இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அருசாக் காந்தாவும் அவரது குழுவினரும் இன்று யாழ். மாநகர சபைக்கு விஜயம் செய்யவுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.
செய்திகள்
செய்திகள்
செய்திகள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை தாம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜெ வி பி கூறியுள்ளது. ஜே.வி.பி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இத்தகவலை வெளியிட்டுள்ளார்
பிற எதிர்கட்சிகளும் இவரை ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது. ஆனால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் நிற்பது குறித்து ஜெனரல் பொன்சேகா எதவும் கூறாமல் இருந்து வருகிறார். அதே நேரம் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இது பற்றி எதுவும் தெரிவிக்காமல் உள்ளது.
பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஆகக் கூடிய வய தெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட்டு ள்ளதென அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு வழங்குவதற்கான வயதெல்லை 35 ஆகும். இதனை அதிகரிப்பதற்கான வேண்டு கோளை அமைச்சர் முரளிதரன் ஜனாதிபதியிடம் விடுத்திருந்தார் இதற்கமைய இந்த வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவ தளபதியும், கூட்டுப்படை தலைமையதிகாரியுமான, சரத் பொன்சேகா உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் படைத்தளபதியான தமக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என்றும், உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்குவதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் அவர் தமது மனுவில் கோரியுள்ளார்.
சரத் பொன்சேகா, பதவியில் இருந்த போது அவருக்கு சுமார் 750 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும் அந்த பாதுகாப்பு தற்போது 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்றும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸின் மகுண்டனோ மாகாணத்தில் 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டோர் மகுண்டனோ மாகாண உள்ளூர் அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களும், ஊடகவியலாளர்களுமாவர். உள்ளூர் ஆட்சி தேர்தல்களுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர். தீவிரவாத அமைப்பு கடந்த திங்கட்கிழமை இவர்களை ஆயுதமுனையில் கடத்திச் சென்றதாக அறிவிக்கப்படுகின்றது.
படுகொலை செய்யப்பட்ட 21 பேரின் சடலங்களைக் கண்டெடுத்ததாகக் கூறிய பொலிஸார் இவர்களில் 13 பேர் பெண்களென்றும் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுத்ததாகவும் கூறினர். பிரேதங்களின் தலைகள் துண்டிக்கப்பட்டும், உருக்குலைந்த நிலையிலும் காணப்பட்டன.
கொலைசெய்யப்பட்டோரில் உள்ளூர் அரசியல் வாதியின் மனைவியும் அடங்குகின்றார். மாகாண ஆளுநருடன் தொடர்புகொண்ட ஆயுததாரிகள் இவர்களைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுவதை ஆளுநர் முற்றாக நிராகரித்துள்ளார். தேர்தலில் வாக்களிக்கக் கூடாதென முஸ்லிம் அமைப்பொன்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததாகப் பொலிஸார் கூறினர்.
அரசியல் நோக்கங்களுக்காக இக்கொலைகள் நடந்துள்ளன. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமைக்கு பிலிப்பைன்ஸ் அராசங்கம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸில் அடுத்த வருடம் பொதுத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதை முன்னிட்டு உள்ளூராட்சித் தேர்தல்கள் சில மாகாணங்களில் நடத்தப்படவுள்ளன. இத் தேர்தலில் வாக்களிக்கவோ போட்டியிடவோ கூடாதென பிரிவினைவாத அமைப்புக்கள் கோரியுள்ளன.
உரிய காலத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானம் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு நேற்று நண்பகல் சுப நேரத்தில் அறிவிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்தத் தீர்மானித்திருப்பதாக கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி இங்கு அறிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை கட்சித் தலைவர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதாகவும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பில் சகல மாகாண சபை முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ 2005 நம்பவர் 18ம் திகதி இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவரின் பதவிக் காலம் 2011 நவம்பர் 18 ஆம் திகதி நிறைவ டைய உள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டி நடத்த ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி தனது முடிவை முறைப்படி கடிதம் மூலமாக நேற்று (23) தேர்தல் ஆணை யாளருக்கு அறிவித்தார். இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படும் திகதியை தேர்தல் ஆணையாளர் வெகுவிரைவில் அறிவிப்பார் என தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறின.
நான்காண்டுகள் முடிவடைந்த பின்னர் எந்த நேரத்திலும், மேலுமொரு தவணைக்குப் பதவி வகிப்பதற்காக தேர்தல் மூலம் ஆணையொன்றுக்கென மக்களை வேண்டி நிற்பதற்கான தமது முன்னத்தை பிரகடனம் மூலம் வெளிப்படுத்தலாம் என அரசியலமைப்பின் 31 (3) (அ) (1) இந்த சரத்து ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. இதன்படி முன்கூட்டி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் விசேட பணிப்புரைக் கமைய டிசம்பர் 05 ஆம் திகதி மெளலவி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ள தாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.
மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப் பேகடுவையின் கண்டி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற மத்திய மாகாண ஸ்ரீல. சு. கட்சி அமைப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.
மேல்மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை நிதி அமைச்சு மற்றும் திறை சேரியின் செயலாளர் கலாநிதி பீ. பி. ஜயசு ந்தரவைச் சந்தித்து நடாத்திய பேச்சு வார்த்தையையடுத்து இந்நியமனங்களுக்கான நிதியை உடனடியாகக் கல்வியமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு பணிப்புரை விடுக்கப்ப ட்டது
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுவேட்பாளர் யார் என்பதை நாளை புதன்கிழமை கூட விருக்கும் முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களது கூட்டத்தில் அறிவிக்கப்படவிருக்கின்றது. எதிரணி பொது முன்னணியின் பொதுவேட்பாளராக பெரும்பாலும் ஜெனரல் சரத் பொன்சேகாவே தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் ஜே.வி.பி.யும் இணக்கப்பாடு கண்டிருப்பதாகவும் நாளை புதன் கிழமை நடைபெறவிருக்கும் கூட்டத்தில் ஜே.வி.பி.யும் கலந்துகொள்ளவிருப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பு நேற்று மாலை வெளிவரும் எனத் தெரியவந்ததையடுத்தே பொதுவேட்பாளரை நாட்டுக்கு பகிரங்கமாக அறிவிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் இந்த விசேட நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளதும் தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். பொது வேட்பாளர் யார் என்பதை அறிவித்த பின்னர் அவரை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டத்தை பாரிய அளவில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2009-ம் ஆண்டின் “புவி’ அழகியாக பிரேசில் மங்கை லாரிசா ரமோஸ். (இடமிருந்து 3-வது) தேர்ந்தெடுக்கப்படடுள்ளார். இந்தப் போட்டி பிலிப்பின்ஸில் நேற்று நடைபெற்றது. இரண்டாமிடம் பிடித்த பிலிப்பின்ஸ் மங்கை சாண்ட்ரா சைஃபெர்ட் (இடமிருந்து 2-வது). மூன்றாவது இடத்தை வெனிசுலாவின் ஜெஸிகா பார்பரா பிடித்தார். “தண்ணீர்’ அழகியாக ஸ்பெயினின் அலெஜாண்ட்ரா இஸவாரியா பட்டம் வென்றார்..
பிரான்ஸில் வாழுகின்ற தமிழர் சமூகத்திடம் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு ஒரு பிரஞ்சு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. என BBC தெரிவித்துள்ளது
இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போருக்காக பல லட்சக் கணக்கான டாலர்களை இந்தக் குழுவினர் பிரான்ஸில் வாழும் தமிழ் மக்களிடம் மிரட்டிப் பறித்ததாக கூறப்படுகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரான்ஸ் நாட்டுப் பிரிவின் தலைவரான நடராஜா மதிந்திரன் என்பவர் உட்பட 21 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர்.
பாரிஸிலும், அண்மைய பகுதிகளிலும் வாழும், பெரும்பாலும் அரசியல் அகதிகளான தமிழர்களிடம், புரட்சி வரி என்ற பெயரில் இந்தப் பணம் அறவிடபட்டதாக அரச தரப்பு வழக்குத்தொடுனர்கள் தெரிவித்துள்ளனர்.