கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

அதிக ஓட்டமற்ற ஓவர்கள் வீசிய பந்துவீச்சாளர் – முரளிதரன் சாதனை

murali.jpgஅதிக ஓட்டமற்ற ஓவர்கள் வீசிய பந்துவீச்சாளர் என்ற சிறப்பினை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் 37 வயதான முரளிதரன் நேற்று முன்தினம் பெற்றார். இதுவரை அப்பெருமையை தக்க வைத்திருந்த அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன்வோர்ன் 145 டெஸ்ட் விளையாடி மொத்தம் 1761 ஓவர்களை மெய்டன்களாக வீசியிருந்தார்.

முரளிதரன் நேற்றைய டெஸ்டில் 9 ஓவர்களை ஓட்டமற்ற ஓவராக வீசி அதன் மூலம் வோர்னின் சாதனையை கடந்தார். 128 வது டெஸ்டில் இறஙகி உள்ள முரளிதரன் இதுவரை 1763 ஓட்டமற்ற ஓவர்கள் வீசி இருக்கிறார்.

ஆட்டத்தின் 79-வது ஓவரை முரளிதரன் ரன்கள் கொடுக்காமல் மைடன் ஓவராக வீசி இந்த சாதனையை நேற்று முன்தினம் முரளி நிகழ்த்தினார்.

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய உலக சாதனையை வைத்துள்ள முரளிதரன் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் கவுதம் கம்பீர் விக்கெட்டை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வீழ்த்தி 503 விக்கெட்டுகளை வீழ்த்தி வாசிம் அக்ரமின் ஒரு நாள் கிரிக்கெட் வாழ் நாள் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடனான டெஸ்ட்: நியூஸிலாந்து அணிக்கு 413 ஓட்டங்கள் வெற்றி இலக்கு:

dilshan.jpgநியூஸி லாந்து அணி 413 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என 2 வது இன்னிங்ஸிற்காக விளையாடிய அவ்வணி 1 விக்கெட் இழப்புக்கு 30 ஓட்டங்களைப் பெற்றபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் திலகரட்ன டில்ஷான் ஆட்டமிழக்காமல் பெற்ற 123 ஓட்டங்களால் 4 விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்களைப் பெற்றபோது ஆட்டத்தை இடை நிறுத்துவதாக அறிவித்தார்கள்.

பின்னர் நியூஸிலாந்து அணி துடுப்பெடுத்தாட வரும் போது மழை குறுக்கிட்டதால் போட்டி சில நிமிடங்கள் தாமதமாக ஆரம்பமானது.

இலங்கை அணி சார்பாக குமார் சங்கக்கார 46 ஓட்டங்களையும் ஜயவர்தன 27 ஓட்டங்களையும் சமரவீர 20 ஓட்டங்களையும் பிரசன்ன ஜயவர்தன ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஒப்ரைன், விட்டோரி, பட்டேல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இலங்கை- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 452 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டிம்மெக் இன்தோஷ் 36 ஓட்டங்களுடனும், ஜீத்தன் பட்டேல் 6 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தார்கள்.

இந் நிலையில் தொடர்ந்து 3வது நாளான நேற்றுமுன்தினம் காலையும் மழை பெய்தது. இதனால் 90 நிமிடங்கள் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. மெக் இன்தோஷ் பொறுமையாக ஆடினார். துஷாராவின் வேகப் பந்து வீச்சில் ஒரு முறை ஹெல்மெட்டையும், மற்றொரு முறை தோள்பட்டையையும் தாக்கியது. அவற்றை சமாளித்து தனது முதலாவது அரைசதத்தை மெக்இன்தோஷ் கடந்தார்.

முந்தைய நாள் விக்கெட் காப்பாளராக இறக்கி விடப்பட்ட ஜீத்தன் பட்லேட் 26 ஓட்டங்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த ரோஸ் டெய்லர் இரண்டு முறை பிடியில் இருந்து தப்பித்ததால் ஓரளவு தாக்குப்பிடிக்க முடிந்தது.

ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 180 ஓட்டங்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்த நியூசி லாந்து மேற்கொண்டு 43 ஓட்டங்கள் சேர்ப்பதற்குள் மேலும் 4 விக்கெட்டுகளை இழந்து சிக்கலுக்குள்ளானது. டெய்லர் 35 ஓட்டத்துடனும், மெக்இன்தோஷ் 69 ஓட்டங்ளுடனும் (226 பந்து), மெக்கல்லம் ஒரு ஓட்டங்களிலும், ஓரம் 12 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

பாலோ-ஆனை தவிர்க்க 253 ஓட்டங்களை தொடவேண்டிய நிலையில், 8வது விக்கெட்டுக்கு இணைந்த ஜெஸ்ஸி ரைடரும், கப்டன் வெட்டோரியும் அணியை பாலோ-ஆன் ஆபத்தில் இருந்து காப்பாற்றினார்கள். ரைடர் தனது பங்குக்கு 42 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

3வது நாள் ஆட்ட நேரமுடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்கள் எடுத்திருந்தது. விட்டோரி 33 ஓட்டங்களுடனும், ஓ பிரையன் 3 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் துஷாரா, முரளிதரன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இதேவேளை 4வது நாள் ஆட்ட நேரத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி 299 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

SRI LANKA
1ST INNINGS 452

NEW ZEALAND
1ST INNINGS
(overnight 281-8)

J. Oram c sub b Muralitharan   12
D. Vettori b Thushara    42
I. O’Brien c P. Jayawardene b Muralitharan  9
C. Martin not out     2
Extras: (b6, lb5, w1, nb11)   23
Total (all out, 116 overs)   299
Fall of wickets: 1-45, 2-80, 3-129, 4-180, 5-188, 6-195, 7-223, 8-259, 9-290, 10-299.
Bowling: Kulasekara 10-2-41-1 (nb1), Thushara 23-2-81-4 (nb6, w1),
Mendis 39-8-85-1 (nb4), Muralitharan 42-10-73-4, Paranavitana 2-0-8-0.

SRI LANKA
2nd innings
T. Paranavitana c Taylor b O’Brien  5
T. Dilshan not out   123
K. Sangakkara run out   46
M. Jayawardene c and b Patel  27
T. Samaraweera c Taylor b Vettori 20
P. Jayawardene not out  30
Extras: (b5, lb3)    8
Total (for 4 wkts decl,49 overs) 259
Fall of wickets: 1-19, 2-120, 3-174, 4-205.
Bowling: Martin 5-1-25-0, O’Brien 8-1-45-1, Oram 5-0-31-0, Vettori 19-3-81-1, Patel 12-0-69-1.

NEW ZEALAND
2ND INNINGS

M. Guptill not out    17
D. Flynn c M. Jayawardene b Kulasekara   0
R. Taylor not out     8
Extras: (b4, lb1)     5
Total (for one wkt, 13 overs)   30
Fall of wicket: 1-1 (Flynn).
Bowling: Kulasekara 3-0-10-1, Thushara 2-2-0-0, Mendis 4-1-9-0, Muralitharan 4-2-6-0.

இந்தியாவுடன் ஒத்துழைக்க தயார் : பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பேட்டி

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க பாகிஸ்தான் விரும்புகிறது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 63 வது சுதந்திர தின விழா கடந்த 15ம் திகதி டில்லியில் நடந்தது. அப்போது டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். பிரதமரின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமரின் பேச்சை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. அது தொடர்பாக தகவல் இருந்தால் எங்களிடம் சொல்லலாம்.

நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி தனது நாட்டு தூதரகம் மூலம் டில்லிக்கு தகவல் ஒன்றை அனுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் நிருபர்களுக்கும் பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர்,

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற விஷயத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்கவே நாங்கள் விரும்புகிறோம். எனவே இது தொடர்பாக நம்பத் தகுந்த தகவல் ஏதும் இருந்தால் இந்தியா எங்கள் அரசுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும் தங்களது கடுமையான உணர்வுகளையும் இந்தியாவுக்கு தெரிவிக்குமாறு குரேஷி தனது நாட்டு வெளியுறவு செயலாளரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவுடன் முழுமையாக ஒத்துழைக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று மீண்டும் ஒருமுறை அவர் வலியுறுத்தி கூறினார். எனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பற்றி தகவல் ஏதும் இருந்தால் இந்தியா எங்களிடம் கொடுக்கலாம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி கேட்டுக்கொண்டார்.

முரளிதரன் தனது 100 ஆவது விக்கெட்டை கைப்பற்றினார்

murali.jpgநியூசி லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் காலி மைதானத்தில் நடைபெறுவரும் டெஸ்ட் போட்டியில் முத்தையா முரளிதரன் காலி டெஸ்ட் மைதானத்தில் 100 விக்கெட்டுக்களைப் பெற்று மற்றுமொரு சாதனையையும் நிலைநாட்டியுள்ளார்.

தென் மாகாண சபை தேர்தல் – வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் 28 வரை

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் 28 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்றுகொள்ளப்பட உள்ளன. தென் மாகாண சபைத் தேர்தலில் 53 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். காலி மாவட்டத்தில் இருந்து 23 பேரும் மாத்தறை மாவட்டத்தில் இருந்து 18 பேரும் அம்பாந்தோட்டையில் இருந்து 12 பேருமாகத் தெரிவு செய்யப்பட  உள்ளனர்.

2008ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரமே இம்முறை தென் மாகாண சபைத் தேர்தல நடத்தப்பட உள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது.

உலகத் தமிழர் பிரகடனம் – ஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப் படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் முழுமையாக உதவுவோம்

tamil-nadu.jpgஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப் படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வு உருவாவதற்கு முழுமையாக உதவுவோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் கூறுகிறது.
 
சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில், நடந்த மாநாட்டில், உலகத் தமிழர் பிரகடனத்தை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ படித்து வெளியிட்டார்.

உலகத் தமிழர் பிரகடனம் வருமாறு

1.  ஈழத் தமிழ் மக்களின் மரபு வழி தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்கு உத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவைத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றை அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

2.  தங்கள் தாயகத்திலும், உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்களின் ஊர்களிலும், வீடுகளிலும் மீண்டும் குடியேறவும், அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணு‌கிறோ‌ம்.

3.  தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டும் என ஐ.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.

4.  இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும், அவர்களை ஏவிவிட்ட சிங்கள அரசியல் வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.

5.  உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான, இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையில் தங்களின் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும் அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலைநிறுத்திக்கொள்ள அவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

6.  அளப்ப‌ரிய தியாங்களைச் செய்த ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும், வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாக பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அந்த மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக்கொண்டு எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகளாவிய தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

பிரகடனம் படித்து முடிக்கப்பட்ட பிறகு ஈழத் தமிழர்களுக்கு உதவ சர்வபறி தியாகத்திற்கும் தயார் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஏராளமான கருஞ்சட்டை தரித்த இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி அந்த உறுதிமொழியை ஏற்றனர். அவர்கள் அனைவருடைய சட்டையிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்டிருந்தது. பின்புறத்தில் தமிழீழத்தின் வரைபடம் அச்சிடப்பட்டிருந்தது.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க, புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழீழம் மலரச் செய்வார்கள்: வைகோ

முன்பு யூதர்கள் கொல்லப்பட்டபோது உலகெங்கும் உள்ள யூதர்கள் ஒன்று திரண்டு போராடி வென்றனர். அதைப்போலவே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழ் ஈழத்தை மலரச் செய்வார்கள்.இவ்வாறு நேற்று சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் பிரகடனம் வெளியிடும் பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான பிரகடனம் வெளியிடும் பொதுக்கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: 

விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம் என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் அதன் பிறகும் 3 லட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்து வதைப்பது ஏன்?  முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். 15 வயதைக் கடந்த தமிழ் ஆண்கள் உயிரோடு இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது.

இந்த அவலங்களை காண மனித உரிமை ஆர்வலர்களால் அங்கு செல்ல முடியவில்லை.  ஆனால் முதல்வர் கருணாநிதி இலங்கையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டுவிட்டதாக கூறுகிறார். இப்போது அங்கு சுமுக நிலை நிலவுகிறதா என்பதை அவர் தனது மனசாட்சிப்படி கூறட்டும். 

1985-ம் ஆண்டு டெசோ மாநாட்டில் பேசிய கருணாநிதி, தமிழ் ஈழம்தான் இறுதித் தீர்வு; தமிழ் ஈழத்தை ஆதரிப்பதற்காக எந்த அடக்குமுறையை ஏவிவிட்டாலும் தாங்கிக் கொள்ளத் தயார் என்றார். அன்று கருணாநிதி கூறியதைத்தான் இன்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் எங்கள் மீது அவர் அடக்குமுறையை ஏவுகிறார் என்றார் ராமதாஸ்.                                                                                                

கூட்டத்துக்கு தலைமை வகித்த, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் பேசியதாவது: 

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது குற்றமாகாது; அந்த இயக்கத்துக்கு ஆயுத உதவி உள்ளிட்ட உதவிகளை செய்தால் மட்டுமே குற்றம் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பின் படியே, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். 

எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவதில் தவறில்லை. அவ்வாறு பேசக் கூடாது என தமிழக அரசு கூறுவது அடக்குமுறை நடவடிக்கை ஆகும் என்றார். 

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் த. ஸ்டாலின் குணசேகரன், புதிய பார்வை ஆசிரியர் எம். நடராஜன், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிர்வாகி ஹென்றி திபேன் உள்ளிட்டோர் பேசினர்.  கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, இலங்கைத் தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக பழ.நெடுமாறன் மீது வழக்கு

தமிழக அரசின் உத்தரவுகளை மீறி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தியமைக்காக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் நேற்று 20ஆம் தேதி வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடந்தது. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக பழ.நெடுமாறன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொதுக்கூட்டத்தில் அரசு உத்தரவுகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கத்தலைவர் பிரபாகரன் படம் பொதுக்கூட்டம் மேடையில் வைக்கப்பட்டிருந்தது. இது போன்ற காரணங்களுக்காக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என  கூறப்படுகிறது.

சயீட் அன்வரின் சாதனையை சமன்செய்த கொவென்ட்ரி தரவரிசையில் முன்னேற்றம்

17-charles-coventry222.jpgஒருநாள் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற சயீட் அன்வரின் சாதனையை சமன் செய்த சிம்பாப்வே வீரர் சால்ஸ் கொவென்ட்ரி ஐ.சி.சி. ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

பங்களாதேஷடனான 4 ஆவது ஒருநாள் போட்டியில் 194 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்த 26 வயதான கொவென்ட்ரி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐ.சி.சி. இன் புதிய தரவரிசையில் 100 இடங்களுக்குள் முன்னேறினார். இதன்படி 103 ஆவது இடத்தில் இருந்த கொவென்ட்ரி 83 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

இது தவிர, பங்களாதேஷடனான ஒருநாள் தொடரில் சோபித்த சீன் வில்லியம்ஸ், எல்டன் சிகும்புரா ஆகியோரும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதில் சீன் வில்லியம்ஸ் 9 இடங்கள் முன்னேறி 47 ஆவது இடத்தையும் சிகும்புரா 6 இடங்கள் உயர்ந்து 50 ஆவது இடத்தையும் பிடித்தனர்.

இந்த இருவரும் மாத்திரமே ஐ.சி.சி. ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் சிம்பாப்வே வீரர்களாவர்.

அதேபோன்று சிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற பங்களாதேஷ் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் இரண்டு இடங்கள் முன்னேறி 36 ஆவது இடத்தை பிடித்தார்.

இதனிடையே ஐ.சி.சி. ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷகீப் அல் ஹஸன் இரண்டாவது இடத்தை இழந்தார். சிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் சோபிக்க தவறிய ஷகீப் அல் ஹஸன் இரண்டாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.

இதனால் நியூஸிலாந்து வீரர்களான கைல் மில்ஸ் மற்றும் டானியல் விட்டோரி ஆகியோர் முறையே 2, 3 ஆவது இடங்களுக்கும் முன்னேற்றம் கண்டனர்.

சர்ச்சையில் சிக்கியுள்ள தென் ஆப்பிரிக்க வீராங்கணை ஆணா பெண்ணா?

0000semenyabesar.jpgஜெர்ம னியின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும் உலக தடகளப் போட்டியில் மகளிர் பிரிவின் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ள தென் ஆப்பிரிக்காவின் காஸ்டர் செமென்யாவிடம் அந்தப் பதக்கம் தங்கியிருக்குமா என்பது குறித்து ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

அவரிடம் நடத்தப்படவுள்ள பாலியல் பரிசோதனையில் அவர் பெண் அல்ல என்று கண்டறியப்படால் அவர் பதக்கம் இழக்க நேரிடும். பெர்லினில் நடைபெற்று வரும் போட்டிகளில் இந்தப் பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஸ்டன் செமென்யா எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் அற்புதமான அவரது சாதனையும் அவரது உடல் தோற்றமும் பெரிய அளவில் சர்ச்சையை ஈர்த்துள்ளன. போட்டியில் பங்கு பெறும் வீரர்களும், போட்டி அதிகாரிகளும் அவர் ஒரு பெண் தான் என்பதனை நிரூபிக்குமாறு கோரியுள்ளனர். எனவே 18 வயதான இந்த தென் ஆப்பிரிக்கர் சிக்கலான பல பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டும்.

பொது மருத்துவ வல்லுநர், மகப்பேற்று மருத்துவ வல்லுநர், ஒரு உளவில் நிபுணர் மற்றும் பாலியல் சோதனை வல்லுநர் ஆகியோர் அந்த வீராங்கணையை சோதித்து அறிக்கை வழங்குவார்கள்.  எனினும் இது தொடர்பிலான முடிவு வருவதற்கு பல வாரங்களாகும். மேலும் இந்தப் பிரச்சினையில் தற்போது அரசியல் கலப்பும் ஏற்பட்டுள்ளது.

வன்முறைகளுக்கு நடுவே ஆப்கான் தேர்தல்கள் முடிவடைந்துள்ளன

vote000.jpgஆப்கானிஸ் தானில் கிளர்ச்சிக்காரர்களின் அச்சுறுத்தல்களையும் மீறி அதிபர் தேர்தலில் மக்கள் வாக்களித்ததிருப்பதை அந்நாட்டின் அததிபர் ஹமீத் கர்சாய் பாராட்டியுள்ளார். வாக்குபதிவு தினமான வியாழனன்று மட்டும் எழுபது தாக்குதல்கள் நடந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கர்சாய் அவர்களின் முக்கியப் போட்டியாளர்களின் ஒருவரான அஷ்ரஃப் கனி, நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் வாக்குப்பதிவின்போது பரவலாக முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு சில புகார்கள் மட்டுமே வந்திருப்பதாக ஆப்கானிய தேர்தல் ஆணையம் கூறுகிறது. சில வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் வாக்காளர்கள் காத்திருந்தபடியால், வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு கடைசியாக நடந்த அதிபர் தேர்தலை விட இம்முறை வாக்குப்பதிவு குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது என காபூலில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்

இலங்கை அணியுடனான டெஸ்ட்; நியூசிலாந்து அணி 281/8

murali.jpgஇலங் கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்சிற்காக நியூசிலாந்து அணி 281ஓட்டங்களுக்கு 8விக்கெட்டுகளை இழந்து இருந்தது. மூன்றாவது நாள் ஆட்டமும் மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது.

Sri Lanka                        

1st innings: 452
(T. Dilshan 92, M. Jayawardene 114, T. Samaraweera 159, D. Vettori 4-78, C. Martin 4-77)

NEW ZEALAND               

1st innings               (overnight 87-2)
T. McIntosh lbw b Muralitharan   69
M. Guptill b Thushara    24
D. Flynn b Mendis    14
J. Patel lbw b Muralitharan   26
R. Taylor c P. Jayawardene b Thushara  35
J. Ryder b Kulasekara    42
B. McCullum b Thushara     1
J. Oram c sub (Warnapura) b Muralitharan  12
D. Vettori not out    33
I. O’Brien not out     3
Extras: (b6, lb5, nb11)   22
TOTAL (for 8 wkts, 105 overs)   281
To bat: Chris Martin.
Fall of wickets: 1-45 (Guptill), 2-80 (Flynn), 3-129 (Patel), 4-180 (Taylor),
5-188 (McIntosh), 6-195 (McCullum), 7-223 (Oram), 8-259 (Ryder).
Bowling: Kulasekara 10-2-41-1 (nb1), Thushara 22-2-80-3 (nb6), Mendis 34-8-75-1 (nb4), Muralitharan 37-9-66-3, Paranavitana 2-0-8-0.