ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். அப்துல் காதருக்கு வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்ற அக்கட்சி நேரம் ஒதுக்காததால், பிரதமர் டி.எம். ஜயரட்ன தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் 15 நிமிடங்களை வழங்கினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்கவை உரையாற்றுமாறு சமாநாயகர் அழைத்தார்.
அப்போது குறுக்கிட்ட காதர் எம்.பி, தமது கட்சியில் தமக்கு உரையாற்ற நேரம் ஒதுக்கவில்லையென்று சபாநாயகரிடம் முறையிட்டார். அப்போது, எந்தக் கட்சி என்று எதிர்க் கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க, காதர் எம்.பி.யிடம் கேட்க, கோபமடைந்த அவர், ‘எமது கட்சி தான், உங்கள் கட்சி அல்ல’ என்று பதிலளித்ததோடு ஐ.தே.க தலைமை தொடர்பாகவும் காரசாரமாக விமர்சித்தார்.