கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஸ்னேகா கொடும்பாவி எரிப்பு

999sneha.jpgதிரு வண்ணாமலையில் நடிகை ஸ்னேகா செருப்பு அணிந்து கிரிவலம் போனதை கண்டித்து நாமக்கல்லில் இந்து மக்கள் கட்சியினர் ஸ்னேகாவின் கொடும்பாவியை எரித்தனர்.

சமீபத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் சென்ற இவர் காலில் செருப்பு அணிந்து சென்றார். இதையடுத்து இந்து மத அமைப்பினர் அவருக்கு செருப்புகளை பார்சல் அனுப்பி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதை தொடர்ந்து இந்து மக்கள் கட்சி போராட்டம்  நடத்தும் என கூறப்பட்டது. ஆனால், ஸ்னேகா தனக்கு காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால். வெறும் காலுடன் நடக்க முடியாது. அதனால் துணி செருப்பு போட்டு நடந்தேன் என விளக்கம் கொடுத்தார். இதை அடுத்து அந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால், இந்த விளக்கம் இந்து மக்கள் கட்சியின் அனுமன் சேனா பிரிவினரை சமாதானப்படுத்தவில்லை. அவர்கள் நாமக்கல்லில் மோகனூர் ரோட்டில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன் ஸ்னேகாவின் கொடும்பாவியை எரித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்ட கூட்டத்தினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் லேசான பதட்டம் ஏற்பட்டது.

சீன நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 35 பேர் பலி

999china.jpgசீனாவில் ஹனான் மாநிலத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் காஸ் வெடிப்பு ஏற்பட்டதில் 35 தொழிலாளிகள் பலியானார்கள். 44 பேரைக் காணவில்லை. காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுபற்றி அதிகாரிகள் விசாரித்து வருவதாகப் பீக்கிங் செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்து ஏற்பட்டபோது அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களில் 14 பேர் மட்டும் காயமின்றி உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு விதிமுறைகள் சரிவர கடைப்பிடிக்கப்படாததால், சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன என்றும் கடந்த ஆண்டு மட்டும் நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள் என்றும் கூறப்படுகின்றது.

இருபது ஓவர் போட்டிகளால் எனது திறமை மேம்பட்டுள்ளது: பிரெட்லீ

cricket_stadium.jpgஇருபது ஓவர் போட்டிகளில் விளையாடியதால் தனது பந்துவீச்சுத் திறன் மேம்பட்டுள்ளதாக ஆஸ்ட்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பிரெட்லீ அளித்துள்ள மின்னஞ்சல் பேட்டியில், இருபது-20 போட்டிகள் பந்து வீச்சாளர்களுக்கு அதிக நெருக்கடி கொடுக்கக் கூடிய போட்டி என்றாலும், இதில் விளையாடியதால் எனது பந்துவீச்சுத் திறன் மேம்ப்பட்டுள்ளது.

யார்க்கர், ஸ்லோ பால் மற்றும் ஸ்லோ-பாலில் பவுண்சர் வீசுவது உள்ளிட்டவை தற்போது எனக்கு அத்துபடியாகி விட்டது. இதேபோல் இருபது ஓவர் போட்டிகளில் பேட் செய்யும் போது முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளதாக பிரெட்லீ தெரிவித்துள்ளார். அக்டோபர் 8ஆம் தேதி இந்தியாவில் துவங்க உள்ள சாம்பியன்ஸ் லீக் இருபது-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நியூ சௌத் வேல்ஸ் அணியில் விளையாடுவதற்காக பிரெட்லீ இந்தியா வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

பயஸ், பூபதி இணைகள் இரட்டையர் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி

999bhupathi-knowles.jpgஅமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆடவர் இரட்டையர் காலிறுதி ஆட்டங்களில் லியாண்டர் பயஸ்-லூயி இணையும், மகேஷ் பூபதி-மார்க் நோல்ஸ் இணையும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.

4ஆம் தரவரிசையில் உள்ள பயஸ்-லூயி இணை, 7ஆம் தரவரிசையில் உள்ள பலமான தென் ஆப்பிரிக்க-பெல்ஜியம் இணையான வெஸ்லி மூடி, டிக் நார்மன் இணையை 6- 3, 5- 7, 6- 4 என்ற செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.

பயஸ்-லூயி இணை 7 டபுள் ஃபால்ட்களையும், 20 முறை கிரவுண்ட் ஷாட்களில் தவறையும் செய்தனர். இருப்பினும் வெற்றி பெற்றதற்கு காரணம் முதல் சர்வில் வெற்றி பெற்றது அதிகம். மேலும் தென் ஆப்பிரிக்க-பெல்ஜியம் இணையின தவறுகளை குறைவாக செய்தாலும் அந்த தவறுகள் முக்கியக் கட்டத்தில் நிகழ்ந்ததால் பயஸ்-லூயி இணை வெற்றி பெற்றது.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 3ஆம் தர நிலையில் உள்ள மகேஷ் பூபதி- மார்க் நோல்ஸ் இணை, தர நிலையில் இல்லாத குரேஷிய-பிரான்ஸ் இணையான லுபிசிச்-லோத்ரா இணையை 6- 4, 4- 6, 7- 6 என்ற செட்களில் சற்றே தட்டுத் தடுமாறி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.

இந்திய அணிக்கு கைகொடுத்த ஏர் இந்தியா

09-airways-99.jpgஜெட் ஏர்வேஸ் பைலட்டுகளின் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையிலிருந்து கொழும்பு செல்லவிருந்த பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளானார்கள். இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானம் ஒன்றை இயக்கி அவர்களை கொழும்பு அழைத்துச் சென்றது. ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள் வேலைநிறுத்தம் காரணமாக ஜெட் ஏர்வேஸ் சேவை முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக சென்னையிலிருந்து ஜெட் நிறுவனம் இயக்கும் எட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று கொழும்புக்கான விமானம். இந்த விமானம் இன்று ரத்து  செய்யப்பட்டதால், அதில் செல்லவிருந்த பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.

இதையடுத்து சென்னையிலிருந்து கொழும்புக்கு ஏர் இந்தியா நிறுவனம் கூடுதல் விமானத்தை இயக்கியது. சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் பயணிகள் இதில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதே விமானத்தில், ஜெட் வேலைநிறுத்தத்தில் சிக்கி கொழும்பு செல்ல வேண்டிய இந்திய கிரிக்கெட் அணியினரும் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த சிறப்பு கூடுதல் விமானம் இன்று முற்பகல் 11.45 மணிக்கு சென்னைக்கு வந்திருந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிற பயணிகளுடன் பெங்களூர் சென்றது. அங்கு தங்கியிருந்த சில வீரர்களை ஏற்றிக் கொண்டு 12.45 மணிக்கு கொழும்பு சென்றது.

இந்த விமானத்தில் சச்சின், ராகுல் டிராவிட், கம்பீர், இஷாந்த் சர்மா, பிரவீன் குமார், அமித் மிஸ்ரா, யூசுப் பதான், படேல், அபிஷேக் நாயர், திணேஷ் கார்த்திக், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரும், பயிற்சியாளர்களான ராபின் சிங், வெங்கடேஷ் பிரசாத், கேரி கிர்ஸ்டன் ஆகியோரும் பயணித்தனர்.

அமெரிக்க அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள்

manmohan_daughter.jpgஆப்கா னிஸ்தான் மற்றும் ஈராக்கில் பிடிபட்ட சிறை கைதிகளை கொடுமைப்படுத்தியது தொடர்பான ரகசிய ஆவணங்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் அம்ரீத் சிங், அமெரிக்க கோர்ட்டில் வாதாடி பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்ட கைதிகள் குவான்தனாமோ சிறையிலும்,  ஈராக்கில் கைது செய்யப்பட்ட கைதிகள் அபு கிரெய்ப் சிறையிலும் அடைக்கப்பட்டு அமெரிக்க ராணுவத்தினரால் பல்வேறு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்.  இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களான எப்.பி.ஐ., சி.ஐ.ஏ, போன்றவை பதிவு செய்த ஆவணங்கள் மற்றும் வீடியோ டேப்புகளை ஒப்படைக்கும் படி அமெரிக்க மனித உரிமை இயக்கம் நீண்ட நாட்களாக (ஏ.சி.எல்.யூ.,) கோரி வந்தது.

கியூபா நாட்டுக்கு அருகே உள்ள குவான்தனாமோ சிறை மற்றும் அபு கிரெய்ப் சிறையில் கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்ட அனைத்து விவரங்களையும் அளிக்கும்படி அமெரிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, ஏ.சி.எல்.யூ., இயக்கத்தில் உள்ள அமெரிக்க வக்கீலான மன்மோகன் சிங்கின் மகள் அம்ரீத் சிங்,  கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

சிறை கைதிகளுக்கு நேர்ந்த கொடுமை,  காவலில் இறந்த கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை அனைத்தையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்க வேண்டும்,  என ஏ.சி.எல்.யூ., நீண்ட நாட்களாக கோரி வந்தது.

இந்த அமைப்பின் சார்பில் அம்ரீத் சிங்கும்,  கனடா நாட்டைச் சேர்ந்த ஜமீல் ஜாபரும் கோர்ட்டில் வாதாடி,  ஒரு லட்சத்து 30 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்களை பெற்றுள்ளனர். இந்த ஆவணங்களை அரசிடமிருந்து போராடி பெறுவதற்கு ஒன்பது கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.  இந்த தொகையை அரசிடமிருந்து பெறவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே,  இரண்டு கைதிகளை கொடுமைப்படுத்தியது தொடர்பான வீடியோ டேப்புகளை எரித்து விட்டதாக சி.ஐ.ஏ.,  தெரிவித்துள்ளது. இது கோர்ட் அவமதிப்பு செயலாகும் என கூறும் அம்ரீத் சிங்,  இன்னும் வெளியிடப்படாத ஆவணங்களையும் ஒப்படைக்கும் படி கூறி வாதாடி வருகிறார். அமெரிக்கரை திருமணம் செய்து கொண்டுள்ள அம்ரீத் சிங்(40) யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் ‘வல்லினம்’ க‌லை இல‌க்கிய‌ விழா : ம‌.ந‌வீன்

Malasia_KalaiIlakkiyaVilaஅண்மையில் (29.08.09) வ‌ல்லின‌ம்இத‌ழ் ஏற்பாட்டில் ‘க‌லை இல‌க்கிய‌ விழா’ சிற‌ப்பாக‌ ந‌டைப்பெற்ற‌து. தான் சிரி சோமாஅர‌ங்கிலும் ம‌ண்ட‌ப‌த்திலும் ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ளை உள்ள‌ட‌க்கியிருந்த‌ இந்த‌ விழாவின் முத‌ல் அங்க‌மாக‌ ஓவிய‌ர் ச‌ந்துருவின் ஓவிய‌ க‌ண்காட்சியும் ஸ்டார் க‌ணேச‌னின் நிழ‌ல்பட‌ க‌ண்காட்சியும் பார்வையாள‌ர்களைக் க‌வ‌ர்ந்த‌து. ஓவிய‌ர் ச‌ந்துரு இந்நிக‌ழ்வுக்கென‌ பிர‌த்தியேக‌மாய் வ‌ரைந்த‌ தோட்ட‌ப்புற‌ வாழ்வு சார்ந்த‌ காட்சிக‌ள் ப‌ல‌ரையும் ந‌ம‌து சுவ‌டுக‌ளை மீட்டுண‌ர‌ உத‌விய‌து. ஸ்டார் க‌ணேச‌னின் அற்புத‌மான‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் அவ‌ரின் ப‌த்திரிகைத் துறையைத் த‌விர்த்து அவ‌ர் கொண்டிருக்கும் ஆத்மார்த்த‌மான‌ க‌லையுண‌ர்வை வெளிப‌டுத்திய‌து.

நிக‌ழ்விற்குத் த‌லைமையேற்ற‌ தேசிய‌ நில‌ நிதி கூட்டுற‌வு ச‌ங்க‌த்த‌லைவ‌ர் ட‌த்தோ.ச‌காதேவ‌ன் ம‌ற்றும் சிற‌ப்பு வ‌ருகை புரிந்த‌ கொடை நெஞ்ச‌ர் ர‌த்ன‌வ‌ள்ளி அம்மையார் முறையே ஓவிய‌ர் ச‌ந்துருவின் ஓவிய‌த்தையும் ‘ஸ்டார்’க‌ணேச‌னின் நிழ‌ல்ப‌ட‌த்தையும் திற‌ந்து வைத்த‌ன‌ர். இந்நிக‌ழ்வின் இவ்விரு க‌லைஞ‌ர்க‌ளும் த‌ங்க‌ள் க‌லைப் ப‌ய‌ண‌த்தைப் பார்வையாள‌ர்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர்.
 
இர‌ண்டாவ‌து அங்க‌ம் தான்சிரி சோமா அர‌ங்கில் ந‌டைப்பெற்ற‌து. நிக‌ழ்வின் ஏற்பாட்டாள‌ரான‌ ம‌.ந‌வீன் த‌ம‌து வ‌ர‌வேற்புரையில் ச‌ம‌ர‌ச‌ங்க‌ள் இன்றி வ‌ல்லின‌ம் த‌ன‌து பாதையில் செல்வ‌தையும் அத‌ன் ப‌ய‌ண‌ம் வேறொரு ப‌ரிணாம‌த்தை அடைந்துள்ள‌தையும் சுட்டிக்காட்டினார். நிக‌ழ்வின் முக்கிய‌ப் புர‌வ‌ல‌ரான‌ திரு.ராம‌கிருஷ்ண‌ன் வ‌ல்லின‌ம் தொட‌ர்ந்து சிற‌ப்பாக‌ ப‌ய‌ணிக்க‌ வேண்டும் என‌ வாழ்த்தி அம‌ர்ந்தார். வ‌ல்லின‌ம் வ‌ள‌ர்ச்சிக்குப் பெரும் ப‌ங்காற்றிய‌ டாக்ட‌ர்.ச‌ண்முக‌சிவா சிற்றித‌ழ்க‌ளின் தோல்விதான் அத‌ன் வெற்றி என்றார். ஒரு சிற்றித‌ழ் உருவாகும்போதே அதுத‌ன் ம‌ர‌ண‌த்தைத் தீர்மாணித்த‌ப் ப‌டிதான் உருவாகிற‌து என்றார்.

‘க‌விதை திற‌னாய்வு’ க‌ட்டுரையை வாசிக்க‌ வேண்டியிருந்த‌ ஜாசின் ஏ.தேவ‌ராஜ‌ன் த‌விர்க்க‌ முடியாத‌ கார‌ண‌ங்க‌ளால் வ‌ர‌முடியாம‌ல் போக‌வே அவ‌ர‌து க‌ட்டுரை ம‌ட்டும் க‌விஞ‌ர்.ப‌ச்சைபாலனால் வாசிக்கப்ப‌ட்ட‌து. எழுதிய‌வ‌ர் இல்லாததால் விவாத‌ங்க‌ளும் ந‌டைப்பெற‌வில்லை.

தொட‌ர்ந்து வ‌ல்லின‌த்தில் இட‌ம்பெற்ற‌ சிறுக‌தைகளை ஒட்டி யுவ‌ராஜ‌ன் விம‌ர்ச‌ன‌ம் செய்தார். சுருக்க‌மான‌ தீவிர‌மான‌ அவ‌ர் விம‌ர்ச‌ன‌ம் ப‌ல‌ரிட‌மிருந்து அதிருப்தி அலையை ஏற்ப‌டுத்திய‌து. ப‌ல‌ருக்கு விம‌ர்ச‌ன‌ம் புரிய‌வில்லை என்ப‌தும் உண்மை. ம‌ர‌பான‌ விம‌ர்ச‌ன‌த்தில் இருந்து வில‌கி யுவ‌ராஜ‌ன் த‌ன்னைக் க‌வ‌ர்ந்த‌ க‌தைக‌ளை ம‌ட்டும் தேர்ந்தெடுத்து அதின் மைய‌த்தை ப‌ற்றி உருவிபேசிய‌து ம‌லேசியத் த‌மிழ் இல‌க்கிய‌த்திற்குப் புதுமை.

ஒரு ம‌ணிநேர‌ உண‌வு இடைவேளைக்குப் பிற‌கு மூன்றாவ‌து அங்க‌ம் தொட‌ங்கிய‌து.

எழுத்தாள‌ர் கோ.முனியான்டி அவ‌ர்க‌ளால் அம‌ர‌ர்.எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன் அவ‌ர்க‌ளுக்கு அஞ்ச‌லி செலுத்த‌ப்ப‌ட்ட‌து.29.09.09 எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌னின் நினைவுநாள் என்ப‌து அப்போதுதான் ப‌ல‌ருக்கும் தெரிந்த‌தும் ம‌லேசியாவில் புத்தில‌க்கிய‌ம் வ‌ள‌ர‌ வேண்டும் என‌ ஆவ‌ல் கொண்டு செய‌ல்ப‌ட்ட‌ அவ‌ரின் நினைவு நாளில் ‘க‌லை இல‌க்கிய‌ விழா’ ந‌டைப்பெற்ற‌து த‌ற்செய‌லான‌ இன்ப‌ம்.

ம‌.ந‌வீனின்க‌விதை தொகுதியான‌ ‘ச‌ர்வ‌ம் ப்ர‌ம்மாஸ்மி’ புத்த‌க‌த்தை ஆதி.இராஜ‌குமார‌ன் அவ‌ர்க‌ள் வெளியிட‌ ம‌.ந‌வீன் பெற்றோர்க‌ள் பெற்றுக்கொண்ட‌ன‌ர். இபா.அ.சிவ‌த்தின் மொழிப்பெய‌ர்ப்புக் க‌விதையான‌ ‘பின்ன‌ர் அப்ப‌ற‌வை மீண்டும் திரும்பிய‌து’ நூலை எழுத்தாள‌ர் கோ.முனியான்டிவெளியிட‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ம‌திய‌ழ‌க‌ன் பெற்றுக்கொண்டார். இமஹாத்ம‌னின் சிறுக‌தையான‌ ‘ம‌ஹாத்ம‌ன் சிறுக‌தைக‌ள்’ நூலினை எழுத்தாளர் சீ.முத்துசாமி வெளியிட‌ ம‌ஹாத்ம‌னின் தாயார் பெற்றுக் கொண்டார். தொட‌ர்ந்து நூல் திற‌னாய்வு ந‌டைப்பெற்ற‌து. ம‌.ந‌வீனின் நூலை பா.அ.சிவ‌மும் மாஹாத்ம‌னின் நூலை சிவா பெரிய‌ண்ண‌னும் சிவ‌த்தின் நூலை சீ.அருணும் முறையே ஆய்வு செய்த‌ன‌ர். அவ்வ‌ம‌ர்வில் சிங்கை இள‌ங்கோவ‌னின் உரையும் இட‌ம்பெற்ற‌து. அதிகார‌த்துக்கு முன் இல‌க்கிய‌வாதி அடிமையாக‌க் கூடாது என்ப‌திலிருந்து அவ‌ருக்கே உரிய‌ தீவிர‌த்துட‌ன் உரையை கூர்மைப்ப‌டுத்துனார்.

நிக‌ழ்வின் இடைவெளியாக‌ மீண்டும் அரை ம‌ணிநேர‌ம் தேநீருக்காக‌ ஒதுக்க‌ப்ப‌ட்டு நான்காம் அங்க‌ம் த‌யாரான‌து. 

அடுத்த‌ அம‌ர்வில் ‘வ‌ல்லின‌ம்’காலாண்டித‌ழ் மாத‌ இத‌ழாக‌ அக‌ப்ப‌க்க‌மாக‌ வெளியீடு க‌ண்ட‌து. வ‌ழ‌க்க‌றிஞ‌ரும் ச‌மூக‌ அக்க‌றை மிகுந்த‌வ‌ருமான‌ ப‌சுப‌தி அவ‌ர்க‌ள் ச‌மூக‌ விழிப்புண‌ர்வு மிக்க‌த் த‌ம‌து உரைக்குப்பின் அக‌ப்ப‌க்க‌த்தை வெளியீடு செய்தார். http://vallinam.com.my/ எனும் முக‌வ‌ரியில் இய‌ங்கும் வ‌ல்லின‌ம் இணைய‌ இத‌ழ் இனி மாத‌ம் தோறும் புதுப்பிக்க‌ப்ப‌டும் என‌ அறிவிக்க‌ப்ப‌து. 

இறுதி அங்க‌மாக‌ சிங்கை இள‌ங்கோவ‌னின் ‘மிருக‌ம்’ நாட‌க‌ம் ஒளித்திரைவ‌ழியாக‌ அர‌ங்கேற்ற‌ம் க‌ண்ட‌து.சிங்க‌ப்பூருக்கு வ‌ந்து சேரும் த‌மிழ‌க‌த் தொழிலாளிக‌ளால் சிங்கைவாசிக‌ள் குறிப்பாக‌த் த‌மிழ‌ர்க‌ள் அடையும் பாதிப்புகளை அது எடுத்து இய‌ம்பிய‌து. காத்திர‌மான‌ அந்நாட‌க‌த்தால் ப‌ல‌ர் அதிர்ச்சிக்குள்ளானார்க‌ள். சில‌ர் நாட‌க‌த்தை நிறுத்தும்ப‌டியும் கூச்ச‌லிட்ட‌ன‌ர். ஒன்ற‌ரை ம‌ணி நேர‌ நாட‌க‌மான‌ ‘மிருக‌ம்’ நிறைவு க‌ண்ட‌தோடு நிக‌ழ்வும் முடிவுற்ற‌து சில‌ ப‌த‌ற்ற‌ங்க‌ளோடும்… சில‌ அதிர்ச்சிக‌ளோடும்… புத்துண‌ர்வோடும்.

முரண்பாடுகள் பேச்சுவார்த்தைகளூடாக தீர்க்கப்படுமென்கிறார் ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் தலைவர்

japan-new-pri.jpgஅரசாங் கத்தை அமைப்ப தற்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஓரிரு தினங்களில் வெற்றிகரமாக முடிவடையு மென ஜப்பான் ஜனநாய கக் கட்சியின் தலைவர் யுகியோ ஹற்றோயாமா தெரிவித்தார்.  இவர் எதிர் வரும் 16 ஆம் திகதி பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனநாயகக் கட்சி ஐம்பது வருடங்களின் பின் ஆட்சியைக் கைப்பற்றியது. அரசாங்கத்தை அமைப்பதற்காக இரண்டு கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வரும் யுகியோ ஹற்றோயாமா அமைச்சரவை நியமனங்கள் பற்றியும் அக்கறை காட்டுகின்றார்.

வெளிநாட்டுக் கொள்கை பாதுகாப்பு போன்ற முக்கிய விடயங்களில் சோசியல் சமூகக் கட்சியும் மக்கள் புதிய கட்சியும் வேறு பட்ட நிலைப்பாட்டிலுள்ளன. இவ்விரண்டு கட்சிகளையும் சேர்த்தே புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிவடையாததால் அமைச்சர்களின் நியமனங்களை ஒத்திவைக்கும்படி ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

சோசியல் சமூகக் கட்சி, மக்கள் புதிய கட்சியின் ஆதரவின்றி ஜப்பான் பாராளுமன்றத்தின் மேல்சபையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது. எனவே இவ்விரண்டு கட்சிகளின் கோரிக்கைகளையும் ஏற்க வேண்டிய நிலையில் பிரதான கட்சியான ஜனநாயகக் கட்சியுள்ளது. பாராளுமன்றத்தின் கீழ் சபையில் போதியளவு பெரு ம்பான்மை இக்கட்சிக்கு ள்ள போதும் மேல் சபை யில் இவ்விரண்டு சிறிய கட்சிகளின் ஆதரவும் தேவை ப்படுகின்றது.

சோமாலியக் கடற் கொள் ளையர்களைத் தோற்கடிக் கும் பணியில் ஈடுபட்டுள்ள இரண்டு ஜப்பான் கப்பல் களை திருப்பி அழைத்து அவற்றுக்குப் பதிலாக காவ ற்படகுகளை அனுப்புமாறும் ஆப்கானிலுள்ள அமெரிக்கப் படைகளுக்கு எரிபொருள் வழங்க இந்து சமுத்திரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலை 2010 ஜனவரியில் மீள அழைக்கும் படியும் அக்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இவ்வொப்பந்தங்கள் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைவதால் இவற்றை மீண்டும் புதுப்பிக்கக் கூடாதென்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளதுடன் இது குறித்து எழுத்து மூலம் உறுதிப்படுத்த வேண்டுமென் றும் நிபந்தனை விடுத்துள்ளன. இவை அனைத்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டு ஓரிரு நாட்களில் இணக்கம் காணப் படுமென பிரதமராகப் பதவி யேற்கவுள்ள யுகியோஹற் றோயாமா நம்பிக்கை தெரிவித்தார்.

இராக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கப் படையினர் நால்வர் பலி

இராக்கின் பல இடங்களில் இடம் பெற்றுள்ள பல சாலையோர தொடர் குண்டு வெடிப்புகளில், நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் மற்றும் எட்டு இராக்கிய போலீசார் ஆகியோர் பலியாகியுள்ளனர்.

அந்நாட்டின் வடபகுதியில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமது துருப்பினர் நாட்டு வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இலக்கான போது மூவரும், தெற்கு பாக்தாதில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவரும் பலியாகியுள்ளதாக அமெரிக்க இராணுவம் கூறுகிறது

இதே போன்று வட இராக்கில் இடம் பெற்ற ஒரு குண்டுத் தாக்குதலில் அந்த நகரின் போலீஸ் தலைவரும் அவரது மூன்று சகாக்களும் பலியாகியயுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பு கிர்குக் நகருக்கு அருகில் இடம் பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் இருக்கும் எண்ணெய் வளங்களை கட்டுப்படுத்தவும், அதிகாரத்தை கைப்பற்றவும் இராக்கிய குருதுகள், அரபுகள் மற்றும் துர்குமான்கள் ஆகியோர்கள் போட்டியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விமானிகள் வேலைநிறுத்தத்தால் பயணிகள் தவிப்பு – விமான சேவைகள் ரத்து

abu-dhabi-flight.jpgஇந்தியாவின் தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஓட்டிகளின் வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரக்காண பயணிகளின் பல விமான நிலையங்களில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தங்களது சகாக்கள் இருவர் தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பித்த காரணத்துக்காக கடந்த மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நிறுவனத்தின் ஆயிரம் விமான ஓட்டிகளில் அறுநூறுக்கும் அதிகமானவர்கள் உடல் நலக் குறைவு என்று கூறி பணிக்கு வரவில்லை.

இந்தியாவின் மிகப்பெரும் விமான நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸின் மூன்றில் ஒரு பங்கு அளவிலான விமானங்கள் இன்று செவ்வாய்கிழமை ரத்து செய்யப்பட்டன.

பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களது இரு சகாக்களும் மீண்டும் பணியில் அமர்த்தப்படும் வரையில் தங்களது வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஓட்டிகள் கூறுகிறார்கள்.

இந்தியாவின் முக்கிய இடங்களுக்கும், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் தனது விமான சேவையை நடத்துகிறது.