அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வெளிநாட்டு நிதிகள் மூலம் நாட்டில் பாரிய அபிவிருத்தி பணிகள் மக்களின் சட்டைப் பைகளுக்குள் இடப்பட்டுள்ளது – லக்ஷ்மன் யாப்பா

laxman_yapa_abeywardena.jpgவெளிநாடு களிலிருந்து கிடைக்கப் பெற்ற நிதியினைக் கொண்டு பாரிய அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், இதன் மூலம் அந்த நிதி யாவும் மக்களின் சட்டைப் பைக்குள்ளேயே இடப்பட்டிருப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க கூறுவதைப் போல், வெளிநாட்டு நிதியை அரசாங்கம் பைக்குள் போட்டுக் கொள்ளவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் பெருந்தொகைப் பணத்தைப் பயன்படுத்தியுள்ளதாகவும் 2010 ஆம் ஆண்டில் நாட்டின் சகல குடியிருப் புகளுக்கும் 90% மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை (16) நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அபிவிருத்தி நிதி அரசின் ‘பொக்கெட்டு’ க்குப் போகவில்லை. சகல வீடுகளுக்கும் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் வெளிநாட்டு நிதியே பயன்படுகிறது. ஐந்து துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படுகி ன்றன. 2007-2017 ஆண்டு வீதி அபிவிருத்திக்கென 484,378.5 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மேல், வட மத்திய, வட மேல், ஊவா மாகாண வீதி அபிவிருத்திக் கென கடந்த வருடம் 10671 மில்லியன் செல விடப்பட்டுள்ளது. மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய 298065 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த 154445 மில்லியன் ரூபாவும், கிராமிய உட்கட்டமைப்புகளை மேம்படுத் தவென 35717 மில்லியன் ரூபாவும் முதலீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.  துறைமுகங்களின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக விபரங்களை யும் அமைச்சர் வெளியிட்டார்.

டெங்கு : இதுவரை 253 பேர் பலி

dengue22222.jpgநாடெங் கிலும் இவ்வருடம் 253 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் எனத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் இது வரை 48 பேர் இறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கண்டி 36, கொழும்பு 30,கேகாலை 22, மட்டக்களப்பு 17, குருநாகல் 17 என்ற எண்ணிக்கையில் மாவட்ட ரீதியாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் தேசிய ரீதியாக இது வரை 25 ஆயிரத்து 777 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  கண்டி 3507 பேர், கேகாலை 3417 பேர், கொழும்பு 3325 பேர், கம்பஹா 30233 பேர், குருனாகல் 2447 பேர் எண்ற எண்ணிக்கையில் மாவட்ட ரீதியாக டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய அபி. ஊடக நிலையம்: 24 மணி நேரமும் இயங்க ஏற்பாடு; புதிய குழுவும் நியமனம்

laxman_yapa_abeywardena.jpgதேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தை 24 மணி நேரமும் இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இதற்காக, நிலையத்தின் பணிப்பாளர் நாயகமாக ஆரிய ரூபசிங்கவை ஜனாதிபதி நியமித்துள்ளாரென்றும் 36 பேர் கொண்ட உத்தியோகத்தர் குழுவொன்று நியமிக்கப்பட்டு ள்ளதாகவும் அமைச்சர் கூறினார். தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான அபிவிருத்திப் பணிகள் தொடர்பான தகவல்களையும் இந்த ஊடக மத்திய நிலையம் திரட்டுவதோடு, ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கு முன்பதாக அபிவிருத்தி தொடர்பான அனைத்துத் தகவல்களும் ஜனாதிபதிக்குப் பெற்றுக்கொடுக்கப்படும்.

அதேநேரம், தகவல்களை வழங்குவதற்கும், பெற்றுக் கொள்வதற்கும் இந்த நிலையத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

மாவோயிஸ்டுகளிடம் இந்தியா தோற்கிறது: மன்மோகன் சிங்

170909ndianmaoistnaxal.jpgஇந்தியா வில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் தாங்கள் தோல்வியடைந்து வருவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இந்தியாவில் கிளர்ச்சியாளர்களின் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இந்திய சமூகத்தில் பெரும்பாலானவர்களிடையே மாவோயிஸ்டுகளுக்கான ஆதரவு அதிகரித்து வருவதாகவும், மாநில காவல்துறை தலைவர்களிடையே உரையாற்றிய போதே மன்மோகன் சிங் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஆனால் ஏழைகளின் உரிமைகளுக்காக தாங்கள் போராடி வருவதாக கிளர்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் மத்தியப் பகுதியில் பெருமளவிலான நிலப்பரப்பில் அவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். சில இடங்களில் கிட்டத்தட்ட உள்ளூர் ஆட்சியையும் அவர்களே நடத்தி வருகிறார்கள்.

மீண்டும் புத்துணர்வு பெற மாவோயிஸ்டுகள் எடுத்துவரும் போராட்டங்களின் காரணமாக கடந்த இருபது ஆண்டுகளில் ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

யாழ் தொழில்நுட்பக் கல்லூரியின் தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாக்குறுதி

170909daglas-dewa.jpgயாழ் தொழில்நுட்பக் கல்லூரியின் பிரச்சினைகள் யாவும் கூடிய விரைவில் தீர்க்கப்படுமெனவும் தேவைகள் யாவும் படிபடிப்யாகப் பூர்த்தி செய்யப்படுமெனவும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இக்கல்லூரியில் இடம்பெற்று வரும் நிர்வாகச் சீர்கேடு மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் (16) கல்லூரியின் நிர்வாகத் தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

விரிவுரையாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் உட்பட ஊழியர்களின் ஊதியப் பிரச்சினை தொடர்பில் தான் உடனடி கவனஞ் செலுத்தி வருவதாகவும் ஏனைய அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் தொழிற்பயிற்சி அமைச்சருடனும் உரிய அதிகாரிகளுடனும் கலந்துரையாடி விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்ää

யாழ் தொழில்நுட்பக் கல்லூரியானது எமது சமூகத்தின் முன்னேற்றம் கருதி செயற்பட வேண்டுமே அன்றி இவ்வாறான நிலைக்கு அது தள்ளப்படக்கூடாது. அதனை நான்; ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இக்கல்லூரி ஒழுங்குறப் பராமரிக்கப்படாமையே இன்று இந்தக் கல்லூரியின் பாரிய பின்னடைவுக்குக் காரணம்;

இக்கல்லூரியை முன்னேற்ற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும.; கல்லூரியில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு தொழிற்பயிற்சி அமைச்சில் இருந்து அதிகாரி ஒருவர் வரவுள்ளார்; அந்த விசாரணையின்போது அனைவரும் சுதந்திரமாகத் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆறு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈரான்

170909iran-flag.jpgஈரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுக்கும்,  6 நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் துருக்கியில் நடைபெறவுள்ளதாக  ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை வகுக்கும் பிரிவின் தலைவர் ஜாவியர் சொலோனர் தெரிவித்தார்.  இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா,  ரஷ்யா, பிரிட்டன்,  பிரான்ஸ்,  சீனா மற்றும் ஜேர்மனியின் பிரதிநிதிகள் பங்கேற்பர். ஈரான் சார்பில் அதன் அணுசக்தித் திட்ட முக்கிய அதிகாரியான சய்யீத் ஜலிலி பங்கேற்பார்.

ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தையின் போது உலக நாடுகளுடனான வர்த்தகம்,  பொருளாதாரத் தடை குறித்த விஷயங்களும் விவாதிக்கப்படும் என்றார் அவர். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பிறகு, ஈரானுடன் நடைபெறவிருக்கும் முதலாவது உயர் நிலையிலான பேச்சுவார்த்தை இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஈரான் விஷயத்தில் வெளிப்படையான கொள்கையைப் பின்பற்றுவதற்கான முயற்சிகளை ஒபாமா மேற்கொண்டுள்ளதாக ஐரோப்பிய ராஜீயத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடைசியாக கடந்த ஆண்டு,  ஜூலை மாதம் ஜெனீவாவில் ஈரானுக்கும்,  அமெரிக்கா உள்ளிட்ட உலகின் வல்லரசு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பாரிய சதித்திட்டம் அரங்கேற்றம் – அரசாங்கம்

dallus_allahapperuma.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் தலைமைப் பதவியில் இருந்து நீக்கி ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவருவதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் திட்டமிடப்பட்ட பாரிய சதித்திட்டம் ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை முன்வைத்தார்.

உள்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் இருவர் மற்றும் இலங்கையில் உள்ள சில வெளிநாட்டு தூதுவர்கள் மேலும் தூதுவராக பதவி வகித்துவிட்டு சென்றவர்கள் என பலர் இந்த சதித்திட்டத்தில் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் மேலும் பல தகவல்களை வெளியிடுவோம் என்று ஸ்ரீலங்கா சதந்திர கட்சியின் பொருளாளரும் போக்குவரத்து அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற விவகாரங்களை முன்வைத்து சர்வதேச மட்டத்தில் அழுத்தங்களை பிரயோகித்து ஜனாதிபதியை அந்த பதவியிலிருந்து நீக்கி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. எனவே நாட்டைக் காட்டிக்கொடுத்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கவேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்

ரூபா 500 சம்பள உயர்வுகோரி நேற்றும் தோட்டங்களில் ஆர்ப்பாட்டம்

sri-lanka-upcountry.jpgகைச் சாத்திடப்படவிருக்கின்ற கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 500 ரூபா சம்பள உயர்வு கோரியும் மலை யகத்தின் பல்வேறு தோட்டப் பிரதேசங்களிலும் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

அட்டன் – யுனிபீல்ட் வெலிங்டன், கிரிஸ்லஸ் பாம் தோட் டங்களிலும் கொட்டகலை டிரைட்டன், எதென்சைட், லொக் கில் தோட்டங்களிலும், தலவாக்கலை சென் என்றூஸ் தோட்டங்களிலும், பொகவந்தலாவை கொட்டியாகலை, பொகவானை, குயினா, கில்லானி, செல்வகந்தை, டின்சின் ஆகிய தோட்டங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.

பொகவந்தலாவை பகுதியிலுள்ள கொட்டியாகலை, பொக வானை, செல்வகந்த, குயினா ஆகிய தோட்டங்களில் தொழிலாளர்கள் முற்றாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், “எங்களை இரண்டு வருடத்திற்கு விற்காதே, அடிப்படை சம்பளம் 500 ரூபா கொடு, துரோ கத்திற்கு துணை போகாதே” போன்ற பதாதைகளை ஏந் திய வண்ணம் கோசங்களை எழுப்பினர். சிலர் கறுப்புப் பட்டிகளை அணிந்தும் கறுப்பு கொடிகளை காட்டியும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதனால் பதற்ற நிலை நிலவியது. பொலிஸார் தலையிட்டு சுமுக நிலைக்குக் கொண்டுவந்தனர்.

அவுஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது மீண்டும் தாக்குதல்: மூவர் காயம்

அவுஸ்திரேலியாவில் கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 30 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

கடந்த மாதம் அவுஸ்திரேலியா சென்ற அமைச்சர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவிடம், இனிமேல் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெறாமல் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அவுஸ்திரேலியா உறுதி அளித்தது.

இந்த வாக்குறுதி அளிக்கப்பட்ட ஒரு மாதம் முடிவதற்குள் அங்கு மீண்டும் 3 இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அவர்களில் சுக்தீப் சிங் (வயது 26), அவரது சகோதரர் குர்தீப் சிங் ஆகியவர்கள் மாணவர்கள். இன்னொருவர் இவர்களின் உறவுமுறையைச் சேர்ந்தவர்.

மெல்போர்ன் நகரின் கிழக்கு புறநகர் பகுதியில் இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒரு மதுபான விடுதியில் நடந்த விளையாட்டில் கலந்துகொண்டனர். அப்போது அங்கு விருந்தில் கலந்துகொண்டிருந்த 70 இளைஞர்கள் அவர்களிடம் வந்து வம்பு இழுத்து, ஒழுங்காக உங்கள் நாட்டுக்கு போய்விடுங்கள் என்று எச்சரித்ததுடன், கேலியும் கிண்டலும் செய்தனர்.

இந்தியர்கள் உடனே எதற்கு வம்பு என்று நினைத்து தங்கள் கார்களில் ஏறிச்செல்ல முயன்றனர். அப்போது 70 பேரும் மாணவர்கள் இருவர் மற்றும் அவர்களது உறவினர் ஆகியோரை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்.

இதில் காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்த போலிஸார் 70 பேரில் 6 பேரை கைது செய்தனர்.

இலங்கை கடற்படையுடன் தமிழக மீனவர்களை தாக்கியது சீனர்கள்- இல.கணேசன்

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையுடன் சேர்ந்து சீனர்களும் தாக்கியதாக தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இலங்கை கடற்படையினரி்ன் தாக்குதல் காரணமாக கடலுக்கு செல்ல மறுத்து ராமேஸ்வரம் உள்ளிட்ட 5 மாவட்ட மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தமிழக அரசு கொடுத்த உறுதிமொழியின் பேரில் 300 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குத் திரும்பினர். ஆனால், அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது மூன்று பெரிய கப்பல்கள் உட்பட 9 கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

அவர்களிடமிருந்து உயிர் பிழைக்கும் நோக்கத்தில் மீனவர்கள் கரையை நோக்கி வேகமாக திரும்பினர். அப்போது அவர்களை துரத்தி வந்த இலங்கை கடற்படை 5 படகுகளில் வந்த 21 மீனவர்களை சுற்றி வளைத்து தாக்கினர். வெற்றிவேல், சுடலைமணி, பாண்டி, முனியசாமி ஆகிய நான்கு பேரையும் சிறைபிடித்து சென்று தலைமன்னார் நீதிமன்றத்தில் நிறுத்தியது. வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் நான்கு பேரையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சீனர்களும் இருந்தனர்..

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் இல.கணேசன், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இலங்கை கடற்படையினர் மட்டுமல்ல. அவர்களில் சீனர்களும் இருந்ததாக மீனவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இது நாட்டின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தலாகும் என்றார்.