::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

ராஜஸ்தானில் நிலநடுக்கம்; 5.3 ரிக்ஸ்டர் அளவு

ராஜஸ்தானில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.  காலை 7.17 மணயிளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்ஸ்டர் அளவுகோலில் 5.3 என பதிவானதாக அந்த ஆய்வுமையம் தெரிவித்தது.

டில்லிக்கு தென்மேற்கே 650 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமான ஜெய்சால்மிர் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பாகிஸ்தானுடனான எல்லையில் ஒரு பூகம்பம் தாக்கியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற இந்த பூகம்பத்ததால் பல வீடுகள் சேதமடைந்ததுடன், இருவர் பலியாகியும் உள்ளனர்.

சோமாலியக் கடற்கொள்ளையர்களால் மேலும் ஒரு கப்பல் கடத்தல்

somaliya-robbery.jpgஉணவு உதவிப் பொருட்களடங்கிய கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 20 மாலுமிகளுடன் சேர்த்து சோமலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வாரத்தில் இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்களில் பிந்தியது இதுவாகும்.

சோமாலிய கடற்கரைக்கு அப்பால் சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில், கடற்கொள்ளையர்களின் படகுகளால் இந்த டச்சுக் கப்பலின் மீது இரவு நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் நிலைமை குறித்து தாம் அவதானித்து வருவதாக கூறியுள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, அந்த மாலுமிகளை பாதுகாப்பாக மீட்பது குறித்து தாம் ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ளது.

சோமாலிய கடற்கொள்ளையர்களின் இத்தகைய தாக்குதல்கள் வர வர மிகவும் துணிச்சலானவையாகவும், நுட்பமானவையாகவும் மாறி வருவதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

விடுதலைப்புலிகளால் சோனியாவுக்கு ஆபத்து: உளவுத்துறை

sonia-gandhi.jpgவிடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் இருப்பதால், சோனியாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்யும்போது, அவர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவருக்கு மட்டுமின்றி, அவரது மகனும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ராகுல் காந்தி, மகள் பிரியங்கா ஆகியோருக்கும் விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளது.

இதையடுத்து, அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் உஷார்படுத்தி உள்ளது. சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் தேர்தல் பிரசாரத்துக்காக வரும்போது, அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

பிரபாகர‌ன் உ‌யிரு‌க்கு ஆப‌த்து: திருமாவளவ‌ன்

thiruma_8-4.jpgசெ‌த்தாலு‌ம் ம‌க்களோடு ம‌க்களாக‌த்தா‌ன் சாவே‌னே த‌விர ஒரு ‌பிடி சா‌ம்ப‌‌ல் கூட எ‌தி‌ரிக‌ளி‌ன் கை‌யி‌ல் ‌கிடை‌க்க கூடாது எ‌ன்று சபத‌ம் செ‌ய்து வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌‌கிற ‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் தலைவ‌ர் ‌பிரபாகர‌ன் ‌உ‌யிரு‌க்கு த‌ற்போது ஆப‌த்து ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது ‌எ‌ன்று ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இல‌ங்கை‌யி‌ல் நட‌ந்து வரு‌ம் இன‌ப் படுகொலையை க‌ண்டி‌த்து ‌விடுதலை ‌சிறு‌த்தை‌க‌ள் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை மெமோ‌ரிய‌ல் ஹா‌‌ல் அருகே ‌இ‌ன்று (09.04.09) ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.

இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கு தலைமை தா‌‌‌ங்‌கிய ‌விடுதலை ‌சிறு‌‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌திருமாவளவ‌ன் பேசுகை‌யி‌ல், இல‌ங்கை‌யி‌ல் ‌விடுதலை‌ப்பு‌‌லிக‌ள் ‌மீது‌ம் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌மீது‌ம் ‌சி‌ங்கள படை கொடூர‌த் தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌கிறது. ‌ஹீரோசிமா, நாகசா‌கி‌ப் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் ‌விஷவா‌யு கு‌ண்டுகளை ‌வீ‌சி தா‌க்‌கிய ச‌ம்ப‌வ‌த்தை உலக‌ம் இ‌ன்று‌‌ம் க‌ண்டி‌த்து வரு‌கிறது. அத‌ன் ‌பி‌ன்ன‌ர்தா‌ன் அணு ஆயுத தயா‌ரி‌ப்பு, அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் போ‌ன்ற‌வ‌ற்‌றி‌ல் முறையான வரையறைக‌ள் தேவை என ‌வி‌திமுறைக‌ள் வகு‌க்க‌ப்ப‌ட்டன. ஆனா‌ல் அதுபோ‌ன்ற ஒரு தா‌க்குத‌ல் நட‌த்த ராஜப‌‌க்சே தயாரா‌கி வரு‌‌கிறா‌ர்.

ச‌ர்வதேச நாடுக‌ள் தடை செ‌ய்து‌ள்ள ‌கிள‌‌‌ஸ்ட‌ர் பா‌ம் (கொ‌த்து‌க் கு‌ண்டுக‌ள்) ‌வீ‌சி தா‌க்குத‌ல் நட‌த்த ‌தி‌ட்‌ட‌மிட்டு‌ள்ளா‌ர். இதுபோ‌ன்ற தாக்குத‌ல் நட‌த்‌‌தினா‌ல் உட‌லி‌ல் காய‌ம் ஏ‌ற்படாது, ந‌ச்சு வா‌யு பர‌வி உட‌லி‌ல் பட‌ர்‌ந்து தோல் உ‌‌‌‌ரி‌ந்து ர‌த்த‌ வா‌‌ந்‌தி எடு‌த்து சாக நே‌ரிடு‌ம். இதுபோன்று ச‌‌மீப‌த்‌தி‌ல் நட‌த்‌திய தாக்குத‌லி‌ல்‌ விடுதலை‌ப்பு‌லிக‌ள் இய‌க்க‌த்தை சே‌‌ர்‌ந்த ஏராளமான போரா‌ளிக‌ள் க‌ரி‌‌க்க‌ட்டையா‌கி உ‌‌யி‌ர் இழ‌ந்து‌ள்ளன‌ர். ஆனாலு‌ம் செ‌த்தாலு‌ம் ம‌க்களோடு ம‌க்களாக‌த்தா‌ன் சாவே‌ன், நா‌ன் செ‌‌த்தாலு‌ம் ஒரு‌பிடி சா‌ம்ப‌‌ல் கூட எ‌தி‌ரிக‌ளி‌ன் கை‌யி‌ல் ‌கிடை‌க்க கூடாது எ‌ன்று சபத‌ம் செ‌ய்து வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌‌கிறா‌ர் ‌பிரபாகர‌ன். இ‌ந்த ந‌ச்சு வெடிகு‌ண்டுகளு‌க்கு ம‌த்தி‌‌யி‌ல் ‌பிரபாகர‌ன் வா‌ழ்‌ந்து கொண்டிரு‌க்‌கிறா‌ர், போராடி கொ‌ண்டிரு‌க்‌‌கிறா‌ர். எ‌ந்த நேர‌த்திலு‌ம் உ‌யிரு‌க்கு ஆப‌த்து ஏ‌ற்படலா‌ம் என அ‌ங்‌கிரு‌ந்து வரு‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்றன.

இ‌ந்த தகவ‌ல் நே‌ற்‌று அ‌திகாலை என‌க்கு ‌கிடை‌த்தது. இதனா‌ல் நே‌ற்று நடைபெ‌ற்ற வே‌ட்பாள‌ர் ப‌ட்டிய‌ல் அ‌றி‌‌வி‌க்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சியையே ர‌த்து செ‌ய்ய நா‌ன் ‌தி‌ட்ட‌‌‌மி‌ட்டே‌ன். தே‌ர்தலை புற‌க்க‌ணி‌க்கு‌ம் முடிவு‌க்கு‌ம் நா‌ன் வ‌ந்தே‌ன். விடுதலை ‌சிறு‌த்தைகளு‌க்கு ஒது‌க்க‌ப்‌ப‌ட்ட இரண்டு தொகு‌திகளையு‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிடமே ஒ‌ப்படை‌த்து ‌விட நா‌ன் முய‌ற்‌சி செ‌ய்தே‌ன். ஆனா‌ல் தோழர் ர‌வி‌க்குமா‌ர் எ‌ம்.எ‌ல்.ஏ கே‌ட்டு‌க் கொ‌ண்ட‌தி‌ன் பே‌‌ரி‌ல் எனது முடிவை மா‌ற்‌றி‌க் கொ‌ண்டு நே‌ற்றைய ‌நிக‌ழ்‌ச்‌சியை நட‌த்‌தினே‌ன். ஈழ‌த் த‌மிழ‌‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் ம‌னிதா‌பிமான அடி‌ப்படை‌யி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌‌ர் சோ‌னியாகா‌ந்தி தலை‌யி‌ட்டு போர் ‌நிறு‌த்த‌ம் செ‌ய்ய நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் என ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌‌ட்‌சி வ‌லியுறு‌த்து‌கிறது எ‌ன்றார்.

மலேசிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்பு

najib-razak.jpgமலேசிய பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் தலைமையில் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. மலேசியாவின் புதிய பிரதமராக நஜீப் அப்துல் ரசாக் கடந்த 3ம் தேதி பொறுப்பேற்றார். பிரிட்டனில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்த நஜீப்(55), மலேசிய நாட்டின் இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் ஹுசைனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்க செயற்கைகோள் 20-ந்தேதி ஏவப்படுகிறது

pak_terror.jpgபாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை கண்காணிப்பதற்காக அதிநவீன ராடார் கொண்ட செயற்கைகோள் ஒன்றை இந்தியா தயாரித்துள்ளது. இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைகோள் வரும் 20-ந்தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

இலங்கை நிலைவரம்; நோர்வே அமைச்சருடன் ஹிலாரி ஆராய்வு

இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனால் கார் ஸ்ரோரேயுடன் கலந்துரையாடியுள்ளார்.  அமெரிக்க வெளிவிவகார அமைச்சில் இருவருக்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய நெருக்கடி, மனிதாபிமான நிலைவரம், சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை  செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. நோர்வே அமைச்சருடனான சந்திப்பில் ஏனைய விவகாரங்களுடன் இலங்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக ஹிலாரி கூறியுள்ளார்.

“இலங்கையில் மோலை முடிவுக்கு கொண்டுவர நோர்வே மேற்கொண்டுள்ள அயராத முயற்சிகள் தொடர்பாக நாம் ஆராய்ந்தோம். காலநிலை மாற்றம் மற்றும் ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு, இலங்கை உட்பட கணிசமான பிராந்திய விவகாரங்கள் தொடர்பான தாக்கங்கள் மற்றும் சவால்கள் குறித்து நாம் ஆராய்ந்தோம்’ என்றும் ஹிலாரி கூறியுள்ளார்.

டென்மார்க் வெளிவிவகார அமைச்சகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 83 தமிழர் கைது

denmark.jpgடென்மார்க்கில் வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 83 தமிழர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் இடம்பெறும் மோதல்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து

நேற்று மாலை 5 மணிவரை டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் முன் தமிழர்கள் போராட்டம் நடத்த பொலிஸார் அனுமதி வழங்கி இருந்தனர். எனினும் குறித்த நேரத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெளியேற மறுத்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் -வைகோ

vaiko-black-flag.jpgஇலங்கைத் தமிழர்களைக் காக்க வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

சென்னையி்ல் நடந்த போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பாஜக தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் வைகோ பேசுகையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றார். இனப்படுகொலையைக் கண்டித்தும், இலங்கைக்கு இந்தியா உதவக் கூடாது என்பதை வலியுறுத்தியும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு தமிழர்கள் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

ஈழத்தமிழர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்: திருமாவளவன்

thiruma_8-4.jpgமக்களவை தேர்தலில் வெற்றிப் பெற்று, ஈழத் தமிழர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பேசிய அவர்,

சிதம்பரம் தொகுதியில் நான் 3வது முறையாக போட்டியிடுகிறேன். ஏற்கனவே 2 முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும் பெரும்பாலான மக்களின் நன்மதிப்பையும், மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றேன். எனவே, மக்கள் வெற்றிவாய்ப்பை தருவார்கள் என்ற நம்பிக்கையிலும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறும் வகையிலும் மீண்டும் 3வது முறையாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளேன். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காக, இந்த தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறோம். எங்களிடம் தற்போது அரசியல் அதிகாரம் இல்லை. எனவே, இலங்கை தமிழர் பிரச்சனையை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல முடியவில்லை. மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்று, நாடாளுமன்றம் செல்வோம். அங்கு இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து வலியுறுத்துவோம்.