செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மீண்டும் மேர்வின் சில்வா பிரதி அமைச்சராக சத்தியப்பிரமாணம்

mervin0000.jpgகளனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா பெருந்தெருக்கள் பிரதியமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதியமைச்சர் பதவிக்கான நியமனக் கடிதம் நேற்று மாலை பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் தெரிவித்தார்.

18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் – ஆதரவாக 161 வாக்குகள், எதிராக 17 வாக்குகள். ஐ.தே.க வாக்களிக்கவில்லை.

parliment.jpg18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப்பலத்துடன் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் செனவிரட்ன, அப்துல் காதர், மனுஷ நாணயக்கார, ஏர்ல் குணசேகர, உபேக்சா சுவர்ணமாலினி, நிமல் விஜேசிங்க,  பீ திகாம்பரம், பிரபா கணேஷன், ஜே. ஸ்ரீ ரங்கா ஆகியோர் உள்ளடங்குகின்றனர். .

இதேவேளை 18 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 10 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் 07 பாராளுமன்ற உறுப்பினர்களுமாக மொத்தம. 17 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.ஐ.தே.க வாக்களிக்கவில்லை.

ஆறு எதிர்கட்சி உறுப்பினர் அரசுடன் இணைவு

unp_logo.jpgபாராளு மன்றத்தில் அரசியல்யாப்பு திருத்தம் தொடர்பில் விவாதம் நடைபெற்ற வேளையிலே  எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல் காதர், உபேக்சா சுவர்ணமாலி, மனுஷா நாணயக்கார, ஏல் குணசேகர, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் நில்வலா விஜயசிங்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இவர்கள் அரசிற்கு 18 ஆவது அரசயல்யாப்பு திருத்தம் தொடர்பில் மாத்திரம் தமது கட்சிகளில் இருந்து ஆதரவளிப்பதாக கூறியமை குறிப்பிடத்தக்கது. 

நடிகர் முரளி மரணம்

08-murali.jpgதமிழ் திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளா நாயகனாக நடித்துவந்த முரளி(46) இன்று சென்னையில் நெஞ்சுலியால் மரணமடைந்தார். முரளியின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

1984ம் ஆண்டு பூவிலங்கு வெளியானபோது அதில் நாயகனாக அனல் பறக்க வசனம் பேசி நடித்த முரளி, தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். 1984ல் தொடங்கிய முரளியின் நடிப்பு பயணம் 2002ம் ஆண்டு வரை நிற்காமல் படு பிசியாக போய்க் கொண்டிருந்தது.

08-2muralai.jpgபூவிலங்கைத் தொடர்ந்து பகல் நிலவு படத்தில் மணிரத்தினத்தின் கையால் குட்டுப்பட்டு பண்பட்ட நடிப்பைக் காட்டினார் முரளி. ஆக்ரோஷமாகவும் நடிக்க முடியும், பக்குவப்பட்ட நடிப்பையும் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தார் இப்படத்தின் மூலம். தொடர்ந்து பல படங்களில் நடித்த முரளிக்கு பெரும் ஏற்றத்தையும், அவரை ஒரு ஸ்டார் நடிகராகவும் உயர்த்திய படம் விக்ரமனின் புது வசந்தம். அவரது திரையுலக வாழ்க்கையில் அது ஒரு முக்கிய மைல் கல். அதைத் தொடர்ந்து மிகவும் பிசியான நடிகராக உயர்ந்தார் முரளி.
சேரன் இயக்கத்தில் முரளி நடித்த பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு ஆகிய இரு படங்களும் முரளியின் நடிப்புத்திறமையை மேலும் பளிச்சிட வைத்த அருமையான படங்கள். சுந்தரா டிராவல்ஸில் இவரும், வடிவேலுவும் செய்த காமெடிக் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலங்க வைத்ததை மறக்க முடியாது.

ஆனந்தம் படமும் முரளியின் அருமையான நடிப்பை வெளிக் கொண்டு வந்த படங்களில் ஒன்று.. தமிழ் சினிமாவின் ஆர்ப்பாட்டமில்லாத, அதேசமயம் ஏராளமான வெள்ளி விழா படங்களைக் கொடுத்த மிகச் சிறிய நடிகர்களில் முரளியும் குறிப்பிடத்தக்கவர். எந்த நிலையிலும் அவர் தலைக்கணம் பிடித்து நடந்ததில்லை. பந்தா செய்ததில்லை. தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் மதித்து நடந்தவர்.

2001ம் ஆண்டு பாரதிராஜாவின் கடல் பூக்கள் படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றார் முரளி. கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக தேர்தல்  பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கடைசியாக முரளி நடித்த படம் அவரது மகனின் முதல் படமான பாணா காத்தாடிதான். அதற்கு முன்பு அவர் நடித்த படமான கவசம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள நிலையில் அகால மரணத்தை சந்தித்துள்ளார் முரளி. முரளியின் மனைவி ஷோபா. இந்தத் தம்பதிக்கு மகன் அதர்வா தவிர காவ்யா என்ற மகள் உள்ளார்.

மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் முரளி பேசிய வார்த்தை இது… நான் 30 வருடங்களா நடித்த காலத்தில் எத்தனையோ தவறுகளை செய்துள்ளேன். ஆனால் அதை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பொறுத்துக் கொண்டு என்னை வாழ வைத்தனர்.எனவே தயாரிப்பாளர்களுக்கு மதிப்பு கொடு, நல்ல பெயரெடு, நல்ல நடிகராக உருவாகு, பணத்தை விட நல்ல படம் முக்கியம் என்பதையே எனது மகனுக்கு அறிவுரையாக கூறியுள்ளேன் என்றார் முரளி.

TNA MP பி. பியசேன அரசியல் யாப்பு திருத்தத்திற்கு ஆதரவு

jj.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன அரசியல் யாப்பு திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாக சற்றுமுன்பு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

‘அரசியலமைப்பில் அடுத்த வருடமும் சில திருத்தங்கள்’ – அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

maitereepala.jpgஅடுத்த வருடமும் அரசியலமைப்பில் சில திருத்தங்கள் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 13 வது திருத்தத்திலும் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும், அமைச் சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலைய த்தில் நடைபெற்றது.  இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று பெரும்பான்மையான எம்.பிக்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட உள்ளது. எதிர்பார்க்காத அளவு எதிர்க்கட்சி எம்.பிக்கள் இதற்கு ஆதரவு வழங்க முன் வந்துள்ளனர். இன்றும், நாளையும் (7, 8) மேலும் பலர் யாப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்க உள்ளனர். உத்தேச யாப்புத் திருத்தம் அவசரமாக சமர்ப்பிக்கப்படுவதாகவும் அது குறித்து ஆராய அவகாசம் வழங்கப்படவில்லை எனவும் எதிர்க் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஆனால் 1978 யாப்பு, 13 வது 17 வது திருத்தங்கள் என்பன அவசர அவசரமாகவே நிறைவேற்றப்பட்டன. ஆனால் உத்தேச 18 வது யாப்புத் திருத்தம் குறித்து 3 மாதங்களுக்கு மேலாக பேசப்பட்டது. கட்சிகளின் கருத்துகளும் பெறப்பட்டன. நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கும் வகையிலே தற்பொழுது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய திருத்தத்தின் படி ஜனாதிபதி கட்டாயம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கத்துடன் இணையும் ஒவ்வொரு வரும் அபிவிருத்தியின் பங்காளர்களாகின்றனர். இலங்கையை பலமான நாடாக கட்டியெழுப்ப வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றுவோம். கட்டமைப்பு ரீதியான திருத்தங்கள் இம்முறை செய்யப்படவில்லை. அடுத்த வருடத்திலும் யாப்பில் தேவையான திருத்தங்கள் முன்னெடுக்கப்படும். சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்காக அதிகாரங்கள் வழங்கப்படும். பொலிஸ் மா அதிபருக்கு எதிராக மக்களுக்கு முறையிட முடியும். சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு தொடர்பில் எதிர்காலத்தில் மேலும் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் என்றார்.

வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்குவதே எமது நோக்கம் – ஜனாதிபதி

mahinda-rajapaksa.jpgநாட்டை சுதந்திரமாக்கிய எமக்கு நாட்டு மக்கள் திருப்திப்படும் வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பது முக்கியமாகவுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் வீட்டு உறுதிப் பத்திர மில்லாத 1300 பேருக்கு வீட்டு உறுதிகளை வழங்கும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வீட்டுரிமையாளர்களுக்கு உறுதிப் பத்திரத்தைக் கையளித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

சிலர் இந்த நாட்டில் ஜனநாயகமில்லை எனவும் சர்வாதிகாரமே ஓங்கியுள்ளதெனவும் கூறி வருகின்றனர். இது பொறாமை மற்றும் வைராக்கியத்தின் வெளிப்பாடாகும். என்னைப் பற்றி மிக மோசமான கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. எனது குடும்பத்தை சீர்குலைக்கும் விதத்திலும் கூற்றுக்களை வெளியிட்டுள்ளனர். நான் கொழும்பு 7ல் பிறந்தவனென்றால் இதன் பிரதிபலிப்பு வேறு விதமாக இருந்திருக்கும். நான் மெதமுலன கிராமத்தில் பிறந்தவன். எனது செயற்பாட்டை சீரழிக்க முயற்சிக்கின்றனர்.

நாம் மக்களுக்காக நாட்டின் எதிர்கால சந்ததிக்காக சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தை முன்னெடுத்துள்ளோம். அதனை நிறைவேற்றுவோம். அதற்கு சகலரதும் பூரண ஒத்துழைப்பு அவசியம். வீட்டு உறுதிப்பத்திரிமில்லாதவர்களுக்கு வீட்டுரிமைப்பத்திரம் இன்று வழங்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்குவதே எமது நோக்கம். எனினும் அதனை ஒரே தடவையில் நிறைவேற்ற முடியாது. படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகின்றோம். வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சானது மக்களுடன் நெருங்கியதாக இத்திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பது சுலப மான காரியமல்ல. எனினும் முடிந்தளவு அதற்குத் தீர்வுகாண செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். எமக்கான காணிகள் அதிகரிக்காது எனினும் வீட்டுத் தேவையும் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. அதனால் நாம் திட்டமிட்ட செயற்பாட்டை முன்னெடுக்கின்றோம்.

நாம் இன்றைய தினத்தை மட்டும் கருத்திற்கொள்ளாது எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டே செயற்படுகிறோம். தற்போது நாடு ஒன்றிணைக்கப்பட்டு அபிவிருத்திப் பயணம் முன்னெ டுக்கப்படுகிறது. எதிர்கால பொருளாதாரம், சூழல், சமூக வளர்ச்சி பற்றி சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது. இன்றேல் மோசமான பின்விளைவுகளையே எதிர்கொள்ள நேரும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இறுதி மூச்சுவரை ஜனாதிபதிக்கே ஆதரவு

carder.jpgஅவசரகாலச் சட்டத்துக்கு மட்டு மல்ல அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் நான் இறக்கும் வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு தெரிவிப் பேன் என கண்டி மாவ ட்ட ஐ. தே. க எம். பி. ஏ. ஆர். எம். ஏ. காதர் சபையில் தெரிவித்தார். இன்று நான் ஆளும் தரப்பு ஆசனங்களில் அமரவு ள்ளேன் என்றும் காதர் எம். பி தெரிவித்தார். ஐ. தே. கவுக்காக எனது வாழ்நாளில் முழுப் பகுதியையும் செலவு செய்தது போல என் பணத்தையும் செலவு செய்தேன். எனினும் கட்சிக்குள் கழுத்தறுப்புகள் நடைபெற்றன.

இன்று ஐ. தே. க வுக்குள் இருந்து கொண்டே அரசுக்கு ஆதரவு வழங்குகிறேன். இன்று (7 ஆம் திகதி) ஆளும் தரப்புக்கு வந்து அமருவதாக இருந்தேன். இருப்பினும் இன்று (8 ஆம் திகதி) மேலும் சில ஐ. தே. க. உறுப்பினர்களுடன் ஆளும் தரப்புக்கு வருவேன் என்றும் கூறினார்.

நோன்புப் பெருநாள் தொடர்பாக தீர்மானிக்கும் மாநாடு

moon.jpgஹிஜ்ரி 1431 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்த்து தீர்மானிக்கும் மாநாடு நாளை (9) வியாழக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நோன்புப் பெருநாள் தொடர்பாக தீர்மானிக்கும் வகையில் அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.14 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள் கிறது. அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-5234044, 2432110, 2390783 மற்றும் 0777-366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்புகொண்டு அறியத்தருமாறு கொழும்பு பெரியபள்ளி வாசல் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் கேட்டுக்கொள்கின்றார்.

உலமாக்கள், கதீப்மார்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள, ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் ஜும்ஆப் பள்ளி வாசல், தக்கியாக்கள், சாவியாக்களின் நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அவசரகால சட்டம் வாக்கெடுப்பின்றி ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு

parliment.jpgஇலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டம் வாக்கெடுப்பு இன்றி மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 18 வது அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தாம் உட்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுடன் வெளியேறினார்.

இதன் பின்னர் அவசரகால சட்டம் தொடர்பில் வாக்களிப்பு நடத்துவதற்கு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் இல்லைமை காரணமாக வாக்கெடுப்பு இன்றி அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டது.