேவைகளுக்கேற்ப எதிர்காலத்தில் இன்னும் பல பஸ் வண்டிகள் அனுப்பப்படும். 

யாழ். குடா நாட்டுக்கான பஸ் போக்குவரத்து கால அட்டவணையின்படி சகல பகுதிகளையும் உள்ளடக்கப்படும் விதத்தில் சேவை நடத்த 89 பஸ் வண்டிகள் தேவைப்படுகின்றன. எனினும்,  தற்போது 45 பஸ் வண்டிகளே அங்கு உள்ளன. பாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவைக்கென 39 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளபோதும் இதன் எண்ணிக்கையை 50 ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் யாழ்.குடா நாட்டிலுள்ள சகல போக்குவரத்துச் சபை டிப்போக்களும் நவீனமயப்படுத்தப்படுவதுடன் நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே குடா நாட்டிலுள்ள சகோதர தமிழ் மக்களும் அரச போக்குவரத்துச் சேவையைப் பெற வேண்டும் என்ற ஜனாதிபதியின் எண்ணம் விரைவில் செயலுருவம் பெறவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.