கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

14 மாதங்களுக்கு பின் முதல் தடவையாக தொலைக்காட்சியில் தோன்றிய பிடெல் காஸ்ட்ரோ

castro.jpgகியூபா முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ, 14 மாதங்களின் பின் முதல் தடவையாக தொலைக்காட்சியில் தோன்றியுள்ளார். 2006 ஆம் ஆண்டு சுகவீனமடைந்து அறுவைச் சிகிச்சையொன்றுக்கு ஆளாகிய பிடெல் காஸ்ட்ரோ, அது முதற்கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் தோன்றாது இருந்து வருகிறார்.

வெனிசுலாவைச் சேர்ந்த மாணவர்களுடன் பிடெல் காஸ்ட்ரோ உரையாடும் மேற்படி காட்சியானது கடந்த சனிக்கிழமை எடுக்கப்பட்டதாக அதிகõரிகள் தெரிவித்தனர்.

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிடெல் காஸ்ட்ரோ மிகுந்த ஆரோக்கியமாகவும் உற்சாகத்துடனும் காணப்பட்டார்.

மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர், அந்நாட்டு அரச ஊடகமான “ஜுவென்டட் ரெபல்டி’ பத்திரிகையானது பிடெல் காஸ்ட்ரோவின் புதிய புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தது.

அந்த புகைப்படமானது ஈகுவடோரின் இடதுசாரி ஜனாதிபதி ராபயல் கொர்ரியாவுடன் பிடெல் காஸ்ட்ரோ உரையாடுவதை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது

சி.ஐ.ஏ. செய்த கைதிகள் துஷ்பிரயோகம்: வழக்குகளை மீண்டும் நடத்த அமெரிக்க நீதித்துறை பரிந்துரை

guantanamo.jpgஅமெரிக் காவின் உளவுப் பிரிவான சி.ஐ.ஏ.வினர் சிறைக் கைதிகளை விசாரிக்கும்போது நடைபெற்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகள் பலவற்றை மீண்டும் தொடங்குவதற்கு அந்நாட்டின் நீதித்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் சி ஐ ஏ வின் ஊழியர்களும், அதனுடனான ஒப்பந்தக்காரர்களும் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

அமெரிக்க நீதித்துறையின் இந்த பரிந்துரையானது, முன்னர் அதிபராக இருந்த புஷ் அவர்களின் நிர்வாகம் எடுத்த கொள்கையினை மாற்றியைக்கும்.

தீவிரவாதம் தொடர்பான சந்தேக நபர்களை சி ஐ ஏ நடத்திய விதம் குறித்த தகவல்கள் இன்று வெளியிடப்படவுள்ளது.

கடந்த ஆண்டு இது தொடர்பான மூல அறிக்கை வெளியான போது, இந்த துஷ்பிரயோகங்கள் குறித்த தகவல்கள் வெளியாகாமல் தடுக்கப்பட்டன.

புதிய தகவல்கள் மரண தண்டனையை நிறைவேற்றுவது போல போலியாக செய்து காட்டியது குறித்தும், மின்சார துளையிடும் கருவியைக் கொண்டு அச்சுறுத்தியது குறித்தும் புதிய விபரங்களை வெளிக் கொண்டுவரக்கூடும் என அமெரிக்க பத்திரிகைகள் எதிர்வு கூறுகின்றன.

எதிர்காலத்தில், வெள்ளை மாளிகையின் கண்காணிப்பின் கீழ் பயங்கரவாத சந்தேகநபர்கள் மீது விசாரணைகளை நடத்துவதற்கான ஒரு புதிய துறை உருவாக்கப்படுவதற்கு அதிபர் ஒபாமா ஒப்புதல் வழங்கியுள்ளார்.

செப்டம்பர் மூன்றாம் திகதிக்கு முன்னர் தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்க முடியாது

vote000.jpgஆப்கா னிஸ்தான் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை செப்டம்பர் மாதம் 03ம் திகதிக்குப் முன்னர் எதிர்பார்க்க முடியாதென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஹமீத் அல்கர்ஸாயியும் மற்றொரு வேட்பாளரான முன்னாள் வெளிநாட்டமைச்சர் அப்துல்லாவும் அறிவித்துள்ளதால் பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன.

முதல் சுற்றில் தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக இவ்விருவரும் உரிமைகோரியுள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்ட தேர்தல் திணைக்களம் இரண்டாம் சுற்று எண்ணப்பட வேண்டியுள்ளதாக அறிவித்துள்ளது முதலாம் சுற்றில் இருவரும் சம அளவான வாக்குகளைப் பெற்றால் அல்லது வெற்றி தெளிவில்லாமல் இருந்தால் மாத்திரமே இரண்டாம் சுற்று எண்ணப்பட வேண்டும்.

தேர்தல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் இவ்விரண்டில் ஒன்று நடந்திருக்க வேண்டும். இதை வைத்து வெற்றி தங்களுக்கேயென இரண்டு வேட்பாளர்களும் உரிமை கோருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்யோக பூர்வ முடிவுகள் வரும் வரை வெற்றிச் செய்திகளை பொது மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டாமென இரு வேட்பாளர்களையும் ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கமான நேச நாடுகள் கேட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் தேர்தல்கள் (ஜனாதிபதி மாகாண சபை) வன்முறைமிக்கதென்றும் மோசடியானதென்றும் தெரிவித்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வாக்குப் பெட்டிகளைக் கைமாறும் விடயத்திலுள்ள அதிகாரங்கள் மாற்றப்படவேண்டும். இதைச் செய்ய அரசியலமைப்பில் மாற்றங்கள் தேவையென்றும் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 2001ம் ஆண்டு தலிபான்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் இது. தலிபானிகளின் அச்சுறுத்தல் வன்முறைகளுக்கு மத்தியிலும் மக்கள் வாக்களித்துள்ளமை ஆப்கான் வரலாற்றின் முக்கிய மைல்கல் என அவதானிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவுகளால் பெரும் வன்முறைகள் எழவும் வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

பன்றி காய்ச்சல் பலி- இந்தியாவில் 70 ஆக உயர்வு

10092009.jpgஇந்தியா வில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இரவு பெங்களூரில் ஒரு பெண் பலியானதை அடுத்து கர்நாடகாவில் மட்டும் இந்த எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய சுகாதாரத் துறை கவலை அடைந்துள்ளது.
 

பாகிஸ்தானில் கார்க் குண்டுத் தாக்குதல்; அன்ஸாருல் இஸ்லாம் முக்கியஸ்தர் பலி

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கடந்த சனிக்கிழமை நடந்த கார்க் குண்டுத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், ஐந்து பேர் காயமடைந்தனர். ரிமோட் கருவி மூலம் தூரத்திலிருந்து இக் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. அரசாங்க வைத்திய சாலைக் கருகாமையில் இக்கார் குண்டு வெடிக்கவைக்கப்பட்டது.

பலியான இருவரும் அன்ஸாருல் இஸ்லாம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என பெஷாவர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். பலியான முபீன் அப்ரிடி இவ்வியக்கத்தின் பேச்சாளராவார். மற்றவர் இவரின் கார் சாரதியாவார். காயமடைந்தோர் பொது மக்களாவர்.

லக்ஷர் இ இஸ்லாம் என்ற அமைப்பு இக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குண்டு வெடித்த இடம் சன நெருக்கமுள்ள பகுதியாகும். ரமழான் மாதம் ஆரம்பமானதால் பெருந் தொகையானோர் வீதிகளில் நடமாட வில்லையென்பதால் இழப்புகள் குறைவாக இருந்தன.

பாகிஸ்தான் இராணுவத்தின் பாரிய நடவடிக்கைகள் வஸிரிஸ்தான் பகுதியில் ஆரம்பித்துள்ளதால் இஸ்லாமிய அமைப் புகளிடையே பிளவுகள் ஏற்பட்டுள்ளதை இந்த தாக்குதல் உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.

ஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து!

eng0000.jpgஅவுஸ்தி ரேலியாவிற்கு எதிரான சாம்பல் கிண்ணத்துக்கான ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து-ஆஸ்‌ட்ரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே வரலாற்று புகழ்மிக்க ‘ஆஷஸ்` டெஸ்ட் தொடர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி 65-வது ஆஷஸ் டெஸ்ட் கடந்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் முதல் 4 டெஸ்டில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற்றன. இரு போட்டி டிராவாகின.

இதனால் தொடர் சமன் ஆன நிலையில் கோப்பையை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 20ஆ‌ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332 ஓட்டங்களும், ஆஸ்‌ட்ரேலியா 160 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் 172 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 373 ஓட்டங்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்‌ட்ரேலிய அணிக்கு 546 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடினமான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்‌ட்ரேலிய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. முந்தைய நாள் சிறப்பான தொடக்கம் அமைத்து தந்த வாட்சன், சைமன் கேடிச் இருவரும் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து எல்.பி.டபிள்யூ. ஆனார்கள். கேடிச் 43 ஓட்டங்களுடனும் வாட்சன் 40 ஓட்டங்களுடனும் அவுட் ஆனார்கள்.

இதை தொடர்ந்து அ‌ணி‌த் தலைவ‌ர் ரிக்கி பாண்டிங்கும், மைக் ஹஸ்ஸியும் அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். அணியை ஓரளவு தூக்கி நிறுத்திய இந்த அபாயகரமான கூட்டணி துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட்டில் பிரிந்தது. பிளின்டாப்பால் ரன்-அவுட் செய்யப்பட்ட பாண்டிங் 66 ஓட்டங்களுடன் (103 பந்து, 10 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய துணை தலைவ‌ர் மைக்கேல் கிளார்க்கும் (0) வந்த வேகத்தில் ரன்-அவுட் ஆகவே ஆஸ்‌ட்ரேலிய அணி தோல்வி பாதைக்கு தள்ளப்பட்டது. 5-வது விக்கெட்டுக்கு உள்ளே வந்த மார்கஸ் நார்த்தும் (10 ரன்) நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

இதன் பின்னர் ஒரு முனையில் ஹஸ்ஸி தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்து கொண்டு போராட, மறுபக்கம் வேகமாக விக்கெட்டுகள் சரிந்தன. ஹேடின் (34 ஓட்டங்கள்), ஜான்சன் (0), சிடில் (10), ஸ்டூவர்ட் கிளார்க் (0) ஆகியோர் சிறிய இடைவெளியில் வெளியேறினர்.

கடைசி விக்கெட்டாக மைக்ஹஸ்ஸி (121 ஓட்டங்கள், 263 பந்து, 14 பவுண்டரி) ஆட்டம் இழக்க ஆஸ்‌ட்ரேலிய அணி 2-வது இன்னிங்சில் 348 ஓட்டங்களு‌க்கு அனை‌த்து ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்தது. இதன் மூலம் 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து அணி மீண்டும் ஆஷஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இங்கிலாந்து அணியில் ஸ்வான் 4 விக்கெட்டுகளும், ஹார்மிசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வெற்றி கொண்டாட்டத்துடன் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிளின்டாப் டெஸ்ட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் ஆஸ்‌ட்ரேலியாவை நிலை குலைய செய்த இங்கிலாந்து ப‌ந்து ‌வீ‌ச்சாள‌ர் ஸ்டூவர்ட் பிராட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து அ‌ணி‌த் தலைவ‌ர் ஸ்டிராஸ் (மொத்தம் 474 ஓட்டங்கள் ), ஆஸ்‌ட்ரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் (448 ஓட்டங்கள் ) ஆகியோர் தொடர் நாயகன் விருது பெற்றனர்.

இந்த தோல்வியின் மூலம் ஆஸ்‌ட்ரேலிய அணி முதல் முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளது.

வன்னி முகாம்களின் அவலங்கள்: வன்னியில் இருந்து ஒரு மின் அஞ்சல்

IDP_Camp_Aug09நண்பர்களே

இலங்கையில் யுத்தம் உக்கிரமடைந்த காலங்களின்போது உலகமே சனங்கள் சனங்கள் என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது. இப்போது யுத்தம் முடிவடைந்து விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பிறகான காலத்திலும்‌ அந்தச் சனங்களின் வாழ்நிலையில் மாற்றமேதும் வந்துவிடவில்லை – சாவின் கரங்கள் மூர்க்கமான எறிக்ணைகளாகத் தம்மைத் தாக்கிச் சிதைக்கும் என்ற பயத்தில் மருளத் தேவையில்லை என்பதைத் தவிர்த்துப் பார்த்தால். ஆனால் போரின் கடைசிக் கணம்வரை பெருங்குரலெடுத்துக் கதறிக் கொண்டிருந்த உலகு சட்டென்று மௌனமாகிக் கிடப்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப்பற்றிப் பேசுபவர்கள் அதற்குக் கபடத்தனமான அரசியற் சாயம் பூசியே அதைச் செய்கிறார்கள்.

IDP_Camp_Aug09260 000க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் செட்டிக்குளம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை நிலைமையைப் படுமோசமாக்கியிருப்பதாகக் கண்டு வந்தவர்கள் சொல்கிறார்கள்.. (இணைக்கப் பட்டிருக்கும் படங்கள் சாட்சி). தற்காலிகமாக அமைக்கப்பட்ட‌ மலக்குழிகளில் பல நிரம்பி வழிந்தபடியிருப்ப‌தாகவும் பல முற்றாகச் சீர்கெட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள். எங்கும் தாங்க முடியாத‌ துர்நாற்றம். இது பெருத்த சுகதாரச் சீர்கேட்டுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கும் என்பது திண்ணம். இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் மனிதக் கழிவின் மீது நெளியும் புழுக்களைக் காணலாம்.. (அரசாங்கம் நெடுநாளைக்கு மக்களை இந்த முகாம்களில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவே ஐ.நா தற்காலிக மலசலக் குழிகளை அமைத்துக் கொடுத்திருந்தது. ஆனால் அரசாங்கத்துக்கு அவர்களை இப்போதைக்கு மீளக் குடியேற்றும் எண்ணம் சற்றேனும் இருப்பதாகத் தோன்றவில்லை. குறைந்த பட்சம் வெளியே உறவினர்களோடு சென்று தங்கி வாழக்கூடிய நிலையிலுள்ள குடும்பங்களையாவது சோதனைகளை முடித்து விட்டுச் செல்ல அனுமதிப்பதாயில்லை. அப்படிச் செய்வது முகாம்களில் நிலவும் மிகுந்த சனநெரிசலை வெகுவாகக் குறைக்கும்)

IDP_Camp_Aug09இங்கே இலங்கையில் ஜனநாயகம் நாளுக்கு நாள் சீர் கெட்டுக் கொண்டிருக்கிறது. அனைவரும் ஒரேகுரலில் ஒரேதொனியில் ஒரேபொருளையே உரைக்க வேண்டுமென்று நிர்ப்பந்திருக்கிறது. ஒரு சில பேரால் மட்டுமே இயக்கப்படும் அரச யந்திரம். பெருத்த மௌனம் சனங்கள் மீது ஒரு கரும்போர்வையாகப் படர்ந்திருக்கிறது. ஆனால் வெளியுலகிலும் அப்படியா? இலங்கை அரசுக்கெதிரான குரல் விடுதலைப் புலிகள் அழியும் மட்டும் தான் ஒலித்தென்றால், அவ்வளவும் புலிகளுக்கு ஆதரவாக ஒலித்த குரல் மட்டும் தானா? சனங்களைப் பற்றிய கரிசனை..? இனியான எதிர்காலம் என்ன?

நண்பர்களே, இப்பிரச்சனை குறித்து நான் பணிபுரியும் பத்திரிகைக்காக எழுதிய செய்தியில் எனது பெயரைப் போடுவதற்கே திராணியற்ற நிலையில், அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலை செய்யும் நபரொருவர் அனுப்பி வைத்த இப்படங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். இவற்றை உங்களின் வலைத்தளங்களில் பிரசுரிப்பதன் மூலமும், வெகுஜன ஊடகங்களில் பணிபுரிபவர்கள் தத்தமது ஊடகங்களில் வெளியிடுவதன் மூலமும் பரந்தவொரு சனத்திரளின் பார்வைக்கு இந்தப் பிரச்சனையைக் கொண்டு செல்லலாம் என்ற நம்பிக்கையில்…

கிரேக்கத்தில் காட்டுத் தீயால் கடும் பாதிப்பு

greece_athens_fires.gifகிரேக்கத்தில் பரவிவரும் காட்டுத்தீ அந்நாட்டின் தலைநகரில் சேதங்களை ஏற்பபடுத்தும் என்று அஞ்சப்படும் நிலையில், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான சுற்றுச்சூழல் பேரவலம் இதுதான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும் சீற்றத்துடன் காற்று வீசுவதால் தீ வேகமாக பரவி வரும் நிலையில், அதென்ஸ் நகரின் வடக்கு மற்றும் கிழக்கு புறநகர்ப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை வீடுகளை துறந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இத்தாலி, பிரான்ஸ் சைப்ரஸ் போன்ற நாடுகளிலிருந்து தீயணைப்பு விமானங்கள் உள்ளிட்ட சர்வதேச உதவிகளை காட்டுத் தீயை அணைப்பது தொடர்பில் கிரேக்க அரசாங்கம் பெற்றுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் இதேபோல் காட்டுத் தீ பரவியதில் எழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர்.

ஆப்கான் தேர்தல் புகார்கள் முடிவை பாதிக்கலாம் – புகார் ஆணையம்

vote000.jpgஆப்கானிஸ் தான் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக வந்துள்ள புகார்கள் அதிபர் தேர்தலின் முடிவுகளை பாதிக்கலாம் என தேர்தல் புகார் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்த ஆணையத்தின் தலைவர் கிராண்ட் கிப்பன் கூறும்போது, தங்களுக்கு 225 புகார்கள் வந்துள்ளதாகவும், இவற்றில் 35 முக்கியமானவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை என முத்திரையிடப்பட்டிருப்பதாக கூறினார்.

அதிபர் தேர்தலின் முதற்கட்ட முடிவுகள் அடுத்த ஒரு சில நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 66 பேர் மரணம்

10092009.jpgஇந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் மாநிலங்களில் தலா ஒருவர் இன்று பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்  மாநிலம் வதோதராவைச் சேர்ந்த ஹஸ்முக் ஹிங்கு என்பவர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். குஜராத்தில் மட்டும் இதுவரை 6 பேர் இறந்துள்ளனர்.

இதேபோல மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா பகுதியை சேர்ந்த அனில் சேஷ்ராவ் சவான் (26) என்ற வாலிபரும், ஹரியானா மாநிலம் குருசேத்ரா மாவட்டத்தில் 40 வயது நிரம்பிய பெண் ஒருவரும் பன்றி காய்ச்சல் நோய்க்கு பலியானார்கள்.

டெல்லியில் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானதாக தகவல் வெளியானது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

2வது கட்ட தாக்குதல் அபாயம்

பன்றிக் காய்ச்சல் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் 2வது கட்ட பன்றிக் காய்ச்சல் தாக்குதல்  ஏற்படவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக நாடுகள் இதை சமாளிக்க தயாராகிக் கொள்ளுமாறும் அது எச்சரித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் மழைக் காலம் நெருங்கியுள்ள நிலையில், பன்றிக் காய்ச்சல் கடுமையாக இருக்கும் எனவும் அது கூறியுள்ளது.

உலகம்  முழுவதும் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 1799 பேர் உயிரிழந்துள்ளனர். 177 நாடுகளை பன்றிக் காய்ச்சல் பாதித்துள்ளது.