அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

நன்கு சிந்தித்தே அரசியலமைப்புத் திருத்தம் செய்ய வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி சுட்டிக்காட்டு

pr-ranil.jpgதனிப்பட்ட தேவைகளுக்காக அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடாது. நாட்டைப் பற்றி நன்றாக சிந்தித்துத் தெளிவான நோக்கத்தின் பேரிலேயே அதனை ஏற்படுத்துவதே அவசியமானது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். பொதுஜன ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகள் மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பிரநிதிகளுக்கும் இடையே நேற்று (12) மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கூறியவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அச்சந்திப்பில் மேலும் கூறியதாவது:- தற்போது உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை விட நாட்டுத் தலைவர் பதவி பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறும், பாராளுமன்றத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படும், பாராளுமன்றத்துடன் சேர்ந்து இயங்கக் கூடிய பதவியாக மாற்றப்பட வேண்டும் என்பதே 40 வருடங்காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பெற்ற அனுபவத்தின் மூலம் தனது நம்பிக்கையாக உள்ளது என்று ஜனாதிபதி இங்கு மேலும் கூறினார்.

சர்வகட்சிக் குழுவுக்கு ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சி முன்வைத்த ஆலோசனையான பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை ஏற்படுத்துவது தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும் அரசிலமைப்பு திருத்தங்கள் மூலம் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை ஏற்படுத்துவதற்கு பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினர் இங்கு இணக்கம் தெரிவித்தனர்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் இங்கு கேட்டுக்கொண்ட நிலையில் அவர்களுக்கு அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, பசில் ராஜபக்ஷ அகியோர் விளக்கமளித்தனர்.  அத்துடன் 17ஆவது திருத்த சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினரினதும் அவதானம் செலுத்தப் பட்டது.

அவ்வாறு வலுப்படுத்தவும் அந்த நிறுவனங்களுக்கு நியமிக்கப்படும் அதிகாரிகள் அமைச்சரவைக்கு பொறுப்புக் கூற வேண்டுமென்றும் இங்கு இணங்கப்பட்டது. அத்துடன் எந்த அரசாங்கத்தின் கீழும் நிலையான ஆட்சி இடம்பெற வேண்டும் என இரு தரப்பினரும் இங்கு கொள்கை யளவில் இணக்கப்பாட்டுக்கு வந்ததுடன் எதிர்காலத்தில் இடம்பெறும் அரசியல மைப்பு திருத்தத்தின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். இரண்டு தரப்பினரின் பிரதிநிதிகளால் உருவாக்கப்படும் குழுவின் மூலம் இணங்கப்பட்ட மேற்படி விடயங்களை செயற்படுத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கரு ஜயசூரிய, காமினி ஜயவிக்கிரம பெரேரா, திஸ்ஸ அத்தநாயக்க, ஜோஸப் மைக்கல் பெரேரா ஆகியோரும் பொதுஜன ஐக்கிய முன்னணி அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த், ஜீ. எல். பீரிஸ், தினேஷ் குணவர்த்தன, பசில் ராஜபக்ஷ, டலஸ் அலகப்பெரும ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

pr-ranil.jpg

சீமான் கைது

வன்முறையையும், பிரிவினையையும் தூண்டும் விதத்தில் உரையாற்றிய குற்றச்சாட்டின் பேரில் தென்னிந்திய திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் நாடு சென்னை ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சீமான் வன்முறையையும், பிரிவினையையும் தூண்டும் விதத்தில் உரையாற்றினார் என பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கின் அடிப்படையில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

ஜனாதிபதி தலைமையில் ஆய்வுக் கூட்டம்; கிளிநொச்சியில் விசேட ஏற்பாடுகள்

p.jpgகிளிநொச் சியில் எதிர்வரும் 14ஆம் திகதி புதன்கிழமை நடத்தப்படவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாணத்துக்கான ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்துக்கென அம்மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 44 அமைச்சர்களும் அன்றைய தினம் கிளிநொச்சி வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அன்றைய தினமே அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பாக ஆராயும் கூட்டமும் நடை பெறவிருப்பதனால் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் தொடர்புடைய சிரேஷ்ட மற்றும் முக்கிய அதிகாரிகளும் கிளிநொச்சி வரவிருப்பதாக ஆளுநர் சுட்டிக் காட்டினார். வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுவந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் அவற்றை விரைவுபடுத்தக் கூடிய வழிமுறைகள் தொடர்பாக ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்.

இவற்றைத் தொடர்ந்து அன்றைய தினம் ஜனாதிபதி கிளிநொச்சியில் வைத்து பொது மக்களுக்காக விசேட உரையொன்றையும் நிகழ்த்தவிருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டம் மற்றும் அபிவிருத்திக் கூட்டம் ஆகியவற்றில் பங்கு பற்றுவதற்காக கொழும்பிலிருந்து வரும் விசேட அதிதிகளுக்கான தங்குமிட வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

அத்துடன் 13ஆம் திகதி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தலைமையில் பரந்தன் மற்றும் கிளிநொச்சியில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கிளைகள் திறந்து வைக்கப்பட விருப்பதுடன் 14 ஆம் திகதி நீதிமன்ற கட்டடத்துக்கான அடிக்கல் நடும் வைபவம் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் நடைபெற விருப்பதாகவும் அதற்காக அமைச்சின் அதிகாரிகள் பலர் அங்கு வருகைதரவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அமரர்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரனின் 21வது நினைவு தினம்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், இலங்கையின் வரலாற்றிலேயே எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து செயலாற்றிய அமரர் அமிர்தலிங்கம் மற்றும் முன்னாள் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் யோகேஸ்வரன் ஆகியோரின் 21வது நினைவுதினம் நாளையாகும். இதனையிட்டு த.வி.கூ. யாழ். மாவட்ட தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10.00 மணியளவில் கூட்டம் இடம்பெறும்.

டெங்குவினால் பாதிப்பு; பெண் டாக்டர் மரணம்

mosquito.jpgபதுளை வைத்தியசாலை டாக்டர் ஒருவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் பதுளை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று (11) மாலை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் அதிதீவிர பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த இவர், லக்மாலி விஜேநாயக்க (வயது 31) எனவும் திருமணமாகாவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் பதுளை மாகாண வைத்திய சாலையில் 23 வது சிறுவர் வார்ட்டில் டாக்டராகப் பணிபுரிந்தவர். இவர் நோயாளிகளுடன் மிகவும் காருண்யமாக நடந்து கொண்டு அனைவரினதும் பெரு மதிப்பைப் பெற்று வந்தமையும் குறிப்பி டத்தக்கது.

சில நாட்களுக்கு முன் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட இவரே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். (10) நேற்று முன்தினம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் இவர் அதிதீவிர சிக்சசைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உண்ணாவிரதப் போராட்டத்தை விமல் வீரவன்ஸ முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதியிடம் 4 கோரிக்கைகள்.

ww-pr.jpgதேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸவின் நான்கு கோரிக்கைகள் நிறைவேற்றுவார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உறுதிமொழி வழங்கியதையடுத்தே சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை விமல் வீரவன்ஸ முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றார். இத்தகவலை தேசிய சுதந்திர முன்னணி உறுதிப்படுத்தி உள்ளது.

அந்த நிபந்தனைகள் வருமாறு:-

1. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவை எக்காரணத்தை கொண்டும் இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது.

2. ஐ.நா நிபுணர் குழு சம்பந்தமாக விசாரணை நடத்த உள்நாட்டு நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.

3. ஐ.நாவின் எந்த நிபந்தனைகளுக்கும் உடன்பட்டு ஐ.நா நிபுணர் குழுவை விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க கூடாது.

4. ஐக்கிய நாடுகள் சபையுடன் பேசி, நிபுணர்கள் குழுவை நீக்க வேண்டும்.

வீரவன்ஸவின் தாயார் மரணம்

funeral-flowers.gifநேற்று இரவு விமல் வீரவன்ஸவின் தாயார் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர தகவல் தெரிவித்துள்ளார்.

ஜோன் ஹோம்ஸின் இடத்திற்கு புதியவர் நியமனம் – ஐ.நா. செயலர் அவசர நடவடிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய ஜோன் ஹோம்ஸின் இடத்துக்குப் புதியவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவுக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராகக் கடமையாற்றும் திருமதி வெலேரி அமோஸ் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனினால் ஹோம்ஸின் இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதா அவரின் இணைப் பேச்சாளரான ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஜோன் ஹோம்ஸ் இதுவரை காலம் ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் பான் கி மூன் புதியவர் அந்தப் பணியைத் திறம்பட மேற்கொள்வாரென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஜோன் ஹோம்ஸ் இலங்கை அரசாங்கத்தரப்பால் முன்னர் கடும் விமர்சனத்திற்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்ணாவிரத போராட்டம் முடிந்தது

ww-pr.jpgஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவந்த அமைச்சர் விமல் வீரவன்ஸ இன்று தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்து நீர் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.  அங்கிருந்த வைத்தியருடன் கலந்துரையாடிய பின்பு விமல் வீரவன்ச அம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

இன்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும்
விமல் வீரவன்சவை பார்வையிட்டார்.

ww-pr.jpg

நன்றி: படம் டெயிலி மிரர்

கூட இருந்து குழிபறிக்காதீர்கள்; என் கழுத்தை பிடித்து தள்ளிவிடுங்கள். தனது கட்சியிடம் காதர் எம்.பி வேண்டுகோள்

cadar.jpgஐக்கிய தேசியக்கட்சியில் நான் மிகவும் பழைமையானவன். நான் பிரயோசனமற்றவன் என்று நினைத்தால் என்னை கழுத்தை பிடித்து வெளியேற்றுங்கள். கூட இருந்தே கழுத்தை அறுக்க வேண்டாம் என கண்டி மாவட்ட ஐ. தே. க. எம். பி. ஏ. ஆர். எம். அப்துல் காதர் ஐ. தே. க விடம் கேட்டுக் கொள்வதாக நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனக்கு இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற சந்தர்ப்பம் தரவில்லை. எனக்கு பேச சந்தர்ப்பம் தரும்வரை நான் ஆசனத்தில் அமரப் போவதில்லை எனக் கூறிய காதர் எம்.பி முன் எதிர்க்கட்சி ஆசன வரிசையில் எழுந்து நின்றார்.

எனது கட்சி எனக்கு பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவில்லை. என்னுடன் கூட இருந்தே குழி பறிக்கிறார்கள் என்றார். ஆளும் தரப்பாவது எதிர்த்தரப்பாவது இவருக்கு பேசுவதற்கான நேரத்தை கொடுங்கள் என பிரதி சபாநாயகர் கேட் டுக் கொண்டதுடன் ஆளும் தரப்பிலிருந்து 5 நிமிடம் தருவதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காதர் எம். பி. பேச ஆரம்பித்தார். நான் கண்டி மாவட் டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ. தே. க. வின் பழைமையான உறுப்பினராக உள்ளேன். கடந்த வாரம் நடைபெற்ற அமர்வுகளிலும் எனக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை.

எனினும் எனக்கு பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் கட்சியின் கூட்டத்துக்கு 7 ஆம் திகதி வருமாறு கடிதம் அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவர்கள் கூட்டத்தை 6 ஆம் திகதியே நடத்தி முடித்துவிட்டார்கள். ஏன் என் கழுத்தை அறுப்பது போல நடந்து கொள்கிறார்கள். எனது தேவை அவர்களுக்கு தேவையில்லை என்று நினைத்தால், பிரயோசனமற்றவன் என்று நினைத்தால் என் கழுத்தை பிடித்து தள்ளிவிட்டால் எங்காவது போய் விடுவேன் தானே என கூறினார்.

அத்துடன் ஜனாதிபதியிடம் மற்றுமொரு கோரிக்கையை முன்வைப்பதாக கூறிய காதர் எம். பி. பாராளுமன்ற உறுப்பினர்களு க்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகனங்களுக்கான பேர்மிட்டுக்களுக்கு விதி க்கப்படும் குறைந்தளவு வரியையும் நீக்கிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். மேலும் இந்த வரவு – செலவு திட்டத்துக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன். வரவு – செலவு திட்டம் சிறந்தது என்றும் கூறினார்.