கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

வன்னி நிலவரமும் – புலிகளும் – புலி எதிர்ப்பாளர்களும் – அடுத்த கட்ட அரசியல் நகர்வும் : நாதன் (தேசம்நெற் கருத்தாளர்)

Protest_Genevaமனித அவலங்களை அரசியல் இருப்புக்காக பாசீஸ்டுகள் பயன்படுத்துவதை உலகின் வரலாற்றில் காண முடிகின்றது. இவ்வழியே இலங்கை மண்ணிலும் மக்களின் அழிவை மூலதனமாக வைத்தே அரசியல் இருப்பை உறுதி செய்கின்றனர். மனிதத்தை இழந்த மானிடர்களுக்கு மக்களின் உதிரம் என்பது தமது இருப்பின் பசளையாக மாறுகின்ற போது மக்களின் உயிர்கள் என்பது நுண்ணுயிர்களை விட பெறுமதியற்றதாக இருக்கின்றது. யுத்தவெறியால் இழக்கப்படும உயிர்களுக்கு கணக்கு கொடுக்கும் நிலையை அனைத்து மக்கள் பிரிவினரது உதவியுடன் உருவாக்கப்பட வேண்டும். இவைகள் தான் நீண்ட கால குறிக்கோளாக செயற்பட வேண்டும். இழப்புக்கள் யுத்த வெறி மூலம் மறைக்கப்படுகின்றது.

இழப்புகள் தமிழ் மக்களை மாத்திரம் பாதிக்கவில்லை. இலங்கையின் அனைத்துப் பிரிவினரையும் பாதித்துள்ளது. சிங்கள உழைக்கும் மக்களின் வாரிசுகள் சில சொற்பசலுகைக்காக படைகளில் இழந்து தமது உயிரை விட்டுள்ளனர். இதனால் தமது சொந்தங்களை இழந்த சிங்கள தாய் தந்தையர் தமது பிள்ளைகளை இழந்தது தெரியாது இருக்கின்றனர். யுத்தவெற்றியானது தமது சொந்தங்களை தேடுவதை தற்காலிகமாக முயற்சிக்காதவர்களாக இருக்கின்றனர். யுத்த வெறி ஊட்டப்பட்ட நிலையில் இருக்கின்ற மனேநிலையானது சிங்கள உழைக்கும் வர்க்கம் தமது இழப்புக்களை பற்றி சிந்திக்க காலம் தாழ்த்தப்படுகின்றது. இழப்புக்களை உணர்வதற்கான காலம் தாழ்த்துவதை தவிர்த்துக் கொள்வதற்கு யுத்த நிறுத்தம் என்பது அவசியமானதாகும்.

வன்னியில் இடம்பெறும் அவலத்தை காரணம் காட்டி சர்வதேச நாடுகள் தலையிடும் நிலை தோன்றியுள்ளதை அவதானிக்கு முடிகின்றது. இந்தத் தலையீடு எப்போ? எவ்வாறு? நடைபெறப்போகின்றது என்பதை ஆரூடம் கூற முடியும். மக்கள் காப்பற்றப்படலாம். இவை அவசியமான முன்தேவையாகும். ஆனால் அதனைத் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகள் தான் தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கப்போகின்றது. நாம் சர்வதேச நாடுகளின் சூழ்ச்சியை எவ்வாறு முறியடிக்கப் போகின்றோம் என்பது பற்றி அறிவுறுத்தல் நம்மிடம் மிக முக்கியமான தேவையாகின்றது. இவற்றிற்கான புரிதல் விடுதலைப் புலிகளிடம் உள்ளதா? மக்களிடம் உள்ளதா? ஏன் புலியெதிர்ப்பாளர்களிடம் இருக்கின்றதா?

சிங்கள மக்களை அணிதிரட்டுவதில் உள்ள சிக்கல் சிங்கள மக்கள் தம் இழப்பை அறியாத வண்ணம் யுத்த வெற்றிகள் அவர்களை இனப்பெருமிதத்தினுள் ஆழ்த்தி வைத்திருக்கின்றது. இதற்கு அடிப்படையாக பெரும்பான்மையினர் இனவாதக் கட்சிகளை ஆதரிப்பதும், வர்க்க உணர்வு அற்ற நிலையும் காரணமாகின்றது. இனங்களுக்கிடையேயான ஒற்றுமையை வலியுறுத்தவல்ல மார்க்சீய லெனினிய சிந்தனை கொண்ட கட்சியாக தம்மை சுயவிளம்பரம் செய்யும் ஜே.வி.பியானது இனவாதிகளாக சிதைந்துள்ளனர். சிறுபான்மையினரை யுத்த வெறிகொண்டு ஒடுக்கும் எதிரியை பெரும்பான்மை இனத்தின் பாட்டாளிவர்க்கத்தின் கடமையானது
அன்னியச் சக்திகளின் தலையீட்டு என்பது இன்று தவிர்க்க முடியாத நிலையை அடைந்துள்ளது. இவற்றை எதிர்கொள்ளக் கூடிய கட்டமைப்பு என்பது இலங்கை நாட்டிலேயே இல்லை. இவ்வாறான பிற்போக்குவாதிகளான ஜே.வி.பி, புலிகளினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துரதிஸ்ர நிலையை மாற்றிக் கொள்வதற்கு குறுங்குழுவாத நிலைப்பாட்டை தகற்தெறிவது முக்கியமான செயற்பாடாகும்.

தமிழ் நாட்டில் ஆழும் வர்க்கம் போராட்டத்தை திசை திருப்பியிருந்தனர். அடக்குமுறைக்கு துணைபோகும் சக்திகள் அதனை எதிர்க்கும் சக்திகளின் கவனத்தை திசை திருப்பியிருந்தனர். இவ்வாற ஒரு செயற்பட்ட அடக்குமுறையாளனுக்கு எதிராக திருப்ப முடியாத நிலைதான் இலங்கையில் இருக்கின்றது.

சிறிலங்கா அரசின் யுத்தவெறியை எதிர்க்கொள்ள தேவையானது அனைத்து முற்போக்குவாதிகளிடமும், மனிதநேயவாதிகளிடமும் கடமை சுமத்தப்பட்டுள்ளது. யுத்த நிறுத்தத்திற்கான போராட்டமானது இலங்கை தேசத்தில் அனைத்து மக்கள் மத்தியில் இருந்தும் எதிர்ப்பு வெளியேற வேண்டும். யுத்த எதிர்ப்பிற்கான பரந்த போராட்டங்கள் எதனையும் நடத்தவில்லை அல்லது நடத்த முடியவில்லை. யாழில் நடைபெற்று வன்னி மக்களை விடுதலை செய்யும்படி இ.பி.டி.பியினரால் திரட்டப்பட்ட போராட்டமும், தமிழ் தேசிய கூட்டணியினரும் செய்த போராட்டத்தின் போது புலியெதிர்ப்பணியில் இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் (நாபா) யுத்த நிறுத்தத்தைக் கோரும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். இவைகள் எல்லாம் புலிகளின் என்ற எல்லைக்குள் சுருங்கி விட்டது.

த.தே.கூட்டமைப்பினரினர் கோரிக்கைக்கு மக்கள் இசையவில்லை எனக் புலியெதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரு சுதந்திரமாக சிந்திக்கும் நிலை இருக்குமாயின் தம் சகோதரர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடுமையை எதிர்க்காமல் மக்கள் இருக்கமாட்டார்கள். மக்கள் தாம் தப்பிப்பிழைப்பதையேதான் முதன்மை குறிக்கோளாக கொண்டுள்ளனர். இதனால் தான் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழும் மக்கள் புலிகளுக்கும் – யாழில், கிழக்கில், கொழும்பில் வாழும் மக்களும் அரசுக்கும் கட்டுப்பட்டு வாழ்கின்றனர்.

இன்று இளையோர் அமைப்பே போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். இளையோர் தேசியத் தலைவர் பிரபா! புலிகளின் தாகம் தமிழீழம்! புலிகளே ஏகபிரதிநிதிகள்! என்பதை வைத்தே இன்றைய அவலத்தைத் போக்க போராடுகின்றனர். இளையோருக்கேயுடைய போர்க்குணம் என்பது விறுவிறுப்பாக செயற்பட முடிகின்றது. இவர்களுக்கு ஏற்றவாறு செயற்பட முடியாது. (இளையோரின் உழைப்பை உறுஞ்சும் தற்காலிகமாக தலைமை தாங்குவதில் பின்வாங்கியுள்ளது.) இந்தச் சமூக பொருளாதார அமைப்பின் நிமித்தம் ஒதுங்கிவிட்டனர். இளையோரே அதிகாரவர்க்கத்தின் உழைப்புச் சக்திகளாக உருவாகியிருக்கின்றது. இந்த இளையோரை எண்ணி ஆத்திரப்பட முடியவில்லை. அரசியல் உணர்வற்ற நிலையில் இருக்கும் மக்களை எண்ணி ஆத்திரப்பட முடியாதோ அவ்வாறுதான் இளையோர் மட்டிலும் நிலைப்பாடக இருக்கின்றது. இளையோர் மத்தியில் இருந்துவரும் வெறுப்பான வார்த்தை என்னவெனில் எவ்வாறு போராடினாலும் எந்தச் சக்தியும் எமது மக்களுக்கு சாதகமாக காரியமாற்றுகின்றார்கள் இல்லையே என்பதாகும். புலிகளின் ஏகபிரதிநிதித்துவ கருத்தாக்கத்தை வைத்தே தமிழ் மக்களுக்கான உரிமையை அடைவதற்கு குறுக்கீடாக அனைத்து சக்திகளும் ஈடுபடுவர் என்பதை புலிகள் உணர வேண்டும். இவற்றை வெற்றிகொள்ளும் வகையில் தமது ஏகபிரதிநிதித்துவக் கொள்கையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

ஆனால் இவற்றை உணராது ஜி-ரிவி கண்ணீர் துளிகள் என்ற நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்களிடையே பல தாக்கங்கள் உருவாகியிருக்கின்றன. தொலைக்காட்சியின் தாக்கம் அரசியல் ரீதியாக பார்க்கின்ற போது புலிகளின் அரசியல் போக்கை எவ்வித விமர்சனம் இல்லாது ஏற்றுக் கொள்கின்றார்கள். புலிகளைப் பற்றிய விமர்சனம் என்பது இன்றைய சோகமான நிகழ்வுகள் நடக்கும் காலமாகையால் அவற்றை தவிர்ப்பது நல்லது எனக் கூறுகின்றனர். தொலைக்காட்சியானது குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடிக் கொள்ளும் நிலைப்பாட்டில் இருந்து செயற்படுகின்றார்கள்.

தொலைக்காட்சியை திறந்தால் உணர்ச்சிப் பாடல்கள்
தமிழர்களின் ஒற்றுமை
அவலங்களை கொண்ட காட்சிகள்
இழப்புக்களினால் ஏற்படும் சோகம்

இவர்களின் நோக்கமானது இரத்தம் கொதிக்க வேண்டும். உணர்வு பெறவேண்டும் அவலங்களை வெளிக்கொணர வேண்டும். இவைகள் நியாயமானவையாகத் தோன்றினாலும் இது எதிர்வினையாற்றுகின்றது. தமிழ்மக்களின் குடும்பங்களிடையே உளவியல் பிரச்சனை என்பது உருவெடுக்கின்றது. ஏற்கனவே வன்னியில் தமது உறவினரைப் பற்றிய ஏக்கத்திலும், மக்களின் அவலங்களை பார்த்தும், கேட்டும் மக்கள் துயரத்தில் இருக்கையில் உளவியல் பிரச்சனை என்பது சமூகம் தழுவிய பிரச்சனையாக மாறுகின்றது. இழப்புக்களை வைத்தே தமது இருப்பை உறுதி செய்யும் அரசியல் இருக்கையில் இன்னும் இன்றும் மக்களின் துன்பம் துயரத்தை மறுவுற்பத்தி செய்து கொண்டேதான் போகவேண்டும். குறிப்பாக இங்கு உருவாகியிருக்கும் ஆதிக்க வர்க்க சிந்தனாசக்தி கொண்டவர்கள் இன்னும் இன்றும் ஆபத்தானவர்களாவர். புலிகள் ஆயுதத்தை கீழே வைத்தல் என்பது துரோகமே.

இன்றைய யுத்தத்தினால் இழக்கப்படுவது புலிகளின் அடிமட்டப் போராளிகள், தேசபக்தர்கள், புலிகளின் குடும்ப உறுப்பினர்கள், அங்கவீனமான போராளிகள் எனவும் பொது மக்களில் நோயாளிகள், வயோதிபர் என எந்த பேதம் இல்லாது பாதிக்கப்படும் மக்களே புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் அரசிடம் சரணடைந்து சாவதை விட புலிகளுடன் இருந்தே சாவோம் எனத் திடத்துடன் இருக்கும் பொது மக்களும் இருக்கின்றார்கள். இந்த முடிவிற்கு காரணம் சிறிலங்கா அரசின் காரணமாக ஏற்பட்ட வடு என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இவ்வாறு இருக்கையில் எதிரியிடம் போராளிகள் தமது சரணடைவது மாத்திரம் அல்ல. எந்தப் போராளிகளையும் எந்த அடக்குமுறையாளர்களும் தண்டனை கொடுக்க அதிகாரம் இல்லை. தமிழ் மக்கள் தமது பிரச்சனைகளை தமது இறைமைக்கு உட்பட்டதை அவர்களே செய்து முடிப்பர். புலிகளின் தவறுகள் கூட தமிழ் மக்கள் இறைமைக்கு உட்பட்ட நிலையில் விசாரணைகள் தமிழ் மக்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும்.

இந்த நிலைப்பாட்டை தவறென்று கூறுபவர்கள் ஈராக்கில் அமெரிக்க படை சென்று சதாமை கைது செய்த போது புலியெதிர்ப்பில் ஓரு பகுதினர் சதாமின் ஆட்சியை கவிட்டதற்கும், மரண தண்டனை வழங்கியதற்கும் எதிர்ப்புக் குரலை தெரிவித்திருந்தன. இதுசரியான நிலைப்பாடு இவ்வாறான நிலைப்பாடே தமிழ் மக்களின் போராட்ட சக்திகள் சம்பந்த பட்டமட்டில் பொருந்தும். ஆயுங்கள் உட்பட கையழிக்க முடியாது. இவைகள் ஒரு அரசியல் தீர்வு வரை முடக்கி வைத்திருக்க வேண்டும். நேப்பாளத்தில் நடைபெற்றது போன்றதான ஒரு ஒப்பந்தத்தின் கீழ் செயற்படுத்தலாம்.

புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தல் என்பது துரோகம் இவைதான் சரியான நிலைப்பாடாகும். இன்றைய நிலையில் அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகர்வது என்பதைப் பற்றிய பிரச்சினை தான் எம்முன்னோக்கி இருக்கின்றது. இந்த நிலைப்பாடாது புலியெதிர்ப்பாளர்கள், ஒடுக்குமுறையாளர்களின் விருப்பத்திற்கு நேர்மாறானது. இவை மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு காரணியாகின்றது. புலிகளின் அதிகாரவர்க்க நிர்வாக கட்டமைப்பு அழிக்கப்படுகின்றது. ஆனாலும் புலிகளில் உள்ள தேசபக்தர்கள் அடிமட்டப் போராளிகள் எல்லோரும் எதிரிகளிடம் சரணடைகின்ற போது அவர்கள் துடைத்தெறியப்படுவார்கள். இவர்கள் சரணடைந்தாலும் இவர்களின் நலனைப் பாதுகாத்தக் கொள்ளத்தக்க ஒரு ஜனநாயக கட்டமைப்பு இல்லை. ஒரு ஜனநாயகக் கட்டமைப்பு என்பது ஒரு பேச்சுவார்த்தை மூலமாக உருவாக்கப்பட வேண்டியதாகும். இவற்றில் சாத்தியமானது சிறுபகுதியில் தன்னும் யுத்த நிறுத்தின் மூலம் இடைக்காலத்துக்கு வாழ விடுவதும். பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் இந்த மக்களின் போராளிகளின் மக்களின் எதிர்காலம் பற்றி பேசி முடிவெடுக்கலாம்.

உடனடியாக செயற்படுத்தப்பட வேண்டியவை :

1. உடனடி யுத்த நிறுத்தம் – படைகளை தத்தம் இடங்களில் நிலைகொள்ளல்
2. நிவாரணம் வழங்கள்
3. உடனடி நீண்டகால தேவையை உறுதி செய்வது.
4. இடம் பெயர்ந்தவர்கள் தத்தம் உறவுகளுடன் மீளவும் இணைந்து கொள்வது
5. பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பது
6. புலிகள் ஏக பிரதிநிதித்துவ கோட்பாட்டை கைவிடல் வேண்டும்
7. எவரும் தமது ஆயுதங்களுடன் அரச அல்லது புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் செல்லக்கூடாது.

அரசியல் தீர்வை நோக்கி :

1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம். தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கு என்பதை ஏற்றுக் கொள்ளல் மாத்திரம் அல்லாமல் முஸ்லீம், மலையக மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
2. வட- கிழக்கு இணைப்பு.
3. வடக்கு -கிழக்கு என்னும் போது தமிழ்பேசும் முஸ்லீம்களுக்கான ஒரு அலகு உருவாக்கப்பட்டு அவர்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த அடிப்படையில் தீர்வுத் திட்டத்தை ஆராய்வதற்கு முன்னர் சிறுபான்மையினருக்கான ஒரு அரசியல் பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதிகளை சிறுபான்மையினரே தெரிவு செய்தல் வேண்டும். இதன் மூலம் இதில் அங்கம் பெறும் உறுப்பினர்கள் தற்காலிகமாக வடக்கு-கிழக்கிற்கு இடைக்காலத்தில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருப்பர். இவர்களை தெரிவு செய்வதற்கான ஒரு தேர்தலை நடத்துவது.

இந்தத் தேர்தலில் புலிகள் உட்பட அனைத்துப் பிரிவினரும் போட்டியிட உரிமை கொடுக்கப்பட வேண்டும். (புலிகளின் ஏகபிரதிநிதித்துவ கருத்தாக்கத்தை வைத்தே தமிழ் மக்களுக்கான உரிமையை அடைவதற்கு குறுக்கீடாக அனைத்து சக்திகளும் ஈடுபடுவர் என்பதை புலிகள் உணர வேண்டும். இவற்றை வெற்றிகொள்ளும் வகையில் தமது ஏகபிரதிநிதித்துவக் கொள்கையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.)

இவ்வாறு தமிழ் மக்களே தமது அரசியல் பேச்சுவார்த்தைக்கான சபையை உருவாக்கிக் கொள்வதன் மூலம் உள்நாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஆட்சியாளர்களின் எதேர்ச்சாதிகரமாக தீர்வை திணிப்பதை தவிர்க்க முடியும்.

புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களையும் வரையில் வரும் போர் நடவடிக்கைகள் நிறுத்தப்படமாட்டாது – கோத்தபாய

gothabaya.jpgபயங்கரவாதத்தினை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களையும் வரையில் வடக்கில் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். இவ்வாறு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளின் மூலமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது  நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக வடக்கில் பயங்கரவாதிகளின் பிடியிலுள்ள பிரதேசங்களைக் மீட்கும் நடவடிக்கைகள் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்கும் வரையில் பயங்கரவாதத்தை அழிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது. விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அவர்கள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் உயிர்ப்பெற முயற்சிக்கின்றனர்.

புத்தகம் எழுதுகிறார் கொண்டலீசா ரைஸ்

condalisa-rice.jpgஅமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றியவர் கொண்டலீசா ரைஸ்.

அவர் தனது பதவிக்கால அனுபவங்களை புத்தகமாக எழுதவுள்ளார். இதற்காக அங்குள்ள பிரபல புத்தக வெளியீட்டு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இவ் ஒப்பந்தத்தின் பிரகாரம் 8 ஆண்டு பதவிக்காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ரைஸ் புத்தகமாக எழுதிக் கொடுக்க வேண்டும்.

முதல் புத்தகம் 2011 ஆம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த ஒரு ஆண்டில் இரண்டாவது புத்தகம் வெளிவரவுள்ளது. இதில் தான் வளர்ந்த விதம் பற்றி ரைஸ் எழுதவுள்ளார்.

தீக்குளிப்புகள் வேண்டாம்- உலுக்குகின்றன: வைகோ

26-vaiko.jpgதீக்குளிப்பு சம்பவங்கள் எனது இதயத்தை உலுக்கி எடுக்கின்றன. இனியும் இதுபோன்ற தீக்குளிப்புகளில் யாரும் ஈடுபடக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய வம்சாவளித் தமிழரான கோகுல ரத்தினம் இலங்கைக்கு மூன்று தலைமுறைக்கு முன்னால் சென்ற குடும்பத்தில் பிறந்தவர். 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனையூர் ஊராட்சி காந்தி நகரில் சிலோன் காலனியில் வசித்து வந்தார். ஈழத் தமிழர்கள் படும் துன்பத்தை எண்ணி பல நாட்களாக வேதனையில் தவித்து வந்துள்ளார். தியாகி முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபோது மனம் வெதும்பி வருந்தி உள்ளார். அவர் வசிக்கின்ற அத்தெருவில் முத்துக்குமார் வீரவணக்க சுவரொட்டிகள் காணப்படுகின்றன. அவர் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு முன்னால் தீக்குளித்து உடல்கருகி அந்த இடத்திலேயே மாண்டு விட்டார். அவர் எழுதிய கடிதமும், ரேசன் அட்டையும் பக்கத்தில் கிடந்தது.

அக்கடிதத்தில் இலங்கைத் தமிழருக்காகத் தீக்குளிக்கிறேன் என்று ஒன்றுக்கு மூன்று முறை குறிப்பிட்டு எழுதி உள்ளார். நான் ஒரு திமுக தொண்டன் உடன் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். உடன் காப்பாற்று. தமிழா எழுந்திரு, தமிழா உயிரைக்கொடு என் தமிழ்மக்களைக் காப்பாற்ற எனது உயிரை அர்ப்பணிக் கிறேன். இதுதான் எனது கடைசி ஆசை உடனடியாக என் தமிழர்களைக் காப்பாற்று என்று வேண்டி விரும்புகிறேன்.

டாக்டர் கலைஞர் உடல் நலம் முன்னேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என் உயிரை தமிழ் மக்களுக்காகவும், தமிழினத் தலைவர்களுக்காகவும் அர்ப்பணிக்கிறேன். இலங்கையில் வாழும் தமிழர்களுக்காகவும், இந்தியாவில் வாழும் தமிழக மக்களுக்காகவும் நான் தீக்குளித்து எனது உயிரை தமிழ் உணர்வுக்காக என் உயிரை தமிழ் மண்ணுக்காக விட ஆசைப்படுகிறேன்.

தமிழினத் தலைவர் உடல்நிலை நல்லபடியாக குணமடைய என்னுடைய உயிரை விடுகிறேன். திருமாவளவனைக் கைது செய்யாதே- வைகோவை கைது செய்யாதே- ராமதாசை கைது செய்யாதே- பழ. நெடுமாறனைக் கைது செய்யாதே. நான் ஒரு தமிழன் என்று எழுதி கோகுலரத்தினம் என்று கையெழுத்து இட்டுள்ளார்.

இவருக்கு ஒரு மகனும், இரண்டு புதல்வியரும் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவரது மகன் கிருஷ்ண ஆனந்தராஜ் கும்பகோணம் கள்ளப்புலியூர் கல்லூரியில் பி.ஏ. படிக்கிறார்.

ஈழத் தமிழர்களுக்காக ஏற்கனவே தீக்குளித்து உயிர்துறந்த முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை சிவப்பிரகாசம் வரிசையில் ஏழாவது தியாகியாக கோகுலரத்தினம் தீக்குளித்து ஈழத்தமிழருக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

அவரது உன்னதமான தியாகத்தைப் போற்றி அவரது உடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினேன். ஈழத் தமிழர்களைக் காக்க நெருப்பில் தங்களை கருக்கிக் கொள்ளும் துணிவும், தியாகமும் நம் நெஞ்சை உலுக்குகிறது எனினும், அந்தக் குடும்பங்களின் வேதனையும், துயரமும் அதைவிட கடுமையானதாகும்.

எனவே, இனியாரும் தீக்குளிக்க வேண்டாம். உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடி வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

இஸ்லாமாபாத் மரியாட் ஹோட்டலில் தீவிபத்து

பாகிஸ் தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தீவிரவாதிகளால் கடந்த ஆண்டு தாக்கப்பட்ட மரியாட் ஹோட்டலில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி மரியாட் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஹோட்டலின் பெரும் பகுதி கருகிப் போனது. இதையடுத்து சீரமைக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் முதல் ஹோட்டல் செயல்படத் தொடங்கியது.

இந்த நிலையில் இன்று காலை மரியாட் ஹோட்டலில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பலர் படுகாயமடைந்தனர்.தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. காயமடைந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஹோட்டலின் சமையலறையிலிருந்துதான் தீ பரவியுள்ளது. இந்தத் தீ 2வது மாடியின் பெரும் பகுதியில் பரவியது.

சர்வகட்சிக் குழுவின் இறுதி அறிக்கை தயார்: அமைச்சர் திஸ்ஸ வித்தாரண

Minister Tissa Vitharanaஇலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராயப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கை தயாராகவிருப்பதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். நிறைவேற்று அதிகார முறையை ஒழித்தல் மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் முறையை மீண்டும் அமுல்படுத்தல் போன்ற பிரதான விடயங்கள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக அவர் கூறினார்

632 பேர் நலன்புரி முகாங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

red-cr.jpgசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து 5 கட்டங்களாக திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட 1996 பேரில் 632 பேர் சிகிச்சைகளின் பின்னர் நலன்புரி முகாங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுமாத்தளன் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட நோயாளர்களில் இதுவரையில் 788 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் 1234 பேர் அருகிலுள்ள ஏனைய பிரதேச வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே மாற்றப்பட்டோரில் 150 பேர் மன்னார் வைத்தியசாலைக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் 6 குழந்தைகளை பிரவசித்துள்ளனர். அனுமதிக்கப்பட்டோரில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் புதுமாத்தளன் பகுதியில் தங்கியுள்ள நோயாளர்களை அழைத்து வருவதற்கு ஐ.சி.ஆர்.சி நடவடிக்கையினை எடுத்து வருகின்றது.

மேல் மாகாண சபைத் தோ;தல் ஏப்ரல் 25ஆம் திகதி- தேர்தல்கள் செயலகம் இன்று அறிவிப்பு

election_ballot_.jpgமேல் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் இன்று அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் முடிவடைந்தன. இதனையடுத்தே தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபையில் 102 ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக இம்முறை 19 அரசியல் கட்சிகளையும் 26 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 2581 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேல் மாகாண சபை கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவிலிருந்து செவ்வாய் இரவு திருமலைக்கு அழைத்துவரப்பட்டோர் விபரம்

red-cr.jpgமுல்லைத் தீவிலிருந்து கப்பலில் கூட்டிவரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட ஐந்தாவது தொகுதியில் இடம்பெற்ற 386 நோயாளிகளின் பெயர்களும் வருமாறு:

1.என். தவமணி, பொக்கணை, (வயது 47),

2.எஸ். குலசிங்கம் (வயது 20),

3.கே. ஜெகதீஸ், பள்ளித்துறை, யாழ்ப்பாணம்,

4. கே. இளந்திரையன், முள்ளியடி, பளை (வயது 46),

5. பெயர்தரப்படவில்லை (எக்ஸ்ரே பிரிவில்),

6. துஷ்யந்தன், முல்லைத்தீவு (வயது 9),

7. சிவமலர், முள்ளியவளை (வயது 63),

8.நாகேஸ்வரன், முல்லைத்தீவு (வயது 47),

9.கே. மணிமாலா, முறிகண்டி (வயது 43),

10. ரி. சரஸ்வதி, பருத்தித்துறை (வயது 63),

11. அமிர்தராஜா, முள்ளியவளை (வயது 61),

12. கனகசபாபதி (வயது 67),

13. ரி. இம்மானுவல் (வயது 60),

14.ஐ. திலகவதனம், விஸ்வமடு (வயது 50),

15. கே. காந்தரூபி, ஜயபுரம் (வயது 35),

16. தனுஷன், பூநகர், கிளிநொச்சி (வயது 7),

17. தனுஷன், பூநகர், கிளிநொச்சி (வயது 9),

18. கௌசிகன், பூநகர், கிளிநொச்சி (வயது 04),

19.ஜெயகுமரன், கிளிநொச்சி (வயது 30),

20. ரி. சாந்தன், முல்லைத்தீவு (வயது 62),

21. எஸ். மரியா, முல்லைத்தீவு (வயது59),

22. எஸ். தர்மலிங்கம், தாமரைக்கேணி (வயது 77),

23. காந்தரூபன், இராமநாதபுரம், கிளிநொச்சி (வயது 19),

24. எஸ். கந்தசாமி, இராமநாதபுரம், கிளிநொச்சி (வயது 59),

25. ஜி. திரேஸா, கிளிநொச்சி (வயது 49),

26. எஸ். சந்திரதேவி, முல்லைத்தீவு (வயது 60),

27. பி. இந்திரா தேவி, முல்லைத்தீவு (வயது 58),

28. ரி. மகேஸ்வரி, வட்டக்கச்சி, கிளிநொச்சி (வயது 68),

29. ஆர். துஷ்றி (வயது 13),

30. என். ஸ்ரீதரன், கிளிநொச்சி (வயது 53),

31. பி. ரோஜிதா, விஸ்வமடு, கிளிநொச்சி (வயது 8),

32. ஜயகதா, விஸ்வமடு, கிளிநொச்சி (வயது 35),

33.எஸ். சின்னம்மா, 154, செல்வபுரம் (வயது 68),

34. கே. நாராயணசாமி, முள்ளியவளை, பூத்தம்வலி (வயது 45),

35. என். பகிரதன், குகன்வலி, முள்ளியவளை (வயது 18),

36. ரி. துரைரதன், தெல்லிப்பழை, யாழ்ப்பாணம் (வயது 71),

37. ரி. சீதா, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம் (வயது 66),

38. என். ஸ்ரீதர்சன், கிளிநொச்சி (வயது 53),

39. பி. கமலாம்பிகை, தெல்லிப்பழை (வயது 21),

40. கே. இந்துமதி, கடையிருப்பு (வயது 44),

41. பி. கணேசமூர்த்தி, வவுனியா (வயது 46),

42. ரி. யசுகரன், முறிப்பு, கிளிநொச்சி (வயது 17),

43. எம். கருப்பையா, கொக்காவில், கிளிநொச்சி (வயது 58),

44. வி. நல்லையா, சிவநகர், கிளிநொச்சி (வயது 85),

45. எஸ். ஜசிந்தவா, முறிப்பு, கிளிநொச்சி (வயது 7),

46. வி. கதிரவேல், செல்வநகர், கிளிநொச்சி (வயது 70)

47.எஸ். சிறிவிக்னேஸ்வரன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு (வயது 46),

48. கே. மோகன், முல்லைத்தீவு (வயது 42),

49. என்.சிவகுமார், கனகபுரம், கிளிநொச்சி (வயது 34),

50. எம். சசிகுமார், கிளிநொச்சி, கனகராயன்குளம் (வயது 15),

51.என். சந்திரா, கனகபுரம் புளியங்குளம் (வயது 33),

52. என். சயந்தனை, கனகபுரம், புளியங்குளம் (வயது 5),

53.ஜயந்தனை, கனகபுரம், புளியங்குளம் (வயது 8),

54. பி. வேலாயுதம், காரைநகர், யாழ்ப்பாணம் (வயது 61),

55. எஸ். மரியன் சுவாமி, யாழ்ப்பாணம் (வயது 80),

56.கே. யோகேஸ்வரி, கிளிநொச்சி (வயது 34),

57. கோகிலவதனி, கிளிநொச்சி (வயது 04),

58. கே. நவரத்னராஜா, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (வயது 55),

59. பி.ஏ.கௌசல்யா, பொக்கணை, முல்லைதீவு (வயது 47),

60. ரி. சரஸ்வதி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (வயது 63),

61. ஜி. சரோஜாதேவி, கிளிநொச்சி (வயது 36),

62. ஜி. ஹர்ஷன், கிளிநொச்சி (வயது 4),

63. என். கமலேஸ்வரன், முள்ளியவளை (வயது 41),

64. என். ஜெயகுமார், கனகபுரம், கிளிநொச்சி (வயது 33),

65. எஸ். இந்துமதி, விநாயகபுரம், கிளிநொச்சி (வயது 35),

66. நிலாரேஷன், விநாயகபுரம், கிளிநொச்சி (வயது 08),

67. எஸ். துஸ்மின், விநாயகபுரம், கிளிநொச்சி (வயது 07),

68. மோஹனதாஸன், கனகபுரம், கிளிநொச்சி (வயது 17),

69. வி. சிவராசா, 2 ஆவது ஒழுங்கை, முல்லைத்தீவு (வயது 52),

70. பி. சார்லிங், நிலாபுரம், வவுனியா (வயது 39),

71. சார்ள்ஸ் மத்தியூ, வவுனிக்குளம், முல்லைத்தீவு (வயது 63),

72. நாகரத்னம் (வயது 55),

73. கே. விவேகானந்தராசா, யாழ்ப்பாணம் (வயது 66),

74. பி. கேதீஸ்வரன், யூனிட் 7, முல்லைத்தீவு (வயது 43),

75. பி. யோகபாக்கியம், புளியங்குளம், திருகோணமலை (வயது 56),

76. மங்களாதேவி, கிளிநொச்சி (வயது 60),

77. எம். மகேஸ்வரி, புங்குடுதீவு முல்லைதீவு (வயது 61),

78. புஸ்கி, வன்னேரியன், கிளிநொச்சி (வயது 06),

79. ஏ. ரஜினி, வன்னேரியன், கிளிநொச்சி (வயது 36),

80. அகஸ்தின், வன்னேரியன், கிளிநொச்சி (வயது 04),

81. பி. சரஸ்வதி, மாத்தளன், முல்லைத்தீவு (வயது 53),

82. ரி. ராஜ்குமார், அடம்பன் கிளிநொச்சி (வயது 09),

83. எஸ். மைக்கல், கிளிநொச்சி (வயது 72),

84. வி. புண்ணியமூர்த்தி, புளியங்குளம் (வயது 60),

85. எஸ். சீதானம், பரியாமுல், கிளிநொச்சி (வயது 54),

86. எஸ். யோகரத்னம், நல்லூர், யாழ்ப்பாணம் (வயது 55),

87. கமலாவதி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (வயது 42),

88. கன்ஸன், பூநகர், கிளிநொச்சி (வயது 65),

89. பி. தேவசகாயம், அடம்பன், மன்னார் (வயது 67),

90. டி. றீற்றம்மா, அடம்பன், மன்னார் (வயது 63),

91. காளியம்மா, கனகராயன் குளம், வவுனியா (வயது 80),

92. எஸ். சுப்பிரமணியம், கனகராயன்குளம், வவுனியா (வயது 63),

93. எஸ். கமலாதேவி, முல்லைத்தீவு (வயது 71),

94. கே. பாலசுப்பிரமணியம், கனகபுரம், கிளிநொச்சி, (வயது 63),

95. ஜி. புனிதவள்ளி, கிளிநொச்சி (வயது 59),

96.பேபி தருண், முல்லைத்தீவு (3 மாதம்),

97. ஜே. பத்மினி, முல்லைத்தீவு (வயது 39),

98. தனுஷ்யா, முல்லைத்தீவு (வயது 15),

99. சபாரத்னம், முல்லைத்தீவு (வயது 62),

100. டி. பரமேஸ்வரி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (வயது 60),

101. ஜி. துஷ்யந்தி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (வயது 19),

102. எஸ். நவமணி, கிளிநொச்சி (வயது 47),

103. எஸ். திலங்கராஜா, மன்னார் (வயது 72),

104. ரவீந்திரன், அடம்பன், மன்னார் (வயது 48),

105. பி. பாக்கியலட்சுமி, கிளிநொச்சி (வயது 75),

106. வி. உஷாநந்தனி, கிளிநொச்சி (வயது 35),

107.பி. வர்தராணி, தர்மபுரம், கிளிநொச்சி (வயது 50),

108. பி. கணபதிப்பிள்ளை, விஸ்வமடு, கிளிநொச்சி (வயது 65),

109. ஹெலன்ஜோஷி, அடம்பன், மன்னார் (வயது 49),

110. பி. ஞானப்பிரகாசம், ஜயந்திபுரம், கிளிநொச்சி (வயது 69),

111. கணபதிப்பிள்ளை, உடையார்கட்டு, முல்லைத்தீவு (வயது 64),

112. எஸ். மஞ்சுனன் (வயது 14),

113. கே. சிவலிங்கம், முள்ளியவளை (வயது 70),

114.எஸ். பொய்க்கேணி, கிளிநொச்சி (வயது 80),

115. எம். சிவக்குடும்பு, பொக்கணை, முல்லைத்தீவு (வயது 77),

116. யு. மகாமந்தன், வட்டக்கச்சி (வயது 43),

117. புவனேஸ்வரி, யாழ்ப்பாணம் (வயது 72),

118. எஸ். ராஜேஸ்வரி, கார்ல்கிதவை (வயது 72),

119. டி. மாலனி, யாழ்ப்பாணம் (வயது 26),

120. ரி. சாந்தினி, முறுத்தக்காணி, வடோத (வயது 40),

121. கே. பொன்னம்பலம், கிளிநொச்சி (வயது 55),

122. ஏ. நடராசா, கிளிநொச்சி (வயது 50),

123.என். யோகேஸ்வரன், தர்மபுரம், கிளிநொச்சி, (வயது 35),

124. கே. நாகலிங்கம், தர்மபுரம், கிளிநொச்சி (வயது 84),

125. பி. பிரான்ஸிஸ், கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு (வயது 69),

126. பி. மதனராசா, கிளிநொச்சி (வயது 31),

127. கே. வீலாவதி, கிளிநொச்சி (வயது 51),

128. ஆர்.பி. ரங்கன், அளவெட்டி, யாழ்ப்பாணம் (வயது 47),

129.கேணிகா, முல்லைத்தீவு, (8 மாதங்கள்),

130. மேனுகா, முல்லைத்தீவு (வயது 7),

131. ரி. கமலா, முல்லைத்தீவு (வயது 32).

132.வி.தலுக்ஷி, கிளிநொச்சி, (வயது 03),

133.வி.சுசிதன், கிளிநொச்சி, (வயது 02),

134.வி.செல்வமலர், கிளிநொச்சி, (வயது 40),

135.ரி.ராதிகா, யாழ்ப்பாணம் (வயது 30).

136.ரி.கஜனன், யாழ்ப்பாணம், (வயது 02),

137.ஆர்.கண்மணி, கிளிநொச்சி, (வயது 50),

138.ரி.மகேஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது 57),

139.கே.பரமேஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது 50),

140.எஸ்.தனபாலசிங்கம், கிளிநொச்சி, (வயது 59),

141.என்.சுபாஜினி, கிளிநொச்சி, (வயது 29),

142.என்.மாலினி, கிளிநொச்சி, (வயது 58),

143.மரியாளி, முல்லைத்தீவு, (வயது 75),

144.கமலாம்பிகை, முல்லைத்தீவு, (வயது 80),

145.தேவராசா, முல்லைத்தீவு, (வயது 44),

146.என்.ரூபா, முல்லைத்தீவு, (வயது 33),

147.ஏ.கர்ஷனி, முல்லைத்தீவு, (பத்து மாதம்),

148.மேகலா, கிளிநொச்சி, (வயது 8),

149.ஜெகப்பிரியா, கிளிநொச்சி, (வயது 10),

150.எஸ்.சுமித்ராதேவி, கிளிநொச்சி, (வயது 42),

151.கே.கணேஷ், முல்லைத்தீவு, (வயது 69),

152.ஜி.குணமணி, கிளிநொச்சி, (வயது 65),

153.இ.செபஸ்தியன், முல்லைத்தீவு, (வயது 52),

154.எஸ்.எம்.செபஸ்தியன், முல்லைத்தீவு, (வயது 53),

155.சரஸ்வதி, யாழ்ப்பாணம், (வயது 41),

156.ஜே.சதாலட்சுமணன், முல்லைத்தீவு, (வயது 39),

157.ஜி.சந்திரகுமார், முல்லைத்தீவு, (வயது 9),

158.வி.ரகுநாதன், வவுனியா, (வயது 65),

159.ஆர்.சித்திரமணி, கிளிநொச்சி, (வயது 59),

160.கே.சின்னத்தம்பி, யாழ்ப்பாணம், (வயது 74),

161.டி.சார்லெட், பாலமடு, (வயது 44),

162.கலைச்செல்வி, கிளிநொச்சி, (வயது 32),

163.எஸ்.லக்ஷிகன், (வயது 4),

164.திவ்யா, கிளிநொச்சி, (வயது 4),

165.திருமதி.எம்.ஜெயநாதன், கிளிநொச்சி, (வயது 38),

166.எம்.சண்முகநாதன், மல்லாவி, (வயது 44),

167.ஆர்.நடராசா, முள்ளியவளை, (வயது 64),

168.எம்.எஸ்.ஆர்.சசிநந்தினி, முல்லைத்தீவு, (வயது 72),

169.மூக்காயி, (வயது 67),

170.ஈ.பாக்கியம், வட்டக்கச்சி, (வயது 67),

171.ஞானப்பிரகாசம், புதுக்குடியிருப்பு, (வயது 75),

172.எஸ்.செல்லம்மா, கிளிநொச்சி, (வயது 80),

173.எஸ்.மாணிக்கம், கிளிநொச்சி, (வயது 60),

174.கே.புஸ்பராணி, முல்லைத்தீவு, (வயது 29),

175.எம்.பஞ்சலிங்கம், மன்னார், (வயது 57),

176.பிதாராணி, மன்னார், (வயது 12),

177.ஜி.கிருஷ்ணா, கிளிநொச்சி, (வயது 75),

178.எஸ்.யசோதா, கிளிநொச்சி, (வயது 42),

179.ஆர்.கௌசல்யன், ஒட்டுசுட்டான், (வயது 35),

180.எஸ்.ரதிமலர், கிளிநொச்சி, (வயது 67),

181.ஈஸ்வரி, கிளிநொச்சி, (வயது 70),

182.கே.கமலாம்பிகை, கிளிநொச்சி, (வயது 63),

183.பி.ஜீவன், முல்லைத்தீவு, (வயது 12),

184.சரஸ்வதிதேவி, முல்லைத்தீவு, (வயது 47),

185.கே.லெட்சுமி, கிளிநொச்சி, (வயது 68),

186.தனவதி, முல்லைத்தீவு, (வயது 60),

187.வி.தர்மலிங்கம், முல்லைத்தீவு, (வயது 17),

188.எம்.துஷான், யாழ்ப்பாணம், (வயது 14),

189.வி.தர்மலிங்கம், கிளிநொச்சி, (வயது 62),

190.எஸ்.புஷ்பகலா, பூநகரி, (வயது 29),

234.தமிழரசன், பூநகரி, (வயது 1),

191.எஸ்.சிவராசசிங்கம், கிளிநொச்சி, (வயது 65),

192.எம்.நேசநாதன், யாழ்ப்பாணம், (வயது 39),

193.துஷாரா, யாழ்ப்பாணம், (வயது 14),

194.பி.பத்மநாதன், கிளிநொச்சி, (வயது 62),

195.புகழரசன், யாழ்ப்பாணம், (வயது 1),

196.டி.குமாரதாசன், கிளிநொச்சி, (வயது 45),

197.ஜி.வாசுகி, யாழ்ப்பாணம், (வயது 44),

198.எஸ்.குணராசன், யாழ்ப்பாணம், (வயது 42),

199.சந்திரவதி, கிளிநொச்சி, (வயது 38),

200.கீதப்ரியா, கிளிநொச்சி, (வயது 4),

201.எஸ்.சிவகாந்தன், கிளிநொச்சி, (வயது 16),

202.எஸ்.பார்வதி, கிளிநொச்சி, (வயது 60),

203.கே.செல்லம்மா, யாழ்ப்பாணம், (வயது 85),

204.இ.அன்னமலர், கிளிநொச்சி, (வயது 64),

205.ஏ.வெள்ளை, மன்னார், (வயது 80)

206.என்.நளினி, முல்லைத்தீவு, (வயது 30),

207.என்.சந்திரா, முல்லைத்தீவு, (வயது 60),

208. ஆர். ராஜேஸ்வரி, புதுக்குடியிருப்பு, (வயது 50),

209.ஜெதுஷா, முல்லைத்தீவு, (வயது 1),

210.யதுஷா, யாழ்ப்பாணம், (வயது 3),

211.வை.லோகேஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது 31),

212.எஸ்.நவரத்னம், வவுனியா, (வயது 52),

213.எம்.சுதன், வவுனியா, (வயது 27),

214.மங்களேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 40),

215.எஸ்.நகுலேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 31),

216.இரோஷனா, முல்லைத்தீவு, (வயது 2).

217.எஸ்.நிரோஷன், முல்லைத்தீவு, (வயது 6),

218.எம்.விமலாதேவி, வவுனியா, (வயது 57),

219சின்னத்தம்பி, முல்லைத்தீவு, (வயது 84),

220.ஏ.புஷ்பவதி, யாழ்ப்பாணம், (வயது 74),

221.கே.சோமசுந்தரம், முல்லைத்தீவு, (வயது 65),

222.நிம்ரோத், புதுக்குடியிருப்பு, (வயது 8),

223.திஹாரா, புதுக்குடியிருப்பு, (வயது 6),

224.சந்திரகிரி, புதுக்குடியிருப்பு, (வயது 28),

225.என்.யோகமலர், முல்லைத்தீவு, (வயது 60),

226.வி.பிள்ளை, மருதங்கேணி, (வயது 62),

227.எம்.ஸ்ரீதரன், மருதங்கேணி, (வயது 41),

228.எஸ்.செனகன், மருதங்கேணி, (வயது 1),

229.அறுகுணசீலன், முல்லைத்தீவு, (வயது 35),

230.சுசிதரன், முல்லைத்தீவு, (வயது 13),

231.ராஜேந்திரலிங்கம், கிளிநொச்சி, (வயது 52).

232.ஆர்.ராஜேஸ்வரி புதுக்குடியிருப்பு, (வயது 50).
 

அல்கொய்தா தீவிரவாதிகளை முற்றாக ஒழிப்போம்; பாராளுமன்ற கன்னி உரையில் ஒபாமா சபதம்

obama.jpgஒபாமா அமெரிக்க அதிபர் ஆன பிறகு முதல் முதலாக அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது :-அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நட வடிக்கை பலனை கொடுத்து வருகிறது. இதன் மூலம் பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வருகிறது.

இன்னும் 2 ஆண்டில் 35 இலட்சம் வேலைகள் உருவாக்கப்படும். அல்லது பாது காக்கப்படும். எனவே அமெரிக்கர்களுக்கு ஏற்பட்ட வேலை இல்லா திண்டாட்டம் முற்றிலும் நிவர்த்தி செய்யப்படும். பொருளாதாரத்தை மீட்க ஒதுக்கிய பணம் மக்களுக்குத் தான் பயனைத் தரும். வங்கிகளுக்கோ, நிதி நிறுவனங்களுக்கோ இந்தப் பணம் போய்ச் சேரலாம்.

அமெரிக்காவை நாம் மறு நிர்மாணம் செய்கிறோம். சரிவை மீட்கிறோம். இதை எல்லா மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் எந்த தீவிரவாதிகளையும் நாம் விட்டு வைக்க மாட்டோம்.

எந்த தீவிரவாதிகளும் இனி அமெரிக்காவுக்குள் தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம். மற்ற நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கும் தீவிரவாதிகளால் ஆபத்து வரவிட மாட்டோம்.

ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் இருக்கும் அல் கொய்தா தீவிரவாதிகள் முற்றி லும் ஒழிக்கப்படுவார்கள். இதற்காக கூட்டணி நாடுகளோடு சேர்ந்து புதிய அணுகு முறையை கையாளப் போகிறோம். அமெரிக்காவின் நட்பு நாடுகள் எண்ணிக்கை விரிவு படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.