அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

நெலுங்குளத்தில் மூன்று புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொலை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

police_spokesman_ranjith.jpgவவுனியா, நெலுங்குளம் பகுதியில் இன்று காலை மூன்று புலி உறுப்பினர்கள் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் இன்று காலை தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட வவுனியா விஷேட பொலிஸ் பிரிவினர் வாகனம் ஒன்றை சோதணை செய்ய முற்பட்டபோது இந்த மூன்று புலி உறுப்பினர்களும் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதனை வெற்றிகரமாக முறியடித்த பொலிஸாரின் பதில் துப்பாக்கிப் பிரயோகத்தில் இம்மூவரும் கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டன என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். 

அகதி முகாம்களுக்குச் செல்ல அனுமதி மறுப்பு : எதிர்க்கட்சிகள் வழக்குத் தாக்கல்

court-unp.jpgவடக்கில் நடந்து முடிந்த யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு மக்கள் பலர் முகாம்களில் அகதிகளாக அவலப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களை முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டு, அவர்களுக்கான உதவிகளை வழங்கும் ஒரு சந்தர்ப்பத்தை எமது நாட்டு எதிர்க்கட்சிகளுக்கோ மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கோ அரசு வழங்கவில்லை.

எமது நாட்டு மக்களின் நிலையை நேரில் சென்று அறிய முடியாத நிலையை அரசு உருவாக்கி உள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயலத் ஜயவர்தன, லஷ்மன் செனவிரத்ன, மங்கள் சமரவீர, ஹசன் அலி, மனோ கணேசன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று பிரதம நீதியரசர் அசோக் டி சில்வாவின் முன்னிலையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விவாதத்தின் பின்னர் இம்மனு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கைதான இந்திய மீனவர்கள் விடுதலை

fishermen.jpgஇலங்கைக் கடற்படையினரால் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுவிக்கப்பட்ட இவர்கள் இந்திய கடலோர காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

சீன அபிவிருத்தி வங்கியால் 25 மில்லியன் டொலர் நிதியுதவி

ranjith_siyambalapitiya.jpgநாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு சீன அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் டொலரை நிதியுதவியாக வழங்க முன் வந்துள்ளதுடன் அதற்கான பினைச் சாண்றிதழ் ஒன்றை சமர்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பதில் நிதி அமைச்சரான ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய சமர்பித்திருந்தார்.

இந்தக் கடனுதவித் தொகை மூலம் விவசாயம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய 7 இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைது

arrest.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஏழு இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இரண்டு இராணுவ மேஜர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையற்றிய இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.குறித்த இராணுவ உயரதிகாரிகள் தொடர்பில் விரிவான இரகசிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதன் காரணமாக அவர்ளது விபரங்களை வெளியிட முடியாதென பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்

ஏ 9 ஊடாக தனியார் லொறிகள் நேற்று யாழ்ப்பாணம் பயணம்

a-9-loorys.jpgயாழ். குடா நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு 35 தனியார் லொறிகள் நேற்று ஏ-9 பிரதான வீதி ஊடாக யாழ்ப்பாணம் சென்றடைந்தன. மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி தனியார் லொறிகள் செல்ல அனுமதிக்கப்பட்டமை இதுவே முதற் தடவையாகுமென்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

மூன்று தினங்களுக்கு ஒரு முறை இந்த லொறிகள் பொருட்களை ஏற்றிச் சொல்லவும் கொண்டுவரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தென்பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் இந்த லொறிகள் வடபகுதியிலுள்ள பொருட்களை ஏற்றிக் கொண்டு தென்பகுதியை நோக்கி திரும்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு தடவைக்கு 40 லொறிகள் மாத்திரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரிகேடியர் நேற்றைய தினம் 35 லொறிகளே சென்றதென்றும் குறிப்பிட்டார்.

தென்பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் சகல தனியார் லொறி களும் ஓமந்தை சோதனைச் சாவடியை சென்றடைந்த பின்னர் அங்கு பாரிய சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் வடக்கை நோக்கி செல்ல அனுமதிக்கப்படும். இதற்கமைய, ஓமந்தையிலிருந்து இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் சகல லொறிகளும் புறப்பட்டுச் சென்றன.

உணவு, மரக்கறி, பழ வகைகள் எண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருட்களே நேற்றைய தினம் எடுத்துச் செல்லப்பட்டன.  அதேபோன்று இந்த லொறிகள் கொழும்புக்கு திரும்பும் போது வடபகுதியில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி, பழவகைகள் உட்பட பல்வேறு பொருட்களை அனுப்பி வைக்க யாழ். குடா மக்கள் தயார் நிலையில் உள்ளதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

ஏ-9 பிரதான வீதியின் இரு மருங்கிலும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தென்பகுதிக்கு தேவையான பொருட்களை ஏற்றிவரும் லொறிகள் ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனையிடப்பட்ட பின்னர் தென்பகுதியை நோக்கி அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஏ-9 பிரதான வீதியையும் அதனை அண்மித்த பிரதேசங்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றிய சில காலங்களுக்கு பின்னர் பாதுகாப்பு படைவீரர்களின் விநியோகத்திற்காக ஏ-9 பிரதான வீதி உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டிருந்தது.

அதேசமயம், இராணுவத்தின் பூரண வழித்துணையுடன் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் வேண்டு கோளுக்கிணங்க யாழ். குடா நாட்டு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தரைவழியாக கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், தனியார் லொறிகளும் பொருட்களை கொண்டு செல்வதன் மூலம் அந்த மக்களுக்குத் தேவையான பொருட்களை மேலும் இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கை வடக்கு வசந்தத்திற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.

விமானத்தில் வந்தோர் பற்றிய விபரங்களை திரட்டுகிறது அமைச்சு

swine_flu.jpgபன்றிக் காய்ச்சல் வைரஸ¤டன் இலங்கைக்குள் வந்த சிறுவனுடன் பயணித்தவர்களின் விபரங்களை சுகாதார அமைச்சு குடிவரவு – குடியகல்வு திணைக்களத்திடம் கோரியுள்ளது.

அதேநேரம், வத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட பன்றிக் காய்ச்சல் சிறுவனுடன் நெருங்கிப் பழகியவர்கள் தொடர் பாகவும் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி காலை 11.50 க்கு சிங்கப்பூரி லிரு ந்து இலங்கை வந்த எஸ். கியூ. 466 ரக சிங்கப்பூர் எயார் லைன்ஸ¤க்கு சொந்தமான விமானத்தில் 185 பய ணிகள் வருகை தந்தனர்.

இதில் 91 பேர் மட்டுமே குடி வரவு – குடியகல்வு திணைக்களத்திடம் இறங்குவ தற்கான படிவத்தை நிரப்பி கையளித்துள் ளனர். ஏனைய 94 பேர் படிவங்களைக் கையளிக்கவில்லை. 94 பேரும் இலங்கை க்குள் வந்துள்ளனரா? அல்லது விமான நிலையத்திலிருந்து டிரான்சிட் முறையில் வேறு விமானத்தில் சென்றுவிட்ட னரா? என்பது பற்றிய விபரங்களை விமான நிலைய குடிவரவு – குடியகல்வு திணைக்களத்திடம் விபரங்களை சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

(ஏ) எச். ஐ. என். ஐ. வைரஸ் தொற்றிய வர்கள் இலங்கைக்குள் வருவார்களேயா னால் அவர்களையும் அவர்களுடன் நெருங் கிப் பழகியவர்களையும் தனியான முறை யில் சிகிச்சையளிக்கவும் சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் வைரஸ் இலங்கைக் குள் வந்துள்ளதையடுத்து என்ன வகை யான முன்னெச்சரிக்சை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றிய அவசர கூட்டமொன்று நேற்று சுகாதார அமை ச்சில் நடைபெற்றது.சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக்க தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.

பன்றிக் காய்ச்சலுடனான நோயாளி ஒரு வரை பராமரிக்கும், சிகிச்சையளிக்கும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் காய்ச்சல் தொற்றிவிடாதபடி எவ்வாறான பாதகாப்பு நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.

நோய்த் தடுப்புக்கான மருந்து வகைகளை போதுமான அளவு உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ளதுடன் இன்னும் தேவையேற்படும் பட்சத்தில் மருந்து வகைகளை பெற்றுக்கொடுக்கவும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆயத்தமாக இருக்கிறது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விமான நிலையத்தில் பயணிகள் வருகை பிரிவில் பன்றிக் காய்ச்சல் வைரஸடன் வருபவர்களை கண்காணிக்கும் பகுதியில் ஆளணியை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்சத் தீவு-அனைத்து கட்சிகளும் ஆதரித்தால் தீர்மானம்: கருணாநிதி

karunanithi.jpgஅனைத்துக் கட்சிகளும் ஆதரி்த்தால் கட்சத் தீவை மீட்பது குறித்து சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றத் தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறினார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரியும் கட்சத் தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் கச்சத் தீவில் இலங்கை ராணுவத் தளம் அமைப்பதை தடுக்கக் கோரியும் இன்று சட்டசபையில் எதிர் கட்சிகள் சிறப்பு ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தன.

இந்த விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, அதிக மீனுக்கு ஆசைப்பட்டு தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதாக 1992ம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இப்போதும் அதே நிலை தான் நீடிக்கிறது. கட்சத் தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததை திமுக ஆதரிக்கவில்லை.

கச்சத் தீவை மீட்கக் கோரி சட்டப் பேரவையில் பலமுறை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டபோதும் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவு இல்லாததால் அதை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இப்போது அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தால் இது தொடர்பாக தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது என்றார்.

30 கிலோ கிளேமோர்கள், குண்டுகள், ஆயுதங்கள் மீட்பு – முல்லைத்தீவில் தொடர்ந்தும் தேடுதல்

udaya_nanayakkara_brigediars.jpgமுப்பது கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த கிளேமோர், பல்வேறு ரக மோட்டார் குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை முல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இரா ணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

வெள்ளைமுள்ளி வாய்க்கால், சாலை, புதுக்குடியிருப்பு, குப்பிலான்குளம், பட்டிக்கரை மற்றும் புளியம்பொக்கனை ஆகிய பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் தேடுதல் களை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித் தார்.

120 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள் – 02, 80 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள்-02, 81 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள்-03, 60 மி.மீ ரக மோட்டார் குண்டுகள்-03, மிதிவெடிகள்-100, ரி-56 ரக துப்பாக்கிகள்-04, கைக்குண் டுகள்-05 மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பான் கீ மூனுக்கு எதிராக நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம்

06bankimoon.jpgஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெறும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறி நேற்று நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பான் கீ மூனுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் ‘உலக மனிதாபிமான விருது’ கிடைக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தின்போது, வவுனியா மெனிக்பார்மில் உள்ள தடுப்பு முகாம்களை மூட வேண்டும் எனவும் அதில் ஈடுபட்டோர் கோரியுள்ளனர்.இதன் காரணமாக மாலை 6.30க்கு நடைபெறவிருந்த பான் கீ மூனின் ஊடக சந்திப்பு, இரவு 8.35 வரையில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.