செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வடமராட்சியில் பெண் படுகொலை! உடமைகள் கொள்ளை!

வடமராட்சியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு அவரது உடமைகள் கொள்ளையிடப்பட்டு உள்ளன. 13-07-2010 வடமராட்சி இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டியில் முற்பகல் 11 மணியளவில்  40 வயதான திருமணமாகாத பெண்ணான ஜெயகௌரி என்பவரது சடலம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவரை கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்த (July 11 2010) காணவில்லை என அயலவர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று இவரின் சடலம் கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவரின் தலையில் அடிகாயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவரது விட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, கைத்தொலைபேசி மற்றும் இவரது நகைகள் யாவும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இவரது நான்கு சகோதரர்கள் வெளிநாட்டிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரது கொலை தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மழைபெய்யும் வேளைகளில் அவலங்களை எதிர்கொள்கின்றனர்.

Rehabilitation_Wanniதற்போது இடைக்கிடையே பெய்து வரும் மழை காரணமாக வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். கூரைகளற்ற வீடுகளிலும் தறப்பாள் கூடாரங்களிலும் வசிக்கும் மக்கள் மழை பெய்யும் போது பெரும் அவலங்களுக்கு உள்ளாகின்றனர். கூரைகளற்ற வீடுகளின் உள்ளேயும், தறப்பாள் கூடாரங்களுக்குள்ளும் மழைநீர் புகுந்து விடுவதால் சிறுகுழந்தைகள், வயோதிபர்கள் உள்ள குடும்பங்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்க நேரிடுகின்றது. அவர்களது நிவாரண உணவுப்பொருட்களும் மழையில் நனைந்து நாசமாகின்றன.

Rehabilitation_Wanniமுன்னர் மீள்கடியேற்றப்பட்ட  மக்கள் தற்காலிகக் கூடாரங்களை அமைத்துக்கொள்ள பன்னிரண்டு கூரைத் தகரங்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு அவை வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை. எதிர்வரும் பருவமழைக்கு முன்பாக இம்மக்களுக்கான வீடுகள் ஒழுங்கமைக்கப்படா விட்டால் பாரிய அவலங்களுக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டிவரும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

ரயில் சேவை ஓமந்தை வரை நீடிக்கப்படும்

sri-lanka-railway.jpgயாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாத முடிவுக்குள் ஓமந்தை வரை நீடிக்கப்படும் என்று போக்குவரத்து பிரதியமைச்சர் ரோஹண திஸாநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

யாழில் பெற்றோல், டீசல் விலை குறைப்பு

sri-lanka-petroleum.jpgஅமைச்சரவை தீர்மானத்தின்படி இன்றிலிருந்து யாழில் பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி பெற்றோல் ரூபா 2.40 த்தாலும் . டீசல் மற்றும் மண்னெண்ணை ரூபா 1.90 த்தாலும் விலை குறைக்கப்படவுள்ளது.

வைகோ, நெடுமாறன் கைது

yko_03.jpgசென்னை யில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழநெடுமாறன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை இதுழாசிரியர் மா நடராசன் உட்பட ஏராளமானோரை தமிழ் நாடு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றமையைக் கண்டித்தும், ஐ.நா நிபுணர் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மறுக்கும் மஹிந்த அரசுக்கு தமிழகத்தில் தூதரகம் இயங்கக் கூடாது என்று தெரிவித்தும் இலங்கை அரசுக்கு எதிராக சென்னை மைலாப்பூர் பகுதியில் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வவுனியாவில் எரிபொருள் விநியோக உப நிலையம் – வடபகுதி மக்களுக்கு விமோசனம்

sri-lanka-petroleum.jpgவவுனியாவுக்கு வடக்கே எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கான எரிபொருள் விநியோக உப நிலையம் நேற்று வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டது. இதுவரை காலமும் அனுராதபுரத்திலிருந்தே எரிபொருள் விநியோகம் பெளசர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்போது ரயில் மூலம் வட பகுதிக்கான எரிபொருள் விநியோகமும் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியத் துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று வவுனியாவில் எரிபொருள் விநியோக உப நிலையத்தை திறந்து வைத்தார். அத்துடன் வன்னி மாவட்டத்தில் 13 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்து வைக்கும் திட்டத்தின் கீழ் எட்டாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைச்சர் சுசில் கிளிநொச்சி நகரில் திறந்துவைத்தார்.

பெளஸர்கள் மூலம் எரிபொருள் வட பகுதிக்கு கொண்டு செல்வதால் போக்குவரத்துச் செலவுடனேயே வடபகுதி மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரயில்கள் மூலம் எரிபொருட்களை வட பகுதிக்கு கொண்டு செல்வதன் ஊடாக செலவினம் குறைக்கப்படுவதுடன் அந்த செலவினத் தொகையை நிவாரணமாக வடபகுதி மக்களுக்கே பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

1989 களில் வவுனியாவில் இயங்கிவந்த எரிபொருள் விநியோக நிலையம் கடந்த காலங்களில் கவனிப்பாரற்ற நிலையில் இருந்தது. வவுனியா குட்செட் வீதியில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியிலமைந்துள்ள மேற்படி விநியோக உப நிலையம் மீண்டும் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. இதேவேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் புதிய எரிபொருள் நிலையங்களை அமைத்து வருகிறது.

மீண்டும் இன்று (14ம் திகதி, எரிபொருள் நிரப்பிச் செல்லும் சரக்கு ரயில் வவுனியா நோக்கி புறப்படவுள்ளது. அனுராதபுரம் எரிபொருள் விநியோக உப நிலையத்திலிருந்தும் வவுனியா உப நிலையத்திற்கும் எரிபொருள் அனுப்பப்படவுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உகண்டா குண்டு வெடிப்பில் கொட்டாஞ்சேனை ராமராஜா கிருஷ்ணராஜா (50) பலி

உகண்டா குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை இலங்கைக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கைகளை வெளி விவகார அமைச்சு கென்னிய உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித் தார்.

கொழும்பு 13, சென். பெனடிக் மாவத்தையைச் சேர்ந்த ராமராஜா கிருஷ்ணராஜா (50) எனும் குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் 2008ஆம் ஆண்டு முதல் உகண்டாவிலுள்ள இந்திய கம்பனியொன்றில் விற்பனைப் பிரதிநிதியாக கடமையாற்றி வந்துள்ளார். இக்குண்டு வெடிப்புகளில் 74 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்புக்கு வெளியில் முதன்முறையாக கிளிநொச்சியில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

p.jpgஅரசாங் கத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்புக்கு வெளியில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கிளிநொச்சி படைத் தலைமையகத்தில் அமைச்சரவை கூடவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியது.

கொழும்புக்கு வெளியில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைச்சரவைக் கூட்டங்களை நடாத்த அமைச்சரவை தீர்மானித்திருந்தது. இதன் பிரகாரம் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் நடத்தப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நடைபெறும். மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் ஜனாதிபதி சந்தித்து பேச உள்ளார். இன்று மாலை இரணைமடுவில் ஜனாதிபதி தலைமையில் பொதுக் கூட்டமொன்றும் நடாத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியது.
இதனை குறிக்கும் வகையில் பல அபிவிருத்தித் திட்டங்களும் அங்கு தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.

கே பி யின் தற்போதைய நிலையைக் காட்டும் புதிய படம்!

Kumaran_Pathmanathan_New_Photoகே பி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதனுடைய புதிய படம் ஒன்று இணையங்களில் உலாவருகின்றது. விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய நபரான இவரது உண்மைத் தோற்றம் கடந்த பல ஆண்டுகளாக அறியப்படாத இரகசியமாகவே பேணப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலங்களில் எடுக்கப்பட்ட படங்களால் மட்டுமே இவர் அறியப்பட்டு வந்தார்.

Kumaran_Pathmanathan_New_Photoதமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளராக அறிவிக்கப்பட்ட போது ஒரு படம் வெளியிடப்பட்டு இருந்த போதும் அது கே பியின் உண்மைத் தோற்றத்தை வெளிப்படுத்தி இருக்கவில்லை. அதன்பின் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்ட பின் வெளியிடப்பட்ட படமே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது கே பி யின் புதியபடம் ஒன்று இணையங்களில் உலாவவிடப்பட்டு உள்ளது. கைத்தொலைபேசியுடனும் சிரித்த முகத்துடனும் சந்தோசமான மனநிலையுடன் இவர் காணப்படுகின்றார். இப்படம் இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட படமா அல்லது கே பி க்கு எதிரானவர்களால் கே பி இலங்கை அரசின் ஆதரவில் மகிழ்ச்சியாக உள்ளார் என்பதை வெளிப்படுத்த அனுமதியற்று எடுக்கப்பட்ட படமா என்பது தெரியவில்லை.

அமிர்தலிங்கம். யோகேஸ்வரன் ஆகியோரது 21வது நினைவுநாள் இன்று நினைவு கூரப்பட்டது.

Amirthalingam_A_TULFதமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களினதும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு.வெ.யோகேஸ்வரன் அவர்களினதும் 21வது நினைவு தினம் இன்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் யாழ்.மாவட்டத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா தலைமையில்  இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடரை கூட்டணியின் முன்னால் உடுவில் கிராமசபை தலைவர் ச.முத்துலிங்கம்.  கூட்டணியின் முத்த உறுப்பினர்களில் ஒருவரான த.பூலோகரட்ணம் ஆகியோர் ஏற்றினர்.  அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலத்தப்பட்டது.

தொடர்ந்து நினைவுரைகள் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் செ.முத்துலிங்கம், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் செ. விஜயரத்தினம், ச.முத்துலிங்கம், திருஞானசம்பந்தர் ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்த நன்றியுரையினை தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஊடகச்செயலாளர் த.கஜன் நிகழ்த்தினார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆதரவாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.