கிளிநொச்சி கமக்காரர் அமைப்புகளுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இன்று கிளிநொச்சி கமக்காரர் அமைப்புகளுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களும், விதை நெல்லும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார அமைச்சர் பசில்ராஜபக்சவினால் இவை வழங்கப்பட்டன. இன்று காலை இந்நிகழ்வு நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புகளுக்கு 101 இரு சக்கர உழவு இயந்திரங்கள் மற்றும். விதைநெல் ஆகியவை வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சா டக்ளஸ் தேவானந்தா மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினையடுத்து யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ். அபிவிருத்தித்திட்ட மீளாய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *