செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 25 பேர் நாடாளுமன்றில் தனித்து இயங்கப்போவது உறுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unp_logo.jpgஐக்கிய தேசியக் கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயேற்சைக் குழுவாக இன்னும் சில தினங்களில் இயங்கத் தொடங்குவர் எனவும், இது தொடர்பான முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.  ஐ.தே.க. உட்பூசல் உக்கிரம்: 25 அதிருப்தி எம்.பிகளுடன் மேலும் பலர் இணைவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தனியாக இயங்கப்போவதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும், எதிர்வரும் டிசெம்பர் மாதம் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும் போது கட்சியின் இளம் தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பால் தாங்கள் திருப்தியடையவில்லை என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சி மறுசீரமைப்புக் குழு ஒரு மாதத்துக்கு முன்னரே சிபார்சுகளை கையளித்து விட்டது எனவும் அவர் தெரிவித்தார்.  கட்சியின் தேசிய மாநாடு யூலை மாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒகஸ்ட் மாதத்திற்கு பின்போடப்பட்டது. இப்பொது டிசெம்பர் மாதத்தில் நடைபெறும் என ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பட்டுள்ளார். தாங்கள் நாடாளுமன்றில் தனித்து இயங்கவிருப்பதை யாராலும் தடுக்க முடியாது எனவம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை ஆராய்கிறது

Amnesty_International_Logoபடிப்பினை கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியங்களை மேற்கொள்ள சர்வதேச மன்னிப்புச்சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தாம் எவ்வித முடிவினையும் மேற்கொள்ளவில்லை என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கபட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பதா இல்லையா என்பது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக  சர்வதேச மன்னிப்பச்சபையின் ஊடக அதிகாரி தோமஸ் யோகோம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாணைக்குழுவின் விசாரணைகளில் கலந்து கொள்ளுமாறு கோரும் அழைப்பு எதுவும் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபைக்கும், மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்து வாழும் யாழ். முஸ்லிம்களின் விபரங்கள் நூல் வடிவில் வெளியிடப்படவுள்ளது.

Chavakachcheri_Jumma_Mosqueயாழில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 1990 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெயர்ந்து வாழும் யாழ். முஸ்லிம்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவ்விபரங்களை நூல் வடிவில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவம் யாழ். மானிப்பாய் பெரிய முகைதின் ஜூம்மா பள்ளிவாசல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த மாதமளவில் இந்த நூல் வெளியீடு நடைபெறவள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உலாமாக்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள். கலை இலக்கியவாதிகள் சகலரும் தமது விபரங்களை அனுப்பி வைக்கலாம் என குறித்த பள்ளிவாசல் வட்டாரம் தெரிவித்துள்ளது.

வடமராட்சிக் கிழக்கில் மேலும் 356 குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்பட உள்ளன.

வடமராட்சிக் கிழக்கில் முதற்கட்டமாக 356 குடும்பங்களைச் சோந்த 1092; பேர்  மீள் குடியமர்த்தப்பட்டு உள்ள நிலையில் மேலும் 3500 குடும்பங்களைச் சேர்ந்த 92 ஆயிரம் பேர் விரைவில் மீள் குடியமர்த்தப்பட உள்ளதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

நலன்பரி நிலையங்களிலும் நண்பர்கள் உறவினர் வீடுகளிலும் தங்கியிருக்கும் மக்களே இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கம் மக்கள் மீள்குடியமாத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை.

Univercity_of_Paradeniyaகண்டி பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 கொழும்பு பல்கலைக்கழக்த்திற்கள் பிராவேசிக்க முற்பட்ட ஐந்து பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களைத் தாக்கினர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மூவரைக் கைது செய்து கொழுப்பு நீதிமன்றில் கறுவாத்தோட்ட பொலிஸாhர் ஒப்படைத்திருந்தனர். அவர்கள் மீதான விசாரணைகளின் போது அவர்களை நீதவான் கண்டித்ததன் பின்னர் பிணையில் விடுதலை செய்தார்.

கிளிநொச்சி கமக்காரர் அமைப்புகளுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இன்று கிளிநொச்சி கமக்காரர் அமைப்புகளுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களும், விதை நெல்லும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார அமைச்சர் பசில்ராஜபக்சவினால் இவை வழங்கப்பட்டன. இன்று காலை இந்நிகழ்வு நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புகளுக்கு 101 இரு சக்கர உழவு இயந்திரங்கள் மற்றும். விதைநெல் ஆகியவை வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சா டக்ளஸ் தேவானந்தா மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினையடுத்து யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ். அபிவிருத்தித்திட்ட மீளாய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

வடமாகாண தமிழ் இலக்கிய விழா திட்டமிட்டபடி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

வடமாகாண தமிழ் இலக்கிய விழா ஏற்கனவே திட்டமிட்டபடி ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து மூன்று தினங்களுக்கு கிளிநொச்சியில்  நடைபெறும் என யாழ்.மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இவ்விலக்கிய விழாவுக்கான நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்திலிருந்து திருமறைக்கலாமன்றமும், யாழ்.மத்தியகல்லூரியும் சில நிகழ்ச்சிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.  இவ்விழாவில் ஆளுநர் விருதுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகை தரும் பேராளர்களுக்கு தங்குமிட வசதிகள் உட்பட ஏனைய வசதிகளும் வழங்கப்படவுள்ளதாகவும் மேலதிக விபரங்களை வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கமான 0213266990 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் திருவிழாவிற்குச் சென்று கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த குடும்பத்தினர் விபத்தில் சிக்கினர். இருவர் பலி!

நல்லூர் திருவிழாவிற்கு வந்து விட்டு வானொன்றில் கொழும்பு திரும்பிக் கொண்டிருந்வர்கள் விபத்தில் சிக்கியதில் இருவர் உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயமடைந்தனர். கடந்த சனிக்pகிழமை (Sep 11 2010) அதிகாலையில் சிலாபம் மாரவில பகுதியில் இவ்விபத்து இடமபெற்றுள்ளது.

யாழ். சங்கிலியன் வீதியை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கமலராசன் என்பவரின் குடும்பமே இவ்விபத்தில் சிக்கியது.

இதல் கமலராசனின் மகன் சந்தோஸ் (வயது 05) அவரின் மாமனார் மாணிக்கம் தம்புலிங்கம் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். காயமடைந்த மூவர் மாரவில வைத்தியசாலையிலும், ஏனைய மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கபட்டுள்ளனர்.

கமலராசன் என்பவர் கட்டாரிலில் தொழில் செய்து விட்டு கடந்தசில மாதங்களுக்கு முன்பு இலங்கை திரும்பியிருந்தார். கடந்த 14ம் திகதி இவரது யாழ்ப்பாணம் சங்கிலியன் வீதியிலுள்ள வீட்டில் தங்கியிருந்த போது இவரின் குடும்பத்தினரது 147 பவண் தங்க நகைகள் கள்வர்களால் கொள்ளையிடப்பட்டன. இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகளும் மேந்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே இவ்விபத்தும் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்க்கது.

“இந்தியாவினால் அமைக்கப்படவுள்ள வீடுகள் இடம்பெயர்ந்த மக்களுக்கும் போதுமானவையல்ல, குறைந்த வட்டியுடனான கடனுதவிகள் வழங்கப்படும்” அமைச்சர் டியூ குணசேகர

due-00000.jpgஇந்திய அரசினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், இவை அனைத்துக் குடும்பங்களுக்கும் போதுமானதல்ல என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ குணசேகரா தெரிவித்துள்ளார்.  இதே வேளை இவற்றை நிர்மானித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்டு வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கும், சேதமுற்ற வீடுகளை புனரமைத்துக் கொள்வதற்கும் அரசாங்கம் இலங்கை வங்கியுடன் இணைந்து குறைந்த வட்டியுடனான கடன் வசதிகளை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இக்கடன் வழங்கலுக்காக இலங்கை வங்கி 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும், 4வீத வருடாந்த வட்டியுடன் 10 வருடங்களில் மீளச்செலுத்துக்கூடியதாக அதிக பட்சக்கடனாக இரண்டரை இலட்சம் ரூபாவை  பெற முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விசுவமடு மேற்கில் 409 குடும்பங்கள் மீள்குடியேற்றம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு மேற்குப் பகுதிகளில் 409 குடும்பங்கள் நேற்று (14-09-2010) மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

புதுருக்குடியிருப்பு பிரதேசச் செயலர் பிரிவிலுள்ள 19 கிராம சேவையாளர் பிரிவுகளில் ஒன்றான விசுவமடு மேற்கிலேயே இக்குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளன. 409 குடும்பங்களைச்சேர்ந்த 1301 பேர் இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்கள் வவுனியா செட்டிக்குளம் முகாமில் வசித்து வந்தவர்களாவர்.

வெளிமாவட்டங்களில் உறவினர். நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்கள் எதிர்வரும் 17ம் திகதி குறிப்பிட்ட பிரதேசத்தில் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீள்குடியேற்றப்படுபவர்களில் 445 குடும்பங்களைச் சேர்ந்த  1411 பேர் அடங்குவர் எனவும், இதுவரை முல்லை மாவட்டத்தில் 16ஆயிரத்து 769 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.