செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மக்களின் சிறப்புரிமைகளை பெற்றுக்கொடுக்க அமைச்சர்களின் அர்ப்பணிப்பு அவசியம்

president.jpgஅமைச்சர்கள் தமது சிறப்புரிமைகளைப் பெற்றுக் கொள்வதிலேயே குறிக்கோளாக இருக்காமல் மக்களின் சிறப்புரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுவது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேபோன்று அரசாங்கத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தம்மிடம் வரும் பொதுமக்களின் கண்ணீரைத் துடைப்பதில் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுவது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். காலி மலிகஸ்பே சுபத்ராராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி தர்மசாலைக் கட்டிடத்தை உத்தியோகபூர்மாக அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு 500 பேர் சேர்ப்பு; 367 பேருக்கு களுத்துறையில் பயிற்சி

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட 500 பேரில் 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் முதல் முறையாக யாழ். நகரிலிருந்து பொலிஸ் சேவைக்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப் பட்டுள்ளனர்.  யாழ். மாவட்டத்திலிருந்து தகுதிவாய்ந்த இளைஞர்களை பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கடந்தாண்டு கோரப்பட்டிருந்தன.

இதன்படி சுமார் 6000 விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்திருந்தன. குறிப்பிடப்பட்ட வயதெல்லையையும் விஞ்சிய வயதையுடையவர்களும், விவாகமானவர்களும் விண்ணப்பித்திருந்தனர். 6000 விண்ணப்பங்களுள் தகுதிவாய்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட 1500 பேர் மட்டுமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டி ருந்தனர்.

2009ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 26ஆம் திகதி நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் பயனாக 500 பேர் மட்டுமே பொலிஸ் சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டு ள்ளனரென பொலிஸ் தலைமையக ஆட்சேர்ப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

சேர்த்துக்கொள்ளப்பட்ட 500 பேருள் 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் எஞ்சியவர்கள் 133 பேர் இரண்டாவது கட்டமாக களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்படவுள்ளனர். பயிற்சி கள் முடிவடையும் பட்சத்தில் இவர்கள் யாழ். மாவட்டத்தில் குறிப்பாக வடமாகாண பொலிஸ் நிலையங்களில் வேலைக்கு அமர்த்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

வடமராட்சியில் பெண்ணைக் கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!

வடமராட்சியில் கடத்தப்பட்டு, நேற்று முன்தினம் (11 May 2010) வல்லைவெளியில் பற்றையொன்றில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட லங்காதேவி (வயது 37) என்ற பெண்ணைக் கடத்தியவர்களான உடுப்பிட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை விசாரணை செய்த பருத்தித்துறை நீதவான் எதிர்வரும் 26 வரை இவர்களைத் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணின் மகளை திருமணம் செய்து தருமாறு வற்புறுத்தியே இக்கடத்தல் மற்றும், இப்பெண் மீதான கத்திக்குத்து என்பன நடைபெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது. வன்னியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கணவர் மற்றும் மகன் ஆகியோர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய பிள்ளைகளுடன் கரவெட்டியில் சம்பந்தர் கடைப்பகுதியில் இப்பெண் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அராலியில் சிறிலங்கா இராணுவச்சிப்பாய் மரணம்!

Check_Pointஇன்று 13ம் திகதி யாழ்ப்பாணம் அராலியில் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகியுள்ளதாக இன்று பகல் யாழ்ப்பாணத்தில் பரபரப்பாக வதந்திகள் பரவின. இது தொடர்பாக விசாரித்தபோது ஒரு இராணுவ சிப்பாய் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்ததாக தகவல்கள் வந்தன. இதனையடுத்து இராணுவச்சிப்பாயை நோக்கி யார் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டார்கள் என்கிற கேள்விகள் மக்கள் மனங்களில் எழுந்தன. இச்சம்பவம் மக்கள் மத்தியில் ஓரு அச்சத்தை ஏற்படுத்தின.

பின்னர் வந்த தகவல்களின் படி குறிப்பிட்ட இராணுவச்சிப்பாய் ஒரு யுவதியைக் காதலித்து வந்ததாகவும் பின்னர் அப்பெண் மனம் மாறி அவரின் காதலை மறுத்ததாகவும், இதனால் விரக்கியுற்ற அச்சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வருகின்றது.

ஓமந்தை, மாங்குளத்தில் 800 ஏக்கர் நிலப்பரப்பில் பொருளாதார வலயங்கள்

யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால் கூடுதலான நாடுகள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளன.  வடக்கு, கிழக்கு பிரதேச அபிவிருத்தியை துரிதப்படுத்தும் நோக்குடன் அப்பகுதியில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கவுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஏ. எம். சி. குலசேகர கூறினார்.

ஓமந்தை, மாங்குளம் ஆகிய பகுதிகளில் தலா 400 ஏக்கர் நிலப்பரப்பில் இரு பொருளாதார வலயங்களை அமைப்பதற்கான முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளிலும் பொருளாதார வலயங்கள் அமைப்பதற்கான காணிகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:-கடந்த காலங்களில் நாட்டின் 2/3 பகுதியில் மீன்பிடித்துறையில் ஈடுபட முடியாத நிலை காணப்பட்டது. ஆனால், இன்று முழு நாட்டிலும் மீன்பிடிக்கவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும், சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் விவசாயத்துறையும் அபிவிருத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வடக்கு, கிழக்கில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். இப் பகுதியில் முதலீடு செய்பவர்களுக்கு 15 முதல் 20 வருட வரி விலக்கு வழங்கப்படுவதோடு தீர்வையற்ற முறையில் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை தருவிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் முதலீடு செய்வதற்கு பல முதலீட்டாளர்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த சிந்தனையின் கீழ் 12 பொருளாதார வலயங்கள் நாடு பூராவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பொருளாதார வலயங்களில் பல்வேறு கைத்தொழில்கள் ஆரம்பிக்கப்படும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தல் முறை மாற்றம் திருத்த யோசனைகள் முன்வைக்கும்போது சாதக, பாதகங்களை எடுத்துரைப்போம்

muthusivalingam.jpgஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான திருத்த யோசனைகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது அதன் சாதக, பாதக நிலைகளை எடுத்துரைப்பதாக பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

எனினும், அதற்கு முன்னதாக நடைபெறும் கலந்துரையாடலிலும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள எண்ணியுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் இன்னும் ஓரிரு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதற்கு முன்னதாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடலை நடத்தி கருத்துக்களை அறியுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

வத்தளையில் 1 1/2 வயது குழந்தை மாயம்; தீவிர விசாரணை

வத்தளை பள்ளியாவத்தையைச் சேர்ந்த தம்பதியினரின் காணாம ற்போன ஒன்றரை வயது குழந்தை தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளைமுன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

சித்தும் சத்கார எனும் இந்த குழந்தை தனது பாட்டியுடன் வீட்டிலிருந்த வேளை கடந்த 04 ஆம் திகதி காணாமற் போயுள்ளது. தாயும் தந்தையும் வேலைக்குப் போகும் நிலையில் குறித்த குழந்தை பாட்டியுடன் வீட்டிலிருப்பது வழக்கம். அன்றைய தினம் வீட்டு முன்றலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமற் போயுள்ளது. இவர்களது வீட்டுக்கு முன்னால் 20 அடி ஆழமான களனி கங்கை ஆறு காணப்படுகிறது.

குழந்தை திட்டமிட்டு யாரானேனும் கடத்தப்பட்டுள்ளதா அல்லது களனி அவற்றில் விழுந்து காணாமற் போயுள்ளதா என்ற சந்தேகம் பொலிஸாருக்கு எழுந்துள்ளது. கடற் படையினரின் ஒத்துழைப்புடன் களனியாற்றில் தேடுதல் நடத்தப்பட்டு வரும் அதேவேளை பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குழந்தை கடத்தல்; மூன்று பெண்கள் சந்தேகத்தில் கைது

kalaniya.jpgகளனி விஹாரையில் வைத்து 2 1/2 வயது குழந்தையை கடத்திச் சென்றவர் என சந்தேகிக்கப்படும் வயோதிபப் பெண்ணின் உறவினர்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

குழந்தையை கடத்திய இப்பெண்ணுக்கு இம்மூவரும் ஒத்துழைப்பு வழங்கிய குற்றச் சாட்டின் பேரிலேயே பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்டோர் அவரின் மகளும் இரண்டு பேத்திமாரும் ஆவர்.

”விடுதலைப் புலிகளுக்கெதிரான இரண்டாவது யுத்தம் ஆரம்பமாகியுள்ளது!” மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரண்டாம் கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. விடுதiலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச ரீதியான பிரசாரங்கள் மற்றும், ஏனைய நடவடிக்கைகள் யாவும் கட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நாடு கடந்த தமிழீழ இராஜ்ஜியம் ஒன்றை அமைப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றனர். விடுதலைப் புலிகளுக்ககு  எதிரான யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கெதிராக சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் புலிகளுக் கெதிரான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டுள்ள போதிலும், அவர்களின் சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிரான யுத்தம் தொடர்கின்றது எனவும் அவர் குறிப்பட்டள்ளார். 

இதே வேளை, விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அவர் மேலும் கூறியுள்ளார். கொழும்பிற்குள் ஊடுருவிய அநேகமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

20-20 உலகக்கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் இன்று இலங்கை – பிரித்தானிய அணிகள் மோதல்

sri-lanka.jpgமேற்கிந்திய தீவுகளின் நடைபெற்றுவரும் 20-20 உலகக்கிண்ண போட்டியின் காலிறுதியின் இறுதிப் போட்டியில் அரையிறுதி வாய்ப்பிற்கான இலக்குடன் இலங்கை இந்திய அணிகள் பலப்பரீட்சை கண்டன. மிகவும் விறுவிறுப்பாக நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இலங்கை- இந்திய அணிகளுக்கிடையலான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன் படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கார்த்திக்இகம்பீர் இருவரும் களம் இறங்கினர்.கார்த்திக்13, கம்பீர்41, ரெய்னா63, டோனி23, யுவராஜ் சிங்1, பதான்13 ஒட்டங்களை பெற்றனர். இந்திய அணி உதிரிகளாக 09 ஓட்டங்களை பெற்றது. 20ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை எடுத்திருந்தது. இலங்கை அணியின் பந்து வீச்சில் துஷார, மலிங்க இருவரும் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். பெரேரா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குதுடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் ஜயவர்த்தன4, ஜயசூரிய 0, இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர். எனினும் இருவரும் சிறப்பாக பிரகாசிக்கவில்லை .  பின்னர் களம் இறங்கிய ஏனைய வீரர்கள் டில்சான்33, சங்கக்கார46 ,  மத்தியூஸ்46, கப்புகெதர37, ஓட்டங்களை பெற்றனர். உதிரிகளாக 1 ஓட்டம் பெறப்பட்டது. 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது. இதனால் அரையிறுதி வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டது.  இந்திய அணியின் பந்து வீச்சு சார்பில் ஆகியோர் நெஹ்ரா இபதான் இருவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.வினய் குமார் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நேற்றுமுன்தினம் அவுஸ்திரேலியாவுட‌ன் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் மே‌ற்‌கி‌ந்‌திய ‌‌‌தீவு அ‌ணி தோல்வி கண்டதால் மேற்கிந்திய தீவு அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.  இப்போட்டியில் பூவா தலையா வென்று முதலில் துடுப்பாடிய மே‌‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களையே பெற்றது.

கூடிய ஓட்டமாக சர்வான் 31 பந்துகளில் 26 ஓட்டங்களையும், சந்திரபோல் 18 ப‌ந்‌துகளை எதிர்கொண்டு 24 ஓட்டங்களையும் பெற்றனர்.  அ‌ணி‌த் தலைவ‌ர் கெ‌ய்‌ல் 4 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். அவுஸ்திரேலியா தர‌ப்‌பி‌ல் ‌‌‌ஸ்‌மி‌த் 3 வி‌க்கெ‌ட்டு‌ம், ஜா‌ன்ச‌ன், ஹ‌ஸ்‌ஸி ஆ‌கியோ‌ர் தலா 2 வி‌க்கெ‌ட்டுகளை கை‌ப்ப‌‌ற்‌‌றின‌ர்.  பின்னர் களம் இறங்கிய ஆஸ்‌ட்ரேலிய அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் அரையிறுதியில் முதலாட்டம் விருவிருப்பாக நடைபெறுமென கிரிக்கட் இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். நாளை அவுஸ்திரேலியா அணியும் பாக்கிஸ்தான் அணியும் அரையிறுதியில் மோதவுள்ளன.