கொழும்புக்கு வெளியில் முதன்முறையாக கிளிநொச்சியில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

p.jpgஅரசாங் கத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்புக்கு வெளியில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கிளிநொச்சி படைத் தலைமையகத்தில் அமைச்சரவை கூடவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியது.

கொழும்புக்கு வெளியில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைச்சரவைக் கூட்டங்களை நடாத்த அமைச்சரவை தீர்மானித்திருந்தது. இதன் பிரகாரம் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் நடத்தப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நடைபெறும். மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் ஜனாதிபதி சந்தித்து பேச உள்ளார். இன்று மாலை இரணைமடுவில் ஜனாதிபதி தலைமையில் பொதுக் கூட்டமொன்றும் நடாத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியது.
இதனை குறிக்கும் வகையில் பல அபிவிருத்தித் திட்டங்களும் அங்கு தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *