அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

முல்லைத்தீவு முஸ்லிம்கள் சொந்த இடங்களை பார்வையிட ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்கு முன்னதாக அவர்களை தாம் வாழ்ந்த பிரதேசங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று காண்பிக்க உள்ளதாக மாவட்ட செயலகம் கூறியது.

வடக்கில் இருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 67 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் இடம் பெயர்ந்துள்ளமை பதிவு செய்யப்பட்டுள்ளதாக திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார். இவர்களுள் 23 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேர் கடந்த வாரம் கரைதுறைப்பற்றில் மீள் குடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான செயலகத்தினூடாக இதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 20 வருடங்களாக தமது சொந்த இடங்களுக்கு சென்றிராததாலும் சிலர் அங்கு செல்ல தயங்குவதாலும் முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை இந்த மாதத்திற்குள் சொந்த இடங்களுக்கு நேரில் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நேற்று பாராளுமன்றத்திற்கு விஜயம்

p.jpgஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ நேற்று மாலை பாராளு மன்றத்துக்கு விஜயம் செய்தார். வரவு செலவுத் திட்ட குழுநிலை மீதான விவாதம் மற்றும் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் ஆகியன நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றன.

பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்குள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் அமர்ந்து மேற்படி விவாதங்களைச் செவிமடுத்தார். ஜனாதிபதி பாராளுமன்றத் துக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்ததையடுத்து நேற்றிரவும் பெருமளவிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருந்தனர்

இன, மத நட்புறவை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் – ஜனாதிபதி அதிர்ச்சி; கவலை

p.jpgஇன, மதங்களுக்கிடையில் நட்புறவை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நியாஸ் மெளலவி மனித நேயமிக்க ஒரு மதத் தலைவராவாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது:

இஸ்லாமிய மதத் தலைவர் நியாஸ் மெளலவியின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டதும் நான் பெரும் அதிர்ச்சியும் கவலையுமடைந்தேன். அவர் ஜனாதிபதி ஆலோசகராக மட்டுமன்றி நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார்.  அவருக்கு எனது கெளரவ அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபக பணிப்பாளராக நீண்டகாலமாக பதவி வகித்து இஸ்லாமிய இளஞ் சந்ததியினருக்கு அவர்செய்த சேவையை நான் கெளரவத்துடன் நினைவுகூருகிறேன்.

இஸ்லாமிய மதம் தொடர்பான அவரது அறிவு, அனுபவங்கள், திறமைகளை அவர் எப்போதும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக உபயோகித்தார். மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் மதங்களுக்கிடையில் சகோதரத்துவத்தை வளர் ப்பதற்கு அவரது அர்ப்பணிப்பு மகத்தானது.

இஸ்லாமிய மதத்தின் புனித நூலான திருக்குர்ஆன் பற்றிய சிறந்த அறிவைக் கொண்டிருந்த அவர் இந்நாட்டிலுள்ள ஏனைய மதங்கள் பற்றிய தெளிவையும் கொண்டு விளங்கினார். இன, மத, குலங்களுக்கப்பால் மனிதத் தன்மையை மதிக்கும் அவர், சகல மதத்தவரதும் அன்பிற்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர். மனித நேயத்தைக் கொண்டவர்களுக்கே இத்தகைய கெளரவம் கிடைக்கின்றது.

இந்நாட்டில் இன, மத, குலபேதமின்றி அனைவரும் நட்புறவுடன் வாழவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது. இந்த வகையில் நியாஸ் மெளலவியின் மரணத்தை ஒரு அன்புமிக்க நண்பனின் பிரிவாகக் கருதுவதோடு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள் கிறேன் எனவும் ஜனாதிபதி தமது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமியத் தமிழ்க் கல்விமான்களை ஓரங்கட்டிய செம்மொழி மாநாடு

semmoli.jpgதமிழுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த இஸ்லாமியத் தமிழ்க் கல்விமான்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாநாட்டின் ஆய்வரங்க அமர்வுகளின்போது புலவர்கள் மற்றும் பாவலர்கள் ஆற்றிய சேவைகள் குறித்து குறிப்பிடப்படவில்லையென தமிழ் ஆர்வலரான ஸ்ரீநிவாசன் பழனிச்சாமி என்பவர் கூறியுள்ளார். பல்வேறு விடயங்களில் தமிழை மேம்படுத்துவதற்கு அவர்கள் தமது உயிர் மூச்சை இறுதிவரை கொடுத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். காய்த் இ மில்லத் என்றுபரிவுடன் அழைக்கப்படும் முஹமத் இஸ்மாயில் சாகிப்,1949 செப்டம்பர் 14 இல் அரசியல் நிர்ணய சபையில் தமிழை உத்தியோகபூர்வ மொழியாக்குமாறு பேசியிருந்ததை ஓய்வுவெற்ற வங்கியதிகாரி எம்.கோபாலகிருஷ்ணன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரலாறு மறந்துவிட்டது. காய்த் இ மில்லத் மறைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். தமிழ், இஸ்லாமிய இலக்கியத்தில் உமறுப்புலவரின் சீறாப்புராணம் பாரிய வெற்றியாக 17 ஆம் நூற்றாண்டில் கணிக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அது புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது என்று ஓய்வுபெற்ற தமிழ்ப் பண்டிதர் ஜோசப் சந்திரகுமார் கூறியுள்ளார்.

தோனிக்கு திருமணம்

doni.jpgஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி. இவருக்கும், இவரது பாடசாலைத் தோழி சாக்ஷிராவத்துக்கும் இடையே டேராடூனில் உள்ள ஹோட்டல் பாகீரதியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இவ்விழாவில் டோனியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய கிரிக்கெட் நண்பர்கள் கலந்து கொண்டனர். சாக்ஷிராவத், ராஞ்சி ஷாமிலியில் உள்ள டி. ஏ. வி. பாடசாலையில் படித்தவர். தோனியும் இதே பள்ளியில் படித்தவர் தான். பாடசாலை காலத்தில் இருந்தே இருவரும் நண்பர்கள். தோனி மற்றும் சாக்ஷி ஆகியோரின் தந்தைகள் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். சாக்ஷியின் தந்தை ஓய்வுபெற்றபின் அவர்களது குடும்பம் டேராடூனுக்கு இடம்பெயர்ந்து விட்டது.

இருவருக்கும் இடையே திருமண திகதி நிச்சயிக்கப்பட்டு விட்டதா என தோனியின் நண்பரிடம் விசாரித்த போது, அது முடிவாகவில்லை என்றும் அநேகமாக ஆஸி., தொடருக்குப் பின் இருக்கலாம் என அவர் தெரிவித்தார். இந்நிலையில் இன்னும் 2 நாளில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதலில் தொவிக்கப்பட்டது. பின்பு திடீரென நேற்றிரவு திருமணம் நடக்குமென அறிவிக்கப்பட்டது.

தோனியின் நிச்சயதார்த்தம் குறித்த செய்தியறிந்து அவரது ரசிகர்கள் பட்டாசு கொளுத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கால்பந்து ரசிகரான தோனியின் நிச்சயதார்த்தம், உலக கோப்பை கால்பந்து நடந்துவரும் வேளையில் நடந்திருப்பது மென்மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.

வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்

parliament.gifவரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.

இன்று 5ம் திகதி முதல் எதிர்வரும் 9 ம்திகதி வெள்ளிக்கிழமை வரை குழுநிலை விவாதம் இடம்பெறுவதுடன் வெள்ளிக் கிழமை மாலை 6. 00 மணிக்கு விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

தினமும் காலை 9.30 மணி முதல் இரவு 9.00 மணிவரை விவாதம் இடம்பெறுவதுடன் அமைச்சர்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

11,590 உயர் கல்வி மாணவருக்கு புலமைப்பரிசில்

மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 11,590 உயர் கல்வி மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் 29வது வருட நிகழ்வு நேற்று முன்தினம் பிரதமர் டி. எம். ஜயரட்னவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் எஸ். பி. திசாநாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் முதற்கட்டமாக நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற 24 மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

மஹாபொல புலமைப்பரிசிலாக மாதாந்தம் 2,500 ரூபா வழங்கப்பட்டு வருகிறது. 422 பேருக்குப் புலமைப்பரிசிலை வழங்கி 1981ம் ஆண்டு அன்றைய உயர் கல்வி அமைச்சர் அதுலத்முதலி இத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார். அதனையடுத்து இவ்வருடம் வரை 1,60,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச இந்து மத பீடம் அனுதாபம்

niyaz.jpgமெளலவி நியாஸின் மரணம் குறித்து சர்வதேச இந்து மதபீடம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்துமத பீடத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் இந்து சமய விவகார ஆலோசகருமான இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

போர்ச் சூழல் காலங்களில் மிகவும் துணிகரமாக சமாதானத்துக்காக குரல் கொடுத்த நியாஸ் மெளலவி, இஸ்லாமிய தர்மத்தின்படி ஒழுங்கி, சகல மக்களுடனும் மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்தவர்.

நாடு சமாதானம் பெற்ற சூழலில் அவர் எம்மை விட்டுப் பிரிந்திருப்பது எமக்கு ஆறாத்துயரை ஏற்படுத்தியிருக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.

சாத்தியமான அரசியல் தீர்வை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் – சபையில் அமைச்சர் டக்ளஸ்

dagi.jpgநடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு முயற்சிகளை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எஞ்சியுள்ள மக்களையும் மீளக்குடியமர்த்தி அவர் களின் வாழ்வாதாரத்திற்கான சகல ஏற்பாடுகளையும் விரைவுபடுத்த வேண்டுமென தெரிவித்த அமைச்சர், சரணடைந்தோர் மற்றும் அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டோர் அனைவரையும் விடு விக்க வேண்டுமெனவும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

வரவு-செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரை யாற்றிய அமைச்சர் வடக்கின் மீள்கட்டமைப் பிற்காக நிதியுதவி வழங்கியுள்ள இந்திய அரசாங்கத்திற்கும் நன்றியினைத் தெரிவித்தார். அமைச்சர் தமதுரையில் மேலும் தெரி வித்ததாவது, தமிழ் மக்களுக்கான அமைதி, சமாதானம், ஜனநாயகம், வாழ்வியல் மற்றும் அரசியல் சமவுரிமை ஆகியவையே எமது இலட்சியமாகும். அதற்கான கனவுகள் இன்று நனவாகி வருகின்றன.

தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் சுதந்திரமாக செயற்படும் ஒரு சூழலில் மட்டுமே தமிழ் மக்களுக்கான அரசியலுரிமை குறித்து சிந்திக்க முடியும்.

அத்தகைய சூழலொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கித் தந்துள் ளார். அதற்காக அவருக்கு நன்றி கூறு வதுடன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மைக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலரும் ஜனாதிபதிக்கு இந்தச் சபையில் நன்றி கூறியதை வர வேற்கிறேன்.

மனிதராலும் இயற்கையாலும் ஏற்படுத்தப்பட்ட அனர்த்தங்களின் மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் 7 வீத வளர்ச்சியை நோக்கி அதிகரித்துள்ளது. கைத்தொழில் துறையினரை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும். ஏனைய பிரதேசங்களைப் போலவே யுத்தப் பாதிப்பு தேசங்களையும் அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

புத்தாக்குதல்களுக்கு ஊக்விப்பு வழங்தல், வாராந்தச் சந்தைகளை ஆரம்பித்தல், கைத்தொழில் துறைக்கு உரிய பயிற்சிகளை வழங்குதல் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. பனை வளம் எமது அமைச்சின் கீழ் உள்ளது. அதன் மூலம் அதனை நம்பியுள்ள கைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் கற்பகம் விற்பனைக் கிளைகளை நாடளாவிய ரீதியில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கைதடி ஆராய்ச்சி நிறுவனத்தை மீளத் திறப்பதுடன் அதன் தலைமை அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சபையில் பேசுவதற்கு காதருக்கு தனது நேரத்தை கொடுத்தார் பிரதமர் தி.மு.

cadar.jpgஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். அப்துல் காதருக்கு வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்ற அக்கட்சி நேரம் ஒதுக்காததால், பிரதமர் டி.எம். ஜயரட்ன தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் 15 நிமிடங்களை வழங்கினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்கவை உரையாற்றுமாறு சமாநாயகர் அழைத்தார்.

அப்போது குறுக்கிட்ட காதர் எம்.பி, தமது கட்சியில் தமக்கு உரையாற்ற நேரம் ஒதுக்கவில்லையென்று சபாநாயகரிடம் முறையிட்டார். அப்போது, எந்தக் கட்சி  என்று எதிர்க் கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க, காதர் எம்.பி.யிடம் கேட்க, கோபமடைந்த அவர், ‘எமது கட்சி தான், உங்கள் கட்சி அல்ல’ என்று பதிலளித்ததோடு ஐ.தே.க தலைமை தொடர்பாகவும் காரசாரமாக விமர்சித்தார்.