கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இலங்கை. இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வு.

india1.jpgஆசிய கிண்ண நேற்றைய போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களால் பாகிஸ்தான் அணியை இறுதிநேரத்தில் வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களை பெற்று இறுதிநேரத்தில் வென்றது.  இலங்கை. இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளன்

தலை வணங்குவோம் தியாகிகளுக்கு : ரஞ்சன்

Tharasu Cover

தோழர் பத்மநாபாவின் 20வது நினைவு தினம் 19 June 2010 4.30 pm – 9.00 pm, Southfields Community College Hall, 333 Merton Road, London SW18 5JU (Entrance via Burr Road) அனுஸ்டிக்கப்படுகிறது. அதையொட்டி இந்தக்கட்டுரையை மீள்பிரசுரம் செய்கிறோம். இக்கட்டுரையானது பத்மநாபாவின் 2008ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி ஈபிஆர்எல்எவ் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவரால் எழுதப்பட்டது.

அது 1990 யூன் மாதம் 19ந் திகதி!

மானுடவர்க்கத்தின் மனிதப் பண்புகளுடன், அமைதி, சமாதானம், ஜனநாயகம் நிறைந்த சமதர்த வாழ்வை தமிழ்பேசும் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க போராடி மரணித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபாவும், பன்னிரு தோழர்களும், சென்னையில் பாசிசப் புலிகளால் கோழைத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட நாள்!

ஈழத்தமிழர் வரலாற்றின்; சோகமிகு இந்நாளே, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால், தியாகிகள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும்  நினைவு கூரப்பட்டு வருகிறது.

ஈழத் தமிழர்களுக்கான உரிமைப் போரட்டத்தில் ஒரு இயக்கத்தினர் மட்டும் மரணிக்கவில்லை. சகல இயக்கங்கள், கட்சிகளைச் சாhந்தோரும் உயிரை அர்ப்பணித்தல் உட்பட சகலவித தியாகங்களையும் செய்திருக்கின்றார்கள்.

தமிழ்பேசும் மக்களுக்காகப் போராடி இலட்சியப் பாதையில் மரணித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆற்றல் மிகு தோழர்களுக்கும், சகஇயக்கப் போராளிகளுக்கும், வினையாளர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள் பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் தினமே தியாகிகள் தினம்!

அந்தக் கரிநாளுக்குப் பின்னர் இற்றைவரையான பத்தொன்பது ஆண்டுகளுக்கு பின்னரும் அதற்கு முன்னருமான காலகட்டத்திலும், தமிழ்ப் பயங்கரவாதிகள் ஒரு பக்கத்தாலும், சிங்களப் பேரினவாதம் மறுபக்கத்தாலும் நாளாந்தரம் நசுக்க, தமிழ்பேசும் மக்கள் இருதலைக் கொள்ளி எறும்புகளாக சொல்லொணா இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.

சமாதானம் அமைதி என்பதெல்லாம் கானல் நீராகிப் போய் விட்ட துர்ப்பாக்கிய நிலையில், கொலை, கொள்ளை, கப்பம், பட்டினிச்சாவு, வறுமை எனும் வாழ்க்கை முறைக்குள் வலுக்கட்டாயமாகத் தமிழ் மக்கள் திணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

குருட்டுத் துப்பாக்கி ஏந்தும், வரட்டுச் சித்தாந்தம் கொண்ட முரட்டு வாதிகளால், இடிபாடுகளுக்கு மத்தியில் இருட்டு வாழ்க்கையில் செக்காடுகள் போல், செம்மறி ஆடுகள் போல் தமிழ் மக்கள் என்று தம் வாழ்வு விடியும் என்ற ஏக்கத்துடன் வாழ்கிறார்கள்.

நிலங்களற்று, நிலையிழந்து, பலமிழந்து, மலங்க விழித்து, மக்கள் கலங்கி நிற்கிறார்கள்.

சிங்களப் பேரனினத்திற்கு எதிராக, தமிழர்களின் விமோசனத்திற்காக போராட தங்கள் உயிரைத் துச்சமாக எண்ணிப் போராட முன்வந்த எத்தனை எத்தனை நல் மாந்தரை நாம் பறிகொடுத்து விட்டோம்! 

EPRLF Pathmanaba

வீழ்ந்த போராளிகள் அனைவருமே எதிரியான சிங்களப் பேரினவாதத்தின் அரச படையினரால் மட்டும் கொல்லப்படவில்லை. உயிர்ப் பலியெடுக்கப்பட்ட அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும், கல்விமான்களும், வினையாளர்களும், பொதுமக்களும் எதிரியினால் மட்டும் காவுகொள்ளப்பட வில்லை. உண்மையில் இவர்களில் அதிகமான எண்ணிக்கையினர் சொந்த சோதரர்களாலேயே – குறிப்பாகவும், அதிக எண்ணிக்கையாகவும் புலிகளாலேயே – சுட்டும் வெட்டியும் வீழ்த்தப் பட்டவர்கள் என்பதுதான்  வேதனையானதும், வெட்ககரமானதுமானதும், கசப்பானதுமான உண்மை! தமிழர் வாழ்வை வளம்படுத்த வேண்டிய ஆர்வமும் தகுதியும் கொண்ட எத்தனை எத்தனை தளிர்கள் கருக்கப்பட்டு விட்டன!

புலிகளின் ஏதாச்சாதிகார வேட்கையால் ஏற்படுத்தப்பட்ட இப் படுகொலைகளுடன் ஈழப் போராட்டத்தின் தார்மீகம் அழிந்து விட்டது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உட்பட சக இயக்கங்களின் தடை, மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுப்பு ஆகியவையுடன் ஈழப் போராட்டம் தடம் புரண்டு விட்டது. பிரேமதாசாவிடம் பணமும், ஆயுதங்களும் பெருவாரியாகப் பெற்று இந்தியாவுடன் புலிகள் யுத்தத்தை தொடர்ந்தவுடன்  ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம் அஸ்தமித்துவிட்டது.

இவைதான் பேரினவாத ஸ்ரீலங்கா அரசின் மக்கள் மீதான இராணுவ நடவடிக்கைகள் உக்கிரமம் அடைவதற்கும், வடக்கு கிழக்கின் அவலங்களுக்கும், போரின வாதிகளின் கைகள் ஓங்கியிருப்பதற்கும்  மூல காரணிகளாக அமைந்து விட்டன!

Pirabakaran 2007

பாசிசப்புலிகளின் பேடித்தனமான படுபாதக கொலைகளுக்குப் பலியாகிப் போன மாந்தர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா!

மாதிரிக்கு மட்டும் சிலரைப் பார்ப்போமானால், –

வடக்கு கிழக்கு மாகாண அரசின் தலைமைச் செயலகம் அமைந்திருந்த திருகோணமலையிலிருந்து நிலாவெளியில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றவதற்காக ஜீப்பில் சென்றுகொண்டிருந்த வேளையில்; ஸ்ரீலங்கா இராணுவத்தின் கூட்டு முயற்சியுடன் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் படுகொலை செய்யப்பட்ட,  ஈழமக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்கும் வேலைத்திட்டங்களில் பங்கெடுத்தக் கொண்ட, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர் ஜோர்ஜ், சகதோழர்கள்,

புலி இயக்கத்தின் உட்கட்சிச் சதியால் தன் காலை இழந்த கிட்டுவிற்காக அருணா என்ற புலியால் அநியாயாகமாகப் படுகொலை செய்யப்பட்ட புலிகளால் சிறைபிடிக்கப்பட்டிருந்த, ஈபிஆர்எல்எவ், புளொட் உறுப்பினர்கள் உட்பட்ட 60 இளைஞர்கள்

ரெலோ இயக்கத் தலைவர் சிறீசபாரத்தினமும், உறுப்பினர்களும்,
யாழ் மருத்தவக் கல்லூரி உடல் கூற்றியல் துறைத் தலைவர், ரஜனி திரணகம,
தமிழர் விடுதலைக் கூட்டணி செயலதிபர் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், பொன் சிவபாலன்,
பரியோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராசா,
யாழ் முன்னாள் அரச அதிபர் பஞ்சலிங்கம்,
யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன்,
பெண் கவிஞர் செல்வி,
கிழக்கின் விடிவெள்ளி சாம் தம்பிமுத்து, அவரது மனைவி,
ஈபிஆர்எல்எவ் தலைவர்கள் தோழர்கள் பத்மநபா, ரொபேர்ட், இன்னும் பலர்
புளொட் இயக்கத் தலைவர் வாசுதேவா,
புலிகளச் சேர்ந்த மாத்தையாவும், இதர போராளிகளும்,
இணையற்ற புத்திஜீவிகளாகிய நீPலன் திருச்செலவம், கேதீஷ் லோகநாதன் இன்னும் எத்தனையோர் தேசத் துரோகிகள், சமூக விரோதிகள் எனப் போலியாகச் சித்தரிக்கப்பட்டு கொலை செய்ப்பட்டுவிட்டார்கள். சொல்லி மாளா அவர்தம் பட்டியல்!
இந்தக் கொலைப்பட்டியல் இன்னமும், இன்றும் தொடர்கிறது – நீண்டு கொண்டே போகிறது!
சிங்களவர் தமிழரைக் கொன்றால்; அது இனப் படுகொலை!
இலங்கை இராணுவம் தமிழரைக் கொன்றால் அது ஆக்கிரமிப்புக் படுகொலை!
தமிழர்கள் தமிழரைக் கொன்றால் அதற்குப் பெயர் தமிழ் ஈழ விடுதலையா?

EPRLF_Yogasangaree’s Funeral

இத்தனை கொடூரங்கள் நடந்த போதும் மக்கள் மௌனமாக இருந்தார்கள். புலிகளால் மற்றைய இயக்கங்கள் தடை செய்யப்பட்டபோது மௌனமாக இருந்தார்கள். மற்றைய இயக்கப் போராளிகள், தலைவர்கள் குற்றியிரும் குலையுயிருமாக எரியூட்டப்பட்டபோது மௌனமாக இருந்தார்கள்! எம்முடன் ஒன்றாக வாழ்ந்த முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டபோது, இரவோடிரவாக  விரட்டப்பட்டபோது மௌனமாக இருந்தார்கள்!

– இறுதியில், நாமே அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கிறோம் – ஏனென்று கேட்க யாரும் இல்லை! ஈவிரக்கமற்ற யுத்தத்தினாலும், தமிழர்களின் ஏகபோக தலைமை என்று துப்பாக்கிமூலம் அந்தஸ்து கோரும் சர்வாதிகாரப் போக்கினாலும், ஈழத்தமிழினம் தேய் பிறையாகி வருகிறது!

உள்நாட்டுப் பத்திரிகைகளும், புலம் பெயர்ந்தோர் நடாத்தும்  புலிசார்பு ஊடகங்களும். உண்மை நிகழ்வுகளை அறியாதவாறு இருட்டடிப்புச் செய்கின்றன, அல்லது திரித்துக் கூறுகின்றன. உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் கூறப்படுகின்றன. உண்மைக் காரணங்கள் தெரிவிக்கப்படுவதில்லை.

போததற்கு, சிங்களவர்கள் எல்லோருமே கொடியவர்கள் என்றே சித்தரிக்கப்படுகிறார்கள். பேரின வாதிகள் வேறு, சாதாரண சிங்கள மக்கள் வேறு என்று தெரிவிக்கப்படவில்லை. தமிழ்மக்கள் பேலவே, அப்பாவிச் சிங்களப் பொது மக்களும் வகைதொகையின்றி கொல்லப்படுகின்றார்கள். ஏழைத் தமிழ் மக்களின் பிள்ளைகள்போல் ஏழைச் சிங்கள மக்களின் பிள்ளைகளே இந்த யுத்தத்திற்கு பலிக்கடா வாக்கப்படுகின்றார்கள்.    

நாம் பயத்திலிருந்து விடுபடவேண்டும். சுதந்திரமாக எவர்க்கும் அஞ்சாமல் கருத்துக் கூறும், செயற்படும் நிலை ஏற்பட வேண்டும்.
ஒரு எஜமானர்களின் அடிமையிலிருந்து எங்களை மீட்பது இன்னொரு எஜமானர்களின் அடிமைக்கு நாம் ஆளாவதாக அமைந்துவிடக் கூடாது.
ஈழவிடுதலைப் போருக்காகத் தம்மை அர்ப்பணித்த தியாகிகள் அனைவரையும் இத் தியாகிகள் தினத்தில் நாம் நினைவு கூருவோhம்!
தலை வணங்குவோம் அத் தியாகிகளுக்கு!

”வன்னி மக்களுக்கு வீடமைக்கும் உதவி நேரடியாக வழங்கப்படும்” ப சிதம்பரம் – ”அது இலங்கையின் இறமையைப் பாதிக்கும் ஹெகலிய ரம்புக்வல”

Chidambaram_PKeheliya_Rambukwellaபோரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நிதி நேரடியாக சம்பந்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்ற இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூற்றை இலங்கை அரசு மறுத்துள்ளது. இவ்வாறு நேரடியாக வழங்கப்படுவது நாட்டின் இறைமையை பாதிக்கும் செயல் என சிறிலங்காவின் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி மூன்று நாள் பயணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருந்த வேளையில், அங்கு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது வடக்கில் இடம்பெயர்ந்தோருக்கு 50 ஆயிரம் விடுகளை அமைத்துக் கொடுக்க ஆயிரம் கோடி ரூபாவை உதவியாக வழங்குவதற்கு இந்தியா இணங்கியிருந்தது. இதன்பின் இந்திய அமைச்சர் ப.சிதம்பரம் இவ்வுதவி நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிடப்படும் எனத் தெரிவித்திருந்தார். 0

எனினும், இதனை சிறிலங்கா அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல நேற்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் பேசும் போது மறுத்துள்ளார். இந்தியாவோ வேறெந்த நாடுகளோ அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு தனிப்பட்ட முறையில் நிதியுதவிகளை வழங்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கை கட்டியெழுப்ப இந்தியா உட்பட சர்வதேச நாடுகளிடம் உதவிகளைக் கோரியுள்ளோம். அவர்களது உதவிகள் அரசாங்கத்தினுடாகவே பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை – பங்களாதேஷ் இன்று மோதல்

srilanka-cricket.jpgஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 3 வது லீக் ஆட்டத்தில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதுகின்றன. இலங்கை அணி முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை 16 ஓட்டங்களால் தோற்கடித்தது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்களாதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. 10 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையின் தம்புள்ள நகரில் நடந்து வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளது.

இந்த நிலையில்  இங்கு மின்னொளியின் கீழ் (போதிய வெளிச்சமில்லை என்று புகார் எழுந்துள்ளது)  துடுப்பெடுத்தாடுவது 200 சதவீதம் கடினம் என்றும் டோனி தெரிவித்தார்.

பங்களாதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி மிக எளிதாக வென்றது.

cr.jpgஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்களாதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிக எளிதாக வென்றது. முதலில் ஆடிய பங்களாதேசம் 34.5 ஓவர்களில் 167 ஓட்டங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா 30.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்களைப் பெற்று வெற்றி கண்டது.

இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை தம்புல்லவில் இந்திய அணி பங்களாதேச அணியை எதிர்கொண்டது. நாணயசுழச்சியில் வென்ற பங்களாதேசம் முதலில் பெட்டிங்செய்தது. ஆரம்பஆட்டக்காரர்களாக தமீம் இக்பால், இம்ருல் கெய்ஸýம் களம் இறங்கினர். 3-வது ஓவரில் தமீம் ஆட்டம் இழந்தார். அவர் 12 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்து முகமது அஸ்ரப்உல் 20 ஓட்டங்கள் பெற்று பெவிலியன் திரும்பினார். அடுத்து இம்ருல்லுடன் ரஹீம் ஜோடி சேர்ந்தார். 16-வது ஓவரில் இம்ருல் விக்கெட்டை பறி கொடுத்தார். அவர் அணியில் அதிகபட்சமாக 37 ஓட்டங்கள் (35 பந்துகள்) எடுத்தார். 17-வது ஓவரில் வங்கதேசம் 100 ஓட்டங்களைக் கடந்தது. அப்போதிருந்த நிலையில் அந்த அணி 250 ஓட்டங்கள் வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்வரிசை ஆட்டக்காரர்கள் விரைவிலேயே ஆட்டம் இழந்தனர். 155 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேசம் 167 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 34.5 ஓவரிலேயே அந்த அணி சுருண்டது. இந்திய தரப்பில் சேவாக் 2.5 ஓவர்கள் பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

168 ஓட்டங்கள் என்ற எளிதான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சேவாக் 11 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் கம்பீர் நிலைத்து நின்று விளையாடினார். 10-வது ஓவர் வீசப்பட்டுக் கொண்டிருந்தபோது மைதானத்தில் உள்ள விளக்குகளில் பிரச்சினை ஏற்பட்டதால் போதிய வெளிச்சம் இல்லை. எனவே ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது விராட் கோலி 11 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து வந்த ரோஹித் சர்மா முதல் பந்திலேயே ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அடுத்து கம்பீருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி பொறுப்பாக விளையாடினார். 30.1 ஓவரில் இந்திய அணி 158 ஓட்டங்கள் சேர்த்திருந்தது. அப்போது கம்பீர் ஆட்டம் இழந்தார். அவர் 101 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்து ரெய்னா களம் கண்டார். 30-வது ஓவரில் 3 மற்றும் 4 -வது பந்துகளை அடுத்தடுத்து பவுண்டரிக்கு விரட்டி கேப்டன் தோனிஇ வெற்றிக்குத் தேவையான ஓட்டங்களை எடுத்தார். இதன் மூலம் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேசத்தை வென்றது.
38 ஓட்டங்கள் எடுத்த தோனி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். கம்பீர் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி போனஸ் புள்ளிகளையும் சேர்ந்து மொத்தம் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான சுலோவாகியாவை சமநிலை செய்தது நியூஸீலாந்து

ftfa.jpgஐரோப்பி யாவின் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான சுலோவாகியாவிற்கு நிகராக சிறப்பாக விளையாடியது மட்டுமின்றி, இறுதி நேரத்தில் பதில் கோல் அடித்து தன்னாலும் முடியும் என நியுசிலாந்து போட்டியை சமன் செய்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றுவரும் 2010 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில், ருஸ்டன்பர்க்கில் நடைபெற்ற எப் பிரிவு இரண்டாவது ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே நியூ ஸீலாந்து அணி மிகச் சிறப்பாக விளையாடியது.

தன்னாலும் முடியும் என விளையாடிய நியுசிலாந்து அணியின் வேகத்தை கண்டு சற்று அதிர்ச்சியுற்ற சுலோவாகியா அணி, அதற்குப் பிறகு சிறப்பாக விளையாடத் துவங்கியது.  போட்டி ஆரம்பமானதை தொடர்ந்து 5ஆவது நிமிடத்தில் சுலோவாகியாவின் செஸ்டெக் டிக்கு வெளியேயிருந்துத் தூக்கி அடித்தப் பந்தை மிக அழகாக தலையால் முட்டி கோலுக்குள் தள்ளினார் விட்டேக்.

போட்டி நேரம் முடிவடைந்து, இறுதிநேரம் ஒடிக்கொண்டிருந்தபோது பெரு முயற்சியில் ஈடுபட்ட நியுநிலாந்து அணிக்கு வெற்றி கிடைத்தது. ஸ்மெல்ட்ஸ் அடித்து மேலெழும்பி வந்த பந்தை அதற்கெனவே காத்திருந்த வின்ஸ்டன் ரீட் தலையால் முட்டி கோலிற்குள் தள்ள போட்டி நிறைவு பெற்றது.  இந்நிலையில் தன்னாலும் முடியும் என நியுசிலாந்து போட்டியை சமன் செய்தது.

லசித் மாலிங்கவின் அபார பந்து வீச்சில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி

srilanka-cricket.jpgஆசியக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று இலங்கையில் ஆரம்பமானது. நேற்றைய முதல் நாள் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இரவு பகல் ஆட்டமாக தம்புள்ளை ரன்கிரிய விளையாட்டரங்கில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தலைவர் குமார் சங்ககார முதலில் துடுப்பெடுத்தாட தீர்மாணித்தார். இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 09 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களை பெற்றது.

கடந்த முத்தொடர் போட்டியின் போது சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்சான் மற்றும் தரங்க ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். இப்போட்டியிலும் சிறப்பாக பிரகாசிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் தரங்க 11 ஓட்டங்களுடன் அக்தரின் பந்து வீச்சில் சல்மான்பட்டிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து டில்சானும் 18 ஓட்டங்களுடன் முஹமட் அசிப் பந்து வீச்சில் உமர் ஹமினிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஜெயவர்த்தன மற்றும் சங்ககார ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கை வழுப்படுத்தினர். இதில் சங்ககார 42 ஓட்டங்களுடன் அப்ரிடியின் பந்து வீச்சியில் உமர் ஹக்மாலிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் ஜெயவர்த்தன 54 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தன் மூலம் தனது 53 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

சகல துறை ஆட்டகாரரான ஏஞ்சலோ மெத்யூஸ் தொடர்ந்து தனது சிறப்பான துடுப்பாட்ட மூலம் விக்கெட் இழப்பின்றி 55 ஓட்டங்களை பெற்று தனது 5ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் தொடர்ந்து களமிறங்கிய ஏனைய வீரர்கள் 20க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தானின் பந்து வீச்சில் நீண்டகாலத்துக்கு பிறகு அணியில் இணைந்த சொயிப் அக்தர் 3 விக்கெட்டுகளை கைப்ப்ற்றிருந்தார்.

243 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களை பெற்று 16 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் ஆரம்பமே மிகவும் மோசமான நிலையை கண்டது. இலங்கை அணி வீரர் லசித் மாலிங்கவின் அதிரடியான பந்து வீச்சால் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டம் கண்டு போனார்கள். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஹசேன் 11 ஓட்டங்களுடனும்இ சல்மான் பட் ஓட்டம் எதுவும் பெறாது மாலிங்க பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

அணியின் மோசமான நிலையை அறிந்து தொடர்து களமிறங்கிய அணி தலைவர் சையிட் அப்ரிடி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 7 ஆறு ஓட்டம் 08 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 109 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அப்ரிடியின் சதம் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க சிறப்பாக பந்து வீசி 05 விக்கெட்டுகளை கைப்பற்றிருந்தார்.

இப் போட்டியில் ஆட்டநாயகனாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தலைவர் சையிட் அப்ரிடி தெரிவு செய்யப்பட்டார். போட்டி முடிவினையடுத்து இலங்கை அணி 02 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் : இன்று ஆரம்பம்

srilanka-cricket.jpgஇந்தியா,  பாகிஸ்தான்,  பங்களாதேஸ்,  இலங்கை அணிகள் மோதும் ஆசியக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று இலங்கையில் ஆரம்பமாகின்றது. இன்றைய ஆட்டத்தில் இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இலங்கை அணியில் சனத் ஜெயசூரியாவும்,  அஜந்தா மெண்டிசும் நீக்கப்பட்டள்ளனர்.  நீண்ட காலங்களுக்குப் பின்பு பர்வேஸ் மஹ்ரூப் இணைக்கப்பட்டள்ளார்.

இன்றைய ஆட்டம் இரவு பகல் ஆட்டமாக தம்புள்ளை ரன்கிரிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 

அணி விவரம்
Sri Lanka
KC Sangakkara*†, M Muralitharan, TM Dilshan, HMRKB Herath, DPMD Jayawardene, S Randiv, SHT Kandamby, CK Kapugedera, KMDN Kulasekara, MF Maharoof, SL Malinga, AD Mathews, TT Samaraweera, WU Tharanga, UWMBCA Welegedara 
 
Pakistan
Shahid Afridi*, Salman Butt, Abdul Razzaq, Abdur Rehman, Asad Shafiq, Imran Farhat, Kamran Akmal†, Mohammad Aamer, Mohammad Asif, Saeed Ajmal, Shahzaib Hasan, Shoaib Akhtar, Shoaib Malik, Umar Akmal, Umar Amin 

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நேர அட்டவணை

ஜுன் 15 பாகிஸ்தான்,  இலங்கை அணிகள்
ஜுன் 16 இந்தியா,  பங்களாதேஸ் அணிகள்
ஜுன் 18 இலங்கை,  பங்களாதேஸ்  அணிகள்
ஜுன் 19 இந்தியா,  பாகிஸ்தான் அணிகள்
ஜுன் 21 பாகிஸ்தான்,  பங்களாதேஸ்  அணிகள்
ஜுன் 22 இலங்கை,  இந்தியா  அணிகள்
ஜுன் 24 இறுதிப் போட்டி

காமரூன் அணி ஜப்பானிடம் தோல்வி

ftfa.jpgஆப்பிரிக்க சிங்கம் என்று வருணிக்கப்படும் காமரூன் அணி ஜப்பானிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. உலக கிண்ண கால்பந்து போட்டியில் புளுயம்பான்டைன் நகரில் நடந்த இ பிரிவு ஆட்டம் ஒன்றில் ஆசியாவை சேர்ந்த ஜப்பான் அணியை ஆப்பிரிக்க சிங்கம் காமரூன் சந்தித்தது.

இரு அணியிலுமே நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் காமரூனின் இன்டர்மிலான் ‘ஸ்டிரைக்கர்’ சாமுவேல் ஈடோ பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார்

காமரூனின் முன்களம் ஈடோவை நம்பியே சுழலும்.கிளப் ஆட்டங்களில் ஜொலிக்கும் சாமுவேல் ஈடோ தாய்நாட்டுக்காக ஆடும் போது சோடை போய்விடுகிறார் என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் ரோஜர் மில்லா உலக கிண்ணத்துக்கு முன் விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஈடோவுக்கு இருந்தது.

பரபரப்பாக தொடங்கிய ஆட்டம் ஒரு கட்டத்தில் மந்தநிலை அடைந்தது. கடமைக்கு இரு அணி வீரர்களும் ஆடினார்கள்.ஜப்பான் வீரர்கள் கொஞ்சம் பரவாயில்லை. அவ்வப்போது காமரூன் கோல் கம்பத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். முதல் பாதியில் 39ஆவது நிமிடத்தில் ஜப்பான் முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. மாட்சூயி கொடுத்த பாசை பெற்ற ஹோண்டா எளிதாக அதனை கோலாக மாற்றினார்.முதல் பாதி ஜப்பான் முன்னிலையுடன் முடிவுற்றது.

பிற்பாதி ஆட்டம் துவங்கியதும் காமரூன் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். தொடர்ந்து ஜப்பான் கோல்கம்பத்தை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். 86ஆவது நிமிடத்தில் காமரூன் வீரர் மபியா அடித்த பந்து இடது கோல்கம்பத்தில் மோதி வெளியேறியது. கொஞ்சம் கீழே சென்றிருந்தாலும் கோலுக்குள் புகுந்திருக்கும் காமரூனுக்கு அதிருஷ்டம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இறுதி 5 நிமிடங்களில் பதில் கோல் திருப்ப காமரூன் கடும் போராட்டம் நடத்தியது.ஆனால் ஜப்பான் கோல்கீப்பர் கவாஸாகி அத்தனை வாய்ப்புகளையும் அற்புதமாக தடுத்து விட்டார். ஆட்ட நேர இறுதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

உலக கோப்பை போட்டியில் வெளிநாட்டு மண்ணில் ஜப்பான் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.ஏற்கனவே ஆசிய அணியான தென்கொரியா கிரீஸ் அணியை தோற்கடித்துள்ளது. இப்போது ஜப்பானும் வெற்றி பெற்றிருப்பது ஆசியாவின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

மைதானத்தில் கடும் இரைச்சல் : உவுசலா தடை செய்ய பீபா ஆலோசனை

ftfa.jpgமைதா னத்தில் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் தென்ஆப்பிரிக்காவின் பாரம்பரிய இசைக்கருவியான உவுசலாவுக்கு தடை விதிக்க ‘பீபா’ ஆலோசித்து வருகிறது.

 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவின் பாரம்பரிய இசைக்கருவியான உவுசலாவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எடுத்து வருகின்றனர். மைதானத்தில் இவர்கள் எல்லாம் சேர்ந்து ஊதித்தள்ளும் போது கடும் இரைச்சல் ஏற்படுகிறது என்று டி.வி.ஒளிபரப்பாளர்களும் வீரர்களும் புகார் செய்தனர்.இதனால் உவுசலாவுக்கு தடை விதிக்க ‘பிபா’ ஆலோசித்து வருகிறது.

இது குறித்து உலக கோப்பை போட்டிக் குழு தலைவர் டேனி ஜோர்டான் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் ”உவுசலா பற்றி புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் ரசிகர்களின் உற்சாகத்தை குறைக்கும் முடிவுகள் எடுப்பதில் சற்று தடுமாற்றம் ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்.