உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

காணாமல் போன பதினேழாயிரம் பேரில் 19 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்!

காணாமல் போன பதினேழாயிரம் பேரில் 19 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்!

 

காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி தற்பரன் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “காணாமல் போனோரைக் கண்டறியும் செயலகங்களில் இதுவரை 16 ஆயிரத்து 966 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்றாயிரத்து 742 பேர் படையினர் மற்றும் காவல்துறையினர் என பாதுகாப்பு தரப்பினராக காணாமல் போயுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஆறாயிரத்து 449 பேரின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் , 10 ஆயிரத்து 517 பேர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

2000 ஆம் ஆண்டிற்கு பின்பு 7 ஆயிரத்து 406 பேரும், 2000 ஆம் ஆண்டிற்குப் முன்னர் 9 ஆயிரத்து 560 பேரும் காணாமல் போயுள்ளதாக ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலே 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர் காணாமல்போன ஏழாயிரத்து 406 பேரில் ஆறாயிரத்து 449 பேர் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளது. நிறைவு பெற்ற விசாரணைகளில் இருந்து 19 பேர் உயிரோடு இருப்பதனையும் கண்டறிந்துள்ளோம். அவர்களது விபரங்களை 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இணைத்துள்ளோம், அவை விரைவில் வெளிவரும். அதேவேளை இரண்டாயிரத்து, 604 பேர் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை பெற்றுள்ளனர், 407 பேர் மரணச் சான்றிதழிற்கான சிபாரிசை பெற்றுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணத்திற்கு நான்காயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரியில் பாராளுமன்ற பொடியன்களை திருத்திய சாவகச்சேரி மக்கள் !

சாவகச்சேரியில் பாராளுமன்ற பொடியன்களை திருத்திய சாவகச்சேரி மக்கள் !

நேற்றைய தினம் மார்ச் 27 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருணநாதன் தலைமையில் நடைபெற்ற சாவகச்சேரி பிரதேச சபை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் பெரியளவிலான முரண்பாடுகள் இன்றி சுமூகமாக நடைபெற்று முடிந்தது. அவ்வப்போது எம்பி இளங்குமரனுக்கும் எம்பி அர்ச்சுனாவுக்கும் முட்டிக் கொண்டாலும் இருவரும் நகைச்சுவையோடு ஆக்கபூர்வமாக கூட்டத்தை நடத்தி முடித்தனர். எம்பி அர்ச்சுனா இராமநாதன் எப்பவும் போல மூச்சுக்கு முன்னூறுதரம் நான் வைத்தியர் நீ பில் போடுகிறனி என மற்றவர்களின் தொழிலை தரம்தாழ்த்தி கதைத்தார். எம்பி இளங்குமரனும் உடனடியாக துடுக்காக பதில் கொடுத்துக் கொண்டே இருந்தார். சில இடங்களில் எம்பி இளங்குமரன் வம்புக்கு அலைகிறவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துக் கொண்டிருந்தார். இப்படி எம்பி இளங்குமரனும் எம்பி அர்ச்சுனாவும் வாயாடிக் கொண்டிருக்கும் போது பொதுமக்கள் குறுக்கிட்டு கண்டிக்க வேண்டியும் ஏற்பட்டது.

எம்பி இளங்குமரன் கருணாந்தன் தலைமை ஏற்று நடத்திய முதலாவது கூட்டம் சாவகச்சேரி பிரதேச சபையை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற முக்கியமான தீர்மானத்துடன் முடிவடைந்துள்ளது. 60 கிராம சேவகர் அலுவலர் பிரிவை கொண்ட சாவகச்சேரி பிரதேச சபையின் அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டு சாவகச்சேரி மக்களின் நீண்ட கால கோரிக்கையான ,, சாவகச்சேரி பிரதேச சபையை இரண்டாக “ பிரிக்க கூட்டத்தில் கலந்து கொண்ட ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி உட்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்தனர்.

எம்பி அர்ச்சுனா இராமநாதன் சாவகச்சேரி வைத்தியசாலையை பிரச்சினைகளை முன்னிறுத்தியே மக்கள் மத்தியில் பிரபல்யமானார். அந்தவகையில் சாவகச்சேரிப் பிரதேசத்திலேயே அவருக்கு அதிகளவான வாக்குகள் கிடைத்து அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். அதற்கேற்ப நேற்றைய அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சிறப்பாக செயற்பட்டு மக்களின் கைதட்டல்களைப் பெற்றுக் கொண்டார். சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான கோரிக்கைகளை சாவகச்சேரி பதில் வைத்தியசாலைப் பணிப்பாளர் ரஜீவ் கோபாலமூர்த்தி முன்வைத்த போது, அர்ச்சுனா தனது வழமையான குதர்க்க கேள்விகளை தவிர்த்துக் கொண்டு பொறுப்போடு நடந்து கொண்டார்.

வைத்தியர் ரஜீவ் கோபால மூர்த்தியின் நிர்வாகத்தில் சாவகச்சேரி வைத்தியசாலை தூய்மையாக உள்ளதாகவும் சிறப்பாக இயங்குவதாகவும் பாராட்டினார். அதேநேரம் எம்பி இளங்குமரனும் மகப்பேறு மருத்துவர் உள்ளாரா? , மகப்பேறு பிரிவு இயங்குகிறதா?, சத்திர சிகிச்சைப்பிரிவு இயங்குகிறதா? அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் உள்ளார்களா? என உருப்படியான கேள்விகளைக் கேட்டு மக்களுக்கும் அறியும்படியாக தகவல்களைப் பெற்றுக் கொடுத்தார். ஒருவகையில் சாவகச்சேரி வைத்தியசாலை ஓரளவு சீராக இயங்க வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவும் காரணம் என சாவகச்சேரி பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சாவகச்சேரி வைத்தியசாலை விடயத்தில் கூடுதல் கரிசனை காட்டிய எம்பி இராமநாதன் அர்ச்சுனா, சில வாக்குறுதிகளையும் கொடுத்தார்.

மேலும் நேற்றைய சாவகச்சேரி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அப்பிரதேச வீதி அபிவிருத்தி, இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் விடுப்பு, சாவகச்சேரி சந்தைத் தொகுதி கடைகள் குத்தகை விவகாரம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் தனியார் காணிகள் கையகப்படுத்தப்பட்டு விற்கப்படும் விவகாரம் எனப் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

IBC கந்தையா பாஸ்கரனின் “றீச்சா” பண்ணைக்கு ஏக்கர் கணக்கில் வந்த காணிகளின் பின்னணி தொடர்பிலும் நிலவும் சர்ச்சையும் குறிப்பிடத்தக்கது. புலம்பெயர் தமிழர் எஸ்.கே. ரி. நாதன் கிளிநொச்சியில் முதியோர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லம் நடத்துகிற போர்வையில் விடுதலைப் புலிகளின் பராமரிப்பில் பாவணையில் இருந்த பெருந்தொகையான ஏக்கர் நிலங்களை ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவில் கையகப்படுத்தியிருந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படி பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சட்டவிரோதமாக மக்கள் காணிகள் அபகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் இவ்வாறு வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பது அவசியமானதாகும்.

பெண்களுக்கு எதிராக யாழ் மையவாத ஆணாதிக்க சக்திகள் ஓரணியில் திரள்கின்றன ! ஆனால் முறத்தால் விரட்டப் போகின்றனர் எம் தமிழ் பெண்கள் !

பெண்களுக்கு எதிராக யாழ் மையவாத ஆணாதிக்க சக்திகள் ஓரணியில் திரள்கின்றன ! ஆனால் முறத்தால் விரட்டப் போகின்றனர் எம் தமிழ் பெண்கள் !
மூத்த ஆய்வாளர் வி சிவலிங்கம் அவர்களுடனான உரையாடல்

 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருந்து நிராகரிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு !

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருந்து நிராகரிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு !

 

யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன வழக்கு தொடர்ந்துள்ளன.

தமிழ் மக்கள் கூட்டணியினால் வழங்கப்பட்ட வேட்பு மனுவில் பெண் வேட்பாளர் ஒருவரின் சத்திய கூற்றில் தவறு உள்ளதாக கூறி அந்த பெண் வேட்பாளரை பட்டியலில் இருந்து நீக்கியமையால், தேவையான பெண் பிரதிநிதித்துவம் இல்லை என மாநகர சபைக்கான வேட்பு மனுவை தேர்தல்கள் திணைக்களம் முற்றாக நிராகரித்துள்ளது என குறிப்பிட்டு, ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் ஊடாக உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையில், முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் முதல்வர் வேட்பாளராக கொண்டு களமிறங்கிய தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வெப்பநிலை திடீர் அதிகரிப்பு !

யாழில் வெப்பநிலை திடீர் அதிகரிப்பு !

 

யாழ்.குடா நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளமையால் உடல் வெப்பத்தை தணிக்க கூடிய நீராகாரங்களை அதிகமாக அருந்துமாறு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் என். சூரியராஜா அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை அண்மையில் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு இருவர் மரணமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்படுவது மீனவர்கள் தான் – இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பு !

பாதிக்கப்படுவது மீனவர்கள் தான் – இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பு !

 

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வந்த ஐவர் கொண்ட குழு – இலங்கை மீனவ மீனவ பிரதிநிதிகளுடன் வவுனியாவில் கலந்துரையாடியிருந்தனர் .

மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசமட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுத்து நிரந்தர தீர்வை எட்ட வேண்டும் என கலந்துரையாடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்று நடைமுறைப்படுத்தாமையால் வரை தமிழ்நாட்டிலும் வடமாகாணத்திலும் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள, வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் அன்னலிங்கம் இந்திய மீனவர்களுடன் வவுனியாவில் இடம்பெற்ற சந்திப்பு திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கோப்பாய் அபிவிருத்தி குழு கூட்டம் – அடக்கி வாசித்த எம்.பி இராமநாதன் அர்ச்சுனா 

கோப்பாய் அபிவிருத்தி குழு கூட்டம் – அடக்கி வாசித்த எம்.பி இராமநாதன் அர்ச்சுனா

கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில், வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, விவசாயம், கல்வி, நீர்ப்பாசனம் சம்பந்தமான வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனா, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், பிரதேச செயலாளர், மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். அடுத்தடுத்து நல்லூர் பிரதேச செயலக கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ஆகியவற்றில் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா பலத்த குழப்பங்களை ஏற்படுத்தியிருந்த போதும் கூட கோப்பாய் அபிவிருத்தி குழு கூட்டத்தில் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா அமைதி காத்ததுடன், முக்கியமான விடயங்களை நீங்கள் முன்வைப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என எம்.பி அர்ச்சுனாவை நோக்கி எம்.பி ரஜீவன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வியாழேந்திரன் கைது – பட்டாசு வெடித்து இளைஞர்கள் கொண்டாட்டம்!

வியாழேந்திரன் கைது – பட்டாசு வெடித்து இளைஞர்கள் கொண்டாட்டம்!

 

கடந்த வருடம் 15 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கியவருக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம், வியாழேந்திரன் கொழும்பு புதுக்கடை பகுதியில் வைத்து இலஞ்ச உழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்குறித்த வழக்கு தொடர்பில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மண் அகழ்விற்கு அனுமதி பெற்றுதருவதாக வர்த்தகர் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் மற்றும் பிரதேச அமைப்பாளர் ஆகிய இருவரையும் மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப்பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இதனிடையே முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் கைதினை தொடர்ந்து சில இளைஞர்கள் மட்டக்களப்பு நகர மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு வெடி கொழுத்தி கொண்டாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவீனமயப்படுத்தப்படும் இலங்கையின் முன்பள்ளிகள் – அமைச்சர் சாவித்திரி

நவீனமயப்படுத்தப்படும் இலங்கையின் முன்பள்ளிகள் – அமைச்சர் சாவித்திரி
அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவான பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை அறிமுகப்படுத்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் முன்பள்ளிகளுக்காக தேசிய கொள்கையொன்றை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு இணையாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தற்போது நாட்டில் 13 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளும் பதிவு செய்யப்படாத மூவாயிரம் முன்பள்ளிகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் முன்பள்ளி கட்டமைப்பு நவீனமயப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக கல்வியமைச்சின் பங்களிப்புடன் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 09 மாகாணங்களிலும் உள்ள அனைத்து முன்பள்ளிகளிலும் ஒரே கொள்கையின் கீழ் இதனை நடைமுறைப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

நமது தேசிய நல்லிணக்க செயன்முறையை பிரித்தானியா சிக்கலாக்கியுள்ளது – இலங்கை வெளிவிவகார அமைச்சு !

நமது தேசிய நல்லிணக்க செயன்முறையை பிரித்தானியா சிக்கலாக்கியுள்ளது – இலங்கை வெளிவிவகார அமைச்சு !

 

நான்கு இலங்கையர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் விதித்த தடையானது ‘ ஒருதலைபட்ச ‘ நடவடிக்கை எனவும் , இலங்கையின் தேசிய நல்லிணக்க செயல்முறையை இது பாதிக்கும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய இராச்சியம் தடைவிதித்த 4 இலங்கையர்களில் மூவர் இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் இராணுவத் தளபதிகளாவர். இதற்குப் பொறுப்பானவர்களுக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகத் நமது தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்யப்பட்ட உறுதிமொழியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடுகளின் இத்தகைய ஒருதலைபட்ச நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயன்முறைக்கு உதவாததுடன், அதற்கு மாறாக செயன்முறையை மேலும் சிக்கலாக்குகிறது. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டு வழிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. கடந்த கால மனித உரிமை மீறல்கள் உள்நாட்டு பொறுப்புக்கூறல் வழிமுறைகள்மூலம் கையாளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

4.4: இலங்கை அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் , இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம் நேற்றையதினம் இது தொடர்பில் தெரிவித்தார் .

 

4.5: இதேவேளை, இலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர்கள் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ள தடைகளை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

4.6: மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று கோருகின்ற பிரித்தானியாவே மனித உரிமைகளைப் போட்டு மிதித்து காஸாவில் இனப்படுகொலைக்கு உதவியளித்து வருகின்றது. இலங்கையின் 30 ஆண்டு கால யுத்தம் எண்ணற்ற போர்க்குற்றங்களுக்கு வித்திட்டது. அதில் சம்பந்தப்பட்ட இலங்கை இராணுவம் , விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுதக்குழுக்கள் மிக மோசமான யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருந்தன. ஆனால் இப்போர்க்குற்றங்கள் தண்டிக்கப்படுவதில்லை என்பது பெரும்பாலும் எழுதப்படாத ஒரு சட்டமாகவே சர்வதேச சமூகத்தில் இருந்து வருகின்றது.

 

4.7: ஈராக், அப்கானிஸ்தான், உக்ரைன் – அமெரிக்கா, பிரித்தானியா, இஸ்ரேல், ரஷ்யா என எந்த நாட்டு இராணுவமும் தங்கள் நாட்டு இராணுவத்தை இதுவரை தண்டிக்கவில்லை. இலங்கையும் தண்டிக்கப் போவதில்லை. இதுவே யதார்த்தம். இதில் அண்மைய எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படப் போவதுமில்லை. மீண்டுமொரு யுத்தக் குற்றம் நிகழாத அளவுக்கு அரசியலை முன்னெடுப்பதே சிறந்த வழி.