::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து

000-obama.jpgஅமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில், அதிபர் பாரக் ஒபாமா இப்தார் விருந்து அளித்தார். அப்போது அவர் பேசுகையில், இஸ்லாமையும், அமெரிக்க முஸ்லீம்களையும் அவர் வெகுவாக புகழ்ந்தார்.

செவ்வாய்க்கிழமை இரவு இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. ஒபாமா அதிபராகப் பதவியேற்ற பின்னர் நடத்தும் முதல் விருந்து நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் ஒபாமா பேசுகையில், அமெரிக்காவுக்கும், முஸ்லீம் உலகுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் பாலமாக நான் தொடர்ந்து செயல்படுவேன்.

நாம் (அமெரிக்கா, முஸ்லீம்கள்) இணைந்து, பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நல்லெண்ணம் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். அதிபர்  பொறுப்பில் எனது முக்கியக் கடமைகளில் ஒன்றாக இதை நான் கருதுகிறேன். அமெரிக்காவுக்கும், உலகெங்கும் வாழும் முஸ்லீம்களுக்கும் இடையிலான உறவில் புதிய தொடக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த புனிதமான மாதத்தில் உறவை வலுப்படுத்தவும், புதுப்பிக்கவும் நாம் உறுதி கொள்வோம்

மாபெரும் மதத்தை நான் இன்று இரவு கொண்டாடுகிறோம். அமெரிக்க முஸ்லீம்கள் இந்த நாட்டுக்கு ஆற்றிய சேவையை, கடமையை நாம் நினைவு கூர்ந்து பாராட்டுவோம். தங்களது வாழ்க்கையின் மூலம் எண்ணற்ற அமெரிக்க முஸ்லீம்கள் நிரூபித்துக் காட்டியுள்ள பல்வேறு நல்லுதாரணங்களை நாம் நினைவு கூருவோம். இதை அடிப்டையாக வைத்து மேலும் சிறந்த, நம்பிக்கை வாய்ந்த உலகை கட்டியெழுப்ப உறுதி பூணுவோம் என்றார் ஒபாமா.

அமெரிக்காவில் 8 மாதங்களில் 84 வங்கிகள் மூடல்

us-flag.jpgஅமெரிக் காவில்  கடந்த 8 மாதங்களில்  84 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. பொருளாதார தேக்க நிலையின் தாக்கம் அமெரிக்காவை கடுமையாகத் தாக்கியுள்ளது. மிகப் பெரிய வங்கிகளே ஆட்டம் கண்டு மூடப்பட்டுள்ள வேளையில் சிறிய மற்றும் நடுத்தர வங்கிகள் மாதம்தோறும் மூடப்பட்டு வருகின்றன.
 
அஃபினிடி வங்கி,  மெயின்ஸ்டிரீட் வங்கி,  பிராட்ஃபோர்ட் வங்கி ஆகிய மூன்றும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.  இந்த ஆண்டில் கடந்த 8 மாதங்களில் 84 வங்கிகள் மூடப்பட்டன. இது கடந்த ஆண்டில் மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம். கடந்த ஆண்டு இதே காலத்தில் 25 வங்கிக் கிளைகளே மூடப்பட்டன.
 
ஜூன் வரையிலான காலாண்டில் போதிய நிதி வசதியின்றி அவதிப்படுவதாக 416 வங்கிகள் தெரிவித்துள்ளதாக வங்கிகளைக் காப்பீடு செய்துள்ள ஃபெடரல் வைப்பீட்டுக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
 
பொருளாதார தேக்க நிலை மாறி மீட்சியடைந்து வருவதாக தகவல்கள் வெளியானபோதிலும்,  வேலையிழப்பு அதிகரித்துள்ளது. இதனால் கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக சிறிய நிதி நிறுவனங்கள்ää சிறிய வங்கிகள் போதிய நிதி வசதியின்றி மூடப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் மிகவும் அதிகபட்சமாக 24 வங்கிகள் மூடப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் தலிபான்கள் சரண்

taliban_gther.jpgபாகிஸ் தான் ராணுவத்தினரிடம் நூற்றுக்கும் அதிகமான தலிபான்கள் சரணடைந்துள்ளனர்.  ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின் ஆட்சியை இழந்த தலிபான்கள், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தஞ்சம் புகுந்தனர். பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் சுவாட் உள்ளிட்ட பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டதால் அமெரிக்கா, பாகிஸ்தானை எச்சரித்தது.

இதையடுத்து, கடந்த மே மாதம் முதல் தலிபான்களை ஒடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இந்த சண்டையில் 2,000 பேர் கொல்லப்பட்டனர். இந் நிலையில்.  சுவாட் பகுதியில் தலிபான்களின் ஆதிக்கத்தை பாகிஸ்தான் ராணுவம் ஒடுக்கியுள்ளது.105 தலிபான் பயங்கரவாதிகள்,  ராணுவத்திடம் நேற்று சரணடைந்தனர். சரணடைந்தவர்கள் தங்களிடமிருந்த நவீன ஆயுதங்களை ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தங்களுக்கு தண்டனை கொடுப்பது குறித்து நீதிமன்றம்  தான் முடிவு செய்ய வேண்டும் என சரணடைந்த தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெட்டி மாயம் – சிதம்பரத்துடன் சோனியா அவசர ஆலோசனை

02-rajasekara-reddy.jpgகாணாமல் போயுள்ள ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை தேடும் பணியை முடுக்கி விடுவது தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். ஆந்திர முதல்வர் ரெட்டி மாயமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரெட்டியைத் தேடும் பணியில் பிரதமர் அலுவலகம், சோனியா காந்தியின் அலுவலகம், ஆந்திர அரசு, உள்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து ரெட்டி தேடுதல் வேட்டை குறித்து விவரித்தார்.

ரெட்டியைத் தேடும் பணியில், ஆந்திர அரசுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அப்போது ப.சிதம்பரத்தை கேட்டுக் கொண்டார் சோனியா. இதேபோல ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான வீரப்ப மொய்லியும், சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே, ஆந்திர முதல்வர் விரைவில் நலமுடன் திரும்ப கடவுளைப் பிரார்த்தித்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் மணீஷ் திவாரி கூறியுள்ளார்.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மாயம்- இதுவரை தகவல் இல்லை

02-rajasekara-reddy.jpgஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர், 7 மணி நேரத்துக்கு மேலாகியும் எங்கு சென்றது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. அதையடுத்து, ஆந்திர முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்தோ, அவரது பாதுகாப்பு குறித்தோ எந்தத் தகவலும் இல்லை.

ஆந்திராவின் கர்னூலில் இருந்து சித்தூருக்கு இன்று காலை ஹெலிகாப்டரில் சென்றார் ராஜசேகர ரெட்டி. சுமார் 9.35 மணிக்கு, அவரது ஹெலிகாப்டருனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதுவரை, முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆந்திர அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உள்பட ஏழு ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு்ள்ளன. அதுதவிர, ஆளில்லாத விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், மோசமான வானிலை காரணமாகவும் தேடுதல் பணி பாதிக்கப்பட்டிருப்பதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் வனப்பகுதியில் இறங்கியதால், அவர் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லபப்படிருப்பதாகவும், அங்கு நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தத் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஸ்வைன் – இந்தியா முழுவதும் இதுவரை 107 பேர் மரணம்

swine.jpgபன்றிக் காய்ச்சலுக்கு ஆந்திராவில் இன்று இரண்டு பேர் உயிரிழந்தனர்.  இதன் மூலம் இதுவரை நாடு முழுவதும் 107 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் இந்த நோய் நேற்று வரை சுமார் 3 ஆயிரத்து 049 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் 644 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 556, அர்ஜென்டினாவில் 465 பேர் உயிரை பறிகொடுத்துள்ளனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

குற்றவாளியின் விடுதலைக்கும் லிபியாவுக்கும் எவ்வித தொட்புமில்லையென்கிறது பிரிட்டன்

britain.jpgலொக்கர் பி விமானக் குண்டு வெடிப்பின் குற்றவாளி விடுதலையானமைக்கும் லிபிய அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

லிபியாவுடன் எண்ணெய்வள ஒப்பந்தத்தில் பிரிட்டிஷ் கைச்சாத்திட்ட பின்னர் இவர் விடுதலையானதாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

லொக்கர் பி விமானக் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட மொஹமட் அல்மெஹ்ராஹி ஒரு புற்று நோயாளி. இவர் இன்னும் சில மாதங்களில் மரணமடைவார் என வைத்தியர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளனர். இவரது கடைசிக் காலத்தை குடும்பத்துடன் கழிக்க வசதி செய்யும் நோக்குடன் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கருணை அடிப்படையில் இந்த விடயம் நோக்கப்பட வேண்டுமென பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

லண்டன் ஹித்ரோ விமான நிலையத்திலிருந்து 1988ம் ஆண்டு அமெரிக்கா நோக்கிச் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த 270 அமெரிக்கர்கள் பலியாகினர். இதற்கு லிபியாவைச் சேர்ந்த மொஹமட் அல் மெஹராஹி காரணம் எனக்குற்றம் சாட்டப்பட்டது.

ஏழு வருடங்கள் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் மருத்துவ பரிசோதனையில் மரணத்தை நெருங்கியுள்ள நோயாளி என ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின்னர் ஸ்கொட்லாந்த் சிறையிலிருந்து விடுதலையானார்.

தனது தாய்நாடான லிபியா சென்ற இவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. நான் மரணிப்பதற்காகவே வீடு செல்கிறேன் என சிறையிலிருந்து வெளியேறுகையில் மொஹமட் அல் மெஹ்ராஹி கூறியமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் பாராளுமன்றத் தேர்தலில் 50 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி – ஜனநாயகக் கட்சி 301 ஆசனங்கள் லிபரல் கட்சிக்கு 119 மட்டுமே

japan-new-pri.jpgஜப்பானில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரு வெற்றியீட்டியது. மொத்தமாக உள்ள 480 ஆசனங்களில் 301 ஆசனங்களை ஜனநாயகக் கட்சி வென்றது. ஆட்சியிலிருந்த பிரதமர் ரரோ அசோவின் லிபரல் கட்சி 119 ஆசனங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

இதையடுத்து ஜப்பானை ஐம்பது வருடங்களாக ஆண்டு வந்த லிபரல் கட்சி எதிர்க்கட்சியாக மாறியது. தோல்வியை ஏற்றுக்கொண்ட பிரதமர் ரரோ அசோ பதவி விலகப் போவதாக அறிவித்தார். ஜனநாயகக் கட்சியின் தலைவர் யுகியோ ஹற்றோயாமா (வயது 62) புதிய பிரதமராகப் பதவியேற்பார். புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதிய அரசாங்கம் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி, இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புற்ற மக்களின் மறுவாழ்வு என்பவை புதிய அரசாங்கத்துக்கு முன் உள்ள சவால்களாகும். ஜப்பானுடன் உறவுகளைத் தொடர விரும்புவதாக தென் கொரியா அறிவித்துள்ளதுடன் பல நாடுகள் புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன.

புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள யுகியோ ஹற்றோயாமா கட்சியின் வெற்றி குறித்து வானொலியில் உ¨யாற்றினார். முன்னய அரசாங்கம் பின்பற்றிய கொள்கைகளை அடியோடு மாற்றப் போவதில்லை.

பொறுமையாக இருந்து இக்கொள்கைகளைப் படிக்க வேண்டும் ஆராய வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பையும் தேவைகளையும் கருத்தில் கொண்டு இக்கொள்கைகள் சிலவற்றை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனக் கூறினார்.

மக்கள் புதிய கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் புதிய அரசாங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் பதவியேற்கவுள்ளார்.

குடியேற்ற பிரச்சனை: பிரிட்டனில் 470 சிறுவர்கள் கைது

britain.jpgஇந்த ஆண்டில் குடியுரிமை ஆவணங்கள் இல்லாமல் பிரிட்டன் வந்தவர்களில் 470 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜிம்பாப்வே, சூடான், இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்த ஏழை குடும்பங்கள் பிரிட்டனில் தஞ்சம் அடைகின்றன. இதில் பெரும்பாலானோர் முறையான குடியுரிமை ஆவணங்கள் வைத்திருப்பதில்லை. இவர்கள் குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்படுகின்றனர்.

கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, இந்த ஆண்டில் குடியுரிமை இல்லாமல் பிரிட்டன் வந்தவர்களில் 470 சிறுவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் லண்டன் விமானம் நிலையம் வந்து இறங்கியதும் கைது செய்யப்பட்டனர்.

இதில் பெரும்பாலான சிறுவர்கள் 5 வயதுக்கும் குறைவானவர்கள். இவர்களில் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் 28 நாட்களுக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஜூன் மாதத்தில் 225 பேர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். 100 பேர் பிரிட்டனில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். லண்டனில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் புதிய பிரதமர் மிகவும் எளிமையானவர்!

japan.jpgஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிப் பெற்று புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள யுகியோ கோடோயாமா மிகவும் எளிமையானவர் என்று கூறப்படுகிறது. ஜப்பானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜப்பான் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றது. உலகக் போருக்குப் பின்னர் லிபரல் ஜனநாயகக் கட்சியைத் தவிர வேறோரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றதில்லை என்ற வரலாற்றை, இத்தேர்தல் மூலம் ஜப்பான் ஜனநாயகக் கட்சி முடிவுக்கு கொண்டு வந்தது.

இதனால் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான டாரோ அஸோ பதவி விலகியுள்ளார். இந்நிலையில் புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள ஜப்பான் ஜனநாயக கட்சித் தலைவர் யுகியோ, மிகவும் எளிமையானவர் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து யுகியோவின் மனைவி மியூகி, பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது கணவர் ஓர் யதார்த்தவாதி என்றும் அவர் மிகவும் எளிமையானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். பார்ப்பதற்கு ஜப்பான் நாட்டவரை போல் அல்லாமல் வெளிநாட்டவரை போல் இருந்தாலும், அவர் மக்களோடு மக்களாக இருப்பவர். அவரை யாரும் எளிதில் சந்தித்து பேச முடியும் என்றும் மியூகி கூறினார். மியூகி, முன்னாள் பிரபல நடிகையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.