கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஆயிரக் கணக்கான பொதுமக்கள் மீட்பு!

pokkanai.jpgபுலிகளிடம் சிக்கியிருந்த ஆயிரக் கணக்கான பொது மக்கள் இன்று காலை படைப் பிரிவினரால் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. அரச கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொது மக்களை மீட்கும் பணிகளை படையினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

புதுமாத்தளன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மண் மேட்டை தகர்த்து பொதுமக்களுக்கு தப்பி வருவதற்கு படையினர் வழி வகுத்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்ட பிரதேசங்களை நோக்கி வந்துகொண்டிருப்பதாக அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது. 

வெள்ளமுள்ள வாய்க்கால் நோக்கி படையினர் நகர்வு

பரந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியில் அமைந்துள்ள வெள்ளமுள்ள வாய்க்கால் பாலத்தை பாதுகாப்புப் படையினர் அண்மித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். வெள்ளமுள்ள வாய்க்கால் பாலத்திற்கு 700 தொடக்கம் 800 மீற்றர் தொலைவில் இராணுவத்தின் 53வது மற்றும் 58வது படைப் பிரிவினர் நிலை கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்திற்கான ஒரு பிரதான பாதையை அமைத்து புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதே படையினரின் நோக்கம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

4 இலட்சத்து 90 ஆயிரம் துப்பாக்கி ரவைகள், அதிகளவான ஆயுதங்கள் புதுமாத்தளனில் மீட்பு

udaya_nanayakkara_brigediars.jpg
முல்லைத்தீவு, புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து 4 இலட்சத்து 90 ஆயிரம் துப்பாக்கி ரவைகள் உட்பட அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் பாரிய தேடுதல்களை மேற்கொண்டுவரும் படையினர் ஒரே இடத்திலிருந்து 4 இலட்சத்திற்கு மேற்பட்ட ரவைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளமை இதுவே முதற்தடவையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, முதலியார் கட்டுக்குளம் பிரதேசத்திலிருந்து எட்டு இலகு ரக விமானக் குண்டுகள் உட்பட 650 ரி-56 ரக துப்பாக்கி ரவைகளையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு, அம்பகாமம், ஒலுமடு மற்றும் முதலியார் குளம் பிரதேசங்களில் படையினர் தொடர்ந்தும் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினர் புதுமாத்தளன் பிரதேசத்தில் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின்போது 130 மி.மீ. ரக கனரக பீரங்கி ரவுண்ட்கள் 10, எஸ்.ஏ-14 ரக ஏவுகணைகள் 2, 12.7 ரக பீரங்கிக் குழல்கள் 2, தற்கொலை அங்கிகள் 3, ரி-56 ரக துப்பாக்கிகள் 3, அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள் 2, அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் பொருத்தப்பட்ட 60 மி.மீ. ரக குண்டுகள் 14, 60 மி.மீ. ரக புகைக் குண்டுகள் 7, பாவிக் கப்பட்ட ஏவுகணையின் வெற்றுக் கூடு 1, கைக்குண்டுகள் 14, ஆர்.பி.ஜி குண்டுகள் 23, ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் 250, 5.56 ரக துப்பாக்கி ரவைகள் 4 இலட்சத்து 90 ஆயிரம் (490,000), இயந்திரத் துப்பாக்கிகள் 2, அமுக்கவெடி 1, சார்ஜ் பேக்ஸ் 11, இயந்திரத் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் 500, தொலைத் தொடர்பு கருவிகள் 3, பவுச்சர்ஸ் 3 என்பவற்றை ஒரே இடத்திலிருந்து மீட்டெடுத்துள்ளனர். இதேவேளை இராணுவத்தின் மூன்றாம் படையணியினர் முதலியார் குளத்தில் வைத்து எட்டு இலகுரக விமானக் குண்டுகள் மற்றும் 650 ரி-56 ரக அம்யூனிசன்களையும் மீட்டுள்ளனர்.

இதேவேளை, படையணியினர் அம்பலகாமம் பகுதியில் நடத்திய தேடுதல்களின்போது இரண்டு ரி-56 தோட்டாக்கள், ஒரு 81 மில்லிமீற்றர் குண்டு, 37 ரி-56 ரவைகள், ஹெல்மட் 3 ஆகியவற்றையும் மீட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட பிரிட்டன் வலியுறுத்தல்

front.jpgஇலங்கையின் வடக்கில் ஏற்பட்டுவரும் உக்கிர மோதல்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள பிரித்தானிய அரசு, அங்கே சிவிலியன்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த உடனடி யுத்தநிறுத்தமொன்று ஏற்படவேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.

இலங்கையில் போர் நிறுத்தம் வர வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு சேர்ந்து அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளும் கோரிவருகின்றன என்றும் ஐ.நா.மன்றமும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சரால் சனிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தப் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்களை விடுவிக்கும் நோக்கில் இலங்கை அரசுடனும் விடுதலைப் புலிகளுடனும் உடன்பாடொன்றை எட்டும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தற்போது ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிடும் அந்த அறிக்கை, இது தொடர்பில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா. தலைமை செயலரின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார், தனது பயணம் குறித்த அறிக்கை ஒன்றை ஐ.நா.மன்றப் பாதுகாப்பு சபையில் விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இலங்கை குறித்து விவாதிக்க டேஸ் பிரவுண் அமெரிக்கா செல்கிறார்

இலங்கை தொடர்பில் ஐ.நா.மன்றத்தில் விவாதிக்க பிரிட்டிஷ் பிரதமரின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி டேஸ் பிரவுண் நியூயார்க் செல்வதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.  இலங்கையில் சமாதானம் ஏற்பட தன்னாலான சகல முயற்சிகளையும் பிரிட்டன் மேற்கொள்ளும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்தில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

mullaitheevu.jpgமுல்லைத் தீவில் பாதுகாப்பு வலயப் பகுதியில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரச அதிபர் பா.பார்த்தீபன் தெரிவித்துள்ளதுடன்  நாளை கப்பல் மூலம் அனுப்பப்படவுள்ள உணவு மூலம் நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார். முல்லைத்தீவு அரச கட்டுப்பாடற்ற பாதுகாப்பு வலயத்தினுள் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதனால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

இங்கு சீனி ஒரு கிலோ 2,500 ரூபாவாகவும் தேங்காய் ரூபா 1,400 க்கும் விற்கப்படுகின்றது. இதேவேளை ஒரு கிலோ செத்தல் மிளகாய் 12,000 ரூபாவாக விற்கப்படுகின்றது.

குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி ஒரு கிலோ 400 ரூபாவுக்கு விற்கப்படும் அதேநேரம் குழந்தைகளுக்கான பால்மா 2,200 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. நாளை செவ்வாய்க்கிழமை இங்கு உணவு அனுப்புவதற்காக திருகோணமலையில் கப்பலில் உணவு ஏற்றப்படுகின்றது. இம்முறை 1,000 முதல் 1,100 மெற்றிக் தொன் உணவுப் பொருள் அனுப்பப்படுமென தெரியவருகின்றது.

இதன் மூலம் இங்குள்ள உணவுத் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்கலாம். மண்ணெண்ணை இங்கு இல்லை. இங்குள்ள மக்கள் மலசலகூடம், நீர் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, வெள்ளிக்கிழமை கிறீன் ஓசன் கப்பல் மூலம் 466 பேர் மேலதிக சிகிச்சைக்காக புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்ட நிலையில் சனிக்கிழமையும் சுமார் 500 பேர் மேலதிக சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

பிரபாகரனிடம் ஒரு மணி நேரமாவது போர் நிறுத்தம் செய்யுமாறு கோர முடியுமா? எமது நாட்டை வேறு தேசங்களுக்கு அடிமைப் படுத்த ஒருபோதும் முடியாது – ஜனாதிபதி

mahinda.jpgபுத்தாண்டினை முன்னிட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 48 மணித்தியால தற்காலிக போர்நிறுத்தத்தினை நீடிக்குமாறு வெளிநாட்டு பிரதிநிதிகள் என்னிடம் கேட்டுக்கொள்கின்றனரே தவிர ஒரு மணித்தியாலத்திற்கு போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறு பிரபாகரனிடம் கோரிக்கை விடுப்பதில்லை, பிரபாகரனை ஒரு மணித்தியாலத்திற்கேனும் போர்நிறுத்தம் செய்யுமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்த முடியுமா? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.

சர்வதேச யுத்த கொள்கைகளை நாம் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டி எங்களை சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் மின்சார நாற்காலியில் அமரவைப்பதற்கு முயற்சிகளை சிலர் மேற்கொண்டுவருக்கின்றனர் எனினும் தாய் நாட்டிற்காக நான் கழுத்தையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் சொன்னார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற ஒன்றுக்கூடலில் ஆயுர்வேத நிபுணர்கள் ,சமாதான நீதவான்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

எமது நாட்டை வேறு தேசங்களுக்கு அடிமைப்படுத்தவோ நிபந்தனைகளுக்கு கட்டுப்படவோ ஒருபோதும் முடியாது

எமது நாட்டை வேறு தேசங்களுக்கு அடிமைப்படுத்தவோ அவற்றின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படவோ முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தை அமோக வெற்றி பெறச் செய்து நாட்டைப் பாதுகாக்க முன்வருமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளைஞர் சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார். மேல் மாகாண ஐ.ம.சு.மு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கான கூட்டம் அலரிமாளிகையில் நேற்று மாலை நடை பெற்றது. இக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், உங்களைப் போன்ற மூன்று இளைஞர்களின் தந்தையாக இருந்து உங்கள் முன் உரையாற்றுவதில் பெருமைப்படுகின்றேன். உங்கள் மத்தியில் இருக்கும் துடிப்பையும், எதையாவது புதிதாக செய்யவேண்டு மென்ற ஆர்வத்தையும் நானறிவேன். 

இந்நாட்டின் எதிர் காலத்தைப் பொறுப்பெடுக்கவிருப்பவர்கள் நீங்களே, உங்களைப் போன்ற பருவத்தை நானும் கடந்து வந்திருக்கிறேன். மிகவும் குறைந்த வயதில் பாராளுமன்ற உறுப்பினரானேன்.

தாய் நாட்டின் மீது பற்றுள்ள இளம் சமுதாயத்தினரே புலிகளுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருந்த வடக்கையும், கிழக்கையும் விடுவித்திருக்கின்றனர்.

நாட்டின் இளம் சமுதாயத்தினர் நாட்டின் மீது கொண்டுள்ள அன்பை அண்மையில் கிளிநொச்சிக்கு சென்ற சமயம் நான் புரிந்துகொண்டேன். திருமலை கடற்படை முகாமிலும், விமானப்படை முகாமிலும் நடைபெற்ற வைபவங்களில் கலந்துகொண்ட வேளையிலும் இதனை நான் அறிந்துகொண்டேன்.

இலட்சக்கணக்கான இளைஞர்கள் பாதுகாப்பு படையில் இணைவது வேறு தொழில்களில் ஈடுபட முடியாமல் அல்ல. மாறாகத் தாய் நாட்டின் மீது கொண்டிருக்கும் பற்று காரணமாகவே அவர்கள் இவ்வாறு இணைகின்றனர்.

இளம் சமுதாயத்தினருக்கு நல்லதொரு நாட்டையும், சமுதாயத்தையும் உருவாக்கிக் கொடுப்பது எமது பொறுப்பாகும்.

அவர்களது எதிர்பார்ப்புக்கள் இனம்காணப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றுவதற்கும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுபானத்திற்கு முற்றுப்புள்ளி என்ற திட்டத்தின் மூலம் நல்லொழுக்கமுள்ள சமுதாயம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.

நாட்டு மக்கள் அனைவரும் அச்சமும், சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது எனது நோக்கமாகும் என்றார்.
 

இலங்கை தூதரக உறவை சோனியா காந்தி துண்டிப்பதாக 20-ந் தேதிக்குள் அறிவிக்காவிட்டால் கண்டன போராட்டம் நடத்தப்படும் : பாரதிராஜா

bharathi-raja.jpgஇலங்கை தூதரக உறவை துண்டிப்பதாக 20-ந் தேதிக்குள் சோனியா காந்தி அறிவிக்காவிட்டால், 23-ந் தேதி முதல் தொடர் கண்டன போராட்டங்கள் நடத்தப்படும் என்று டைரக்டர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் பாரதிராஜா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். உலக நாடுகள் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டது, அனைத்து கட்சிகள் கேட்டன, பல்வேறு சங்கங்கள், அமைப்புகள், வக்கீல்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் போராடினார்கள். பலர் தீக்குளித்து மாண்டனர்.

ஆனால் மத்திய அரசு நினைத்திருந்தால் உடனடியாக போரை நிறுத்த முடியும். அதனால் திரையுலகின் பல சங்கங்கள் இணைந்து ஒரு கோரிக்கையை சோனியா காந்திக்கு வேண்டுகோளாக வைக்கிறோம். அவர் முயற்சித்தால் இலங்கையில் செத்து மடியும் உயிர்களை காப்பாற்ற முடியும். திரையுலக தமிழ் ஈழ ஆதரவு இயக்கம் மற்றும் தமிழ் இன உணர்வுள்ள பல்வேறு அமைப்புகள் எங்கள் இயக்கத்தில் அங்கம் வகிப்பார்கள்.

சோனியா காந்தி, தமிழ்நாட்டுக்கு வாருங்கள், வாருங்கள் என்று இருகரம் கூப்பி வரவேற்கிறோம். எங்கள் சொந்தங்கள் இன்னலில் இருந்து விடுபட, உயிர்கள் காப்பாற்றப்பட உத்தரவிட்டுவிட்டு வாருங்கள். இல்லை என்றால் உங்களை எதிர்த்து எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம்.

எவ்வளவோ போராடி விட்டோம், நெருக்கடி நேரத்தில் தான் விடிவு பிறக்கும் என்பதால் தான் தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். இனி மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழன் இனத்தால் ஒன்றுபடுவான், சாதிப்பான் என்பதை புரிந்து கொள்ளும் விதத்தில் எங்கள் போராட்டம் இருக்கும். வரப்போகிற மத்திய அரசு தமிழன் சொன்னால் செவி சாய்க்கும். இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

புலிகளின் தலைமையகத்தை மலேசியாவிற்கு இடம் மாற்ற தீர்மானம்: “ரிவிர” பத்திரிகை தகவல்

army-wanni.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகத்தை மலேசியாவிற்கு இடம் மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள பத்திரிகையான ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை அருகே விடுதலைப்புலி கைது: விசாரனையில் திடுக்கிடும் தகவல்கள்

images-army.jpg இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் உச்சக்கட்ட போர் நடந்து வருகிறது. இதனால் விடுதலைப்புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாகவும், எந்த நேரத்திலும் அவர்கள் ஊடுருவலாம் என்றும் மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் போலீசாரும், கடலோர காவல்படையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 3-ந் தேதி அன்று திருவான்மியூரில் சயந்தன் என்ற விடுதலைப்புலியும், அவரது கூட்டாளிகளான குகன், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சயந்தன் லண்டனில் இருந்து சென்னை வந்திருந்தார். இங்கிருந்து விடுதலைப்புலிகளுக்காக இலங்கைக்கு பொருட்களை கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த தகவல் தெரிந்து கியூ பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். சயந்தனை கியூ பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தார்கள். அப்போது, இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகளுக்காக பொருட்களை கடத்துவதற்கு மூர்த்தி என்ற முத்தண்ணா (வயது 39) என்ற நபர் ஒருவர் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. முத்தண்ணா கைது செய்யப்பட்டார். உடனடியாக அவரை சென்னையில் உள்ள கியூ பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடமிருந்து ஜி.பி.எஸ். தகவல் தொடர்பு கருவி ஒன்றும், 2 செயற்கைகோள் செல்போன்களும், 4 சாதாரண செல்போன்களும், இந்தியா-இலங்கை இடையிலான கடல்வழி வரைபடமும் கைப்பற்றப்பட்டது. ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

முத்தண்ணாவிடம் விசாரித்தபோது, அவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். தனது 26-வது வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததாகவும், விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்ததாகவும், தற்போது விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காக மருந்து போன்ற பொருட்களை கடத்தி செல்வதற்காக தமிழகம் வந்ததாகவும் முத்தண்ணா தெரிவித்தார். அவர், இலங்கையில் உள்ள விசுவமடு என்ற இடத்தை சேர்ந்தவர். தீவிர விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் முத்தண்ணா சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இலங்கை விவகாரம் குறித்து 29இல் ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஆராய்வு

hller.jpgஐ.நா. பாதுகாப்புச் சபையில் எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்øகப் பிரச்சினை குறித்து ஆராயப்படவுள்ளது. ஆயுத மோதல்களில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் விவகாரங்களுக்கான ஐ.நா. பாதுகாப்புச் சபையின் செயற் குழு எதிர்வரும் 29 ஆம் திகதி சந்திக்கும்போது இலங்கை, மியன்மார் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என ஐ.நா.வுக்கான மெக்ஸிகோ தூதுவரும் பாதுகாப்புச் சபையின் ஏப்ரல் மாதத்திற்கான தலைவருமான குளோட் ஹெல்லர் தெரிவித்துள்ளதாக இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இடம்பெறுவதை அனுமதிக்கும் எண்ணம் எதுவும் மெக்ஸிகோவிடம் இல்லை என மெக்ஸிகோவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் கொமஸ் ரொபெல்டோ தன்னிடம் கூறியதாக இலங்கை வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலித கொஹென அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும் அது சரியான தகவல் அல்ல என ஐ.நா.வுக்கான மெக்ஸிகோ தூதுவர் ஹெல்லர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை விடயத்தில் பொதுமக்களை பாதுகாப்பதற்கான கடப்பாடு தொடர்பான கரிசனை உள்ளது என நாம் மிகத் தெளிவாக உள்ளோம். எந்தவொரு நாடும் தனது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் அல்லது பாதுகாக்காவிட்டால் அதை செய்தவற்கு சர்வதேச சமூகம் தலையிட முடியும் என்ற “பாதுகாப்பதற்கான கடப்பாடு’ (R2P) எனும் கோட்பாடு ஐ.நா. பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என ஹெல்லர் கூறியுள்ளார்.