கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஏழு விண்வெளி வீரர்களுடன் “டிஸ்கவரி’ விண்ணுக்குப் பயணம்!

discovery.jpgஅமெரிக் காவின் புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து நாசாவின் “டிஸ்கவரி’ விண்கலம் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது.

ஏழு விண்வெளி வீரர்கள் சகிதம் 14 நாள் பயணத்தை மேற்கொண்டு சர்வதேச விண்வெளிநிலையத்திற்கு செல்லும் இந்த விண்கலமானது அவ்விண்வெளி நிலையத்துக்கான நான்காவது இறுதித் தொகுதி சு10ரியசக்தி பிறப்பாக்கி அலகுகளை ஸ்தாபிப்பதை இலக்காகக் கொண்டு அனுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விண்கலத்தில் பயணிக்கும் விண்வெளிவீரர்களில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட காலம் தங்கி பணியாற்றும் முதலாவது ஜப்பானிய விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெறவுள்ள கொய்சி வகாடாவும் உள்ளடங்குகிறார்.

இந்த விண்கலத்தை கடந்த மாதம் விண்ணுக்கு அனுப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பிற்போடப்பட்டது. இதனையடுத்து ஒரு மாத கால தாமதத்தின் பின் இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய சக்திப் பிறப்பாக்க அலகுகளானது,  அந்நிலையத்துக்கு கிடைப்பனவாகும் மின் சக்தியின் அளவை அதிகரிப்பதுடன் அந்நிலையத்துடன் விஞ்ஞான ஆய்வு கூடங்களை பொருத்துவதற்கு தேவையான சக்தியையும் வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பவர்களின் தொகையை மூவரிலிருந்து அறுவராக அதிகரிக்க இந்த மேலதிக சக்தி விநியோகம் உதவும் என நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலைய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அங்குள்ள சிறுநீரை குடிநீராக மாற்றும் உபகரணமொன்று பழுதடைந்துள்ள நிலையில்,  அதற்கு பதிலாக புதிய உபகரணமொன்றை பொருத்தும் நடவடிக்கையிலும் விண்வெளிவீரர்கள் ஈடுபடவுள்ளனர். இதுவரை விண்வெளிக்கு 36 பயணங்களை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள டிஸ்கவரி விண்கலம் சர்வதேச விண்கலத்துக்கு பயணம் மேற்கொள்வது இது 28 ஆவது தடவையாகும்.

இந்நிலையில் இந்த விண்வெளி நிலையம் சு10ரியன் மறைந்த பின் பிரகாசமான நட்சத்திரம்போன்று விண்ணில் ஒளிரவுள்ளது. மேற்படி சு10ரிய சக்தி பிறப்பாக்க அலகுகள் அனைத்தும் இணைந்து 120 கிலோ வோட்ஸ் மின் சக்தியை பிறப்பிக்கும் என நாசா தெரிவிக்கிறது. 

ஜல்லிக்கட்டுக்கு தடை : ரசிகர்கள் மொட்டையடித்து நூதனப்போராட்டம்

jallikattu.jpgசுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன. பல உயிர்கள் பலியாகின்றன. எனவே, ஜல்லிக் கட்டுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்காலத் தடை விதித்தது. விரைவில் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு வர இருக்கிறது. இந்நிலையில், தொடர்ந்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

58வது படையணி இரணைப்பாலை சந்தியை அடைந்தது

army-s-l.jpg58வது படையணி சேர்ந்த 20வது கஜபா படைப் பிரிவினரும் 7வது சிங்கப் படைப் பிரிவினரும் 11வது இலகு காலாற்படையினரும் இணைந்து புதுகுடியிருப்பு பிரதேசத்தில் உள்ள இரணைப்பாலை சந்தியை அடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளதன் மூலம் புலிகளை மேலும் மிகச்சிறிய ஒரு நிலப்பகுதிக்குள் முடக்கியுள்ளனர்.

ஈழத்தில் இனப் படுகொலையை கண்டித்து நேற்று முன்நாள் தீக்குளித்த இருவரும் மரணம்

நேற்று முன்தினம் ஈழத்தமிழருக்காக தீக்குளித்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த பா.ம.க. உறுப்பினர் ராஐசேகரன், தஞ்சை மருத்துவமனையில் இன்று காலை 9 மணியளவில் உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு, கடலூரில் தீக்குளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரான ஆனந்த் (23) என்கிற ஆனந்தராஜ் புதுவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் உயிரிழந்தார்.

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் பொதுமக்களே ஆஜராகி தமிழில் வாதாடினார்கள்

chennai-highcourt.jpgகாக்கிச் சட்டைகள்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஒரு மாதமாக வழ‌க்க‌றிஞ‌‌ர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வழக்குகள் தகுதி அடிப்படையில் விசாரிக்க உயர் நீதிமன்றம் அறிவித்தது. இந்த அறிவிப்பினைக் கண்டித்து பல வழ‌க்க‌றிஞ‌ர்கள் தாங்கள் வழக்குகளின் வக்காலத்துக்களை வாப‌ஸ் பெற்று வருகின்றனர்.

வழக்கறிஞர்கள் போராட்டத்தால் தற்போது சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் பொதுமக்களே ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் ஆஜராகி தமிழில் வாதாடி வருகிறார்கள். விசாரணையும் தமிழில் நடைபெற்றது. நீதிபதி கலிபுல்லா மற்றும் ‌நீ‌திப‌தி ‌பி.ஆ‌ர்.சிவகுமா‌ர் தமிழிலேயே 146 வழக்குகளை விசாரித்து முடித்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்கு விசாரணை நடப்பது இதுவே முதன்முறையாகும்.

முல்லைத்தீவிலிருந்து திருமலைக்கு கப்பலில் சனிக்கிழமை அழைத்து வரப்பட்டோர் விபரம் (நேற்றைய தொடர்ச்சி)

navy_civilians.jpg186. ராசநாயகம், கிளிநொச்சி, (வயது 51),
187. விதுஷங்கா, கிளிநொச்சி(வயது 3.5),
188. மஞ்சுளா, கிளிநொச்சி(வயது 28),
189. இந்திரவதனி, கண்டாவளை(வயது23),
190. லோகேஸ்வரி, முல்லைத்தீவு(வயது66),
191. வள்ளியம்மா, விசுவமடு(வயது 58),
192. பிரதீபா, முள்ளியவளை(வயது22),
193. டெஸ்மி, முள்ளியவளை(வயது1),
194. கிறிஸ்ரி, முள்ளியவளை(வயது27),
195. அன்னம்மா, புளியங்குளம்(வயது70),
196. கிரிஸாந்த், பளை(வயது 4மாதம்),
197. கீதாஜலா, பளை(வயது27),
198. சந்திராதேவி, பரந்தன்(வயது51),
199. சேனாதிராஜா, கிளிநொச்சி(வயது65),
200. ஆர்.நிர்மலா, கிளிநொச்சி(வயது42),
201. மதுரகன், கிளிநொச்சி(வயது2.5),
202. ஐங்கரன், கிளிநொச்சி(வயது38).
203. கனகலிங்கம், பூநகரி(வயது53),
204. சகிலாதேவி, முழங்காவில்(வயது10),
205. இந்திராணி, முழங்காவில்(வயது44),
206. சஞ்ஜீவன், புதுக்குடியிருப்பு(வயது 2மாதம்),
207. கிருஷாந்தி, புதுக்குடியிருப்பு(வயது23),
208. சூரியநாதன், முள்ளியவளை(வயது68),
209. பதுஜன், பொக்கணை(வயது16),
210. பி.ஸ்ரீதரன், பொக்கணை(வயது43),
211. சுதாமதி, கிளிநொச்சி(வயது33),
212. அபிஷயா, கிளிநொச்சி(வயது2.5)
213. நாகராஜா, புளியங்குளம்(வயது37),
214. மிதுஷன், புளியங்குளம்(வயது7),
215. கஜனி, புளியங்குளம்(வயது10),
216. ரவீந்திரகுமார், கிளிநொச்சி(வயது30),
217. நவிஷன், கிளிநொச்சி(வயது3),
218. திருகாதேவி, கிளிநொச்சி(வயது28),
219. ரேணுஜன், கிளிநொச்சி(வயது4),
220. செல்வமலர், கிளிநொச்சி(வயது43),
221. டிலாஷன், கிளிநொச்சி(வயது8),
222. பொன்வர்ணன், முல்லைத்தீவு(வயது65),
223. ரி.விதுஷன், முல்லைத்தீவு(வயது7),
224. ரி.சரோஜினி, முல்லைத்தீவு(வயது35),
225. ரி.தினுஷன், முல்லைத்தீவு(வயது10),
226. புவனேஸ்வரி,
227. சிவசங்கர்(வயது32),
228. குகனேந்திரன், பரந்தன்(வயது59),
229. பூவேந்திரன், கிளிநொச்சி,
230. வடிவேல், கிளிநொச்சி(வயது55),
231. எஸ். கிருபா, கிளிநொச்சி(வயது 7மாதம்),
232. எஸ்.புஷ்பகாந்தி, கிளிநொச்சி(வயது25),
233. ரஜீவன், கிளிநொச்சி(வயது5),
234. கீதாலட்சுமி, மாத்தளன்(வயது45),
235. ஏ.மல்லிகா, மல்லாவி(வயது30),
236. ஏ.சஜீவன், மல்லாவி(வயது11),
237. எஸ்.மாலினி, முல்லைத்தீவு(வயது36),
238. துரைராஜா, கிளிநொச்சி(வயது 47),
239. அகல்நிலா, பரந்தன்(வயது 4மாதம்),
240. வி.யுகனேஸ்வரி, பரந்தன்(வயது19),
241. விக்னேஸ்வரன், பரந்தன்(வயது27),
242. ஜி.பிரதீபா, கிளிநொச்சி(வயது12),
243. ராஜலட்சுமி, கிளிநொச்சி(வயது53),
244. தமிழின்பன், கிளிநொச்சி(வயது2.5),
245. எஸ்.சிவகுமார், திருநகர்(வயது34),
246, கே.மதுரா, மல்லாவி(வயது16),
247. சுகந்தி, கிளிநொச்சி(வயது32),
248. ரி.திவ்யா, கிளிநொச்சி(வயது9),
249. எம்.வினுஜன், கிளிநொச்சி(வயது4),
250. நிகேதினி, முல்லைத்தீவு(வயது33),
251. ராஜேந்திரன், மாங்குளம்(வயது51),
252. எம்.ஸ்ரீஸ்கந்தராஜா, யாழ்நகர்(வயது32),
253. கவிப்பிரியா, விசுவமடு(வயது7),
254. தேசமலர், கிளிநொச்சி,
255. சிவபாஸ்கரன், மல்லாவி(வயது63),
256. சரஸ்வதி, மல்லாவி(வயது60),
257. ஸ்ரீதரன், மல்லாவி(வயது26),
258. கந்தசாமி, கொக்குத்தொடுவாய்(வயது54),
259. பிரசாந்தன், முல்லைத்தீவு(வயது30),
260. அகஸ்யா, முல்லைத்தீவு(வயது2.5),
261. நிஷாந்தினி, மாத்தளன்(வயது23),
262. கதிர், கிளிநொச்சி(வயது33),
263. பி.ஏ.கிரிஷ்வாணி, கிளிநொச்சி(வயது1),
264. ஆர்.கிரிஷ்ணவாணி, கிளிநொச்சி(வயது32),
265. மேஷ்வரன், கொக்குவில்(வயது49),
266. பெயர்தரப்படவில்லை,
267. சுசிலாதேவி, கிளிநொச்சி(வயது53),
268. எஸ்.பிரேமிளாதேவி, கிளிநொச்சி(வயது20),
269. தர்ஷினி, கிளிநொச்சி(வயது2),
270. திருமுகம், கிளிநொச்சி(வயது26),
271. சுகிர்தா, கிளிநொச்சி(வயது23),
272. வி.இதயராஜன், கிளிநொச்சி(வயது56),
273. நவரூபவதி, கிளிநொச்சி(வயது55),
274. டிரோனிக்ஷன், முல்லைத்தீவு(வயது17),
275. புகழ்நிலா, மல்லாவி(வயது01),
276. நிலாஜினி, மல்லாவி(வயது31),
277. ஆனந்தரசி, முல்லைத்தீவு(வயது45),
278. ஜெகதீஸ்வரன், மன்னார்(வயது30),
279. ரானிதா, மன்னார்(வயது28),
280. கே.சசிகரன், மல்லாவி(வயது35)
281. பூதி, மல்லாவி (வயது 3),
282. சரஸ்வதி, கிளிநொச்சி (வயது 40),
283. லிதுஷன், யாழ்ப்பாணம் (வயது 3),
284. சிந்துஜா, யாழ்ப்பாணம் (வயது 23),
285, லிதுஷா, யாழ்ப்பாணம் (வயது 1),
286. பத்மாவதி, கிளிநொச்சி (வயது 68),
287. அடையாளம் தெரியாதவர்,
288. டினோன் ஜோர்ஜ், யாழ்நகர் (வயது 10),
289. வசந்தன், கிளிநொச்சி (வயது 26),
290. சௌத்ரி, புங்குடுதீவு (வயது 51),
291. கலையரசி, கிளிநொச்சி (வயது 2),
292. தர்மபாலன், கிளிநொச்சி (வயது 21),
293. வி.ஜெயந்தி, கிளிநொச்சி (வயது 21),
294. சிவரூபன், கிளிநொச்சி (வயது 3),
295. பூமாலட்சுமியம்பாள், புங்குடுதீவு (வயது 68),
296. கவிதா, கிளிநொச்சி (வயது 22),
297. தருன்சிகா, கிளிநொச்சி (வயது 2),
298. தனுஷா, கிளிநொச்சி (வயது 3 மாதம்),
299. சுரேஷ், கிளிநொச்சி (வயது 30),
300. கிருஷ்ணசாமி, முல்லைத்தீவு (வயது 56),
301. கணபதி, உருத்திரபுரம் (வயது52),
302. அமிர்தலிங்கம், நெடுங்கேணி (வயது55),
303. கோகிலதாஸ், கிளிநொச்சி (வயது 31),
304. பத்மநாதன், கிளிநொச்சி(வயது65),
305. இன்பராணி, யாழ்நகர்(வயது37),
306. ஜெமிலா, முல்லைத்தீவு(வயது28),
307. ரோஸ்மேரி, முல்லைத்தீவு(வயது64),
308, காஜா, யாழ்ப்பாணம்(வயது9),
309.கஜாலினி, யாழ்நகர்(வயது3),
310. லக்ஸிகா, பளை(வயது22),
311. கணேந்திரராஜா, முல்லைத்தீவு(வயது34),
312. திவாகர், கிளிநொச்சி(வயது7),
313. புஷ்பலதா, கிளிநொச்சி(வயது36),
314. ரஜீவன், கிளிநொச்சி(வயது01),
315. டினோஜன், கிளிநொச்சி(வயது8),
316. சஞ்சீவன், கிளிநொச்சி(வயது22),
317. திஷாந்தன், நெடுங்கேணி(வயது13),
318. சிந்துஜா, பளை(வயது24),
319. சுபாஜினி, மூதூர்(வயது23),
320. ஜதுஸிகா, மூதூர்(வயது1.5),
321. சுரேஷ், மூதூர்(வயது24),
322. யசோதா, கிளிநொச்சி(வயது21),
323. சன்மிஜா,திருவையாறு(வயது3),
324. அன்புமலர், திருவையாறு(வயது30),
325. மயில்வாகனம், மீசாலை,
326. மங்களதாஸ், வலையர்மடம்(வயது43),
327. அந்தோனிப்பிள்ளை, முல்லைத்தீவு(வயது71),
328. அன்னலட்சுமி, முரசுமோட்டை,
329. குணேஸ்திரன், முரசுமோட்டை(வயது36),
330. சருஜன், கிளிநொச்சி(வயது8),
331. அமராவதி, கிளிநொச்சி(வயது52),
332. சரவணமுத்து, நெடுங்கேணி(வயது80),
333. அடையாளம் தெரியாதவர்,
334. வள்ளிப்பிள்ளை, நெடுங்கேணி(வயது80),
335. சுஜந்தன், யாழ்நகர்(வயது23),
336. நாகம்மா, முல்லைத்தீவு(வயது60),
337. ரட்ணசிங்கம், கிளிநொச்சி(வயது59),
338. நடராஜ், யாழ்நகர்(வயது64),
339. லன்சிகா, யாழ்நகர்(வயது11),
340. சரோஜாதேவி, முல்லைத்தீவு(வயது36).
341. மதுஷா, மல்லாவி(வயது1.5),
342. ஜெயமலர்தேவி, மல்லாவி(வயது58),
343. ஜொனரோ சந், கிளிநொச்சி(வயது13),
344. எலிசபத், கிளிநொச்சி(வயது58),
345. சிவனேஸ்வரி, பாலமோட்டை(வயது47),
346. டிலாக்ஷன், துணுக்காய்(வயது14),
347. ஜெயஸ்யா, புங்குடுதீவு(வயது53),
348. சிவபாலன், புங்குடுதீவு(வயது47),
349. ஆர்.முருகையா, ஓமந்தை(வயது68),
350. பிரஜலா, மல்லாவி(வயது28),
351. பேரானந்தசிவம், பூநகரி(வயது64),
352. ரி.பவித்திரன், பூநகரி(வயது9),
353. கௌசல்யா, பூநகரி(வயது9),
354. பூவாஜி, கிளிநொச்சி(வயது70),
355. கமலாதேவி, சுதுமலை(வயது49),
356. பார்த்தீபன், புங்குடுதீவு(வயது30),
357. குகதீபா, புங்குடுதீவு(வயது25),
358. சஜீவனா, புதுக்குடியிருப்பு(வயது10),
359. கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரம்(வயது14),
360. ஜோகிஸ்வரன், தர்மபுரம்(வயது14),
361. முத்தையா, தர்மபுரம்(வயது2),
362. சஞ்சீவன், புதுக்குடியிருப்பு,
363. மரியரோஸ், உதயபுரம்(வயது64),
364. சாருஜன், புதுக்குடியிருப்பு(வயது11),
365. கமலநாதன், கிளிநொச்சி(வயது30),
366. ஏ.லூர்தம்மா, புதுக்குடியிருப்பு(வயது69),
367. திருஜன், கிளிநொச்சி(வயது9),
368. லதுமீரா, கிளிநொச்சி(வயது5),
369. ஆர்.திவாணிப்பிள்ளை, உடையார்கட்டு(வயது66),
370. சுபாஜினி, முள்ளியவளை(வயது32),
371. செல்வநாயகம், முல்லைத்தீவு(வயது53),
372. கிங்ஸ்லி, கிளிநொச்சி(வயது28),
373. ஐ.மகேந்திரராஜா, யாழ்நகர்(வயது 55),
374. ஏ.மஸ்ரலா, புதுக்குடியிருப்பு(வயது 11),
375. கிருஷ்ணன், மிருசுவில்(வயது 62),
376. கற்பகம், புதுக்குடியிருப்பு(வயது 65),
377. கோபிகா, புதுக்குடியிருப்பு(வயது 12),
378. ஜெயசுதாஸ், புதுக்குடியிருப்பு(வயது6),
379. எஸ். கிருஷ்ணன், கொடிகாமம்(வயது 62),
380. கபிலன், புதுக்குடியிருப்பு(வயது 16),
381. ராசமணி, ஒட்டுசுட்டான்(வயது 67),
382. விபிஷணா, ஒட்டுசுட்டான்(வயது01),
383. வினுஷியா, ஒட்டுசுட்டான்(வயது 03),
384. தேவரூபி, மல்லாவி(வயது10),
385. பிரகாஷ், முள்ளியவளை(வயது18),
386. மங்களேஸ்வரன், உடையார்கட்டு(வயது12),
387. யோகன், உடையார்கட்டு(வயது11),
388. இளையம்மா, உடையார்கட்டு(வயது46),
389. பிரசாத், கிளிநொச்சி(வயது13),
390. நவமணி, கிளிநொச்சி(வயது17),
391. சசிரேகா, கிளிநொச்சி(வயது10),
392. புஷ்பதேவி, கிளிநொச்சி(வயது 47),
393. சிவநாயகி, ஒட்டுசுட்டான்(வயது36),
394. கனகசபை, முள்ளியவளை(வயது69),
395. சீதாப்பிள்ளை, முள்ளியவளை(வயது62),
396. பித்னுஷன், முள்ளியவளை(வயது02),
397. கலாநிதி, கிளிநொச்சி(வயது27),
398. துரைராஜ், பூநகரி(வயது56),
399. தர்மகுலசிங்கம், உடையார்கட்டு(வயது55),
400. பாக்கியநாதன், கிளிநொச்சி(வயது64),
401. அந்தோனிப்பிள்ளை, கிளிநொச்சி(வயது75),
402. எம்.மாலினி, கிளிநொச்சி(வயது55),
403. ஏ.பராசக்தி, முல்லைத்தீவு(வயது33),
404. வி.மாடசாமி, உடையார்கட்டு(வயது48),
405. எம்.சிவகுமார், ஓமந்தை, ‘
406. ரி.சியாந்தன், பாலமோடை(வயது16),
407. லோகேஸ்வரி, பூநகரி(வயது37),
408. பௌசிகன், நெடுங்கேணி(வயது10),
409, ராசேந்திரன், நடுகனி(வயது45),
410. கிரித்ரஞ்சன், பரந்தன்(வயது50),
411. முருகேசு, நெடுந்தீவு(வயது74),
412. மேரி அட்ஸ்ரினா, முல்லைத்தீவு(வயது10),
413. அவசரசிகிச்சைப்பிரிவில் பெயர் தரப்படவில்லை,
414. ஜெயதிஸ்வரம், பரந்தன்(வயது13),
415. பி.மார்க்கண்டு, பரந்தன்(வயது57),
416. அந்தோனிப்பிள்ளை, புதுக்குடியிருப்பு(வயது73),
417. லட்சத்தீபன், யாழ்நகர்(வயது13),
418. ஆறுமுகம், கிளிநொச்சி(வயது59),
419. கலாநிதி, கிளிநொச்சி(வயது18),
420. பெயர்தரப்படவில்லை,
421. துவாரகன், முல்லைத்தீவு(வயது11),
422. எஸ்.கோபாலராசா, முல்லைத்தீவு(வயது41),
423. எம்.மார்கரட், கிளிநொச்சி(வயது63),
424. எஸ்.இளைதீபன், கிளிநொச்சி(வயது10),
425. தர்சன், கிளிநொச்சி(வயது13),
426. மனுவேல்பிள்ளை, புதுக்குடியிருப்பு(வயது62),
427. கே.தயாளினி, முறிகண்டி(வயது30),
428. இறப்பு,
429. கே.கௌதம், முறிகண்டி(வயது01),
430. தேவவதனி, நல்லூர்(வயது26),
431. ஆனந்தராஜ், நல்லூர்(வயது31),
432. டனுஷன், நல்லூர்(வயது2.5),
433. தியாகராஜா, புதுக்குடியிருப்பு(வயது23),
434. பாலம்மா, புதுக்குடியிருப்பு(வயது70),
435. மாணிக்கம், கிளிநொச்சி(வயது67),
436. விஜேலதா, பொக்கணை(வயது36),
437. பரூபன், பொக்கணை(வயது02),
438. சிவபாதம், ஓமந்தை(வயது62),
439. சகாயமலர், பொக்கணை(வயது50),
440. வினோதன், பரந்தன்(வயது24),
இறந்தவர்களில் ஒருவர் கிறிஸ்டி, முள்ளியவளை(வயது27).
மற்றவர் அடையாளம் காணப்படவில்லை.

“முஸ்லீம்களின் தலையை வெட்டுவேன்”‘: வருண் காந்தி

varun-gandhi.jpg‘இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலையை வெட்ட வேண்டும்”  என மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி பிலிபித் தொகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசிய பேச்சால் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் எனத் தெரிகிறது.

இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலையை வெட்ட வேண்டும் என்று அவர் பேசியதால் தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. வருண் காந்தி பேச்சால் பாஜகவுக்கு பெரும் தலைவலியாகியுள்ளது என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

மேனகா காந்தியின் மகனான வருண் காந்தி, பாஜக சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

தனது மகனுக்காக தான் வழக்கமாக போட்டியிட்டு வெல்லும் பிலிபித்தை விட்டுக் கொடுத்துள்ளார் மேனகா காந்தி.

இந்த நிலையில் பிலிபித் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வருண் காந்தி அங்கு பேசுகையில்,  இது கை (காங்கிரஸ் சின்னத்தைக் குறிப்பிட்டு) அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலைகளை வெட்டி எறியும் ஜெயம் ஸ்ரீராம் என்று பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில், இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்.

ஒரு இந்துவுக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால், அவரது கையை இந்த வருண் காந்தி வெட்டுவான். வருண் காந்தி ஒரு புயலைப் போல. அடுத்த சஞ்சய் காந்திதான் இந்த வருண் காந்தி என்றார் வருண் காந்தி.

வருண் காந்தி புயலோ என்னவோ அவரது பேச்சு பெரும் புயலைக் கிளப்பி விட்டு விட்டது.

முஸ்லீம்கள் குறித்து அவர் பேசியது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் பேசியிருப்பது உண்மையாக இருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிபித் தொகுதியில் மேனகா காந்தி ஐந்து முறை எம்.பியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரணைப்பாலையை முழுமையாக விடுவிக்கும் நடவடிக்கையில் படையினர்

udaya_nanayakkara_brigediars.jpgபுதுக் குடியிருப்பு இரணைப்பாலை பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளின் புலனாய்வுத் துறை தலைவரின் முக்கிய தளம் அமைந்துள்ள இரணைப்பாலை முழுவதையும் விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

படை நடவடிக்கைகள் மூலம் புலிகளை முற்றாக 30 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்திற்குள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் படையினர் கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள 30 சதுர கிலோ மீற்றர் பரப்பை முற்றாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையில் இராணுவத்தின் மூன்று படைப் பிரிவுகளும், ஒரு அதிரடிப் படைப் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பையும், அதனை அண்டிய பிரதேசங்களையும் கடுமையான மோதல்களுக்குப் பின்னர் கைப்பற்றிய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு ள்ளதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். புலிகள் தங்களிடம் எஞ்சியுள்ள பிரதே சங்களை படையினரின் தாக்குதல்களி லிருந்து பாதுகாக்கும் பொருட்டு ஐந்து பாரிய பாதுகாப்பு மண் அரண்களை அமைத்திருந்தனர்.

அவற்றில் மூன்று மண் அரண்களை பாதுகாப்புப் படையினர் கனரக ஆயுதங் களை பயன்படுத்தி முற்றாக தாக்கியழித் துள்ளதாக வன்னிகள முனையில் ஈடுபட்டுள்ள இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இரணைப்பாலை பிரதேசத்தில் புலிகளின் புலனாய்வுத் துறை தலைவர் பொட்டு அம்மானின் முக்கிய தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புலிகள் தற்பொழுது அந்தப் பிரதேசத்தி லிருந்துகொண்டே படையினருக்கு எதி ரான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு திட்ட மிட்டு வருவதாக இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார். புலிகளின் தலைவர் பிரபாகரனும் தொடர்ச்சியாக இந்த பிரதேசத்திலிருந்து கட்டளை பிறப்பித்துள்ளமை தெரிய வந்துள்ளதாக இராணுவ புலனாய்வு துறை யினர் உறுதி செய்துள்ளனர்.

இராணுவத்தின் 53வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா ஆகியோர் தலைமை யிலான இரு படைப் பிரிவுகளும், இராணுவத்தின் 8வது அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான படையினரும் புதுக்குடி யிருப்பின் கிழக்கு பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இதேவேளை, சாலை தென்பகுதியின் ஊடாக இராணுவத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படை யினரும் முன்னேறி வருகின்றனர்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்ட வண்ணம் இராணுவத்தின் சகல படைப் பிரிவுகளும் கடுமையான மோதல் களுக்கு மத்தியில் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்தில் 2299 கட்சிக் காரியாலயங்கள் அமைக்க அனுமதி

sri-lanka-elections.jpgமேல் மாகாணத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் 2299 கட்சிக் காரியாலயங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று தெரிவித்தது.

அரச நிறுவனங்கள் மற்றும் அரசாங்க விடுதிகள் என்பவற்றில் கட்சிக் காரியாலயங்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் காரியாலயங்களை அகற்ற பொலிஸாருக்கு பணித்துள்ளதாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

மேல் மாகாண சபைத் தேர்தலையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கொழும்பு மாவட்டத்தில் 834 கட்சிக் காரியாலயங்களும் கம்பஹா மாவட்டத்தில் 942 காரியாலயங்களும் களுத்துறை மாவட்டத்தில் 523 காரியாலயங்களும் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவற்றை ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு மூடிவிட வேண்டும் எனவும் பிரதான கட்சிக் காரியாலயங்களை 25ஆம் திகதி மூடிவிட வேண்டும் எனவும் சுமணசிறி தெரிவித்தார்.

இதேவேளை வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப் பட்ட பிரதேசங்களுக்கு 500 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சகல கட்சி அலுவலகங்களையும் மூடிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மீட்சி 2010ல் தான்

us-flag.jpg‘இன்னும் ஒரிரு ஆண்டுகளுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் இதே தடுமாற்றத்துடன்தான் இருக்கும். வருகிற 2010 முதல் மீட்சி நிலை ஆரம்பமாகும்’ என அமெரிக்க நிதித் துறைத் தலைவர் பென் பெர்னான்க் கூறியுள்ளார். அமெரிக்க டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கிட்டத்தட்ட உடைந்து போயுள்ளது அமெரிக்கப் பொருளாதாரம். மூன்றாண்டுகள் வரை இந்த நிலை நீடிக்கும். இதைத் தூக்கி நிறுத்த பெரிய மனோவலிமை கொண்ட, எப்படிப்பட்ட இடர்பாட்டையும் சமாளிக்கக் கூடிய அரசியல் தலைமை அவசியம். ஒருவிதத்தில் நம்மை நாமே சுயமாக சரிசெய்து கொள்ள இப்போதைய வீழ்ச்சி உதவியிருப்பதாகவே நம்புகிறேன்.

ஆனால் எல்லோரும் சொல்வதுபோல இந்த ஆண்டே பொருளாதார வீழ்ச்சி சரியாகிவிடாது. இந்த ஆண்டுதான் உச்சத்திலிருக்கும். அடுத்த ஆண்டு முதல் மீட்சி நிலை தொடங்கலாம்.

முன்பு போல மீண்டும் முழு வேலை நிலை என்ற சூழலுக்கு நாடு திரும்புவதும் கஷ்டம்தான். ஆனால் வலுவான ஒரு பொருளாதாரத்தைக் கட்டியமைக்க இந்த வீழ்ச்சி உதவும். கிடைக்கும் வேலையைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் கீழை நாட்டு மனோபாவம் அமெரிக்கர்களுக்கும் வரும். அதற்கு இந்த வீழ்ச்சியும் மீட்சியும் காரணமாக அமையும்.

இந்த சூழலில் என் கவலையெல்லாம், வங்கி அமைப்பு மீது அமெரிக்க மக்களும் அரசியல் தலைவர்களும் நம்பிக்கை இழந்து போயிருப்பதுதான். வங்கித் துறை விரைவில் சீரடைவதுதான், நாட்டின் பொருளாதார மீட்சியைத் துரிதப்படுத்தும், என்றார் பெர்னான்க்.