அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வைத்தியசாலையின் அலுமாரி ஒன்றில் சிசுவின் சடலம் : 17 வயது யுவதி கைது

கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் அலுமாரி ஒன்றில் சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக யுவதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் பாதும்பை பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக இருந்த போது பிரசவ வலி ஏற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக, சம்பந்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

17 வயதான இந்த யுவதி 2 வாரங்களுக்கு முன்பு உடப்புஸ்ஸலாவை பகுதியில் இருந்து பாதும்பை பகுதியிலுள்ள குறிப்பிட்ட வீட்டுக்கு பணிப்பெண்ணாக அழைத்து வரப்பட்டதாகப் பொலிசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் பாதும்பை பொலிஸார், காசல் மகப்பேற்று மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டு, இவர் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும் பின்னர் இவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி

031109unf.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி இன்று செவ்வாய்க்கிழமை காலை உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டமைப்பில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, புதிய சிஹல உறுமய உள்ளிட்ட 20 கட்சிகளும், அமைப்புக்களும் கைச்சாத்திட்டுள்ளன. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து முற்பகல் 11.30 மணி வரையிலான சுபநேரத்தில் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது உட்பட 10 அம்ச இணக்கப்பாடுகளை கருத்தில் கொண்டே எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கப்படுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி என்ற இந்த புதிய அரசியல் முன்னணி ஆட்சியமைத்ததன் பின்னர் 180 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் ஜனாதிபதியாக மீண்டும் கர்ஸாய் வெற்றி

031109karzai.pngஆப்கானிஸ் தானின் ஜனாதிபதியாக இரண்டாம் முறையாக ஹமீது கர்ஸாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையாளர் திங்கள்கிழமை முறைப்படி அறிவித்துள்ளார். ஆகஸ்ட்டில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் ஹமீது கர்ஸாய் பெரும்பான்மை வாக்குகள் பெற்றார். ஆனால் வாக்காளர் பட்டியலில் உள்ள எண்ணிக்கையை விட அதிக வாக்குகள் பதிவானதாகவும் தேர்தலில் தில்லு முல்லு செய்தே கர்ஸாய் வெற்றி பெற்றதாகவும் அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் நிதி அமைச்சர் அப்துல்லா அப்துல்லா குற்றஞ்சாட்டினார்;.

இதையடுத்து,  ஐநா தலையிட்டு அந்த தேர்தலை ரத்து செய்து அடுத்த கட்ட தேர்தலுக்கு ஏற்பாடு செய்தது. அதில் கர்ஸாய் மற்றும் அப்துல்லா அப்துல்லா இருவர் மட்டுமே போட்டியிட்டனர். இந்த தேர்தலிலும் தில்லு முல்லு நடக்கும், வாக்குப்பதிவு நேர்மையாக நடக்காது என்று குற்றம்சாட்டி போட்டியிலிருந்து விலகினார் அப்துல்லா.

கர்ஸாய் மட்டுமே களத்தில் இருந்தார். இதனால், இரண்டாம் கட்ட தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கர்ஸாயை ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் சந்தித்துப் பேசினார். அதையடுத்து, அதிபர் தேர்தலில் கர்ஸாய் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையாளர்; அஜிஸல்லா லூதின் அறிவிப்பு வெளியிட்டார்

நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அழுத்தம் கொடுக்க எந்தவொரு நாட்டுக்கும் அதிகாரம் கிடையாது – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

290909mahinda.jpgஇலங் கையின் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதற்கு உலகின் எந்தவொரு நாட்டுக்கும் உரிமை கிடையாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீதித் துறையானது ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணித்திருந்த யுகத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க முடிந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டுக்கெதிரான அழுத்தங்களின் போது இன, மத, குல பேதமின்றி இணைந்து முகங்கொடுக்க சகலரும் முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தார்.

சட்டத்தரணிகள் சங்க அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று கொழும்பு, புதுக்கடை நீதிமன்றக் கட்டிடத்திற்கருகாமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. மேற்படி கட்டிடத்திற்கான பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

முப்பது வருட கால பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டு நாட்டில் நீதித்துறையின் அதிகாரத்தை உறுதிப்படுத்த எம்மால் முடிந்துள்ளது. இதனை, தேசிய ரீதியில் நாட்டை முன்னேற்றுவதற்கு சிறந்த யுகமாகக் கொள்ள முடியும். கடந்த 30 வருட காலம் இலங்கையின் நீதித்துறை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தது.

மக்களுக்கான நீதித்துறை என்ற நிலைமைக்கு மாறாக நாட்டில் ஒரு பகுதியில் சட்டம் நடைமுறை யற்றதாகியிருந்தது. சில காலகட்டங்களில் வவுனியாவிற்கு அப்பால் சட்டம் நடைமுறையில் இல்லாமல் இருந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 200 வருட சிறைத் தண்டனை வழங்கிய போதும் அதனை நடைமுறைப்படுத்த முடியாத காலம் அது. பயங்கரவாதக் குழுவை பிடிப்பதற்கான தேவை இந்தியாவிற்கும் இருந்தது. எனினும், பிடியாணை உட்பட நீதிமன்ற செயற்பாடுகள் அப்போது கேலிக்குரியதாகின.

சட்டம் ஆயுத பலத்துக்கு அடி பணிந்திருந்த யுகத்துக்கு நாம் முடிவு கட்டினோம். இன்று சட்டத்திற்கெதிரான அச்சுறுத்தல்களை மேற்கொள்ள எவருக்கும் இடமில்லை. நீதிமன்ற நடவடிக்கைகள் நாடு முழுவதிலும் தற்போது செயற்படுவதுடன் சட்டம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செயற்படுத்தப்படுகிறது.

நீதிமன்றத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட பல சந்தர்ப்பங்களும் கண்டுள்ளோம். வடக்கு, கிழக்கில் பயங்கரவாதம் மற்றும் தெற்கில் பாதாள உலகம் என இவ்வச்சுறுத்தல் தொடர்ந்தன.  நீதிபதி சரத் அம்பேபிடிய போன்றவர்கள் பாதாள உலக குழுவினால் கொல்லப் பட்டார்கள். இது போன்ற நாட்டில் சட்டத்தை நிலைநாட்ட முயன்று துப்பாக்கிக்குப் பலியான பல சம்பங்களுண்டு. நாட்டில் பல நீதிமன்றங்கள் மூடப்பட்ட காலம் அது.

எல்லைக் கிராமம் என்பதை இலங்கையின் வரை படத்திலிருந்தே அகற்றி சட்டம் முழு நாட்டிற்குரியது என்பதை நாம் நடைமுறையில் கொண்டு வந்துள்ளோம். சட்டம் சகலருக்கும் பொதுவானதாக வேண்டும். நாம் தொழில்நுட்ப அறிவை கிராமிய மட்டத்திலும் கொண்டு சென்றுள்ளோம்.

இதனால் எதிர்வரும் காலங்களில் சட்டத்தரணிகள் அறிவு பூர்வமான மக்களுக்கே சேவை செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். மக்களுக்கான உரிமை தொடர்பில் அவர்களை அறிவுறுத்த வேண்டியதும் சட்டத்தரணிகளின் கடமையாகிறது.

சிலர் நிறுவனச் சட்டங்களைக் கையிலெடுக்க முயல்கின்றனர். அதற்கான உரிமை எவருக்கும் கிடையாது. அரசாங்கம் நீதித்துறை போன்றே நீதித்துறை சார்ந்தவர்களின் கெளரவத்தையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. எனினும் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையில் தலையிடவோ அழுத்தம் கொடுக்கவோ முடியாது.

ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து ஊடகங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து நீதிமன்றத் தீர்ப்பினை மாற்ற கடந்த காலங்களில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அது மட்டுமன்றி வேறு நாடுகளை தலையிடச் செய்து நம் நாட்டு நீதிமன்றத் தீர்ப்புக்களை மாற்றியமைக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவ்வாறு செய்தால் நாட்டின் சட்டம் என்னாவது? சட்டத்தின் முன் சலரும் சமம் என்ற கூற்றுக்கு என்ன அர்த்தம்? அப்படி நிகழ்ந்தால் சட்டத்தின் சமத்துவம் கேள்விக்குரியதாகிவிடும்.

எமது நாட்டில் சிறந்த நீதித்துறை உள்ளது. எந்தவொரு பாரதூரமான பிரச்சினையையும் தீர்த்துக் கொள்ளக்கூடியதான பலத்தை அது கொண்டுள்ளது. இதனால் இந்த நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க வேறு நாடுகளில் நீதிமன்றங்களை நிறுவ வேண்டிய அவசியமில்லை. எமது நாட்டின் நீதித்துறை சுயாதீனத்தைப் பாதுகாத்தால் மட்டுமே சட்டம் ஒழுக்கம் நிறைந்த நாடொன்றைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். எமது நாட்டிற்கெதிரான அழுத்தங்கள் தொடர்பில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

இந்த விடயத்தில் இனம், மதம், குலம், கட்சி என்ற பேதங்கள் இருக்கக் கூடாது. எமது தாய் நாட்டிற்கு அழுத்தங்கள் வருமானால் நாம் அனைவரும் இணைந்து அதனை எதிர்கொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் எவ்வித தொற்றுநோயுமில்லை – வவுனியா அரச அதிபர்

101009displacedidps.gifஇடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் எந்தவித தொற்று நோய்களும் இல்லையெனவும் நோய்த்தடுப்புக்கான சகலவித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக வடக்கின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் தாம் நலன்புரி நிலையங்களுக்கு வரும்போதே பல்வேறு தொற்று நோய்களுடன் வந்தனர்.

அவ்வாறானவர்கள் இனங் காணப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது தொற்றுநோய் என்ற பேச்சுக்கே இடமில்லையெனவும் தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளில் இவ்வாறு இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களில் பல்வேறு தொற்று நோய்கள் காணப்படுகின்றன. எனினும் இதற்கு முன்னுதாரணமாக தொற்று நோய்களற்றதாக எமது நலன்புரி நிலையங்கள் திகழ்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்த மக்களிடையே மஞ்சட்காமாலை, தோல் நோய் மற்றும் பொக்களிப்பான் போன்ற நோய்கள் இருந்தன. இவற்றைக் குணப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறான நோய்களைக் கொண்டோர் வேறாக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதேநேரம் இத்தகைய தொற்றுக்கள் ஏனையோருக்கு பரவாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மழை காலங்களில் நோய்கள் பரவாமலிருப்பதற்காக சுற்றுச் சூழல்கள் துப்புரவு செய்யப்பட்டதுடன் நிர்தேங்கி நிற்பதைத் தடுக்கும் வகையில் வடிகான்கள் புனரமைக்கப்பட்டன. அத்துடன் மக்கள் தங்கியுள்ள கூடாரங்கள் திருத்தியமைக் கப்பட்டன.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தொற்று நோய் பரவுவது தடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்திலும் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் இன்று

26parliament.jpgஅடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக் கறிக்கை இன்று 3ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரச வருவாய்த்துறை அமைச்சரும், பிரதி நிதியமைச்சருமான ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க இந்த இடைக்கால கணக்கறிக்கை யைச் சமர்ப்பிப்பார் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடும் இவ்வேளையிலேயே பிரதமர் இக்கணக்கறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், அடுத்த வருட த்தின் முதல் நான்கு மாதங்களுக்கு மென பத்தாயிரத்து 600 மில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படும்.

இன்றும், நாளையும், நாளை மறுதினமும் இக்கணக்கறிக்கை மீது விவாதம் நடாத்தப்படும்.

நாளை மறுதினம் மாலை இந்த இடைக்கால கணக்கறிக்கை மீது வாக்கெடுப்பு நடாத்தப்படும். இந்த இடைக்கால கணக்கறிக்கை அதிகப்படியான மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவுறும் என்றார்.

இலங்கையின் 32 வது பொலிஸ் மா அதிபராக மகிந்த பாலசூரிய

mahinda-balasuriya.jpgஇலங் கையின் 32 வது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையக நிர்வாக மற்றும் விசேட அதிரடிப்படை நடவடிக்கை என்பவற்றிற்கு பொறுப்பாகவிருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய எதிர்வரும் நான்காம் திகதி பொலிஸ் மா அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

மீள்குடியேற்றப் பணி ஜனவரிக்குள் பூர்த்தி ஜனாதிபதி அறிவிப்பு;

bulgarian-president.jpgவடக்கில் இடம்பெயர்ந்துள்ள சகல மக்களும் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மீள்குடியேற்றப்பட்டு விடுவரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான மீள்குடியேற்றத்தின் மூலம் 280,000மாக விருந்த இடம்பெயர்ந்த மக்கள் தொகையை 160,000மாக குறைக்க முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, எதிர்வரும் 2010 ஜனவரிக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கையை பூரணப்படுத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பல்கேரிய ஜனாதிபதி ஜோர்ஜி பார்வனோவிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு அரசியல் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு ரீதியானதாக அமைந்ததுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரம், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சம்பந்தமாகவும் இதன் போது ஆராயப்பட்டுள்ளன.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் நாட்டை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொண்டுவரும் பிரயத்தனம் சம்பந்தமாகவும் அதன் பிரதிபலன்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்கேரிய ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனைச் கேட்டறிந்த பல்கேரிய ஜனாதிபதி, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் மீள நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளார்.

இன மற்றும் மத ரீதியான மக்களின் ஒத்துழைப்புடன் இலங்கையின் இறைமை மற்றும் ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஜனநாயக வழியில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதிலும் நாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இடம்பெயர்ந்தோர் மீள தமது கிராமங்களில் மீளக்குடியேற்ற ப்படுவதிலும் அவர் தமது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த பல்கேரிய ஜனாதிபதிக்கும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்குமிடையில் நேற்றுக் காலை ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது பல்கேரிய ஜனாதிபதியுடன் வந்திருந்த அந்நாட்டின் வர்த்தகத் தூதுக் குழுவுடனான முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன் இரு நாடுகளுக்கிடையிலுமான பொருளாதாரத் தொடர்புகள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப் பட்டுள்ளன. இப்பேச்சுவார்த்தையினையடுத்து பல்கேரிய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்திற்கும் இலங்கை வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்துக்குமிடையில் உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இவ்வுடன்படிக்கைக்கிணங்க இலங்கைக்கும் பல்கேரியாவுக்குமிடையில் பொருளாதார ஒத்துழைப்பை முன்னேற்றும் பல்வேறு செயற்றிட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

நேற்றைய இச்சந்திப்புகளுக்குப் பின் பல்கேரிய ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவினருக்கு ஜனாதிபதி மாளிகை யில் நேற்று மதிய போசன விருந்தளித்து கெளரவிக்கப்பட்டது.

இம்மாத முடிவுக்குள் 2474 பேருக்கு அதிபர் நியமனம்

நாடளாவிய ரீதியில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இம்மாதத்தில் 2474 பேருக்கு அதிபர் நியமனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.

அத்துடன் கல்வித்துறையில் மேற்கொள் ளப்பட்டு வரும் விசேட திட்டத்தின் கீழ் நாட்டின் சகல மாவட்டங்களிலுமுள்ள அதிபர் வெற்றிடங்களை இவ்வருட இறுதிக்குள் நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

கல்வியமைச்சின் கல்வி நிர்வாக அதிபர் மற்றும் ஆசியர் சேவைகளில் நிலவும் குறைபாடுகளைத் தீர்க்கவும் நீண்ட காலமாக நிலவும் வெற்றிடங்களை நிரப்பவும் அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர்:-

2008 ஆம் ஆண்டில் ஆசிரியர் சேவையில் 21,000 பேருக்குப் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் கல்வி நிர்வாக சேவையில் முதலாம் இரண்டாம் தரத்தினருக்கான பதவியுயர்வுகள் இம்மாதம் 6 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. எவ்வாறெனினும் கல்வி நிர்வாக சேவை யில் நிலவும் சகல பதவியுயர்வுக ளையும் துரிதமாக வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆசியாவைப் பொறுத்தவரை இலங்கையில் தொழில் தகைமையுள்ள பட்டதாரிகள் 90 வீதம் கல்வித்துறையில் ஆசிரியர்களாக கடமைகளிலுள்ளனர். மீதமுள்ள பத்து வீதமான ஆசிரியர் களுக்கும் உரிய பயிற்சி கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தவகையில் 12,000 ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இலவச பாடநூல் விநியோகம் இம்முறை உரிய காலத்தில் இடம்பெறுவது உறுதி. எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி நாடளாவிய சகல பாடசாலைகளுக்கும் பாடநூல்களை விநியோகிக்கத் தீர்மானித்துள்ளதுடன் ஜனவரி மாதத்துக்குள் சீருடை வழங்கும் நடவடிக்கையும் இடம்பெறவுள்ளது.

வவுனியாவிலிருந்து 2139 பேர் யாழ்ப்பாணம் வருகை

வவுனியா நலன்புரி கிராமங்களிலிருந்து 661 குடும்பங்களைச் சேர்ந்த 2139 பேர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவர்களில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் தீவகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இம் மக்கள் நேற்று முன்தினமிரவு யாழ். கச்சேரியை வந்தடைந்து பின்னர் தீவகப் பகுதிகளுக்குச் சென்றனர்.

அதேநேரம் 529 குடும்பங்களைச் சேர்ந்த 1673 பேர் கரவெட்டி விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்திற்கும் பருத்தித்துறை பிரதேச செயலர் அலுவல கத்திற்கும் வந்து சேர்ந்தனர். இம் மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இம் மக்கள் தங்களது சொந்த இருப்பிடங்களில் குடியேறிய பின்னர், அவர்களது எதிர்கால தேவைகள் குறித்துதான் நேரில் வந்து ஆராய்ந்து, அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார். இம் மக்களுக்கான நிதி உதவிகளையும் வழங்கினார்.