::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

ஊக்கமருந்து குற்றச்சாட்டு – இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனைக்கு இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை !

ஊக்கமருந்து குற்றச்சாட்டு காரணமாக இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை நிலானி ரத்நாயக்கவுக்கு இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனைவிதிக்கப்பட்டுள்ளது.

இராணுவ மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி உட்பட பல போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை அவர் இழக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதநிலானி ரத்நாயக்க, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இளம் பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண !

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

16 வீரர்களை கொண்ட குழாமின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மெந்திஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு அணிக்கு துமித் கருணாரத்ன மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழாமில் இளம் பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடர் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

விளையாட்டுத்துறையில் அரசியல் தலையீடு – இலங்கை சர்வதேச ரக்பி அணியிலிருந்து இடைநிறுத்தம் !

இலங்கை ரக்பியின் ஒழுங்கற்ற நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடு என்பன உலக ரக்பி விதிகளை மீறும் நிலையில், உலக ரக்பி பேரவை, இலங்கை ரக்பியை உலக ரக்பி அங்கத்துவத்திலிருந்து இடை நிறுத்தியுள்ளது.

உலக ரக்பி பேரவை மற்றும் ஆசிய ரக்பி, சர்வதேச கூட்டமைப்பு மற்றும் பிராந்திய சங்கம் என்பன இலங்கையில் ரக்பிக்கு குறைந்த பட்ச இடையூறு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து செயற்பட உடன்பட்டுள்ளதாக சர்வதேச ரக்பி பேரவை தெரிவித்துள்ளது.

நிர்வாக சிக்கல்களை தீர்க்க சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதே உடனடி முன்னுரிமையாகும்.

எனவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் இலங்கை விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆசியாவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் பங்கேற்க முடியும் என ரக்பி பேரவை குறிப்பிட்டுள்ளது.

உலக ரக்பி மற்றும் ஆசிய ரக்பி ஆகியன அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து அவசரமாக செயற்பட்டு தற்போதைய முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பதற்காக இலங்கையுடன் கூட்டங்களுக்கான நிகழ்ச்சித்திட்டத்தை அமைக்கும் என்றும் பேரவை தெரிவித்துள்ளது.

இதே நேரம் இலங்கையின் கிரிக்கெட் தெரிவுக்குழுவில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அண்மையில் ஐ.சி.சி அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக 2023. ஜனவரி 21ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அந்த சம்மேளனம் தெரிவித்திருந்ததும் நினைவில் கொள்ளத்தக்கது.

“6 போட்டிகளில் 50 விக்கெட்டுகள்” – பிரபாத் ஜயசூரிய புதிய சாதனை !

குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய உலகின் முதலாவது சுழல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை பிரபாத் ஜயசூரிய இன்று தனதாக்கியுள்ளார்.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்று  வரும் போட்டியில் போல் ஸ்டேர்லினை ஆட்டமிழக்கச் செய்தபோது  தனது 50 ஆவது விக்கெட்டினை பெற்றுக்கொண்டார்.

அத்துடன் குறைந்த டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது இலங்கை வீரர் என்ற சாதனையையும் இவர் புரிந்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியை சேர்ந்த தோமஸ் டர்னர் 06 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை தனதாக்கியிருந்தார்.

எனினும் 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது சுழல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை பிரபாத் ஜயசூரிய தனதாக்கிக்கொண்டுள்ளார்.

அயர்லாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை !

சுற்றுலா அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 280 ஓட்டங்கள் மற்றும் ஓர் இன்னிங்ஸினால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 591 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியின் நான்கு வீரர்கள் சதம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 179 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 140 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 102 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 104 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த அயர்லாந்து அணி மூன்றாவது நாளான இன்று 143 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

இதில், இலங்கை அணியின் ரமேஷ் மெண்டிஸ் 52 ஓட்டங்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

448 ஓட்டங்கள் அயர்லாந்து அணிக்கு மேலதிகமாக தேவைப்பட்ட நிலையில், ஃப்ளோ வன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அந்த அணி 168 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இலங்கை அணி 280 ஓட்டங்கள் மற்றும் ஓர் இன்னிங்ஸினால் வெற்றிபெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் ஹெரி டெக்டர் 42 ஓட்டங்களை அணிசார்பில் அதிகபடியாக பெற்றார்.

பந்துவீச்சில் ரமேஸ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளையும் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிரபாத் ஜயசூரிய தெரிவானார்.

இந்தநிலையில், இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை அணி 1 – 0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

இதேவேளை, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளது.

வியாஸ்காந்த் விரைவில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவார் – குமார் சங்கக்கார நம்பிக்கை !

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு இலங்கையின் இளம் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் அளித்த ஆதரவிற்காக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார பாராட்டு தெரிவித்துள்ளார்.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் லைக்காவின் ஜப்னா கிங்ஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய விஜயகாந்த் வியாஸ்காந்த், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வலைப் பந்துவீச்சாளர்களாக உள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் இருந்து விஜயகாந்த் வியாஸ்காந்த், விலகுவதாக குமார் சங்கக்கார அறிவித்துள்ளார்.

இளம் கிரிக்கெட் வீரரான விஜஸ்காந்த் சிறப்பாக பந்துவீசியதாகவும், அவர் பல விடயங்களை இதன்போது கற்றுக்கொண்டதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதேவேளை வியாஸ்காந்த் விரைவில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவார் என தான் நம்புவதாகவும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக குமார் சங்கக்கார செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதல் நாளிலேயே மூன்று சாதனைகள் – அசத்தலுடன் தொடரை ஆரம்பித்த இலங்கை அணி !

டெஸ்ட் உலக சம்பியன்ஷிப் தொடரையொட்டி நடைபெற்று வரும் இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள் மூன்று கிரிக்கெட் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

நியூசிலாந்தில் அதிவேகமாக டெஸ்ட் அரைசதத்தை பதிவுசெய்த வெளிநாட்டு துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை குசல் மெண்டிஸ் இன்று தன்வசப்படுத்தினார்.

அதுமட்டுமின்றி, இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 5980 ஓட்டங்களை பதிவு செய்து கிரிக்கெட் சாதனை புத்தகத்தில் நுழைந்தார்.

இது இதுவரை இலங்கை அணியின் டெஸ்ட் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகபட்ச மொத்த ஓட்டமாகும்.

இந்த இரண்டு சாதனைகளைத் தவிர, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 7000 ஓட்டங்களைக் கடந்தார்.

இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மெத்யூஸ், 7000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த மூன்றாவது இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இலங்கையின் இந்த சாதனைகளுக்கு மத்தியில், 39 ஓட்டங்களைப் பெற்றிருந்த தினேஷ் சந்திமாலின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்துக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை டிம் சவுதி தன்வசப்படுத்தினார்.

T20 பந்துவீச்சாளர் தரவரிசையில் வனிந்து ஹசரங்க முதலிடம் !

ஐசிசி ரி 20 பந்து வீச்சாளர் தரவரிசையில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அவர் 695 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

மேலும், டி20 சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் வனிந்து ஹசரங்க நான்காவது இடத்தில் நீடிக்கிறார்.

வனிந்து 175 புள்ளிகளுடன் அந்த நிலையில் நீடிக்கிறார்.

இதேவேளை, வனிந்து ஹசரங்க ஒருநாள் சகலதுறை ஆட்டக்காரர்கள் தரவரிசையில் 240 புள்ளிகளுடன் 7வது இடத்தில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தம்புள்ளை இளையோர் கிரிக்கெட் அணியை வீழ்த்திய யாழ்ப்பாண இளையோர் அணி !

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக யாழ்ப்பாணம் மாவட்டம் மற்றும் தம்புள்ளை மாவட்ட இளையோர் அணிகளுக்கிடையிலான சினேகபூர்வ கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெற்றது.

நேற்று காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த போட்டி இடம்பெற்றது.

குறித்த போட்டியை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மாவட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்றது.

யாழ்ப்பாண அணி சார்பாக அணித்தலைவர் டிலக்சன் 38 ஓட்டங்களையும், விணோஜன் 31 ஓட்டங்களையும், கஜானன் 16 ஓட்டங்களையும் அதிகபக்சமாக பெற்றுகொடுத்தனர். பந்துவீச்சில் தம்புள்ளை அணி சார்பில் சிந்திஜ மற்றும் சங்கல்ப தலா 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக கைப்பற்றனர்.

134 என்கின்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி 19.1 பந்துவீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதனால் 11 ஓட்டங்களால் யாழ்ப்பாண அணி வெற்றிபெற்றது.

தம்புள்ளை அணி சார்பாக ஹரித்த 25 ஓட்டங்களையும் ஷியாட் 20 ஓட்டங்களையும் அதிகபக்சமாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் யாழ்ப்பாண அணி சார்பில் கவிசன் 3 விக்கெட்டுகளையும், சரன் மற்றும் மதுசன் தலா 2 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக கைப்பற்றினர்.

போட்டியின் சிறந்த வீரனாக யாழ்ப்பாண அணி தலைவர் டிலக்சன் தெரிவு செய்யப்பட்டடார்.

 

450 விக்கெட்டுகள் – அஸ்வின் அசத்தல்!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அரங்கில் தனது 450வது விக்கெட்டை வீழ்த்தினார்.

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், 450 விக்கெட்டுகளை எட்டிய உலகின் இரண்டாவது டெஸ்ட் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் பெற்றார்.

அஸ்வின் இந்த மைல்கல்லை எட்ட 89 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் முன்னணியில் இருப்பவர் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படும் இலங்கையின் முத்தையா முரளிதரன். 80 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.

உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 9வது பந்து வீச்சாளர் மற்றும் இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.

இதற்கு முன், இந்தியாவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே, 2005ல் இந்த மைல்கல்லை எட்டினார். இருப்பினும் அவர் 93 போட்டிகளிலேயே 450 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

அஸ்வின் தற்போது டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நான்காவது இடத்திலும், சகலதுறை வீரர் தரவரிசையில் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.