தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், இலங்கையின் வரலாற்றிலேயே எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து செயலாற்றிய அமரர் அமிர்தலிங்கம் மற்றும் முன்னாள் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் யோகேஸ்வரன் ஆகியோரின் 21வது நினைவுதினம் நாளையாகும். இதனையிட்டு த.வி.கூ. யாழ். மாவட்ட தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10.00 மணியளவில் கூட்டம் இடம்பெறும்.