மக்களின் சிறப்புரிமைகளை பெற்றுக்கொடுக்க அமைச்சர்களின் அர்ப்பணிப்பு அவசியம்

president.jpgஅமைச்சர்கள் தமது சிறப்புரிமைகளைப் பெற்றுக் கொள்வதிலேயே குறிக்கோளாக இருக்காமல் மக்களின் சிறப்புரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுவது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேபோன்று அரசாங்கத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தம்மிடம் வரும் பொதுமக்களின் கண்ணீரைத் துடைப்பதில் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுவது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். காலி மலிகஸ்பே சுபத்ராராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி தர்மசாலைக் கட்டிடத்தை உத்தியோகபூர்மாக அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *