உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

நாய்க்கு தூக்கு தண்டனை கொடுத்த பெண் முல்லையில் கைது !

நாய்க்கு தூக்கு தண்டனை கொடுத்த பெண் முல்லையில் கைது !

 

தன் வீட்டு ஆட்டை கடித்த நாய் ஒன்றை தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் வடமாகாணம் – மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில், ஒட்டுசுட்டானில் உள்ள இணக்கச்சபை ஒன்றில் விசித்திரமான தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் அதில் நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பதிவு ஒன்று அதிகம் பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை அரசு – மீட்டுத்தரக்கோரி சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனம் செய்து மக்கள் போராட அழைப்பு !

காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை அரசு – மீட்டுத்தரக்கோரி சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனம் செய்து மக்கள் போராட அழைப்பு !

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக நினைவு கூர்ந்து தமிழ் மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் சர்வதேசத்திற்கு மட்டுமல்ல அனுர அரசுக்கும் எடுத்துக்கூறுவதற்கு அணிதிரளுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு அதிகமாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிவேண்டிய போராட்டத்தை முன்னெடுத்த உறவுகளின் அன்னையர்கள் 300 இற்கும் அதிகமானோர் தமது அபிலாசைகளை எட்டாது இறந்துள்ளனர் என தெரிவித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம், நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் எமது மக்களுக்கு இன்னமும் அதன் பலாபலன்கள் கிடைக்கவில்லை. இவ்வாறான பின்னணியில் வரவுள்ள இலங்கையின் 77 ஆவது சுதந்திர நாளை கரி நாளாக அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ‘ வீரகேசரி ‘ நாளிழுக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் “காணாமல் போனவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா..? என வீரகேசரி வார இதழின் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , அவர்கள் காணாமல் போனதில் இருந்து ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டதாகவும் , அவர்கள் திரும்பி வருவார்கள் என நம்ப முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இம்முறை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவும் அது சார்ந்த வழக்குகளை விசாரிக்கவும் சட்டத்தின் முன் நிறுத்தவும் உறுதியளித்துள்ளோம் . காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. பாதிக்கப்பட்ட மக்களின் உடல் காயங்களுக்கு மருந்து போடலாம் . ஆனால் உள்ளக்காயங்களுக்கு மருந்துபோட இயலாது. போர் முடிவடைந்து 15 வருடங்களாகிறது. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இனியும் வருவார்கள் என நம்பமுடியாது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது பிரச்சினையை சர்வதேச அரசுகளும் பயன்படுத்துவதாகவும், அதற்காகப் போராடுபவர்களுக்கு நிதியும் அரசியல் பின்னணியும் உள்ளதாகவும் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன.

என்பிபி அமைச்சர்கள் எவரும் பாதுகாப்பு கோரவில்லை ! தமிழ் தலைவர்களுக்கு தமிழ் பகுதிகளில் பாதுகாப்பு வேண்டுமாம் !

என்பிபி அமைச்சர்கள் எவரும் பாதுகாப்பு கோரவில்லை ! தமிழ் தலைவர்களுக்கு தமிழ் பகுதிகளில் பாதுகாப்பு வேண்டுமாம் !

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மெய்பாதுகாவலர்களின் பாதுகாப்பை பெற்றுக் கொள்ளவில்லை. இதேவேளை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாண ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், எமது அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் யாருமே பொலிஸ் பாதுகாப்பைக் கோரவில்லை எங்களுக்கு எங்களுடைய மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இங்கு இருக்கின்ற அரசியல் வாதிகள் இன்னமும் தங்களுக்கு பாதுகாப்பு போதாது என்று கூக்குரலிடுகின்றனர் என தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

இரண்டு வாரங்களில் நாமல் கைது ! – யோஷிதவுக்கு பிணை !

இரண்டு வாரங்களில் நாமல் கைது ! – யோஷிதவுக்கு பிணை !

2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தற்போதைய அரசாங்கம் அஞ்சுவதானால் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான அரசாங்கத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மைய கைதுகள் பற்றி கருத்து தெரிவித்த பா.உ நாமல் ராஜபக்ச, “ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று என்னிடம் கேட்காதீர்கள். பிரதிப் பாதுகாப்பு அமைச்சர், காவல்துறை அமைச்சர் மற்றும் நாட்டின் ஜனாதிபதியிடம் கேளுங்கள். ஆனால் அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அரசியல்வாதிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வேட்டையாடுவதில் நேரத்தைச் செலவிடுகிறது.” நாட்டின் பாராளுமன்றத்தில் நான்தான் கூச்சலிடுகிறேன். என் சகோதரன் சிறைக்குச் சென்றார் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் யோஷித ராஜபக்ஷ கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்திருந்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, குற்றச்செயல்கள் ஊழலுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்திருந்தார்.

“சமஷ்டி, 13 ” தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினையல்ல – அமைச்சர் சந்திரசேகர் !

“சமஷ்டி, 13 ” தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினையல்ல – அமைச்சர் சந்திரசேகர் !

சமஷ்டியை தருவதற்காக நான் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வந்த போதே நான் இங்கு வருவது உங்களுக்கு 13ஐ தருவதற்கோ, ஈழத்தை தருவதற்கோ, சமஷ்டியை தருவதற்கோ இல்லை என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டார். தமிழர்கள் ஏராளமான பிரச்சினைகளால் ஒடுக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்தப் பிரச்சினைகளை மக்களோடு உரையாடுவதன் மூலமாக தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். 15 வருடமாக இருக்கின்ற கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு எங்களுடைய அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும். ஆனால் இந்த வெற்றியில் பங்குகொள்ள சிலர் விரும்புகின்றனர்” என்றார்.

ரோஹிங்கியா அகதிகளை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் – ஐ.நா நம்பிக்கை !

ரோஹிங்கியா அகதிகளை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் – ஐ.நா நம்பிக்கை !

அகதிகளாக வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் என்று நம்புகிறோம் என ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ப்ரான்ச் தெரிவித்தார்.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ப்ரான்ச் மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர ஆகியோருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலங்கை பாதுகாக்கும் விதம் குறித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

அந்த மக்களை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பாமல் பாதுகாப்பான ஒரு நாட்டில் தங்க வைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை அவதானம் செலுத்தியுள்ளதாக கூறிய ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே, அதுவரை ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் என்று நம்புகின்றோம் என தெரிவித்தார்

மக்களின் அழைப்புக்களுக்கு பதிலளிக்கவும் என்.பி.பி அமைச்சர்களுக்கு உத்தரவு !

மக்களின் அழைப்புக்களுக்கு பதிலளிக்கவும் என்.பி.பி அமைச்சர்களுக்கு உத்தரவு !

முடிந்தவரை அனைத்து சந்தர்ப்பங்களிலும் தங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டத்தின் போது அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து அவர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஜனாதிபதி அனுர குமார

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைது ! சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும் ! அபராதமும் அதிகரிக்கப்பட வேண்டும் !

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைது ! சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும் ! அபராதமும் அதிகரிக்கப்பட வேண்டும் !

இலங்கை கடல் எல்லையின் தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதற்கு முன் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய மீனவர்களுக்கு உச்ச அபராதத்தை கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கியருந்தது. எதிர்காலத்தில் இந்த அபராதத் தொகையை அதிகரிப்பதன் மூலம் மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதைக் கட்டுப்டுத்த முடியும். கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எல்லை தாண்டும் மீன்பிடி தொடர்பில் புதிய சட்டமூலங்களையும் தண்டனைகளையும் அபராதங்களையும் அதிகரிப்பதினூடாக எல்லைதாண்டி வந்து மீன்பிடிப்பது ஒரு லாபமற்ற செயல் என்பதை எல்லைதாண்டி வரும் மீனவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குழுவையும் அவர்களது படகுகளையும் கரைக்கு கொண்டு வந்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் வடக்கின் கடல் மற்றும் மீன் வளத்தை முழுமையாக சூறையாடும் நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் ரோலர் படகுகள் மீன்களின் இயக்க சமநிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதையும் கடல் வள நிபுணர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதேவேளை விரைவில் வெளி நாட்டிலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என கைத்தொழில் அமைச்சர் திரு.சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

கட்சிகள் மட்டுமல்ல தமிழ் தேசிய மாணவர் ஒன்றியமும் பிளவுபட்டுள்ளது !

கட்சிகள் மட்டுமல்ல தமிழ் தேசிய மாணவர் ஒன்றியமும் பிளவுபட்டுள்ளது !

கலைப் பீடாதிபதி ரகுராமின் முன்னாள் செல்லப் பிள்ளையாக அறியப்பட்ட எஸ் சிவகஜன் அணியினர், பரமேஸ்வரா ஆலயத்தின் அருகில் உள்ள கல்லாசனத்தில் போதைப்பொருள் பாவித்து வந்ததாகவும், அந்த வழியால் செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியான வசையாடல்களுடன் கூடிய சொற்களை பாவித்து தொல்லைகள் கொடுத்ததாகவும் கலைப்பீடாதிபதி ரகுராமின் தற்போதைய செல்லப்பிள்ளைகள் குற்றம்சாட்டுகின்றனர். எஸ் சிவகஜன் அணியினர், தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பேரவை கவனத்தில்கொள்ளாது மாணவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்களிப்பு வழங்கியுள்ளது என ரகுராமின் தற்போதைய செல்லப் பிள்ளைகள் கொந்தளித்துள்ளனர்.

எஸ் சிவகஜன் தீவர தமிழ் தேசியத் தொண்டன். யாழ் பல்கலைக்கழகத்தில் புத்திஜீவிகள் இணைந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம் என ஊடக அறிக்கையை வெளியிட்ட போது, அதில் கையொப்பமிட்ட அப்பேராசிரியர்களுக்கு எதிராக, கேலிச் சித்திரங்கள் வரைந்து அவர்களைக் கேவலப்படுத்திய போது கலைப்பீடாதிபதி ரகுராம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எஸ் சிவகஜன் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரித்தவர். அதற்காகத் தீவிர பிரச்சாரங்களிலும் ஈடுபட்டவர். அப்படியானால் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகுதான் எஸ் சிவகஜனின் அணி இந்த போதைப்பொருள் பாவனை, பெண்களுக்கு பாலியல் ரீதியான வசைபாடல்கள் எல்லாம் செய்கின்றனரா?

கலைப்பீடாதிபதி ரகுராமின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் விடுவிக்கப்பட்ட மாணவர்கள் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரகுராம் மீண்டும் பதவியேற்கும் வரை தாம் போராடப்போவதாகவும் ரகுராமின் தற்போதைய செல்லப்பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராமுக்கு ஆதரவாக தமிழ்தேசியம் பேசும் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆதரவுக்குரல்களை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளதுடன் We Stand with Raguram என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டு வருகின்றனர்.

அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைப்பீடாதிபதி ரகுராம் சுயலாபத்துக்காக போதைப்பொருள் பாவனையாளர்களாக முத்திரைகுத்தி, தன்னை நியாயப்படுத்துகின்றார் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் தேசியம் எப்படி சின்னாபின்னமாகச் சிதறுண்டதோ அதுபோல் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைக்குஞ்சுகளும் ராகுராமின் செல்லப் பிள்ளைகளிடையே எழுந்துள்ள பனிப் போரில் சிக்குண்டு உள்ளனர்.

மிக இறுக்கமாக மூடிய நிலையில் உள்ள யாழ் பல்கலைக்கழகம் திறந்த புத்தகமாக, பொறுப்புக் கூறலுடன் செயற்பட வேண்டுமாயின், அதற்கு யாழ் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து புது இரத்தம், சிந்தனை பாய்ச்சப்பட வேண்டும். அதற்கு அடுத்த துணை வேந்தர் இலங்கைக்கு வெளியே சர்வதேச பல்கலைகழகங்களிலிருந்தும் கோரப்பட்டு கல்வித்தகுதி மற்றும் அவர்களுடைய கல்விச் செயற்பாட்டு திறமையுடன் கூடிய ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பிரதமரும் உயர் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய Clean University of Jaffna தொடர்பில் கவனம் செலுத்துவது மிக அவசியம்

பெரியார் – சீமான் – பிரபாகரன்: சீமான் நாயகனா? நயவஞ்சகனா? சமூக இலக்கிய ஆர்வலர் அசோக் யோகன் கண்ணமுத்து

பெரியார் – சீமான் – பிரபாகரன்: சீமான் நாயகனா? நயவஞ்சகனா?

சமூக இலக்கிய ஆர்வலர் அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒரு உரையாடல்