கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இடைநிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் !

கொவிட் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகளை எதிர்வரும் செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடாத்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக 31 போட்டிகள் மீதமுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குசல் ஜனித் பெரேராவின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி !

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்றைய தினம் இடம்பெற்றது. ஏற்கனவே தொடரரை இழந்திருந்த இலங்கை அணி ஆறுதல் வெற்றிக்காக  இன்றைய போட்டியில் களமிறங்கியது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் இலங்கை அணி சார்பில் அணியின் தலைவர் குசல் ஜனித் பெரேரா தமது 6 சதத்தை பூர்த்தி செய்து 120 ஓட்டங்களையும் டீ சில்வா 55 ஓட்ங்களையும் அதிகமாக பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் பங்களாதேஸ் அணியின் தஸ்கின் அஹ்மட் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

287 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதன்படி 97 ஓட்டங்களால் இலங்கை வெற்றி பெற்றது.அந்த அணி சார்பில் அதிகமாக மஹ்மதுல்லா 53 ஓட்டங்களையும் ,  ஹூசைன் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை சார்பில் துஷ்மந்தசமீர 05 இலக்குகளை கைப்பற்றி போட்டியின் வெற்றிக்கு வித்திட்டார். போட்டியின் ஆட்டநாயகனாகவும் துஷ்மந்தசமீர தெரிவானார். தொடர்நாயகனாக ரஹீம் தெரிவானார்.

ஏற்கனவே, இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்று தொடரை பங்களாதேஷ் அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி – வீணானது வனிந்து ஹசரங்கவின் முயற்சி !

இலங்கை அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்ப்பில் முஸ்பிகூர் ரஹீம் 84 ஓட்டங்களையும், மஹ்மதுல்ல 54 ஓட்டங்களையும் அணியின் தலைவர் தமீம் இக்பால் 52 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் தனஞ்சய த சில்வா 3 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களைப் மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணியில் வனிந்து ஹசரங்க மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 60 பந்துகளில் 5 சிக்சர், 3 பவுண்டரியுடன்  74 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொண்டார்.

பந்து வீச்சில் மொஹமட் ஹசன் 4 இலக்குகளையும், மொஹமட் ரஹ்மான் 3 இலக்குகளையும் வீழ்த்தினர்.

அதன்படி, முதலாவது ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

“தயவு செய்து பயப்படுங்கள். மிகவும் பயப்படுங்கள். இதனால் மட்டுமே நாம் எதிர்த்து போரிட முடியும்.” – கொரோனா விதிமுறைகளை மீறி குவிந்த மக்களை கண்டித்து அஷ்வின் ட்வீட் !

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் அஷ்வின். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னையில் நடைபெற்ற போட்டிக்குப் பின், அணியில் இருந்து விலகினார். அவரது வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளவதற்கான விலகினார்.
300 பேருக்கு ரெம்டெசிவிர் மருந்து: சென்னையில் மக்கள் சாலை மறியல்| Dinamalar
நேற்று ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்குவதற்கான சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, ஒன்றாக கூடி ஒருவருக்கொரும் இடித்துக் கொண்டு நின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறத்தியுள்ளார்.
முன்னாள் சவுராஷ்டிரா வேகப்பந்து வீச்சார்கள் மற்றும் பிசிசிஐ நடுவரான ராஜேந்திரசின் ஜடேஜா கொரோனா தொற்றால் உயிரழந்தார். மேலும், தமிழகத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை அஷ்வின் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கை இல்லாதது குறித்து டுவிட் செய்திருந்தார்.
இந்த நிலையில் மக்கள் முண்டியடித்த படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அஷ்வின் ‘‘பயமாக இருக்கிறது. பயங்கரமான விஷயங்களை பரப்ப வேண்டாம் என அனைவரும் சொல்கிறார்கள். தயவு செய்து பயப்படுங்கள். மிகவும் பயப்படுங்கள். இதனால் மட்டுமே நாம் இந்த தொற்றை எதிர்த்து போரிட முடியும். இந்த வைரஸை போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்வது அவசியம்.
உங்களுடைய பயத்தை நான் புரிந்து கொள்கிறேன். என்னுடைய குடும்பத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, நான் அருகில் இருந்து கவனித்துள்ளேன். உங்களுக்கும், எனக்கும் சூழ்நிலை பற்றி நன்றாக தெரிந்துள்ளது. அனைத்து முன்நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஆனால், ஏராளமானோர் இந்த கொடிய நோயின் ஆபத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க !

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இலங்கை அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளதாக தேர்வுக்குழுத் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

20க்கு 20 உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்ற நிலையில் இலங்கையின் யோர்க்கர் நாயகன் லசித் மாலிங்கவை மீண்டும் அணிக்குள் இணைத்துக்கொள்ள இலங்கை அணியின் தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து லசித் மாலிங்க ஓய்வு பெற்றார். எனினும், ரி 20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த அவர் இறுதியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ரி 20 போட்டியில் விளையாடினார். அதன்பிறகு எந்தவொரு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த நிலையில், இவ்வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி 20 உலகக் கிண்ணப் போட்டிக்கான அணித் தேர்வில் லசித் மாலிங்க இருப்பதாக தேர்வுக் குழுவின் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மோர்னிங் ஸ்போட்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கருத்து வெளியிடுகையில்,

மாலிங்கவை இவ்வருடம் நடைபெறவுள்ள ரி 20 உலகக் கிண்ணத்தில் விளையாட வைக்க எதிர்பார்த்துள்ளோம். அவர் எமது அணித் தேர்வில் உள்ளார். இதற்காக அவரிடம் கூடிய விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இந்திய அணி அறிவிப்பு !

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளன. இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லோர்ட்ஸ் மைதாத்தில் ஜூன் 18-ம் திகதி முதல் ஜூன் 22-ம் திகதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐ.சி.சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான டெஸ்ட் அணியில், விராட் கோலி (தலைவர்), ரஹானே, ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, மயங்க் அகர்வால், விஹாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, அக்சர் படேல், வாசிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சமி, சிராஜ், சர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.
பேக் அப் வீரர்களாக கே எல் ராகுல், சகா இடம் பெற்றுள்ளனர். காத்திருப்பு வீரர்களாக (Standby players) அபிமன்யு ஈஸ்வரன், பிரசீத் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்சான் நாக்வஸ்வல்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனா தீவிர பரவலால் வீரர்கள் பலர் பாதிப்பு – ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கால வரையறையின்றி காலவரையின்றி ஒத்திவைப்பு !

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத இருந்தது.

இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், ஐதராபாத் அணி விர்த்திமான் சஹா, டெல்லி அணியின் அமித் மிஷ்ராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

14 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் - போட்டி அட்டவணை வெளியீடு | Kuruvi

சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் ஒரு உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதையடுத்து நடப்பு ஐ.பி.எல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

மே 30ந்தேதி வரை போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சகலதுறை வீரர் திசாரா பெரேரா!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும் , சகலதுறை வீரரருமான திசாரா பெரேரா (32 வயது) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு வழி விடவும், அதிக திறமை கொண்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திடவும், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெரேரா உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆறு பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து சாதனைப் படைத்தவர். 11 வருடம் கிரிக்கெட் வாழ்க்கையில் 166 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2338 ஓட்டங்களும், 175 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். 84 டி20 போட்டிகளில் 1204 ரன்களும், 51 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். ஆறு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மே தினம் – உழைக்கும் கரங்களின் தியாகத்தை நினைவு கூறும் நாள் !

மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிபடுத்திய தினம். உலகத் தொழிலாளர்களின் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, முதலாளிகளை ஒழித்துக்கட்டி தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தால்தான் அனைத்துவிதமான துன்பங்களும் தீரும் என்றும், முதலாளிகள் உலக வரலாறின் வளர்ச்சிப் போக்கையே தடுத்து வருகின்றனர் என்றும், இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வல்லமை தொழிலாளர்களிடம் மட்டும்தான் உள்ளது என்றும் கூறி இதையெல்லாம் செய்வதற்கு, “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்றும் கூறினார் ஒப்பற்ற பொதுவுடைமைக் கொள்கையை உலகுக்குத் தந்த ஆசான் கார்ல் மார்க்ஸ்.

 

மே தினம்: உழைப்பாளர்களின் சிறப்பைப் பற்றி சனைச்சர பகவான் கூறும் ஜோதிட  ரகசியங்கள்!- Dinamani

கார்ள்ல்மார்க்ஸ் யுகம முடிந்து  42 ஆண்டுகள் முடிவதற்குள் , உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் இந்த வெற்றி நிலைநாட்டப்பட்டது. தொழிலாளர்களின் உழைப்பினால்தான் உலகமே இயங்குகிறது. தொழிலாளர்களின் உழைப்பு இன்றி எந்தப் பொருளும் உருவாவதில்லை என்பதை உணர்ந்தனர். தாம், விலங்குகளைவிட கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும், உழைப்பின் பலன்களை எல்லாம் அனுபவிக்கும் முதலாளிகள், தொழிலாளர்களை வறுமையிலும் துன்பத்திலும் இருக்கும்படி செய்கின்றனர் என்பதை உணர்ந்து ஒன்றுபட்டு உரிமைக்காககப் போராடினர்.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் கைத்தொழில் துறை அசுர வேகமடைய ஆரமப்ித்த காலம் அது. தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. நாடுகளை தேடிய பயணம் சந்தைகளை தேடிய பயணமாக மாறியிருந்த காலம் அது. ஒரு பக்கமாக பொருள் விற்கும் சந்தைகளாக மாற்றப்பட்ட நாட்டு மக்கள் அடிமைப்பட்டு போக அதற்கான பொருட்களை உற்பத்தி செய்த மேலை நாட்டு தொழிற்சாலைகளின் தொழிலாளர்களும் அடிமைப்பட்டு போயினர். பல நாடுகளுக்கான உற்பத்தி செய்ய வேண்டி அவர்கள் மிருகங்கள் போல நடத்தப்பட்டனர். இந்நிலையிலேயே தொழிலாளர் எண்ணிக்கை கடுகதியில் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. தொழிலாளர் உரிமைகள் பேணப்பட வேண்டும் என்ற கோஷமும் வலுப்பெற ஆரம்பித்திருந்த காலம் இதுவாகும்..!

இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists) ஆகும். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கையாகும். பிரான்சில் தொழிலாளர் இயக்கம் 1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. இவ்வாறாக ஆரம்ப கால தொழிலாளர் உரிமை சார் போராட்டங்கள் யாவுமே முதலாளிவர்க்கத்தினால் அடக்கப்பட்டது. எனினும் அடக்குமுறைக்குள்ளாகவும் கோராட்டம் வெடித்தது.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம் தொழிலாளர் போராட்டத்தின் முக்கியமான மைல்கல் ஆகும். ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது. இதனை முன்மாதிரியாக கொண்டு உலகின் அனைத்து நாடுகளிலும் தொழிலாளர் போராட்டங்கள் வேலை நேரக்குறைப்பை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

தீராத பக்கங்கள்: ருஷ்யபுரட்சிக்கு நாம் காட்டும் நன்றி : எழுத்தாளர்  எஸ்.ராமகிருஷ்ணன்

தொழிலாளர் புரட்சிகளின் மகுடம் எனப்படும் ரஷ்யாவின் ஒக்டோபர்புரட்சி தொழிலாளர் உரிமைகளினை அரண் செய்த மிகப்பெரும் புரட்சி எனலாம். காலாதிகாலமாக ரஷ்யாவை ஆண்டு வந்த  சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 – 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் – அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கார்ள்மார்க்ஷின் வாதங்களை பின்பற்றி மிகச்சிறப்பாக தன்னை கட்டமைத்துக்கொண்ட புரட்சிதான் இந்த ரஷ்யப்புரட்சி.

ரஷ்யப்புரட்சியின் போது தொழிலாளர்கள் லெனின், ட்ரொஸ்கி ஆகிய கொமினியுச தலைவர்களால் இணைக்கப்பட்டு ஆயுதமேந்தி போராடி தங்களுடைய உரிமைகளை பெற்றுக்கொண்டனர். புரட்சி முடிவில் தொழிலாளர்களை மையப்படுத்திய சோவியத்ரஷ்யா உருவாக்கப்பட்டது. முதலாளிகளின் சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டது. முதலாளிகளிடம் இருந்து தொளிலாளர்களை பாதுகாக்கும் பொறுப்பை கொமினியுசம் என்ற போராட்டத்தின் பெயரில் ஆரம்பித்த பெருமை ரஷ்ய புரட்சியையே சாரும். மேலும் கொமினியுசம் கைத்தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கானது மட்டுமல்ல. விவசாயிகள்  உள்ளிட்ட எல்லா உழைக்கும் வர்க்கத்தினரும் தொழிலாளர்கள் தான் எனக்கூறிய புரட்சியும் இதுவே. இன்று வரை தொழிலாளர் உரிமைகளை மையப்படுத்திய கொமினியுச நாடுகளுக்கான தலைமைத்துவத்தை ரஷ்யா வகிப்பதற்கான பின்னணியை இந்தப்புரட்சியே வழங்கியது.

அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கம் வளர்சியடைந்த தன்மையானது பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு சிவனை கழுத்தையே அழுத்தியது போன்றதாகும். சுதந்திரமடைந்ததை தொடர்ந்து கைத்தொழில்துறை தொடர்பாக அதீத கவனம் செலுத்திய அமெரிக்கா முதலாளித்துவ கொள்கைகளை பின்பற்றும் நாடாக மாறியது.  மிக வேகமாக முன்னேற்றமடந்த அமெரிக்கா ஒரு கட்டத்துடன் முதலாளிகளுக்கான அரசாக மாறியது. தொழிலாளர்கள் அடக்கப்பட்டனர். அடக்குமுறைக்குள்ளாகினர். கறுப்பினத்தவர்கள் தொடர்பான அடக்குமுறைகள் தொழிலாளர் உரிமை மறுப்பு மூலமாக முன்னெடுக்கப்பட்டது.

மார்க்ஸ் 1867-ல் வெளியான மூலதனம் புத்தகத்தில் கறுப்பு மற்றும் வெள்ளை தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையைப் பற்றிய அந்த புகழ்பெற்ற பத்தியில் பின்வருமாறு எழுதுகிறார். “அமெரிக்க ஐக்கிய குடியரசின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்த விதமான சுயேச்சையான தொழிலாளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருந்தது. தொழிலாளர்களில் ஒரு பகுதி கறுப்பு இனத்தவர் என்று முத்திரையிடப்பட்டிருக்கும் வரையில் வெள்ளைத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே விடுதலை தேடிக் கொள்ள முடியாது.” எனக் குறிப்பிடுகின்றார்.

1886ஆம் ஆண்டு அமெரிக்க தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இந்த வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. ரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்ட இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிக்க வழிவகுத்தது. இவ்வாறாக நாம் கொண்டாடும் தொழிளார் தினம் பிறந்தது.

இந்த மேதினத்தின் நோக்கம் இன்றைய நாளில் முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டதாகவும் ஒரு நாள் விடுமுறை நாளாகவும் மட்டுமே மாற்றம் கண்டுள்ளமை வருத்தத்துக்குரியது. இந்த நாள் மனத்தினின்று நினைவு கொள்ளப்பட வேண்டியுது. பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் தியாகத்தின் மேல் நின்று தான் இந்த தினத்தையும் தொழிலாளர்கள் இந்த சலுகைகளையும் அனுபவிக்கின்றனர்  என்பதையும் மறந்து விடக்கூடாது.

இன்று வரை உலகின் ஏதோவொரு பகுதியில் தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளுக்காக போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஏதோவொரு வகையில் அந்த போராட்டங்களும் முதலாளித்துவத்தினால் அடக்கப்படும் போக்கு  தொடர்கிறது. அதற்காக எல்லாம் உழைக்கும் கரங்கள் அடங்கிப்போக கூடாது – அடக்கு முறைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்பதை நினைவுபடுத்தவே இந்த மேதினம் நினைவு கொள்ப்படுகின்றது. ஏற்றத்தாழ்வுகள் எவையும் அற்ற சமவுலகு ஒன்று தோன்றும் வரை தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

Celebrate the 125th Anniversary of Labor Day – A Brief Look at its History

உதிரத்தை உழைப்பாக்கி – உலகத்தை உயர்த்திடும் – உண்மை உழைப்பாளிகளுக்கு தேசத்தின் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

 

“16 கோடிக்கு தகுதியானவர் இல்லை கிறிஸ்மோரிஸ்.” – கெவின் பீட்டர்சன்

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போனவர் கிறிஸ்மோரிஸ். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆல்ரவுண்டரான அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.25(இந்திய ரூபாய்)  கோடிக்கு ஏலம் எடுத்தது.

எந்தவொரு வெளிநாட்டு வீரரும் இவ்வளவு அதிகமான தொகைக்கு ஏலம் போனது கிடையாது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ஆட்டத்தில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றிபெற்றது.

இந்த வெற்றிக்கு கிறிஸ் மோரிஸ் முக்கிய காரணமாக இருந்தார். அவரது அதிரடியான ஆட்டத்தால் வெற்றி கிடைத்தது. மற்ற ஆட்டங்களில் அவர் திறமையை வெளிப்படுத்தவில்லை. இதேபோல பந்து வீச்சிலும் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் கிறிஸ் மோரிஸ் ரூ.16 கோடிக்கு தகுதியானவர் இல்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் கிறிஸ் மோரிசுக்கு வழங்கிய ரூ.16 கோடி அதிகம் என நினைக்கிறேன். அந்த தொகைக்கு அவர் தகுதியான வீரர் இல்லை. தனக்கு அதிகமான விலை கொடுக்கப்பட்டதன் அழுத்ததை மோரிஸ் தற்போது உணர்ந்து வருகிறார். அடுத்த சில போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் கூட, கிறிஸ் மோரிஸ் நிலையான ஆட்டத்தை அதாவது பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் அளிக்க மாட்டார்.

நாம் அவரைப் பற்றி அதிகமாக பேசுகிறோம் என நினைக்கிறேன். 2 போட்டிகளில் ரன் அடிப்பார். சில போட்டிகளில் காணாமல் போய் விடுவார். இவ்வாறு பீட்டர்சன் கூறியுள்ளார்.

34 வயதான கிறிஸ் மோரிஸ் 4 ஆட்டத்தில் 48 ரன்களே எடுத்துள்ளார். 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.