ஆலய உற்சவம் இடைநிறுத்தப்பட்டது இந்துக்களை அவமதிக்கும் ஒரு செயல்

இறக்குவானை முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பௌத்தர்களின் எதிர்ப்புக்காரணமாக இடைநிறுத்தப்பட்டது இந்துக்களை அவமதிப்பதுடன் இந்து மதத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவும் உள்ளதாக கடந்த வியாழக்கிழமை மேற்படி ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் இரத்தினபுரி மாவட்ட இனணப்பதிகாரியும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.டி இராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆலய பரிபாலனசபையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முத்துமாரியம்மன் ஆலய உற்சவம் இடைநிறுத்தப்பட்டமை இறக்குவானை பிரதேச மக்கள் மத்தியில் பெறும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சித்திரா பௌர்ணமி தினத்தில் பதுளை, அட்டன் போன்ற பிரதேசத்திலுள்ள பல ஆலயங்களில் இரதபவனி இடம்பெற்று வருகிறது. ஆனால் இறக்குவானைப் பிரதேசத்தில் மாத்திரமே பௌத்தர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் உரியவர்களுடன் கலந்துரையாடி சாதகமான முடிவை பெற்றுத்தர வேண்டுமென அப்பிரதேச மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *