கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

போர்நிறுத்தம், சமாதானப் பேச்சுக்கு புலிகள் தயார் இந்திய அமைச்சரின் நிபந்தனையை ஏற்க முடியாது -ஜெயானந்தமூர்த்தி

jeyananthamoorthy-mp.jpgவிடுதலைப் புலிகள் போர்நிறுத்தம் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளனர். ஆனால், இந்திய உள்துறை அமைச்சரின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முதலில் ஆயுதங்களை களையவேண்டும் என்ற இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்தின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் இந்தியாவில் வைத்து கூட்டமொன்றில் தெரிவித்த கருத்துத் தொடர்பாக லண்டன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே ஜெயானந்தமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளதாவது;

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா நடுநிலையாளராக கடமையாற்ற முன்வருவதாகவும், ஆனால் இதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களையவேண்டுமென அமைச்சர் சிதம்பரம் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத்தியஸ்தத்தை நாம் வரவேற்கின்றோம். ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டுமென அவர் நிபந்தனை விதிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகவும் தமிழினத்தின் உரிமையை வென்றெடுப்பதற்குமே ஆயுதத்தைத் தூக்கியுள்ளனர். அப்போது தமிழ் மக்கள் தங்களது பாதுகாப்பு என்பது விடுதலைப் புலிகளும் அவர்கள் வைத்திருக்கும் ஆயுதமுமே என்பதை பல தடவைகளில் சொல்லியுள்ளனர். இந்த நிலையில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டுமென இந்திய அமைச்சர் கூறும் கூற்றை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வரை விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைய வேண்டுமென யார் கூறினாலும் அது அர்த்தமற்றதாகவே அமையும். இந்த ஆயுத ஒப்படைப்பு என்ற விடயம் போராட்ட வரலாற்றில் புதிய விடயமல்ல. இது தமிழ் மக்களுக்கு இந்தியாவின் மூலமாக கடந்த காலத்தில் நல்ல பாடத்தையும் கற்றுத் தந்தது என்பதை எவரும் மறந்துவிட முடியாது.

1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா விடுதலைப் புலிகளின் ஆயுதத்தைக் களைந்தது. அதன் பின் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப் புலிகளுடன் இந்திய சமாதானப்படை போர் புரிந்தது. இந்த ஒப்பந்தமும் ஆயுதக் களைவும் தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்தை நசுக்குவதற்கு இந்தியா போட்ட திட்டமாகும்.

ஆனால், இதில் விடுதலைப் புலிகள் பல சவால்களுக்கு மத்தியில் வெற்றிபெற்றனர். அப்படியான ஒரு திட்டத்தை இந்தியா செயல்படுத்த மீண்டும் முனைகின்றது. தற்போது மிகமோசமான போரை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது நடத்தி வருகின்றது. இதற்கு இந்தியாவும் துணை போகின்றது. இப்போரினால் தினமும் நூற்றுக் கணக்கில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இந்தியா போரை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இதைவிடுத்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைய வேண்டுமென கூறுவது ஒருதலைப்பட்சமான நடவடிக்கையாகும்.

எனவே இந்தியா பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தம் வகிக்க முன்வருவதானால் போரை நிறுத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர விடுதலைப் புலிகளுக்கு நிபந்தனை விதிப்பது ஆரோக்கியமானதாக அமையாதெனவும் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு தாக்குதல் தொடர்கிறது பொதுமக்களுக்கான இழப்பு அதிகரிப்பு

artilary13.jpgமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பாதுகாப்பு வலயப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட கடும் ஷெல் தாக்குதல்களில் 48 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக இணையத்தள செய்திச் சேவைகள் மேலும் கூறுகையில்;

அம்பலன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் பகுதிகள் மீது நேற்று நடத்தப்பட்ட செறிவான ஷெல் தாக்குதல்களிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியில் ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாலகுமார் விதுசா (வயது 14) தயானந்தன் அம்பிகா (வயது 44), சசிகுமர் ஸ்பேயன் (வயது 60) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்புப் பகுதியில் பிற்பகல் 2 மணியளவில் கடும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். ச் விக்னேஸ்வரன் கஜனி (வயது07), சசிகுமார் தேனிலவன் (வயது05), பாலகுமார் விதுசா (வயது16), தயானந்தா அம்பிகாவதி (வயது 45), தவம் பெனடிற் (வயது 61), சின்னத்தம்பி (வயது 61) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரவீந்திரன் றோஜின, த.சுபாசிண, தர்மலிங்கம் ஜென, தர்மலிங்கம் அஜந்தன, சு.ஞானாம்பிக, சோமசுந்தரம் விக்னேஸ்வரராஜா, விக்கினேஸ்வரராஜ கரன், அரவிந்தன், கந்தையா முத்துக்குமார, க.நந்தின, சிவச்செல்வன், த.வனஜ, த.அரவிந்தன், த.கிநிச பாலராச, சந்திரகுமார, சித்திரவேல் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

தேவிபுரத்தில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர். வள்ளிபுனத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து தி.மு.க.குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

president-of-india-residence.jpgதமிழ் நாட்டில் தி.மு.க.சார்பில் அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் உரிமைப் பேரவையின் துணைக்குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீலை புதுடில்லியில் சந்தித்து பேசியுள்ளனர்.  தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அந்தக் குழுவில் மத்திய அமைச்சர் ஆர்.ராதா, கனிமொழி எம்.பி., திராவிட கழகத் தலைவர் வீரமணி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இலங்கை அரசாங்கத்தை யுத்த நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்க, இலங்கை மீது பொருளாதார கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென்றும், சர்வதேச அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்றும் இந்தச் சந்திப்பில் இந்திய ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.

“இந்திய அரசு இந்த பிரச்சினையை ஐ.நா.பொதுச் சபைக்கு எடுத்துச் சென்று அங்கு விவாதித்து அதன் ஊடாக பாதுகாப்பு சபைக்கு அனுப்பி அங்கிருந்து அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென ஜனாதிபதியை நாம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டோம்.

மனித உரிமைகள் அமைப்புகள், அகதிகள் ஆணைக்குழு போன்றவற்றுடனெல்லாம் இந்திய அரசாங்கம் தொடர்பு கொள்ளவேண்டும். மேலும், கடுமையான நடவடிக்கை என்றால் பொருளாதார கட்டுப்பாட்டைக் கூட இலங்கை மீது விதிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தத்துக்கு படியுமென நாம் திட்டவட்டமாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கிறோம்’ என்றும் துரைமுருகன் மேலும் கூறியிருக்கிறார்.

இலங்கைப் பிரச்சினையில் தெளிவான முடிவிலுள்ள ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா : சோ

cho_ramaswamy.jpgஇலங்கைப் பிரச்சினையில் மிகத்தெளிவான முடிவை எடுத்துள்ள ஒரே தலைவர் ஜெயலலிதாதான் என்று “சோ” இராமசாமி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியின் பொதுமேடைப் பேச்சுக்களைத் தொகுத்து தமிழில் மொழிபெயர்த்து அதனை “கல்வியே கற்பகத் தரு” என்ற பெயரில் அலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதற்கான விழா சென்னையில் நடைபெற்றது, இந்த விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், துக்ளக் ஆசிரியரும் பத்திரிகையாளருமான “சோ” இராமசாமி, நல்லி குப்புச்சாமி செட்டியார் கலந்துகொண்டனர். 

“சோ” இராமசாமி  இலங்கைப் பிரச்சினைகள் பற்றிப் பேசுகையில்,  காஷ்மீரில் இருக்கும் இராணுவத்தினரை உடனடியாக வெளியேறவும், அவர்களது நடவடிக்கைகளை நிறுத்தவும் பாகிஸ்தான் இந்தியாவைக் கேட்டுக்கொண்டால் எப்படி அபத்தமாக இருக்குமோ, அதேபோல்தான் இலங்கைப் போரை நிறுத்தச் சொல்லி இந்தியாவை வலியுறுத்துவது.  அந்த நாட்டில் பயங்கரவாதத்தை எதிர்த்து போர் நடந்துகொண்டுள்ளது.

இங்கிருந்து கூக்குரலிடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.  இதனைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.  எந்த மேடையிலும் நான் தைரியமாகச் சொல்வேன். இதையே என்னை யாழ்ப்பாணத்தில் போய்ப் பேசச்சொன்னாலும் நான் பேசத் தயார். இலங்கைப் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் இந்தியாவில் சரியான முடிவை எடுத்துள்ள ஒரே அரசியல் கட்சித் தலைவர் ஜெயலலிதா மட்டுமே என்று பேசினார்.

கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இளைஞர் தீக்குளிப்பு

fire_.jpgகடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஜோதி என்கிற தமிழ்வேந்தன் என்ற பிரமுகர் இன்று பிற்பகல் தீக்குளித்தார். கடலூர் குழந்தை காலனியை சேர்ந்தவர் ஜோதி என்கிற தமிழ்வேந்தன் (29) இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளராக உள்ளார்.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கடலூர் நீதிமன்ற அலுவலகத்திற்கு மண்ணெண்ணை கேனுடன் வந்தார் தமிழ்வேந்தன். பின்னர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீவைத்தார். இதைப் பார்த்து, அருகில் இருந்த காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் தமிழ்வேந்தனைக் காப்பாற்ற முயற்சித்தனர்.

ஆனால் அதற்குள் உடலின் பெரும் பகுதி எரிந்து போய் விட்டது. இதையடுத்து உடனியாக அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் தமிழ்வேந்தனை அனுமதித்துள்ளனர்.

திருமா, பிரபாகரன் பற்றிதான் எப்போதும் பேசுவான் என் மகன் – தீக்குளித்த தமிழ்வேந்தன் தாயார்!

ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாததால் தீக்குளிக்கிறேன் என்ற படி கடலூரில் தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் பொருப்பாளர் தமிழ்வேந்தன் கடலூர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் பத்திரிகையாளர்களிடம் கதறியபடியே பேசிய அவரது தாயார் அஞ்சலைதேவி,

‘எம் மவனுக்கு எப்ப பாத்தாலும் ஈழத்துல இருக்கிற சனங்களைப் பத்திதான் பேச்சு.  நேத்திக்கு மனித சங்கிலி போராட்டத்துக்கு போயிட்டு வந்தவன் ராத்திரி பூரா பொலம்பிக்கிட்டிருந்தான்.  ஈழத்துல சனங்க ஆயிரமாயிரமா செத்துகிட்டு இருக்காங்க. என்னால ஒண்ணும் பண்ண முடியலையே புலம்பினான்.

இன்னைக்கு காலையில அவனுக்கு சோறு போட்டுட்டு கூலி வேலைக்கு போயிட்டேன்.  அங்க இருந்தப்பதான் புள்ள இப்படி பண்ணிகிட்டான்னு சொன்னாங்க.  அவனுக்கு எல்லாமே  திருமாவளவனும்,  இலங்கையில இருக்கிற பிரபாகரனும்தான்.  அவங்க ரெண்டு  பேரு மேலயும் பைத்தியமா இருப்பான்.    ” என்றபடி கதறினார்.

தமிழ்வேந்தனுக்கு ஜான்சி என்கிற மனைவியும், சந்தோஷ் என்கிற 7 மாத கைக்குழந்தையும் இருக்கிறார்கள். தமிழ்வேந்தனுடன் பிறந்த அண்ணன் சிவா, அக்கா சாந்தி இருவரும் மருத்துவமனையில் அழுதபடி இருந்தனர்.  தந்தை பஞ்சாங்கமும் கூலி வேலை செய்பவர்தான்.

58 வது படையணி புதுக்குடியிருப்பு மேற்கை கைபற்றியுள்ளனர்

udayar-kattu-tmv.jpgஇரணுவத்தின் 58வது படைணி புதுக்குடியிருப்பு மேற்கை முற்றாக கைப்பற்றி அதன்பாதுகாப்பைப் பலப்படுத்தி வருவதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

6வது கெமுனு படையணி,8வது கெமுனு படையணி,12வது கெமுனு படையணி,11வது காலால் படையணி,10வது காலால் படையணி, 7வது சிங்கப் படைப்பிரிவு என்பன கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தாக்குதல் நடத்தி இப்பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். படையினர் இப்பகுதியை கைபற்ற ஏ-35 (பரந்தன்- முல்லைத்தீவு) பாதைக்கு வடக்காகவும் தாக்குதல் நடத்தியதுடன் பயங்கரவாதிகளின் கடும் எதிர்பு நிலைகளையும் பல நீர்நிலைத் தடைகளையும் தாண்டி இப்பகுதியை கைபற்றியுள்ளதாக களத்திலிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலைத் தொடர்ந்து நடத்திய தேடுதலின் போது 28 பயங்கரவாதிகளின் சடலங்களைக் கைபற்றியுள்ளனர் இதில் 14 சடலங்கள் ரி-56 ரக துப்பாக்கிகளுடன் கைபற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு- மேற்கு, பரந்தன் நகருக்கு 18 கி.மீ.தொலைவில் உள்ளது. பயங்கரவாதிகளிடம் எஞ்சியிருப்பது புதுக்குடியிருப்பு நகரமாகும். கைபற்றப்பட்ட பகுதியின் பாதுகாப்பை படையினர் பலப்படுத்தி வருகின்றனர்.

முல்லைத்தீவிலிருந்து மூன்று தொகுதிகளாக கப்பலில் அழைத்துவரப்பட்ட மக்கள் தொகை 1212 . கொழும்பு, கண்டி ஆஸ்பத்திரிகளுக்கு 28 பேர் அனுப்பிவைப்பு

trico-hospital.gifமுல்லைத் தீவிலிருந்து மூன்று தொகுதிகளாக கப்பலில் அழைத்து வரப்பட்ட வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்த 1212 பொதுமக்களில் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் வைத்து 306 பேருக்கு அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 28 பேர் விசேட சத்திரசிகிச்சைக்காக கொழும்பு தேசிய ஆஸ்பத்திரிக்கும் கண்டி போதனா ஆஸ்பத்திரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 11 இலிருந்து பெப்ரவரி 16 வரை திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களில் இதுவரை இருவர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். ஒருவர் வேலாயுதம் சிவகுமார். மற்றவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை.

வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான நலன்புரிமுகாங்களுக்கு திருகோணமலை ஆஸ்பத்திரிக்கு கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட வன்னிப்பிரதேசமக்களில் நேற்று செவ்வாய்க்கிழமை (17.02.2009), நண்பகல் 12 மணி வரை அனுப்பிவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.

17.02.2009, நண்பகல் 12 மணி வரையான நிலைவரப்படி வெளிமாவட்டங்களிலுள்ள அரச ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பிரதேச மக்களின் எண்ணிக்கை வருமாறு;

கந்தளாய் ஆஸ்பத்திரி 84, தம்பலகமம் 33, பொலன்னறுவ 86, திருகோணமலை ஆஸ்பத்திரி 678, திருமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரி83,

முல்லைத் தீவிலிருந்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி 16  திங்கட்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ள வன்னிப் பொதுமக்களின் பெயர், விபரங்கள் வருமாறு;

1.சுனிதா, குமுழமுனை, முல்லைத்தீவு (வயது 17)
2. ஆர். கமலாவதி, தாமரைக்கேணி, முள்ளியவளை(வயது47)
3. வி. ரஜனிகாந்த்,ஓடந்தன்குளம், முல்லைத்தீவு(வயது 27)
4. வி.பாலச்சந்திரன்,ஜமுனை, சுழிபுரம் கிழக்கு(வயது 47)
5.சொக்கலிங்கம்,இரணைபாலை, முல்லைத்தீவு,(வயது 58)
6. சொக்கலிங்கம் பராசக்தி, தட்சணமருதனாமடு,(வயது 56)
7. மாரி, துணுக்காய், மல்லாவி,(வயது 37)
8. அடையாளம் தெரியாதவர், கண்டிக்கு மாற்றம்
9. ஏ.மோகனசுதாகர், உதயநகர், கிளிநொச்சி, (வயது 23)
10. அடையாளம் தெரியாதவர்
11. கே. சிவபாக்கியம், முழங்காவில்,(வயது 74)
12. ஷீபா,மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 33)
13. ஜே. அபிலாஷி, மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 01)
14. ஆர். புனிதமலர், மல்லாவி, முல்லைத்தீவு,(வயது23)
15. சுபிதா, அக்கராயன்குளம்,(வயது 21)
16. யதுசன், அக்கராயன்குளம், (வயது25)
17. கே. பிரதீபன், (வயது 09)
18. ஆர். ஜெயலட்சுமி, பளை, கிளிநொச்சி,(வயது 51)
19.கே. தனுஷியா, விவேகானந்தா நகர், கிளிநொச்சி,(வயது22)
20. சுபாஜினி அன்ரனிராஜா, திருகோணமலை,(வயது 23)
21. டினுஷன்,திருகோணமலை,(வயது 05)
22. டிலுஷா, திருகோணமலை,(வயது 02)
23. கே.சுகதாஸ், மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 23)
24. பி.கதிரவேலு,மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 75)
25. பி. ஆனந்தன் ,விசுவமடு,(வயது63)
26.சி. சசிதரன், தம்பிரா, பூநகரி,(வயது 20)
27.ராமஜயலட்சுமி,ஆண்டான்குளம், அடம்பன்,(வயது 55)
28. பி.லாவண்யா, முள்ளியவளை,முல்லைத்தீவு,(வயது 15)
29.சிவகுமார், யாழ்ப்பாணம்,
30.எம். பத்மாதேவி, இராமநாதபுரம்,(வயது39)
31.சிவானந்த சர்மா, பூநகரி,(வயது 35)
32. பி. சுகந்தினி, மாமல்லபுரம்,(வயது 39)
33. என். சண்முகசுந்தரம், புத்தூர், புளியங்குளம், (வயது 51)
34. ஏ. சாந்திலா, நடன்குடியிருப்பு, விசுவமடு, (வயது51)
35. பி. சிவஞானம், தம்பளை, கோணாவில்,(வயது 55)
36.எஸ். இராஜகுமார், பளை, கிளிநொச்சி,(வயது 44)
37 கே. நடராஜா, உருத்திரபுரம், கிளிநொச்சி
38. கலைவாணி, முள்ளியவளை, முல்லைத்தீவு, (வயது32)
39. கிருஷ்ணகுமார். வல்லியபுரம், புதுக்குடியிருப்பு,(வயது 30)
40. சந்தியாமேரி, ஜோசப், (வயது 65)
41. ஜே. இராமச்சந்திரன், மாசார் பளை, (வயது64)
42. ஜனூசன், மாசார் பளை,(வயது05)
43. ரி. ஜனரூபன், நட்டாங்கண்டல், (வயது34)
44. ஜி. தர்ஷியா, நட்டாங்கண்டல், (வயது04)
45. இராஜேஸ்வரி, இரணைபாலை, முல்லைத்தீவு,(வயது 39)
46. ஏ. பார்வதி, பரந்தன், கிளிநொச்சி, (வயது 61)
47. டிலானி, பரந்தன், கிளிநொச்சி,(வயது 01)
48.அருளானந்தன், வட்டாரம் 9, புதுக்குடியிருப்பு, (வயது67)
49. ஏ.பிலோமினா, புதுக்குடியிருப்பு (வயது64)
50. கே. தவராசா, திருநகர், கிளிநொச்சி, (வயது47)
51. சுலக்ஷன், ஆனந்தபுரம், கிளிநொச்சி,(வயது 12)
52. எஸ். சுபாகரன், கிளிநொச்சி, (வயது39)
53. ரி.தண்டாயுதபாணி, வட்டுவடக்கு, சித்தன்கேணி,(வயது74)
54. செபமாலை,(வயது 73)
55. எம். மைக்கல்ராஜ், வலையன்மடு,முல்லைத்தீவு,(வயது 21)
56.என்.சுபைதா, செம்மலை, முல்லைத்தீவு,(வயது 30)
57. காவ்யா, செம்மலை, முல்லைத்தீவு
58. வசந்தராணி, செம்மலை, முல்லைத்தீவு,(வயது 32)
59. எம்.கே. கேதீஸ்வரன், பெரியதம்பனை,வவுனியா,(வயது 52)
60. ஆர். சசிகலா, ஆனந்தபுரம், கிளிநொச்சி,(வயது 35)
61. ராபேக்கா,மலையமடு,(வயது20)
62. ரவிக்குமார், ஆனந்தபுரம் கிளிநொச்சி,(வயது 36)
63. ஆர். பாலகிருஷ்ணா, விசுவமடு, முல்லைத்தீவு,(வயது 63)
64.லெனின் குமார், முழங்காடு, கிளிநொச்சி,(வயது 33)
65. எல். விதுஷானி, (வயது11)
66. கே.ஜோர்ஜர். மாதலை, முல்லைத்தீவு.(வயது 43)
67. நடிமலர், வவுனிக்குளம், முல்லைத்தீவு,(வயது44)
68. அடையாளம்தெரியாது
69.எம். மதுமிதன், மாதலை, முல்லைத்தீவு, (வயது 08)
70. எம். புஷ்பமலர், மாதலை, முல்லைத்தீவு,(வயது 39)
71. எல். மைதிலி, மாதலை, முல்லைத்தீவு,(வயது 33)
72. விந்துஜன், மாதலை, முல்லைத்தீவு,(வயது 05)
73. விழியரசு, மாதலை,முல்லைத்தீவு,(வயது 1 1/2)
74. பி.பூசன், ஆல்காடி, மன்னார், (வயது 63)
75, ஜே. டேனோயன், யூனிட் 05, தர்மபுரம்,(வயது 15)
76. எஸ்.நாகவர்த்தினி,பரந்தன், கிளிநொச்சி,30
77. நாகவதனி, பரந்தன், கிளிநொச்சி,25
78. என்.சிவகுமார்,பரந்தன், கிளிநொச்சி,36
79. எஸ்.குகஜனி, பரந்தன், கிளிநொச்சி,05
80. ஏ.மரியநாயகம், தர்மபுரம்,யுனிட் 5 கிளிநொச்சி,60
81. கே.கணேஸ் வவுனிக்குளம், முல்லைத்தீவு,63
82. ஆர்.நவசீலன், தெல்லிப்பழை,31
83. வி.லச்சுமி, இயக்கச்சி கிளிநொச்சி,55
84. யோகேஸ் கந்தகன்,கப்பமடு மன்னார்,20
85. கே.தரணி,பாலி நகர் வவுனிக்குளம்,09
86. ஏ.ஜகராஜன் மல்லாவி, பாலிநகர்,40
87. பி.ஸ்ரீவன்னி பாலைநகர், மல்லாவி,43
88. பி.ரவிசியா பாலைநகர் மல்லாவி,08
89 ஜே.கிவிதன் பாலை நகர், மல்லாவி,06
90. எம்.இராசம்மா, வவுனிக்குளம், முல்லைத்தீவு,69
91. சி.பாஸ்கரன், வட்டக்கந்தன், மன்னார், 33
92. ரி.மலர்விழி, கிளிநொச்சி,27
93. ஆர்.தவசீலன், மாதலை, முல்லைத்தீவு, 30
94. ரொபர்ட் ராஜா, பொக்கணை,30
95. பி.இராசம்மா, தேவிபுரம்,66
96. கிருபாகரன்,ரத்னபுரம்,கிளிநொச்சி,26
97. அடையாளம் தெரியவில்லை
98. எஸ்.நடராஜன்,28 விவேகாநந்தர் நகர் மேற்கு, கிளிநொச்சி, 52
99. அடையாளம் தெரியவில்லை மரணம்
100. ரி.தியாகலிங்கம்,நட்டாங்கண்டல்,மாங்குளம்,50
101. கே.ராமாஜி,தர்மபுரம்,71
102. புன்னியவதி, தேவிபுரம்,58
103. ஜே.அனிலவன்,தேவிபுரம்,1.5
104. ஜே.வாணி,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,32
105. ஆர்.ஜனனி,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,06
106. ஆர்.ராஜிதா,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,26
107. எம்.மாரியப்பன்,156 ஆவது மைல்,கிளிநொச்சி,63
108. கவில்தாஸ்,கல்வலி,புதுக்குடியிருப்பு,10
109. குமாரதாஸ், கல்வலி,புதுக்குடியிருப்பு,41
110. ரி.வடிவேலு,404 7ஆவது ஒழுங்கை தர்மபுரம்,77
111. யோகராஜ்,மாதலை,முல்லைத்தீவு,55
112. கார்த்திகா,வல்லாங்குளம், முல்லைத்தீவு,21
113. ஜயராணி,முல்லைத்தீவு,50
114. கே.பிரதீபா,தேவிபுரம்,முல்லைத்தீவு,18
115. கே.ராஜேஸ்வரி
116. எம்.லட்சுமி,கிளிநொச்சி,58
117. எஸ்.கசிகரன், வித்தியாபுரம்,ஒட்டிசுட்டான்,07
118. எஸ்.சிவகௌரி,வித்தியாபுரம்,ஒட்டிசுட்டான்,32
119. சாம்பவி,07
120. வீ.சரஸ்வதி,தேவிபுரம்,முல்லைத்தீவு,23
121. நித்ரன்,மாதலை,முல்லைத்தீவு,11
122. கே.பரமேஸ்வரி,59
123. ஏ.புவியரசன்,பூக்கானல்,கிளிநொச்சி
124. எம்.புஸ்பவதி,கிளிநொச்சி,58
125. ஐ.தம்பிராஜ்,தர்மபுரம்,53
126.வி.இராசையா,கிளிநொச்சி,60
127. அபிஹுதன்,மாதலை,முல்லைத்தீவு,34
128. கே.அபிராஜ்,மாதலை,முல்லைத்தீவு,05
129.அபிஷங்கர்,மாதலை,முல்லைத்தீவு,03
130. வி.பவளம்,மாதலை,முல்லைத்தீவு,68
131. கே.வசந்தகுமார்,மாதலை,முல்லைத்தீவு,34
132. ஏ.வேலாயுதம்,புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,73
133. செபஸ்தியன் குரூஸ்,மன்னார்,45
134. வை.சுரேந்திரன்,சாவகச்சேரி,29
135. ஹேமா,137,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,25
136. பிரிதா,137,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,2.5
137. ஆர்.சுதீஸ்வரன்,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,28
138. கே.கிரிசாந்தன்,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,13
139. சுரேந்தினி,கொக்கன,அடக்காடு, முல்லைத்தீவு,03
140. கே.பரசாவதி,141. கே.சுரேந்திரன்,உடையார் கட்டு தெற்கு,முல்லைத்தீவு ,07
142. எஸ்.நிர்மலா தேவி,மாதலை,முல்லைத்தீவு,37
143. கம்சிகா,மாதலை,முல்லைத்தீவு,04
144. கே.ரவீந்திரன்,மட்டுவில் மேற்கு,பூநகரி,52
145. ஏ.நவரசி,கிளிநொச்சி,33
146. கே.தமிழ்ச்செல்வி,கிளிநொச்சி,07
147. கே.தமிழ்பிரியன்,கிளிநொச்சி,03
148. எஸ்.சிவசந்தியா,புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,09
149. எஸ்.தர்சினி,புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,02
150. எஸ்.கௌசலா தேவி,புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,28

ஐ.சி.ஆர். சி வதிவிட பிரதிநிதி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

red-cross-srilanka.jpgசர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பவுல் கெஸ்டெல்லா இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் நேற்றுக்காலை இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வரும் சிவிலியன்கள் தொடர்பாகவும் அவர்களின் நலனை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது இருவரும் விரிவாக ஆராய்ந்துள்ளதுடன் நிவாரணக் கிராமங்களில் இடம்பெயர்ந்தவர்களை தங்க வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியாவுக்கான இரண்டு உதவி பிரதிநிதிகளுக்கும், வன்னி பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளைத் தளபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றுக்காலை இடம் பெற்றுள்ளது.

வன்னி பாதுகாப்புப் படைப்பிரிவின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. புலிகளின் பிடியிலிருந்து தப்பி பாதுகாப்புத் தேடிமோதல் தவிர்ப்பு பிரதேசத்தை நோக்கி வரும் சிவிலியன்கள் தொடர்பாகவும், அவர்களுக்குத் தேவையான உணவு விநியோகம் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

புலிகள் கடல்வழியாக தரையிறங்குவதைத் தடுப்பதற்கு சாலை கடற்கரையில் படையினரின் ஷெல் தளம்

sri-lanka-navy.jpgமுல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் விடுதலைப்புலிகள் கடல் வழியாகத் தரையிறங்கி தாக்குதலை மேற்கொள்ளலாமென இராணுவ புலனாய்வுத்துறை எச்சரித்ததைத்தொடர்ந்து படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய தளங்களை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக “லக்பிம’ ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு; சாலை கடற்கரை பகுதியில் நிலைகொண்டுள்ள 55 ஆவது படையணியினர் மீது விடுதலைப்புலிகள் கடல் வழியாகத் தரையிறங்கி தாக்குதல் மேற்கொள்ளலாமென கடந்த வாரம் படையினரின் புலனாய்வுத்துறை எச்சரிக்கையினை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய ஷெல் தளங்களை நிறுவியுள்ளனர்.

இதேவேளை, விடுதலைப்புலிகளின் பரப்பளவு குறைந்து வருவதனால் 57 ஆவது படையணியையும் பின்னிருக்கை படையணியாக பேணுவதற்கு படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த படையணி விசுவமடு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நிறுத்தப்படவுள்ளது. புதுக்குடியிருப்புக்கு தென்பகுதியில் 59 மற்றும் 53 ஆவது டிவிசன்களும், விசேட படையணி04 மற்றும் விசேட படையணி 08 என்பன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ஏ36 வீதிக்கு வடக்கே 55 மற்றும் 58 ஆவது படையணிகள் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

புதுக்குடியிருப்பு தென்புறம் உள்ள படையினரின் நிலைகளை ஊடறுத்து காடுகளுக்குள் உட்புகுவதே விடுதலைப்புலிகளின் நோக்கம்.அது நிறைவேறினால் இராணுவம் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளலாமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வன்னியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் லெப்.கேணல் சமிந்த லமகவே தலைமையிலான 7 ஆவது கெமுனுவோச் பற்றாலியன் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  முல்லைத்தீவின் கிழக்கு பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 59 ஆவது படையணி நகர்வை மேற்கொண்டிருந்தது. இப்படையணியினர் மீது விடுதலைப்புலிகள் கடந்த 1 ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதலின் போது படையினர் தமது முன்னணிநிலைகளை 3 கிலோ மீற்றர் தொலைவுக்கு பின்நோக்கி நகர்ந்திருந்தனர். படையினரை ஒட்டுசுட்டான் பகுதிவரை பின்தள்ளுவதே விடுதலைப்புலிகளின் நோக்கம்.

விடுதலைப்புலிகளின் தாக்குதலில் லெப். கேணல் சமிந்த லமகவே தலைமையிலான 7 ஆவது கெமுனுவோச் பற்றாலியன் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இச்சமரின் போது மேஜர் கமல் நாணயக்கார உட்பட 33 க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. உக்கிரமான சமர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கோப்ரல் புஷ்பகுமார என்ற சிப்பாய் கிளைமோர் குண்டு ஒன்றுடன் வெடித்து சிதறியதாகவும் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மக்களை பலவந்தமாக படைக்கு சேர்ப்பதில் புலிகள் தீவிரம்; 14 வயதுக்கு

st.jpgபொது மக்களை பலவந்தமாகப் படைக்குச் சேர்ப்பதை புலிகள் இயக்கம் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அதிலும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தற்போது இலக்கு வைக்கப்படுவதாகவும் ‘யுனிசெப்’ நிறுவனம் குற்றஞ் சாட்டியுள்ளது.

இதனால் மோதல்களில் சிறுவர்கள் கொல்லப்படுவதும், காயமுறுவதும் அதிகரித்துள்ளதாகவும் ‘யுனிசெப்’ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் டுஹமலே கவலை தெரிவித்துள்ளார்.  சிறுவர்கள் நேடியான அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் பாரிய உயிராபத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் ‘யுனிசெப்’ விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறுவர்களைப் பலவந்தமாகப் படைக்குச் சேர்ப்பது சகித்துக்கொள்ள முடியாதது என்றும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

“2003 ஆம் ஆண்டிலிருந்து 2008 இறுதிவரை ஆறாயிரம் சிறுவர்களை புலிகள் படைக்குச் சேர்த்திருந்தனர். சிறுவர் போராளிகள் உடல் ரீதியான இம்சைகளுக்கு உள்ளாவதுடன், அதிர்ச்சியடையும் வேளைகளில் மரணத்தைத் தழுவுகின்றனர். அவர்களின் பிள்ளைப் பராயத்தில் நம்பிக்கைக்குப் பதிலாக அச்சமே குடிகொண்டிருக்கிறது” என்று யுனிசெப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

வன்னியில் இடம்பெற்று வரும் மோதல்களில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் காயமடைந்து வருவதாக எச்சரித்துள்ள யுனிசெப் நிறுவனம், இவ்வாறு காயமுற்ற சிறுவர்கள் கடந்தவாரம் அங்கிருந்து வெளியேற்றிக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

“இந்தப் பிரச்சினையில் சிறுவர்களே கொல்லப்பட்டும், காயமுற்றும், படைக்குச் சேர்க்கப்பட்டும், இடம்பெயர்ந்தும், தனிமைப்படுத்தப்பட்டும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். மோதல்கள் காரணமாக அவர்களின் நாளாந்த தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ள யுனிசெப் பிரதிநிதி மோதல்களிலிருந்து பொதுமக்களுக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படவேண்டும் என்று புலிகள் இயக்கத்தையும், அரசாங்கத்தையும் வலியுறுத்தியுள்ளது.

“மோதல் பிரதேசத்திலிருந்து வெளியேறிவந்துள்ள 30 ஆயிரம் மக்களுக்கு யுனிசெப் நிறுவனமும் ஏனைய ஐ.நா. அமைப்புகளும் இணைந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.

எனவே இவ்வாறு துரிதமாக உதவி பெறக்கூடிய பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அனைத்துப் பொதுமக்களும் வர வேண்டியது மிக முக்கியமானது” என்றும் யுனிசெப் மேலும் தெரிவித்துள்ளது.