அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கண்ணி வெடிகளை அகற்றும் விசேட இந்திய குழுவொன்று இலங்கைக்கு வருகை

nilakannikal.jpgநிலக் கண்ணி வெடிகளை அகற்றும் விசேட இந்திய குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மக்களை தங்களது சொந்தக் கிராமங்களில் மீள் குடியமர்த்தும் நடவடிக்கைகளை துரிதப் படுத்தும் நோக்கில் குறித்த குழுவினர் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். துரித கதியில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் மீண்டும் உண்ணாநிலைப் போராட்டம்

au.jpgதமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திவரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக்கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் அவுஸ்திரேலியா மற்றும் அனைத்துலகத்தின் தாயக தமிழர்களுக்கு எதிரான மௌனத்தை கண்டித்தும் அவுஸ்திரேலியாவில் சுதாகரன் தனபாலசிங்கம் மீண்டும் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கியுள்ளார்.

புலிகளின் மற்றுமொரு மண்அணை தகர்ப்பு – 4 1/2 சதுர கி.மீ. புலிகள் முடக்கம்

udaya_nanayakkara_brigediars.jpgபாதுகாப்பு வலயத்துக்குற்பட்ட பகுதியில் புலிகளின் மேலும் ஒரு மண்அணை நேற்றுக் காலை படையினரால் தகர்க்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதன் மூலம் அப்பகுதியில் எஞ்சியிருக்கும் ஏனைய சிவிலியன்களும் படையினரை நோக்கி வருவரென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஏ-35 பிரதான வீதிச் சந்தியிலிருந்து தெற்கிலும் முல்லைத்தீவு நந்திக்கடல் கடனீரேரியிலிருந்து வடக்கிலும் சுமார் 500 மீற்றர் நீளத்துக்கு அமைக்கப்பட்டிருந்த மண்அணையே நேற்றுக் காலை இராணுவத்தின் 53ஆம் படையணியினரால் தகர்க்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் நான்கரை சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு க்குள்ளேயே படையினருக்கும் புலிகளுக்குமிடையில் தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது. வலைஞர்மடத்தின் தெற்கிலும் தென்கிழக்கிலும் நேற்று முன்தினம் இரு தரப்புக்கும் இடையில் கடும் சமர் இடம்பெற்றது. இதில் புலிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. மோதல்களின்போது நாளுக்குநாள் சிவிலியன்கள் படையினரிடம் தஞ்சமடைந்து வரும் அதேவேளை பெரும் எண்ணிக்கையான புலிகளும் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

இராணுவத்தின் 53ஆம் 57ஆம் 58ஆம் மற்றும் மூன்றாம் படையணியினர் முல்லைத்தீவில் சிவிலியன்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுக் காலை 500 மீற்றர் நீளமான மண்அணையை தகர்த்ததன் மூலம் மேலும் பெருமளவிலான சிவிலியன்கள் வருவரென எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசுகளுக்கு விடுதலைப் புலிகள் ‘பாராட்டு’

pr-con.jpgபிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு வெளியுறவு அமைச்சர்கள் சென்ற வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது தொடர்பில் விடுதலைப் புலிகள் அவர்களைப் பாராட்டியுள்ளனர். இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என அரசாங்கம், விடுதலைப் புலிகள் என்று இருதரபினரிடமும் அமைச்சர்கள் தமது பயணத்தின்போது வலியுறுத்தியிருந்தனர்.

இலங்கையின் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் அக்கறை காட்டியமைக்காக வெளியுறவு அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, போர்நிறுத்தம் செய்வதையே தாங்களும் விரும்புவதாக விடுதலைப் புலிகளின் அறிக்கை ஒன்றில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

5 பிரிட்டிஷ் எம்.பி.க்கள் இன்று இலங்கை வருகை

uk-london.jpgபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் அடங்கிய தூதுக்குழுவொன்று இன்று திங்கட்கிழமை வடபகுதி மனிதாபிமான நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. பக்கிங்காம் எம்.பி. கட்சியின் ஜோன் பேர்கவ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் டெஸ் பிறவுண், ஸ்கொட்லாந் எம்.பி. மக்கெலம் புரூசி, வட அயர்லாந்திற்கான எம்.பி. எட்வட் மக்கிரடி மற்றும் தொழிலாளர் கட்சி எம்.பி. மொஹமட் சர்வர் ஆகியோரே இக்குழுவில் அடங்கியுள்ளனர்.

“இனி என்ன செய்யப்போகிறோம்’ காங்கிரஸை சங்கடப்படுத்தும் சி.டி.

IDP_Camp_Injured_Manகுண்டு வெடிப்புக் காட்சிகள், அகோர மரணங்கள், அழுது புலம்பும் பெண்கள், கால்நடைகள் போன்று நீண்ட தூரம் காணப்படும் அகதிகள் என்பனவற்றின் பின்னணியிலான பாடல் அடங்கிய சி.டி.யானது இந்திய காங்கிரஸ் கட்சிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

“இனி என்ன செய்யப்போகிறோம்’ என்பது பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள சி.டி.யின் தலையங்கமாகும். இப்போது இச் சி.டி. பரந்தளவுக்கு சுற்றோட்டத்திற்கு விடப்பட்டிருக்கிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிஸுக்கு எதிராக வாக்களிக்குமாறு வேண்டுகோளும் இந்த சி.டி.யில் விடுக்கப்பட்டுள்ளது.

16 நிமிடங்கள் அடங்கிய இச் சி.டி.யானது பார்ப்பவர்களின் அபிப்பிராயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக நியூஇன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆலய உற்சவம் இடைநிறுத்தப்பட்டது இந்துக்களை அவமதிக்கும் ஒரு செயல்

இறக்குவானை முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பௌத்தர்களின் எதிர்ப்புக்காரணமாக இடைநிறுத்தப்பட்டது இந்துக்களை அவமதிப்பதுடன் இந்து மதத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவும் உள்ளதாக கடந்த வியாழக்கிழமை மேற்படி ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் இரத்தினபுரி மாவட்ட இனணப்பதிகாரியும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.டி இராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆலய பரிபாலனசபையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முத்துமாரியம்மன் ஆலய உற்சவம் இடைநிறுத்தப்பட்டமை இறக்குவானை பிரதேச மக்கள் மத்தியில் பெறும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சித்திரா பௌர்ணமி தினத்தில் பதுளை, அட்டன் போன்ற பிரதேசத்திலுள்ள பல ஆலயங்களில் இரதபவனி இடம்பெற்று வருகிறது. ஆனால் இறக்குவானைப் பிரதேசத்தில் மாத்திரமே பௌத்தர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் உரியவர்களுடன் கலந்துரையாடி சாதகமான முடிவை பெற்றுத்தர வேண்டுமென அப்பிரதேச மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துமீறிய சிங்கள குடியேற்றம்: தடுத்து நிறுத்துமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை

era_thurairatnam.jpg மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவுளியாமடு தமிழ் கிராமத்தில் இடம்பெற்று வரும் அத்துமீறிய குடியேற்றத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்தி தமிழ் மக்களை அங்கு மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் மாகாண முதலமைச்சரிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் முதலமைச்சர் சி. சந்திரகாந்தனுக்கு அனுப்பியுள்ள கடித்ததில்;

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள எல்லைக்கிராமமான கெவுளியாமடு கிராமசேவையாளர் பிரிவு இல.135, கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது அங்கு குடியிருந்த 106 குடும்பங்கள் இடம்பெயர்ந்து களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். இவர்களில் அநேகமானோர் வேளாண்மை, மீன்பிடி, மேட்டுநிலப்பயிர்செய்கை, வியாபாரம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களைச் செய்து வந்ததோடு விவசாயம் செய்யக்கூடிய வயல் நிலங்களுக்கும் மேட்டு நிலங்களுக்கும் உரித்துள்ளவர்களாக இருந்து வந்துள்ளனர்.

சுமார் 18 வருடகாலமாகியும் அப்பிரதேசத்தில் இருந்து வந்த யுத்த சூழ்நிலை காரணமாக உயிருக்குப்பயந்து மீண்டும் சொந்த இடம்போக முடியாமல் எப்போது சொந்த இடத்திற்குப் போவதென எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கின்றனர். இவர்கள் இடம்பெயர்ந்த போது அனைத்து பொருளாதார வளங்களையும் இழந்தனர்.

தற்போது இப்பகுதியிலுள்ள வீடு வாசல்கள் அழிக்கப்பட்டு பயிர்ச்செய்கை நிலங்கள் காடாக காட்சியளிப்பதோடு சில வயல் நிலங்களில் வேளாண்மை செய்யப்பட்டும் சேனைப்பயிர்ச்செய்கை செய்யப்பட்டும் ஒருசில நிறுவனங்களினால் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டும் ஓரிரு குடும்பங்கள் வாழ்ந்தும் வருகின்றன.

இவர்களுக்கும் இடம் பெயர்ந்தவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. கடந்தவாரம் இப்பகுதிக்கு பிரதேசசெயலாளர் தலைமையில் பார்வையிடச்சென்றபோது அத்துமீறிய குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்தது.

எனவே அரசாங்கம் தமிழ்மக்கள் வாழ்ந்த கெவுளியாமடு கிராமத்தில் நடக்கின்ற அத்துமீறிய குடியேற்றத் திட்டத்தை நிறுத்த வேண்டும்.இந்தக் குடியேற்றத்தை தற்காலிக மேற்பார்வை செய்வதற்காக இக்கிராம சேவையாளர் பிரிவு உகணைப் பிரதேசசெயலாளர் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதை மீண்டும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைக்க நடவடிக்கை எடுப்பதோடு இப்பிரதேசமக்கள் மேற்படி பிரதேசத்திற்கு மீண்டும் சென்று தங்களது விவசாயச் செய்கையை மேற்கொள்வதற்கும் இதைத் தொடர்ந்து இவர்களுக்குரிய காணாமல் போன கால்நடைகளுக்குப் பதிலாக கால்நடைகளை வழங்கி மீண்டும் தொழிலை ஆரம்பிப்பதற்கும் சம்பந்தப்பட்டோர் இப்பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் நிரந்தரமாக இப்பிரதேசத்தில் வசிப்பதற்கும் வீட்டுத்திட்டத்தை ஒரே இடத்தில் கட்டிக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுள்ளார்.

வவுனியாவில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு மாத்தளையிலிருந்து உணவுப்பொருட்கள் அனுப்பிவைப்பு

Wanni_War_IDPs
வவுனியாவில் தஞ்சமடைந்துள்ள வடபகுதி அகதிகளுக்கு இவ்வார இறுதிக்குள் மாத்தளையிலிருந்து மற்றுமொரு தொகை அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மாநகர பிதா முகம்மது ஹில்மிகரீம் தெரிவித்தார்.

மாத்தளை நகர சர்வமதத் தலைவர்கள், பாடசாலைகள் சமூகநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரால் சேகரிக்கப்பட்ட ஒரு தொகை அத்தியாவசியப் பொருட்களை கடந்த வாரம் முற்பகுதியில் வவுனியாவுக்கு எடுத்துச் சென்று கையளித்தபோது அங்கு கடமையில் ஈடுபட்டுவரும் மாத்தளையைச் சேர்ந்த பிரிகேடியர் ஷவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் சஹீட் ஆகியோர் எம்மை சந்தித்து மேலும் ஒரு தொகை அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்குமாறு எம்மிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அத்துடன் வவுனியாவில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு பெருந்தொகையான அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுவதாகவும் நாட்டுமக்கள் இன, மத, மொழி பேதமின்றி மனிதாபிமான ரீதியில் இம்மக்களுக்கு நம்மாலான உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரச, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் பாடசாலை மாணவர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் உடை, தண்ணீர்ப் போத்தல், மருந்துவகைகள், பால்மா, உணவுப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை எதிர்பார்க்கிறோம்.

பொருட்களை அன்பளிப்பு செய்ய விரும்புவோர் அவற்றை மாத்தளை நகர சர்வமதத் தலைவர்களில் இவ்வார இறுதிக்குள் ஒப்படைக்கலாம், வாரநாட்களில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரையிலான காலப்பகுதிக்குள் மாத்தளை மாநகரசபை காரியாலயத்தில் ஒப்படைக்கலாம்.

இலங்கை அரசுக்கு ஆதரவானோர் தமிழகத்தில் இருக்கமுடியாது இன்று முதல் 8 இடங்களில் விழப்புணர்வுத்தேர்தல் பிரசாரம்

தமிழ் துரோகிகளை தமிழகத்தை விட்டு துரத்துவோம். இதை மையமாக வைத்து தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எட்டு இடங்களில் விழிப்புணர்வு தேர்தல் பிரசாரத்தை திரையுலக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம் மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

காஞ்சிபுரத்தில் முதல் கூட்டம் நடைபெறும் எனவும் பாரதிராஜா கூறியுள்ளார். சென்னபோர் பிரேம் பிரிவியூ தியேட்டரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாரதிராஜா. அப்போது அவர் கூறுகையில்; திரைப்பட கலைஞர்களுக்கு சமூகப்பார்வை இருக்க வேண்டியது அவசியம். தமிழக அரசியலில் சினிமாவுக்கு பெரும் பங்கு உண்டு. திரைப்படத்துறையிலிருந்து இயக்கம் ஆரம்பித்து அரசியல் கட்சியாகி ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள்.  இன்றைய சூழ்நிலையில் தமிழ் உணர்வு மங்கிப்போய்விட்டது.

இந்த தேர்தல் பிரசாரத்தில் இயக்குநர்கள் ஆர்.கே. செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன், சீமான், சேரன், அமீர், சரவண சுப்பையா, செல்வபாரதி, பிரவீண்காந்த், மனோஜ்குமார், மணிவண்ணன், நடிகர் வடிவேலு, கவிஞர் அறிவுமதி, கவிஞர் சினேகன் உட்பட ஏராளமான இணை,துணை உதவி இயக்குநர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் திங்கட்கிழமை எங்களது பிரசார பயணத்தை தொடங்குகிறோம்.

உலகில் எந்த மூலையில் தமிழனுக்கு இன்னல்கள் ஏற்பட்டாலும் அதைத் தட்டிக்கேட்கவும் தோள் கொடுக்கவும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவும் புறப்படுகிறோம்.தமிழ் மக்களுக்கு இன உணர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான் எங்கள் பிரசாரத்தின் நோக்கம்.தமிழ் துரோகிகளை தமிழகத்திலிருந்து ஒழிப்போம் .விரட்டியடிப்போம். தமிழ் இனத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவுதரும் எந்த துரோகியும் தமிழகத்தில் இருக்கமுடியாது.

தமிழர்களின் முதுகில் குத்தியுள்ள கட்சிகளை எதிர்த்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம். குறிப்பிட்ட கட்சி என்று இல்லை. துரோகிகள் அனைவரையும் நாங்கள் எதிர்க்கிறோம்.மத்திய கிழக்கில் முன்பு யூதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விடமோசமான முறையில் தமிழர்களுக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளது.  இன்று தொடங்கும் எங்கள் தேர்தல் பிரசாரம் 11 ஆம் திகதி வரை நடைபெறும். தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் சோனியா காந்திக்கு எங்களது எதிர்ப்பை எந்த முறையில் காட்டவேண்டுமோ அந்த வகையில் காட்டுவோம் என்றார்.