சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து 5 கட்டங்களாக திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட 1996 பேரில் 632 பேர் சிகிச்சைகளின் பின்னர் நலன்புரி முகாங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுமாத்தளன் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட நோயாளர்களில் இதுவரையில் 788 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் 1234 பேர் அருகிலுள்ள ஏனைய பிரதேச வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே மாற்றப்பட்டோரில் 150 பேர் மன்னார் வைத்தியசாலைக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் 6 குழந்தைகளை பிரவசித்துள்ளனர். அனுமதிக்கப்பட்டோரில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் புதுமாத்தளன் பகுதியில் தங்கியுள்ள நோயாளர்களை அழைத்து வருவதற்கு ஐ.சி.ஆர்.சி நடவடிக்கையினை எடுத்து வருகின்றது.