கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மாயம்- இதுவரை தகவல் இல்லை

02-rajasekara-reddy.jpgஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர், 7 மணி நேரத்துக்கு மேலாகியும் எங்கு சென்றது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. அதையடுத்து, ஆந்திர முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்தோ, அவரது பாதுகாப்பு குறித்தோ எந்தத் தகவலும் இல்லை.

ஆந்திராவின் கர்னூலில் இருந்து சித்தூருக்கு இன்று காலை ஹெலிகாப்டரில் சென்றார் ராஜசேகர ரெட்டி. சுமார் 9.35 மணிக்கு, அவரது ஹெலிகாப்டருனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதுவரை, முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆந்திர அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உள்பட ஏழு ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு்ள்ளன. அதுதவிர, ஆளில்லாத விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், மோசமான வானிலை காரணமாகவும் தேடுதல் பணி பாதிக்கப்பட்டிருப்பதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் வனப்பகுதியில் இறங்கியதால், அவர் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லபப்படிருப்பதாகவும், அங்கு நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தத் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஸ்வைன் – இந்தியா முழுவதும் இதுவரை 107 பேர் மரணம்

swine.jpgபன்றிக் காய்ச்சலுக்கு ஆந்திராவில் இன்று இரண்டு பேர் உயிரிழந்தனர்.  இதன் மூலம் இதுவரை நாடு முழுவதும் 107 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் இந்த நோய் நேற்று வரை சுமார் 3 ஆயிரத்து 049 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் 644 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 556, அர்ஜென்டினாவில் 465 பேர் உயிரை பறிகொடுத்துள்ளனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

நடப்பு சாம்பியன்கள் இலகு வெற்றி

sania-mirza1111.jpgஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன்களான ரொஜர் பெடரர் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் இலகு வெற்றியீட்டினர். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நேற்று முன்தினம் நியூயோர்க்கில் ஆரம்பமானது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர், அமெரிக்காவின் டெவின் பிரிட்டொனை எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய முதல் நிலை வீரர் பெடரர் 6-1, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றியீட்டினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றுமொரு போட்டியில் அமெரிக்காவின் 5 ஆம் நிலை வீரர் அன்டி ரொடிக் ஜெர்மனியைச் சேர்ந்த பிஜோர்ன் பவோவை 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

இதேபோன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் இரண்டாம் நிலை வீராங்கனை செரீனவில்லியம்ஸ் தனது முதல் சுற்றுப் போட்டியில் சக நாட்டு வீராங்கனை ஒல்கா கொவொட்சோவாவை 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சற்றுக்கு முன்னேறினார். இதில் மற்றுமொரு முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்று போட்டியில் போராடி வெற்றியீட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா போராடி வெற்றியீட்டினார். பெலாரஸ் வீராங்கனை ஒல்கா கொவோர்ட்சோவாவை நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் சந்தித்த சானியா 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றிபெற்றார். அடுத்து அவர் தனது இரண்டாவது சுற்றில் உலக தரவரிசையில் 10 ஆவது இடத்தில் இருக்கும் பிளவியா பெனட்டாவை சந்திக்கிறார்.

பெனட்டா தனது முதல் சுற்றுப் போட்டியில் ருமேனியாவின் எடினா கொலோவிட்ஸை 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இலகுவாக வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20க்கு 20 போட்டி இன்று

kumar-sangakkara.jpgஇலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு அரங்கில் இரவுப் போட்டியாக ஆரம்பமாகவுள்ளது. இரண்டு அணிகளும் இரண்டு 20க்கு 20 போட்டிகளில் மோதவுள்ளன.  இரண்டாவது போட்டி எதிர்வரும் 4ம் திகதி நடைபெறும்.

இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதிய 2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தொடரையும் அள்ளிச் சுருட்டியது. இலங்கை அணியிடம் டெஸ்ட் போட்டியில் தோல்வியுற்ற நியூசிலாந்து அணி 20க்கு 20 போட்டியில் வெற்றி பெறும் எண்ணத்தில் களத்தில் குதிக்கும் இப்போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை அணிக்கு பழி தீர்த்தாற் போல் ஆகிவிடும்.

இலங்கை அணிவீரர்களும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இப்போட்டியில் நிரூபிப்பார்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டெஸ்ட் தரவரிசையில் சங்கக்காரா முதலிடம்

kumar-sangakkara.jpgநியூஸீ லாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் எடுத்ததால் இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் சங்கக்காரா ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார். இதனால் இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.  3-வது இடத்தில் மஹேல ஜெயவர்தனா உள்ளனர்.

டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் டேல் ஸ்டெய்ன், முரளிதரன், மிட்செல் ஜான்சன் ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

யுஎஸ் ஓபன் டென்னிஸ்-2வது சுற்றில் சானியா, சோம்தேவ்

sania-mirza1111.jpgயுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீராங்கனை சானியா மிர்சா மற்றும் இந்திய வீரர் சோம்தேவ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, பெலாரசின் வோல்கா கோவர்ட்சோவாவை எதிர்கொண்டார்.

இதில் சானியா 6-2, 3-6, 6-3 என்ற செட்களில் வென்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார். அதில் அவர் இத்தாலியின் பிளாவியா பென்னட்டாவுடன் மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், போர்ச்சுக்கல்லை சேர்ந்த பெரட்ரிகோ கில்லை 6-3, 6-4, 6-3 என வென்றார். இவர் இரண்டாவது சுற்றில் ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைப்பரை சந்திக்கிறார்.

இது குறித்து சானியா கூறுகையில், கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஆண்கள் மற்றும் பெண்கள்  பிரிவு ஒற்றையர் போட்டியில் ஒரே சமயத்தில் இரண்டு இந்தியர்கள்  இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
 

குற்றவாளியின் விடுதலைக்கும் லிபியாவுக்கும் எவ்வித தொட்புமில்லையென்கிறது பிரிட்டன்

britain.jpgலொக்கர் பி விமானக் குண்டு வெடிப்பின் குற்றவாளி விடுதலையானமைக்கும் லிபிய அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

லிபியாவுடன் எண்ணெய்வள ஒப்பந்தத்தில் பிரிட்டிஷ் கைச்சாத்திட்ட பின்னர் இவர் விடுதலையானதாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

லொக்கர் பி விமானக் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட மொஹமட் அல்மெஹ்ராஹி ஒரு புற்று நோயாளி. இவர் இன்னும் சில மாதங்களில் மரணமடைவார் என வைத்தியர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளனர். இவரது கடைசிக் காலத்தை குடும்பத்துடன் கழிக்க வசதி செய்யும் நோக்குடன் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கருணை அடிப்படையில் இந்த விடயம் நோக்கப்பட வேண்டுமென பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

லண்டன் ஹித்ரோ விமான நிலையத்திலிருந்து 1988ம் ஆண்டு அமெரிக்கா நோக்கிச் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த 270 அமெரிக்கர்கள் பலியாகினர். இதற்கு லிபியாவைச் சேர்ந்த மொஹமட் அல் மெஹராஹி காரணம் எனக்குற்றம் சாட்டப்பட்டது.

ஏழு வருடங்கள் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் மருத்துவ பரிசோதனையில் மரணத்தை நெருங்கியுள்ள நோயாளி என ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின்னர் ஸ்கொட்லாந்த் சிறையிலிருந்து விடுதலையானார்.

தனது தாய்நாடான லிபியா சென்ற இவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. நான் மரணிப்பதற்காகவே வீடு செல்கிறேன் என சிறையிலிருந்து வெளியேறுகையில் மொஹமட் அல் மெஹ்ராஹி கூறியமை குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இலங்கைக்கு இரண்டாம் இடம்.

srilanka0000.jpgசர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசையின்படி இலங்கை அணி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக சம புள்ளிகளைப் பெற்று இந்தியாவுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டிருந்த இலங்கை,  நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை 2-0 எனும் விகிதத்தில் வெற்றியீட்டியதன் மூலம் மேலதிகமாக ஒரு புள்ளியைப் பெற்று இரண்டாம் ஸ்தானத்தை அடைந்துள்ளது.
 
ஐ.சி.சி.யின் புதிய டெஸ்ட் தரவரிசையின்படி 122 புள்ளிகளைப் பெற்றுள்ள தென்னாபிரிக்கா தொடர்ந்தும் முதலாம் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இலங்கை 120 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் 119 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றன.

இதேவேளை,  கிரிக்கெட் விளையாட்டில் முடிசூடா மன்னானாகக் கருதப்பட்ட அவுஸ்திரேலிய அணி நீண்ட காலத்துக்குப் பின் 4 ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அண்மையில் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் தோல்வியே அவுஸ்திரேலிய அணி பின்வரிசைக்குச் செல்லக் காரணமாகும்.

இலங்கை அணி எதிர்வரும் டெஸ்ட் போட்டிகளில் திறமையாக விளையாடி தொடர் வெற்றிகளை ஈட்டும் பட்சத்தில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப தடை விதிக்கும் விவகாரம்: மனு தாக்கல்

indian-cricket-team.jpgஇலங் கையில் உள்ள சிங்கள அரசு தமிழர்களை துன்புறுத்தி வரும் நிலையில், இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்க தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வக்கீல்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரை லேக் ஏரியாவில் வசித்து வரும் ஏ.ஜோயல் பவுல் அந்தோணி என்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இதுதொடர்பாக பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், இலங்கையில் வருகிற 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும் கலந்து கொள்கிறது. இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன. தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி பிரச்சினை இருந்த போது, அங்கு நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளவில்லை.

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பினால் சர்வதேச சமூகம் இந்தியாவை மதிக்காது. எனவே இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவுக்கான வக்காலத்தில் 513 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர். குறித்த மனு, இன்றைய தினம்,   சித்ரா வெங்கட்ராமன், துரைசாமி கொண்ட நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் குழுவினர்,  இது குறித்து மத்திய உள்துறை செயலர், வெளியுறவு செயலர், விளையாட்டு துறை செயலர், கிரிக்கெட் வாரியம் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட கடுழியச் சிறை : இலங்கை அரசுக்கு எதிராக உள்ளேயும் வெளியேயும் போர்க் கொடி : த ஜெயபாலன்

Hakeem SLMC Leaderபத்திரிகையாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகத்துக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் ஓகஸ்ட் 31ல் இருபது வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியதை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வன்மையாகக் கண்டித்துள்ளார். ”இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்குக் கிடைத்த பலத்த அடி – critical blow to freedom of expression in Sri Lanka” என அவர் இதனை வர்ணித்துள்ளார்.

ஓகஸ்ட் 31ல் லண்டனில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அ அமிர்தலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வில் நினைவுப் பேருரை வழங்குகையிலேயே அவர் இதனைத் தெரிவித்து இருந்தார். ‘அ அமிர்தலிங்ம் நினைவுப் பேருரை’ யை வழங்க ஓகஸ்ட் 29ல் லண்டன் வந்திருந்த சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவசரகாலச் சட்டத்தின் தேசிய பாதுகாப்பு விதிமுறைகள் அங்குள்ள மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுவதாக உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ள முதலாவது ஊடகவியலாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள தண்டணை இலங்கையின் நீதித்துறையை சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்துவதற்கு மிகுந்த வாய்ப்பை அளித்துள்ளது. சர்வதேச ஊடக அமைப்புகள் சர்வதேச உரிமை அமைப்புகள் மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன. ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு இலங்கை அரசு தண்டனை வழங்கியதற்கு எதிராக சர்வதேச ஊடக அமைப்புகள் சிறந்த ஊடகவியலாளருக்கான உயர் விருதுகளை ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கி அவரை கௌரவித்துள்ளதுடன் தங்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தி உள்ளன.

Hakeem_AndrewLove‘அ அமிர்தலிங்கம் நினைவுப் பேருரை’யில் மு கா தலைவர் இலங்கை அரசு மீதான தனது குற்றச்சாட்டை வைத்த போது பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் அன்ரூ லவ் ம் உடனிருந்தார். அன்ரு லவ் இலங்கைக்கான பிரித்தானிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்ரூ லவ் தனது கருத்துக்களை புரிந்தகொள்ள வேண்டும் என்ற வகையில் மு கா தலைவர் ஹக்கீம் தனது கண்டனத்தை ஆங்கிலத்திலேயே குறிப்பிட்டார். ”மிகவும் கரிய மேகங்கள் இலங்கைக்கு மேல் படிகின்றது. மிகவும் அபத்தான போக்கு ஒன்று உருவாகின்றது” என்ற அச்சத்தையும் மு கா தலைவர் ஹக்கீம் வெளியிட்டார்.

ஓகஸ்ட் 31ல் தண்டனை வழங்கப்பட்ட ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு ‘2009 International Press Freedom Award – சர்வதேச பத்திரிகைச் சுதந்திர விருது 2009’ யை வழங்கி உள்ளது அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Committee to Protect Journalists (CPJ) என்ற ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு. ”ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கப்பட்டு உள்ள தண்டனை எவ்வளவு மோசமானது என்பதனை வெளிக் கொண்டுவருவதற்காக அவருக்கு இவ்விருதினை அறிவித்து உள்ளோம்” என CPJ இயக்குநர் ஜோல் சைமன் தெரிவித்துள்ளார்.

2008 மார்ச் 7ல் ஜே எஸ் திஸ்ஸநாயகம் (45) பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் அவசரகால சட்டம் ஆகியவற்றின் விதிகளின் கீழ் சட்டமா அதிபரினால் திஸ்ஸநாயகத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. திஸ்ஸநாயகத்துக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தொடரப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியென மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2006 யூன் க்கும் 2007 யூன் க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குற்றங்கள் புரிந்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. கிழக்கு மாகாணத்தில் அரச படைகள் இனப்படுகொலைகளில் ஈடுபட்டதாக கட்டுரையை எழுதியது, அதனை வெளியிட்டது, அதன் மூலம் அரசபடைகளுக்கு அவதூறு ஏற்படுத்தியது, அதன் மூலம் இனங்களுக்கிடையே பகைமைய வளர்க்கத் திட்டமிட்டது என சட்டமா அதிபர் திஸ்ஸநாயகம் மீது குற்றம் சுமத்தி இருந்தார். 

ஜே எஸ் திஸ்ஸநாயகத்தால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரணசிங்க என்பவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயாதீனமாக வழங்கப்பட்டதென கொழும்பு மேல்நீதிமன்றம் ஏற்கனவே தீர்மானித்து. அதனை அடிப்படையாக கொண்டு ஜே எஸ் திஸ்ஸநாயக்துக்கு எதிரான வழக்கை விசாரணை செய்தது.  இதன்படி வழக்கு விசாரணை செய்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர, திஸ்ஸநாயகத்தின் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் 20 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

”இன்று திஸ்ஸநாயகம் என்னத்தை எழுதினாரோ பேசினாரோ அதையே அன்று அண்ணன் அமிர்தலிங்கமும் செய்தார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வலியுறுத்தி எழுதினார் பேசினார். அன்றைக்கு அதற்காக அண்ணன் அமிர்தலிங்கம் துன்புறுத்தப்பட்டார். அது தான் இன்றும் நடைபெறுகின்றது” என்று கூறிய மு கா தலைவர் ஹக்கீம் ”இலங்கை அரசியல்வாதிகளுடைய சிந்தனைமுறை மாறவில்லை. அவர்களுடைய நடத்தைகள் மாறவில்லை. ஆட்சியாளர்கள் மட்டுமே மாறி உள்ளனர்” எனக் குற்றம்சாட்டினார். மு கா தலைவரின் இக்கருத்திற்கு சபையோர் பலத்த கரகோசம் வழங்கி தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். 

ஜே எஸ் திஸ்ஸநாயகம் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அனில் டி சில்வா ”திஸ்ஸநாயகம் ஒரு இனவாதி அல்லவென்றும் சிங்கள மக்களுக்கு ஆதரவான வகையில் பல்வேறு போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளhர்” என்றும் தெரிவித்தள்ளார். ”அரசியல் அமைப்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் மட்டுமல்ல இனஇ மத ரீதியின்றியும் பாரபட்சமின்றியும் நியாயமானதொரு வழக்கு விசாரணைக்கு அதிகாரம் வழங்கியுள்ள போதிலும் அவருக்கு எதிரான வழக்கில் இந்த நியாயம் வழங்கப்பட்டதா என்பது ஒரு கேள்விக்குறியான விடயம்” என்றும் சட்டத்தரணி அனில் டி சில்வா நீதிமன்றத்தில் ஓகஸ்ட் 31ல் தெரிவித்துள்ளார். இத்தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாகவும் சட்டத்தரணி அனில் டி சில்வா தெரிவித்திருந்தார்.

Tissanayagam_S_Jஇவ்வாண்டு மே யில் இடம்பெற்ற உலக பத்திரிகைச் சுதந்திரதினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபர் வழங்கிய உரையில் ‘குறியீட்டு உதாரணமானவர்கள் – emblematic examples’ என்ற வரிசையில் இலங்கையில் ஜே எஸ் திஸ்ஸநாயகத்தை சுட்டிக்காட்டி இருந்தார். இன்று அவருக்கே இந்த 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை இலங்கை நீதிமன்றம் விதித்துள்ளது.

ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு தண்டனை வழங்கப்பட்டு சில மணி நேரங்களிற்கு ள்ளாகவே அதற்கு எதிரான கண்டனங்கள் வர ஆரம்பித்து உள்ளது. ஏற்கனவே யுத்தக் குற்றங்கள், மக்களை மனிதாபிமானமற்ற வகையில் முகாம்களில் தடுத்து வைத்திருப்பது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசு மீண்டும் தனது தவறான நடவடிக்கைக்காக உலக அளவில் பேசப்படுவதற்கு இடமளித்துள்ளது.

”ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழக்கப்பட்டுள்ள மிகக் கடுமையான தண்டனை, இலங்கை நீதிபதிகள் சிலர் பழிவாங்குவதையும் நீதியையும் போட்டுக் குழுப்புகின்றார்கள் என்ற தோற்றப்பாட்டைக் கொடுக்கின்றது” என Reporters Without Borders – எல்லைகளற்ற ஊடகவியலாளர் என்ற பிரான்சைத் தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் எல்லைகளற்ற ஊடகவியலாளர் Global Media Forum இணைந்து ‘Peter Mackler Prize’  என்ற விருதை ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கி உள்ளனர். இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இவ்விருது, ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கப்படாத நாடுகளில் தொழில் நேர்மையுடனும் துணிவுடனும் இயங்கும் ஊடகவியலாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

Tissanayagam_S_J_Arrest”ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்க வழங்கப்பட்ட தண்டனை கொடியது மனிதாபிமானமற்றது” என்று குற்றம்சாட்டியுள்ள International Federation of Journalists (IFJ) என்ற சர்வதேச ஊடக அமைப்பு, இலங்கை ஆட்சியாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை துஸ்பிரயோகம் செய்வதாகவும் விமர்சனங்களை மௌனிக்க வைக்கவே முற்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளது. இது பற்றி கருத்த வெளியிட்டுள்ள IFJ செயலாளர் ஏய்டன் உவைற் ”அரசாங்கத்தை பொறுப்பாக்கியதற்காகவும் சட்டபூர்வமான அல்லது விமர்சனமான குரலை வழங்கியதற்காகவும் ஜே எஸ் திஸ்ஸநாயகம் பாதிக்கப்பட்டு உள்ளார். இத்தண்டனை சீரற்றது கொடியது மனிதாபிமானமற்றது. இது சுயாதீனமான ஊடகவியலாளர்களுக்கு இலங்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை அபாயத்துடன் ஞாபகமூட்டுகின்றது” என்று தெரிவித்து உள்ளார்.

2007 முதல் இலங்கையில் எட்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இன்னும் பல மடங்காணோர் இலங்கையை விட்டு வெளியேறி உள்ளனர்.

எஸ் ஜே திஸ்ஸநாயகத்தின் இந்நிலைக்கு காரணமான எழுத்துக்கள்:

Providing security to Tamils now will define northeastern politics of the future It is fairly obvious that the Government is not going to offer them any protection. In fact it is the state security forces that are the main perpetrator of the killings.
 
July 2006, North Eastern Monthly

With no military options Government buys time by offering watered-down devolution Such offensives against the civilians are accompanied by attempts to starve the population by refusing them food as well as medicines and fuel.

November 2006, North Eastern Monthly

Source: Committee to Protect Journalists