கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடு மறைய கல்வி ஒன்றே ஆயுதமாக இருக்க முடியும் – ராகுல்காந்தி

100909-rahul.jpgதமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் கலையரங்கின் நுழைவுவாயிலில் மாணவி ஷிரீன் பாத்திமா பொன்னாடை போர்த்தி ராகுல் காந்தியை வரவேற்றார். அரங்கின் உள்ளே சென்றதும் துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் பொன்னாடை போர்த்தினார். பின்னர் கலந்துரையாடல் தொடங்கியது. முதலில் ராகுல்காந்தி மாணவ-மாணவிகளிடம் பல கேள்விகளை கேட்டார். அதற்கு அவர்கள் பதில் அளித்தனர்.

பின்னர் மாணவ-மாணவிகளும் ராகுல்காந்தியிடம் கேள்வி கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது.

மாணவ, மாணவிகள் மத்தியில் ராகுல் காந்தி  பேசுகையில், இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாக இளைஞர்கள்தான் உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் இளைஞர்கள் 48 சதவீதம் உள்ளனர். உலகின் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்று அதிக இளைஞர்களை காண முடியாது.

இவர்களில் 7 சதவீதம் பேர் தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கடினமாக உழைக்கும் திறன், புதியவற்றை கண்டுபிடிக்கும் திறமை, எதையும் சாதிக்கும் திறன் படைத்தவர்கள். அவர்கள் வசதி படைத்தவர்களும் உள்ளனர். ஏழைகளும் இருக்கிறார்கள். கல்வி கற்பதன் மூலமே வறுமையை ஒழிக்க முடியும். வளமாகவும் வாழ முடியும்.

உயர்கல்வி படிக்கும் 7 சதவீதம் பேர்களை ஒரு இந்தியாவாகவும், உயர்கல்வி படிக்காத மீதமுள்ள 93 சதவீதம் பேர்களை மற்றொரு இந்தியாவாகவும் பார்க்கிறேன். உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளன. கிராமத்து மக்களுக்கு போதுமான சாலை வசதி, பஸ் வசதி, மின்சார வசதி, தகவல் தொடர்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன.

இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கான பாதையில்தான் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு கிராமப்புறங்களில் பல கட்டமைப்பு வசதி இன்னும் குறைவாக உள்ளதால் விவசாய பொருட்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவு அதிகமாக உள்ளது. எனவே, அவர்களுக்கும் உற்பத்தி செலவை குறைக்க இந்த கட்டமைப்பு வசதிகள் உதவும். விவசாயத்தை எல்லோரும் ஊக்கப்படுத்த வேண்டும்.

நன்கு படித்தவர்கள் படிக்காத மற்றவர்கள் படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். அதோடு படிப்புக்கு உதவியும் செய்ய வேண்டும். ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடு மறைய கல்வி ஒன்றே ஆயுதமாக இருக்க முடியும் என்பதுதான் உண்மை.

எனவே, இரு வேறு இந்தியாவாக இல்லாமல் 100 சதவீதம் பேரும் உயர்கல்வி கற்கும் நிலையை இந்தியா அடைய வேண்டும். அதற்கு உங்களைப் போன்ற இளைஞர்களின் ஒத்துழைப்பு தேவை.

நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த எழுத்தறிவு மற்றும் கல்வி தரத்தை விட இப்போது அதிகம் உயர்ந்துள்ளது. அது மட்டுமல்ல, மாணவர்களே, உங்கள், தாத்தா-பாட்டி காலத்தில் இல்லாத வசதி வாய்ப்புகளை உங்கள் தாய், தந்தையர் பெற்றிருப்பார்கள்.

உங்கள் தாய், தந்தையர் பெற்றிருக்காத வசதியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதுவும், சிறப்பு வாய்ந்த இந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் நீங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  உண்மையிலேயே நாட்டில் நடக்கும் ஊழலுக்கு அரசியல் வாதிகள் மட்டுமே காரணம் என்பதை ஏற்க முடியாது

அரச சாகித்திய விருதுகள்

இவ்வாண்டுக்கான இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் தங்க விருது பேராசிரியர் க. குணராசாவுக்கு (செங்கை ஆழியனுக்கு) வழங்கப்பட்டுள்ளது. சிங்களப் பிரிவில் கலாநிதி திஸ்ஸ காரியவசம் மற்றும் ஆங்கில பிரிவில் கலாநிதி ஆஷ்லி கல்பே ஆகிய இருவருக்கும் இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத் துறையில் அவர்கள் ஆற்றிய சேவையை கெளரவிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. பரிசுத் தொகையாக ரூ. 75,000/- இவர்களுக்கு வழங்கப்படும்.

நேற்று கலாசார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இத்தகவல் வெளியிடப்பட்டதோடு இவ்வாண்டு சாகித்திய பரிசுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதில், எட்டுப் பிரிவுகளில் தமிழ் நூல்களும் அவற்றின் படைப்பாளர்களின் பெயர்களும் அடங்கும். ஒவ்வொரு துறையிலும் இருவரின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

14ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும் வைபவத்துக்கு இவர்கள் அழைக்கப்படுவர். அங்கேயே பரிசு எவருக்கு என்பது தெரிவு செய்யப்பட்டு ஒருவருக்கு விருதும் மற்றவருக்கு சான்றிதழும் வழங்கப்படும் என இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

நாவல் இலக்கியம்: விதி வரைந்த பாதையில் – வவுனியர் இரா உதயன்

வயலான் குருவி – அkஸ் எம். பாயிஸ், அக்கரைப்பற்று

சிறுகதை இலக்கியம் : ஆத்ம விசாரம் – அ. ச. பாய்வா, மட்டக்களப்பு

உடைந்த கண்ணாடி மறைந்த குருவி – ஓட்டமாவடி அரபாத்

கவிதை : என்னைத் தீயில் எறிந்தவள் – அஷ்ரப் சிகாப்தீன்

வேறுடன் பிடுங்கிய நாளிருந்து – நீ. பி. அருளானந்தம், கல்கிசை

நாடக இலக்கியம் : ஒரு கலைஞனின் கதை – கலைஞர் கலைச்செல்வன்

வீர வில்லாளி – எஸ். முத்துக்குமாரன் – மட்டக்களப்பு

சிறுவர் இலக்கியம் : பூனைக்கு மணி கட்டிய எலி- சி. எம். எம். ஏ. அமீன்

குட்டி முயலும் சுட்டிப் பயலும் ஓ. கே. குணநாதன், மட்டக்களப்பு

நானவித இலக்கியங்கள் : கர்மயோகி பவுல் – வண. கலாநிதி எஸ். ஐ. மத்தியு, கல்முனை

மட்டக்களப்பு கோவில்களும் தமிழர் பண்பாடும் – எஸ். தில்லைநாதன், மட்டக்களப்பு

மொழிபெயர்ப்பு இலக்கியம் : நெடும் பயணம் – மடுளுகிரியே விஜயரத்ன

குருதட்சனை – திக்குவளை கமால்

சிறுவர் இலக்கிய மொழிபெயர்ப்பு : சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு – சரோஜனி அருணாசலம்

விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு

09-airways-99.jpg3  நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மும்பாய் செல்வதற்கு விமானக் கட்டணம் ரூ.4,000/- மட்டுமே. இது அதிகபட்சக் கட்டணம். ரூ.3,500க்கு கூட செல்லும் வசதி இருந்தது. இன்று விமானத்தில் சென்னையில் இருந்து மும்பாய் செல்ல குறைந்த பட்ச கட்டணம் ரூ.17,000

சென்னையில் இருந்து ஒவ்வொரு நாளும் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு அதிக சேவைகளை இயக்கிவந்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவை, அதன் விமானிகளின் வேலை நிறுத்தத்தால் முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. ஜெட்-ஏர்வேஸ் சார்பில் சென்னையில் இருந்து மட்டும் தினமும் 17 விமானங்கள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்தது. தற்போது விமானிகள் வேலைநிறுத்தம் காரணமாக இந்த 17 விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டு விட்டது.

ஜெட் விமானிகள் வேலை நிறுத்ததால் நாடு முழுவதும் ஜெட்-ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஸ்பைஸ்ஜெட், ஏர்-இந்தியா, கிங்-ஃபிஷர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் விமான சேவைக் கட்டணத்தை ஒரே நாளில் பல மடங்கு வரை உயர்த்தியுள்ளன.

ஐந்தே ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியும் – ராகுல் காந்தி.

100909-rahul.jpgதமிழக இளைஞர் காங்கிரஸார் கடுமையாகவும், தீவிரமாகவும் பாடுபட்டால் ஐந்தே ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி. தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நேற்று மாலை சென்னைக்கு வந்தார். நான்கு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் மாணவர்களிடையே பேசினார். பின்னர் காமராசர் அரங்கத்தி்ல நடந்த கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸாருடன் பேசினார். பின்னர் பத்திரிக்கை நிறுவன அதிபர்கள், ஆசிரியர்களுக்குப் பேட்டி அளித்தார். அதேபோல சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துப் பேசியதாவது..

உங்களிடமுள்ள எழுச்சி கட்சியை மேலும் வளர்ப்பதற்கான நம்பிக்கையை கொடுத்து உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, இளைஞர் காங்கிரசார் கையில் கட்சியை ஒப்படைக்கிறேன். காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது என்றும், மக்கள் நலனுக்கான பணிகளில் ஈடுபடவில்லை என்றும் சொல்கிறீர்கள். நான் அடிக்கடி தமிழகத்துக்கு வரவேண்டும் என்றும் தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறீர்கள். மக்களுக்கு சேவை செய்வதற்காக இளைஞர் காங்கிரசார் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். மக்கள் நலப்பணிகளுக்காக உரத்த குரல் கொடுக்க வேண்டும். மக்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் இளைஞர் காங்கிரசாரின் பணிகள் அமைய வேண்டும்.

40 ஆண்டுகளாக இங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கமுடியவில்லை. இளைஞர் காங்கிரசார் மக்கள் நலப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டால் தமிழ்நாட்டில் நிச்சயம் ஐந்தே ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும். கட்சியை பலப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நான் எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகத்துக்கு வரத் தயாராக இருக்கிறேன். மத்திய அரசின் மக்கள் நலனுக்கான திட்டங்களை கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் சென்றடையும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளுங்கள்.

கட்சிக்குள் எழுந்துள்ள கோஷ்டி பூசல்கள் பற்றி குறிப்பிட்டீர்கள். விரைவில் கோஷ்டி பூசல்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகள் முடிந்ததும், பஞ்சாயத்து அளவில் இருந்த நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முறைப்படியான தேர்தலுக்குப்பின் கோஷ்டி பூசல்கள் இருக்காது. இதேபோல், தலைவர்கள் பெயர்களில் தொடங்கப்பட்டு உள்ள பேரவைகளும் கலைக்கப்படும்.

திமுக, அதிமுக கட்சிகளின் பலத்தைப்பற்றி குறிப்பிடுகிறீர்கள். தமிழ்நாட்டு மக்கள் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு  செயல்படுத்திவரும் திட்டங்களை கடைக்கோடியில் உள்ள பாமர மக்களும் உணரும் வகையில் இளைஞர் காங்கிரசார் பிரசாரம் செய்தால், நம் பலம் மக்கள் மத்தியில் பிரகாசிக்கும். அதைக் கருத்தில் கொண்டு உங்கள் பணிகளை அமைத்துக் கொள்ளுங்கள் என்றார் ராகுல்.

சென்னை வந்தும் கருணாநிதியை சந்திக்காத ராகுல்

karunanithi.jpgசென்னைக்கு வந்தும் கூட திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியை, ராகுல் காந்தி சந்திக்காமல் புறக்கணித்திருப்பதால், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தமிழகம்  வந்துள்ளார். பல்வேறு ஊர்களுக்குச் சென்று இளைஞர் காங்கிரஸார் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரை சந்தித்துப் பேசியுள்ளார்.

நேற்று சென்னைக்கு வந்து  இரவு சென்னையில் தங்கினார். ஆனால் முதல்வர் கருணாநிதியை அவர் சந்திக்கவில்லை. இது திமுகவினரை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. வழக்கமாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் யாராவது சென்னை க்கோ அல்லது தமிழகத்திற்கோ வந்தால் மறக்காமல் கருணாநிதியை சந்திப்பது வழக்கம். சத்தியமூர்த்தி பவனுக்குப் போகிறார்களோ இல்லையோ, கோபாலபுரத்திற்குப் போகத் தவற மாட்டார்கள்.

ஆனால் மிக முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, மரியாதை நிமித்தமாகக் கூட கருணாநிதியை சந்திக்காதது திமுகவினரை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாம்.

ராகுல் காந்தி கருணாநிதியை சந்திக்க இதுவரை நேரம் கேட்டு காங்கிரஸ்  தரப்பில் தங்களை யாரும் அணுகவில்லை என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது. இன்றுடன் ராகுல் காந்தியின் தமிழக பயணம் முடிவடைவதால், கருணாநிதியை ராகுல் சந்திக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

முதல்வர்  கருணாநிதியை ராகுல் காந்தி  ஏன் சந்திக்கவில்லை என்று தெரியவில்லை. அதேசமயம், நேற்று பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு ராகுல் பேட்டி அளித்தபோது திமுகவுடன் நல்ல உறவு உள்ளது. மூத்த தலைவரான கருணாநிதியை நான் பலமுறை சந்தித்துள்ளேன். பல வழிகளில் என்னை அவர் வெகுவாக கவர்ந்துள்ளார் என்று பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி : ஆஸ்ட்ரேலியா வெற்றி

999cri.jpgநேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணி 6 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 7 போட்டிகள் கொண்ட நாட்-வெஸ்ட் தொடரில் 3-0 என்ற போட்டிக் கணக்கில் ஆஸ்ட்ரேலியா முன்னிலை பெற்றுள்ளது. ஸ்கோர் விபரம் வருமாறு

NatWest Series [Australia in England] – 3rd ODI

England v Australia

Australia won by 6 wickets (with 9 balls remaining)
ODI no. 2885 | 2009 season
Played at The Rose Bowl, Southampton
9 September 2009 – day/night (50-over match)
       
 England innings (50 overs maximum)
 AJ Strauss c Clarke b Hauritz  63 
 RS Bopara  c Hopes b Bracken  10
 MJ Prior†  c Hopes b Johnson  0
 OA Shah  lbw b Johnson  8
 PD Collingwood  c Bracken b Watson  28
 EJG Morgan  c Johnson b Lee  43 
 LJ Wright  c sub (AC Voges) b Hopes  9
 TT Bresnan  not out  31 62 37 3 0 83.78
  GP Swann  lbw b Watson  3 
 RJ Sidebottom  c White b Watson  24 
 Extras (lb 1, w 4, nb 4) 9     
      
 Total (9 wickets; 50 overs) 228 (4.56 runs per over)
 Did not bat JM Anderson 
Fall of wickets1-41 (Bopara, 7.5 ov), 2-41 (Prior, 8.4 ov), 3-62 (Shah, 14.5 ov), 4-98 (Strauss, 22.3 ov), 5-132 (Collingwood, 31.4 ov), 6-147 (Wright, 35.4 ov), 7-183 (Morgan, 42.3 ov), 8-188 (Swann, 43.3 ov), 9-228 (Sidebottom, 49.6 ov) 
        
 Bowling    B Lee 9 1 58 1 
 NW Bracken 10 0 36 1
 MG Johnson 10 1 39 2  
 NM Hauritz 6 0 24 1 
 SR Watson 8 0 36 3

Australia innings (target: 229 runs from 50 overs)
 SR Watson  lbw b Anderson  7 
 TD Paine†  lbw b Collingwood  29 
 CL White  c Sidebottom b Wright  105 
 MJ Clarke*  b Swann  52
 CJ Ferguson  not out  20  
 MEK Hussey  not out  8  
 Extras (b 1, lb 2, w 6) 9     
      
Total (4 wickets; 48.3 overs) 230 (4.74 runs per over)
Did not bat JR Hopes, MG Johnson, B Lee, NM Hauritz, NW Bracken 
Fall of wickets1-16 (Watson, 4.6 ov), 2-52 (Paine, 13.3 ov), 3-195 (Clarke, 43.4 ov), 4-220 (White, 47.2 ov) 
        
 Bowling
 JM Anderson 9.3 1 52 1
 RJ Sidebottom 10 1 39 0
 TT Bresnan 10 1 46 0  
  PD Collingwood 7 0 39 1 ) 
  LJ Wright 7 1 16 1
 GP Swann 5 0 35 1
 
Match details
Toss England, who chose to bat
Series Australia led the 7-match series 3-0
Player of the match CL White (Australia)
Umpires PJ Hartley and AL Hill (New Zealand)
TV umpire RA Kettleborough
Match referee RS Mahanama (Sri Lanka)
Reserve umpire NJ Llong
 

தலிபான்களால் கடத்தப்பட்ட பிரிட்டிஷ் செய்தியாளர் மீட்பு

100909press.jpgஆப்கா னிஸ்தானில் நேட்டோ சிறப்புப் படையினர் நடத்திய ஒரு பிரமிப்பூட்டும் வகையில் ஹெலிகாப்டர் மூலமான மீட்பு நடவடிக்கையில், தலிபான்களால் கடத்தப்பட்டிருந்த ஒரு பிரிட்டிஷ் செய்தியாளர் மீட்கப்பட்டார்.

ஆனால், இந்த நடவடிக்கையில் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில், இவரது சகாவான ஆப்கானியர் ஒருவரும், பிரிட்டிஷ் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டனர். இதில் வேறு இரு ஆப்கானிய பொதுமக்களும் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியூயோர்க் டைம்ஸ் செய்தியாளரான ஸ்டீபன் ஃபரலும், சுல்தான் முனாடியும் பிடித்து வைக்கப்பட்டிருந்த தலிபான்களின் வளாகம் ஒன்றினுள் நேட்டோ படையினர் தரையிறங்கினார்கள். படையினர் மேலும் கவனமாக இருந்திருந்தால், செய்தியாளர் முனாடி காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று ஆப்கான் செய்தியாளர் அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

இலங்கைக்கு இந்திய அணி செல்வதை தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றினால் நிராகரிப்பு

999.jpgஇலங் கையில் நடைபெறும் முக்கோண கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக, இந்திய கிரிக்கட் இலங்கை செல்வதற்கு தடைவிதிக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறுவதாக கூறி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு 512 சட்டத்தரணிகள் ஆதரவு கையொப்பங்களை இட்டிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இடைக்கால தடையை விதிக்க சென்னை மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.  இந்த மனுவின் பிரதிவாதியாக குறிப்பிட்ப்பட்டிருந்த இந்திய கிரிக்கட் சபை, நேற்று தமது விளக்கத்தை நீதிமன்றத்தில் அளித்திருந்தது.

அதில் தமது சபைக்கு இந்திய அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை செய்வதில்லை என்றும் தமது சபையை அரசாங்கம் அமைக்கவில்லை என்றும் அதில் தெரிவித்திருந்தது. எனவே இந்த மனுத்தாக்கல்  தொடர்பில் தமக்கு பதிலளிக்கமுடியாது என்றும் இந்திய கிரிக்கட் சபை குறிப்பிட்டிருந்தது.

இந்தநிலையில் நீதிபதிகள் குழு இடைக்கால தடையுத்தரவை விதிக்க மறுத்துள்ளது

கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா விசாரணை

100909rennie_shackleton_etc_aap.jpgகிழக்குத் திமோரில் இந்தோனேசிய சிறப்புப் படையினரால், 1975 ஆம் ஆண்டில், 5 செய்தியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போர்க்குற்றப் புலனாய்வுகளை ஆரம்பித்துள்ளதாக ஆஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பிராந்தியத்தை இந்தோனேசியப் படைகள் ஆக்கிரமிக்கவிருந்தது குறித்த தகவல்களை வெளியிடுவதைத் தடுப்பதற்காக ஃபலிபோ நகரில் இந்த செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாக 2007 ஆம் ஆண்டில் ஒரு ஆஸ்ரேலிய மரண விசாரணை அதிகாரி கண்டுபிடித்தார்.

இந்தச்சம்பவம் திமோரிய போராளிகளுடனான சண்டையின் போது செய்தியாளர்கள் இடையில் அகப்பட்டதனால் இடம்பெற்றது என்று இந்தோனேசியா எப்போதும் மறுத்து வந்தது. அத்துடன் இந்த விடயம் முடிந்துபோன ஒன்று என்றும் இந்தோனேசிய அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

சிம்பாப்வே மீதான தடைகளை நீக்குமாறு ‘தென்னாபிரிக்க நாடுகள் ஒன்றியம்’ கோரிக்கை

சிம்பாப்வே மீது விதிக்கப்பட்டுள்ள அனைத் துத் தடைகளையும் நீக்குமாறு தென்னாபிரிக்க நாடுகளின் ஒன்றியம் ஐ. நா. வைக் கோரியுள்ளது.  கொங்கோவின் தலைநகர் கின்ஸாஷாவில் நடைபெற்ற தென்னாபிரிக்க நாடுகள் ஒன்றியத் தின் மாநாட்டில் இந்தக் கோரிக்கை விடுக்கப் பட்டது.

கொங்கோ இந்த அமைப்புக்குத் தலைமை தாங்குகின்றது. சிம்பாப்வேயில் எதிர்க்கட்சி க்கும் ஆளும் கட்சிக்குமிடையே அதிகார இழுபறிகள் ஏற்பட்டதால் பாரிய மோதல்கள் வெடித்தன.

இம் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும்படி வேண்டிய ஐ. நா. அமைதி வரும் வரை சிம்பாப்வே மீது பல பொரு ளாதாரத் தடைகளை விதித்தது. இதையடுத்து ஆபிரிக்க நாடுகள் ஒன்றியம் சிம்பாப்வே உள்நாட்டு அரசியல் மோதல்களைத் தீர்த்து வைக்க பல முயற்சிகளைச் செய்தது.

ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வான்கிரே ஆகியோரை ஓர் இணக்கப்பாட்டுக்கு கொண்டு வந்தது. ஸ்வான் கிரே பிரதமராகவும், ரொபேர்ட் முகாபே ஜனாதிபதியாகவும் நியமிக்கப்பட்டனர். இதன் பின்னர் சிம்பாப்வேயில் பூரண அமைதி நிலவுகின்றது.

எனவே சிம்பாப்வே மீதான தடைகள் உடன் நிறுத்தப்பட வேண்டுமென தென்னாபிரிக்க நாடுகள் ஒன்றியம் ஐ. நா. விடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதிகாரப் பகிர்வை முழுமையாக நடைமுறைப் படுத்துமாறு பிரதமர் ஸ்வான்கிரே விடுத்த கோரிக்கையை மாநாடு நிராகரித்தது.

ஏற்கனவே பகிரப்பட்டதுபோல் ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே குறித்த சில விடயங்களில் விசேட அதிகாரங்களை வைத்திருக்க வேண்டுமென மாநாடு தீர்மானித்தது.எதிர்க்கட்சித் தலைவரும் பிரதமருமான ஸ்வான்கிரேயின் கோரிக்கை மீண்டும் சிம்பாப்வேயில் உள்ளூர் மோதல்களை உருவாக்கும் என மாநாட்டில் கருதப்பட்டதால் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.