கண்டி பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழக்த்திற்கள் பிராவேசிக்க முற்பட்ட ஐந்து பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களைத் தாக்கினர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மூவரைக் கைது செய்து கொழுப்பு நீதிமன்றில் கறுவாத்தோட்ட பொலிஸாhர் ஒப்படைத்திருந்தனர். அவர்கள் மீதான விசாரணைகளின் போது அவர்களை நீதவான் கண்டித்ததன் பின்னர் பிணையில் விடுதலை செய்தார்.