செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இந்திய வெளியுறவுச்செயலர் வடபகுதிக்கு விஜயம்.

Nirupama_Raoஇலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமாராவ் எதிர்வரும் 31ம் திகதி செவ்வாய் கிழமை வடபகுதிக்கு விஜயம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகப்ரர் மூலம் இப்பகுதிகளுக்கு செல்லும் இவர் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து பிற்பகல் 2மணிக்கு யாழ்பாணம் செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதோடு, பொது நுலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ்.மேயர் திருமதி யோ.பற்குணராஜா ஆகியோரும் இந்நிழ்வில் கலந்து கொள்ள வுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் மீள்குடியமர்வு, ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து இக்கலந்துரையாடலில் முக்கியமாக ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பசில் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம்.

basil.jpgகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமை தாங்குவார் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் இக்கூட்டம் நiபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும், மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் என்பன ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரை மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கு தேவைப்படும் வசதிகள் போன்ற விடயங்களும் இதன்போது ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9000 ஓட்டங்களை கடந்த 3 வது வீரர் மகேல ஜெயவர்த்தன

mahela.jpgசர்வதேச ஒரு நாள்போட்டியில் 9000 ஓட்டங்களைக் கடந்த 3வது வீரர் என்ற பெருமையை மகேல ஜெயவர்த்தன பெற்றுக்கொண்டார்.  இன்று இடம் பெற்றுக்கொண்டிருக்கும் இந்தியாவிற்கு எதிரான போட்டியிலே மகேல ஜெயவர்த்தன இச் சாதனையை நிலை நாட்டினார். ஏற்கெனவே சனத், அரவிந்த இந்த இலக்கைத் கடந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டத்தில் வெல்ல கூடுதல் முயற்சி தேவை – சங்ககரா

பொதுவாக இறுதி ஆட்டங்களின் போது  இந்திய அணியினர் எங்களை விட சிறப்பாக செயல்பட்டு கோப்பை வென்று விடுவர். இது பலமுறை நடந்துள்ளது. இம்முறை சற்று கூடுதல் முயற்சி எடுத்து ஐந்தாவது முறையாக கோப்பை வெல்வதை தடுப்போம். சேவக் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. இவரை விரைவில் அவுட்டாக்கினால் எங்களுக்கு நல்லது என இலங்கை அணித்தலைவர் தெரிவித்தார்.

தோனி தலைமையில் இந்திய அணி, இலங்கையில் தொடர்ந்து நான்கு ஒருநாள் தொடர்களில் கோப்பை வென்றுள்ளது. கடந்த 2008 (3-2), 2009 (4-1) ல் நடந்த ஒருநாள் தொடர்கள் 2009 முத்தரப்பு தொடர், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை என மொத்தம் நான்கு முறை சாதித்துள்ளது. இன்றும் வெல்லும் பட்சத்தில் ஐந்தாவது முறையாக கோப்பை வென்று சாதிக்லாம்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து துடுப்பெடுத்தாடி வருகிறது. இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் எதுவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல்யாப்பு திருத்தத்திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

rauff.jpgஅரசு முன்வைத்திருக்கும் பாராளுமன்ற அரசியல்யாப்பு திருத்தம் தொடர்பில் தாம் ஆதரவளிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்று முன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இணையும்?

அரசாங்கத்தில் இணைவது பற்றி இறுதி முடிவெடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதி உயர்பீடம் இன்று அவசர அவசரமாகக் கூடுகிறது. இன்று பிற்பகல் 3 மணியளவில் மு. கா.வின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதென முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட எம். பி. நூர்தீன் மசூர் தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் இணைவதா? இல்லையா? என்பதைப் பற்றியே ஆராயவுள்ளோம். பெரும்பாலும் இணைவதில் சாதகமான நிலை ஏற்படலாம்” என அவர் கூறினார். கட்சியிலுள்ள எம். பிக்களும் முக்கிய பொறுப்புக்களில் உள்ளோரும் அரசில் இணைய வேண்டும் என்ப தில் ஆர்வமாகவுள்ளனர். ஆகவே இந்த விடயத்தில் இன்று இறுதி முடிவெடுக்கப்படுமெனவும் நூர்தீன் மசூர் எம். பி. தெரிவித்தார்.

தகுதி சுற்றில் சானியா வெற்றி

saniya.jpgஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி வருகிற 30ந் திகதி நியூயோர்க்கில் தொடங்குகிறது. தற்போது இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

தரவரிசையில் 160 வது இடத்திற்கு தள்ளப்பட்டதால் இந்திய வீராங்கனை சானியா மிர்சாவும் தகுதி சுற்றில் ஆடவேண்டி உள்ளது.

இதன் முதல் ரவுண்டில் அவர் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் ரஷியாவின் லைகினாவை தோற்கடித்தார். 2வது சுற்றில் மற்றொரு ரஷ்ய வீராங்கனை எலினா பொவினாவை சந்திக்கிறார்.

உடல் பருமனை கட்டுப்படுத்த கொரக்கா நல்ல நிவாரணி

உடலில் சதை போடுவதைக் கட்டுப்படுத்த கொரக்காப்புளி உதவுகிறது என்று உள்ளூரிலும் வெளிநாட்டிலும் நடந்த ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது என விவசாய அமைச்சின் தொழில் முயற்சியாளர் அபிவிருத்திப் பணிப்பாளர் டி. பி. டி. விஜேரத்ன தெரிவித்தார்.

உடல் பருமனுடையவர்கள் உலகில் பரந்த அளவில் காணப்படுகின்றனர். இது ஆண், பெண் என்ற இரு பாலாருக்கும் பொதுவானது. முறையான சிகிச்சை அளிக்கப்படாதவிடத்து இது பல பிரச்சினைகளை மட்டுமன்றி மரணத்தைக் கூட ஏற்படுத்தும்.

இவ்வாறான உடற் பருமன் உள்ளவர்களின் சதையைக் குறைப்பதற்கு கொரக்காப்புளி உதவுகிறது. கொரக்கா பழத்தில் நிறைய ஹைட்ரொக் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது கொழுப்பு உருவாவதை கடடுப்படுத்துகிறது என்று விஜேரத்ன கூறினார்.

ஹைட்ரோசிட்ரிக் அமிலம் கொலஸ்ட்ரோலை கட்டுப்படுத்துவதுடன் ஈரலில் கிளைக்கோஜென் உற்பத்தியாவதை அதிகரிக்கிறது. இது உடலில் சதை போமுவதைத் தடுக்கிறது. உடனடி நிவாரணம் பெறுவதற்கு சிலர் இந்த அமிலத்தை பயன்படத்த முனைகின்றனர். எனினும் அவ்வாறு உடனடியாக பயன்பெற முயற்சிப்பது மேலும் சுகாதார பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

லெபனானில் விசா இன்றி இருப்போரை விரைவில் இலங்கை அழைத்துவர ஏற்பாடு

sri-lankan-maids.jpgவிசா இன்றி தொடர்ந்து லெபனானில் நிர்க்கதி நிலையில் உள்ள இலங்கை பணிப்பெண்களை அடுத்த சில தினங்களில் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்து ள்ளது.

விசா காலம் கடந்துவிட்ட நிலையில் லெபனானில் தங்கியுள்ள இலங்கை பணிப்பெண்களுக்கு மீண்டும் இலங்கைக்கு வருவதற்காக மூன்று மாத பொதுமன்னிப்பு காலத்தை அந்த நாட்டு அரசாங்கம் வழங்கியிருந்தது.

அந்த மன்னிப்பின் கீழ் 100 பேர் அண்மையில் இலங்கையை வந்தடைந்தனர். இவர்களுக்கான விமான டிக்கட் மற்றும் இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர்களது வீடுகளுக்கு செல்ல போக்குவரத்து வசதியையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செய்து கொடுத்திருந்தது.

ஐ.நா. சபையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக சவேந்திர

savenra.jpgஐக்கிய நாடுகள் சபையின் பிரதி நிரந்தர விதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு நேற்று கூறியது.

பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணிபுரிந்த பந்துல ஜயசேகர நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளதையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது. இராணுவத் தலைமையக நடவடிக்கைப் பணிப்பாளர் உட்பட பல உயர் பதவிகளை இவர் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.