புதுக்குடியிருப்பு தாக்குதல் தொடர்கிறது பொதுமக்களுக்கான இழப்பு அதிகரிப்பு

artilary13.jpgமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பாதுகாப்பு வலயப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட கடும் ஷெல் தாக்குதல்களில் 48 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக இணையத்தள செய்திச் சேவைகள் மேலும் கூறுகையில்;

அம்பலன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் பகுதிகள் மீது நேற்று நடத்தப்பட்ட செறிவான ஷெல் தாக்குதல்களிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியில் ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாலகுமார் விதுசா (வயது 14) தயானந்தன் அம்பிகா (வயது 44), சசிகுமர் ஸ்பேயன் (வயது 60) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்புப் பகுதியில் பிற்பகல் 2 மணியளவில் கடும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். ச் விக்னேஸ்வரன் கஜனி (வயது07), சசிகுமார் தேனிலவன் (வயது05), பாலகுமார் விதுசா (வயது16), தயானந்தா அம்பிகாவதி (வயது 45), தவம் பெனடிற் (வயது 61), சின்னத்தம்பி (வயது 61) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரவீந்திரன் றோஜின, த.சுபாசிண, தர்மலிங்கம் ஜென, தர்மலிங்கம் அஜந்தன, சு.ஞானாம்பிக, சோமசுந்தரம் விக்னேஸ்வரராஜா, விக்கினேஸ்வரராஜ கரன், அரவிந்தன், கந்தையா முத்துக்குமார, க.நந்தின, சிவச்செல்வன், த.வனஜ, த.அரவிந்தன், த.கிநிச பாலராச, சந்திரகுமார, சித்திரவேல் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

தேவிபுரத்தில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர். வள்ளிபுனத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *