செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கே. கே. எஸ். ரயில் பாதைக்கான வேலைகள் இந்த மாதம் ஆரம்பம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரதப் பாதைக்கான வேலைகள் இந்த மாதம் ஆரம்பமாகும் என இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் காந்த் கூறினார்.

யாழ். மாநகர சபையில் இலங்கை – இந்திய நட்புறவுச் சங்கத்தால் வழங்கப்பட்ட பஸ் வண்டிகளின் திறப்புகளை யாழ். நகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். சண்முகலிங்கன், வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி பொன்னம்பலம், யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் கு. பற்குணராஜா ஆகியோரிடம் இந்தியத் தூதுவர் அசோக்காந்த் நேற்று வெள்ளிக்கிழமை கையளித்தார். அசோக்காந்த் மேலும் பேசும்போது கூறியதாவது:- மக்களின் போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுக்கக் கூடியதான உதவிகளை இந்தப் பிரதேசத்திற்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மன்னார், மடு, தலைமன்னார் பகுதிகளுக்கான புகையிரத வீதிகளையும் எமது அரசு அமைத்துக் கொடுக்கவுள்ளது. இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமாக இங்கே பல்வேறு உதவித் திட்டங்களை நடைமுறைப் படுத்தவுள்ளோம். மீள் குடியமர்ந்த மக்களின் வாழ்வாதார உதவியாக அவர்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் இந்திய அரசு உதவி வருகின்றது.

கிளிநொச்சியில் நாளொன்றுக்கு நால்வர் தற்கொலை செய்கின்றனர். அல்லது தற்கொலை முயற்சியில் இறங்குகின்றனர்.

Stop_Sucideகிளி நொச்சியில் யுத்தத்தின் விளைவாக தற்கொலை முயற்சிகள் அதிகரித்துள்ளன. கிளிநொச்சியில் தற்கொலை முயற்சியிலீடுபடுபவர்களின் தொகை அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மனநல மருத்துவர் மா.ஜெயராஜா தெரிவித்துள்ளார். நாளொன்றிற்கு நான்கு பேர் தற்கொலை அல்லது தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாகவும், யுத்தத்தின் பின்னான விரக்தி இல்லது மனநோய் இதற்கு காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் போது கணவரை இழந்த விதவைகள், காணாமல் போனோரின் மனைவிமார் அதிகமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்திற்கு முன் மனநோயாளிகளாக இருந்த 300 பேரில் நூறு பேர் காணாமல் போயுள்ளனர். யுத்தத்தினால் மனநோயாளிகளாகியுள்ள மற்றும், பாடசாலைகளுக்குச் செல்லாத மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. தற்போது ஐந்நூறு மனநோயாளிகள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ளனர். இவர்களின் இந்நிலைக்கு இவர்களது நெருங்கிய உறவினர்கள் காணாமல் போயுள்ளமையும், இடப்பெயர்வுகளினால் ஏற்பட்ட துன்பங்களுமே காரணம் என இவர்களுடன் உரையாடுகின்ற பொது தெரியவருகின்றது.  மனநோயாளிகள் தங்கவைக்கபட்டுள்ள கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் மாடியிலுள்ள 2ஆம் விடுதியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள பலர் முயன்றுள்ளனர். – இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.

வடமாகாணசபை அலுவலகத்தை நாவற்குழியில் இயங்க வைப்பதற்கு ஆலோசனை.

வடமாகாண சபை அலுவலகத்தை யாழ். நாவற்குழியில் இயக்கலாம் என ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அறிவியல்நகரில் வடமாகாணசபை அலுவலகத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதும் அங்கு மாகாண சபை தற்போது இயங்கவதிலுள்ள சிக்கல்கள் குறித்து மாகாணசபையின் பிரதம செயலாளர்கள், அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கலந்துரையாடல்களின் போது இவ்வாலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபையின் அலுவலங்களை கிளிநொச்சியில் இயங்க வைப்பதிலுள்ள சிக்கல்களை எடுத்துக்கூறி யாழ்ப்பாணம் அல்லது வவனியாவில் அதை அமைக்கலாம் எனவும் ஆலோசனையின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் இறுதி முடிவு எதுவும் இது வரை எட்டப்பட்டவில்லை.

கிழக்கில் ஆழ்கடல் மீன்பிடிக்க அனுமதிப்பத்திரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Fishing_in_Jaffnaகிழக்கு மாகாணத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்பவர்கள்  அனுமதிப்பத்திரம் வைத்திருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள காரியாலயத்தில்  இதற்கான அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகுகளுக்கான அனுமதிப்பத்திர பரிசோதனைகள் வாழைச்சேனை துறைமுக முகாமிலும், பேத்தாழை கடற்படை முகாமிலும் மேற்கொள்ளப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக 800 ஆழ்கடல் மீனவர்கள் மீனவ அடையாள அட்டைகளுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் 500 இயந்திரப்படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மீனவ அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில் 300பேருக்கு மட்டுமே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தமையும், மீன் பிடித்தொழில்களை மேற்கொள்வதில் பல்வேறு நெருக்கடிகள் அவர்களுக்கு ஏறபடுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்படத்தக்கது.

வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு மூன்று மாதங்களாக நிவாரணம் இல்லை.

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக நிவாரண உணவப்பொருட்கள் வழங்கப்படவில்லை. நிவாரண உதவிகளிலேயே தங்கி வாழும் இம்மக்கள் இதனால் பெரும் துன்பங்களுக்குள்ளாகியுள்ளனர். தங்களது பங்கீட்டு அட்டைகள் மீளாய்வு செய்யப்பட்டு இருமாதங்களுக்கு மேலாகியும் நிவாரணம் வழங்கப்படவில்லை என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

வுலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இருபது வருடங்களாக அகதி முகாம்களிலும், உறவினர் மற்றும், வாடகை வீடுகளிலும் தங்கி வாழ்ந்து வருகின்றனர். பல குடும்பங்கள் தொழிலின்றி வருமானமின்றி நிவாரணத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றன. இந்நிவாரணம் வழங்குவதில் எற்பட்டுள்ள தாமதம் காரணமாக இம்மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

பாதுகாப்புக்கு அடுத்தபடியாக கல்விக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு

president.jpgபாது காப்புக்கு அடுத்தபடியாக அரசாங்கம் அதிகளவு நிதியை கல்விக்கே செலவிட்டு வருவதாகவும், மில்லியன்களன்றி பில்லியன் கணக்கில் நிதியினை ஒதுக்கி வருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.கல்வித்துறையை முன்னேற்றுவதில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி; கடந்த வருடத்தில் பெருமளவு ஆசிரியர்களை நாடளாவிய ரீதியில் புதிதாக நியமித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

எல்லாவற்றிற்கும் மேலானது மன மகிழச்சியே. எமது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குவதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம் எனவும் அவர் தெரிவித்தார். கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் 350 இலட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள நீச்சல் தடாகத்தினை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகை யிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, சுசில் பிரேம்ஜயந்த பிரதியமைச்சர்கள், மேர்வின் சில்வா, பண்டு பண்டாரநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:- திடசங்கற்பமும் அர்ப்பணிப்பும் இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு இந்த நீச்சல் தடாகம் சிறந்த உதாரணம். இந்தப் பாடசாலையின் அதிபரான லபுதலே சுதஸ்ஸனதேரர் தமது காரை லொத்தரில் விற்று இந்த நீச்சல் தடாகத்தை நிர்மாணிக்க உதவியுள்ளார்.

அமைச்சர் பீரிஸ¤க்கு எதிரான – நம்பிக்கையில்லா பிரேரணை 107 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு

gl.jpgவெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ¤க்கு எதிராக பிரதான எதிர்க் கட்சியான ஐ. தே. க. கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 107 மேலதிக வாக்குகளால் நேற்று தோற்கடிக்கப்பட்டது. இப்பிரேரணைக்கு எதிராக 139 வாக்குகளும் ஆதரவாக 32 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இப்பிரேரணைக்கு எதிராக ஆளும் தரப்பினருடன் இணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். இப்பிரேரணை மீதான வாக்கெடுப்பு வேளையில் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு, மற்றும் ஐ. தே. க.வின் பல எம்.பிக்களும் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை.

இப்பிரேரணைக்கு ஆதரவாக ஐ. தே. க. எம்.பி.கள் வாக்களித்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விவகாரம் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்கவென நிபுணர் குழுவை நியமிப்பதைத் தவிர்ப்பதற்கும், ஜீ. எஸ். பி. பிளஸ் நிவாரணம் தொடர்ந்தும் கிடைப்பதற்கு வழி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தவறியுள்ளார்.

அதனால், அவர் அமைச்சராக தொடர்ந்து செயலாற்றுவதில் இச்சபை நம்பிக்கை இழந்துள்ளதெனக் குறிப்பிட்டு ஐ. தே. க. எம்.பிக்களான ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்கா, லக்ஷ்மன் கிரியெல்ல, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் கையெழுத்திட்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபைக்குக் கொண்டு வந்தனர்.

இப்பிரேரணை மீதான விவாதத்தை எதிர்த் தரப்பில் கம்பஹா மாவட்ட எம்.பி. ஜோன் அமரதுங்க தொடக்கி வைக்க ஆளும் கட்சி சார்பில் அமைச்சர் மைத்திரபால சிறிசேன விவாதத்தை ஆரம்பித்தார். இவ்விவாதத்திற்கு ஆளும் தரப்பில் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் பதிலளித்து உரையாற்றினார். இப்பிரேரணை மீதான விவாதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழரசு கட்சிகளின் எம்.பிக்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.

இப்பிரேரணை மீதான விவாதம் பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமாகி சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றது.

பொன்சேகாவின் எம்.பி. பதவி வெற்றிடம்; பாராளுமன்ற செயலாளர் அறிவிப்பு

sarathfonsekasad.jpgஜனநாயகத் தேசிய கூட்டமை ப்பு கொழும்பு மாவட்ட எம். பி. சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தம்மிக தசனாயக்க நேற்று (7) தேர்தல் ஆணை யாளருக்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 66-டீ சரத்தின் பிரகாரம் இந்த பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். மேற்படி சட்டத்தின்64-ளி சரத்தின் படி பாராளுமன்ற பதில் செயலாளர் இதனை அறிவித்து ள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவு க்கு 30 மாத கடூழிய சிறைத்தண் டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதற்கு முப்படைகளின் தளப தியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் 29ம் திகதி அங்கீகாரம் வழங்கினார். இதனடிப்படையில், பொன்சேகாவுக்கு எதிரான தண்டனை 30 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டதோடு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சரத் பொன்சேகாவின் வெற்றிடத்திற்கு கொழும்பு மாவட்டத்தில் இருந்து ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு பட்டியலில் அடுத்ததாக உள்ள லக்ஷ்மன் நிபுனஆரச்சி நியமிக்கப்பட உள்ளதாக அறியவருகிறது.

ஆனால் இதனை ஏற்காத ஜேவிபி, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக நீதிமன்றம் செல்கிறது. “சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டது சட்ட விரோத செயல்” என, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ராணுவ நீதிமன்றம் பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் உறுப்பினர்களின் பதவி பறிப்பு போன்றவற்றில் இறஙகுவது ஆபத்தானது என்றும், இதனை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது ஜேவிபி

இதேவேளை, சரத் பொன்சேகாவின் எம். பி. பதவி வெற்றிடமாக இருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் அறிவித்திருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் பிரியங்கா ஜயரட்ன, அரசியலமைப்பின் பிரகாரம் சட்டபூர்வமாகவே பாராளுமன்ற செயலாளர் அறிவித்துள்ளதாகக் கூறினார்.

இலக்கியத்துக்கான நோபல் – பெரு நாட்டு எழுத்தாளர் வர்காஸ் லோசாவுக்கு

00mario-vargas-llosa.jpgபெரு நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசாவுக்கு 2010ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. பெரு நாட்டு அதிபர் தேர்தலில் முன்பு போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் லோசா. சிறந்த எழுத்தாளர், பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஸ்பானிஷ் மொழி  பேசும் இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவர் லோசா.

74 வயதாகும் லோசாவை வெகுவாகப் பாராட்டியுள்ள நோபல் பரிசுக் கமிட்டி, அரசியல் அதிகாரம் குறித்த அவரது அலசல், தனி நபர்கள் அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடும் நிலை, அதில் அவர்கள் அடையும் தோல்விகள், புரட்சிகள் குறித்து மிகுந்த ஞானத்துடன் எழுதி வருபவர் லோசா என புகழாரம் சூட்டியுள்ளது. மேலும் 60களிலும், 70களிலும் லத்தீன் அமெரிக்க இலக்கியம் பெரும் புகழ் பெறவும், பிரபலம் அடையவும் வித்தாக அமைந்தவர்களில் மிக முக்கியமானவர் லோசா என்றும் புகழ்ந்துள்ளது.

லோசா, 30க்கும் மேற்பட்ட நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில் புகழ் பெற்றவை கான்வர்சேஷன் இன் கதீட்ரல், தி கிரீன் ஹவுஸ் ஆகியவையாகும். 1995ம் ஆண்டு இவருக்கு ஸ்பானிஷ் மொழி இலக்கிய வட்டாரத்தில் அளிக்கப்படும் உயரிய விருதான கார்வன்டஸ் பிரைஸ் கிடைத்தது.

பெருவின் அரிக்யூபாவில் பிறந்தவர் லோசா. இவரது பெற்றோர் விவாகரத்து வாங்கியதால் பொலிவியாவில் தனது தாத்தா, பாட்டியுடன் வளர்ந்தார். பின்னர் 1946ல் மீண்டும் பெரு திரும்பினார்.அங்கு ராணுவப் பள்ளியில் சேர்ந்தார். பிறகு லிமா மற்றும் மாட்ரிட் நகர்களில் இலக்கியம் மற்றும் சட்டம்  பயின்றார். 1959ல் பாரீஸுக்கு இடம் பெயர்ந்தார். மொழி ஆசிரியராகப் பணியாற்றினார். ஏஎப்பி எனப்படும் ஏஜென்சி பிரான்ஸ் பிரஸ்ஸேவில் செய்தியாளராகப் பணியாற்றினார். பிரான்ஸ் டிவியிலும் வேலை  பார்த்துள்ளார். அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இவர் ஆசிரியராகப் பணியாற்றியவர்.இப்போது கூட பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராக இருக்கிறார்.

1990ல் பெரு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அல்பர்டோ பிஜிமோரியிடம் தோல்வியுற்றார். பின்னர் 1994ம் ஆண்டு ஸ்பானிஷ் அகாடமியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த எழுத்தாளராக மட்டுமல்லாமல் சாதாரண மக்கள் மீதான அடக்குமுறைகளை தைரியமாக தட்டிக் கேட்கும் புரட்சிவாதியாகவும் திகழ்பவர் லோசா என்பது அவருக்கான கூடுதல் சிறப்பாகும்

மன்னாரில் கண்ணிவெடியகற்றும் பணிகளில் விதவைப்பெண்கள்!

LandMine_Signவன்னியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் அதிகளவான பெண்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற நிலையில், மன்னார் மாவட்டத்தில் கணவரை இழந்த விதவைப் பெண்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.எவ்.பி செய்திச்சேவை இத்தகவலை வெளியிட்டுள்ளது. வறுமை காரணமாகவே இப்பெண்கள் ஆபத்தான இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 04ஆம் திகதி சர்வதேச ‘நிலக்கண்ணி வெடி’ விழிப்புணர்வு International Day for Landmine Awareness and Assistance -புன்னியாமீன்

கிளிநொச்சியில் கண்ணிவெடியகற்றும் வாகனம் தட்புரண்டதில் ஆறு பெண் பணியாளர்கள் படுகாயமடைந்தனர்! 

 கண்ணிவெடி அகற்றும் பணியில் பெண்கள் )

மாதம் ஒன்றுக்கு 200 டொலர்களை அவர்கள் ஊதியமாகப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு தொழில்களை விடவும் இத்தொழில் அதிகளவு வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடிவதாக அப்பெண்கள் தெரிவிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. போரினால் வடக்கு கிழக்கில் 90 ஆயிரம் பெண்கள் கணவரை இழந்துள்ளதாகவும். இளம் வயதுப் பெண்கள் பலருக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்திற்காக  இவ்வாறான ஆபத்தான தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News:

வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளிலும் வெடிபொருட்களின் ஆபத்து காணப்படுகின்றது.

முன்னாள் போராளிகளை கண்ணி வெடியகற்றும் பணிகளில் ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்.

இதுவரையில் 2,91,198 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

கண்ணிவெடி அகற்றும் போது பிரெஞ்சு அதிகாரி மரணம்

கண்ணிகள் அகற்றும் பணியில் வடக்கில் இராணுவம் தீவிரம் – 1100 இராணுவ பொறியியலாளர், 7 அரச சார்பற்ற நிறுவனங்கள் முழுமையாக ஈடுபாடு

வடக்கு மீள்குடியமர்வு, கண்ணி வெடியகற்றல் சீனா ரூபா 50 மில். உபகரணங்கள் அன்பளிப்பு

அவுஸ்திரேலியா நிலக்கண்ணிகளை அகற்ற தன்னியக்க இயந்திரங்கள் அன்பளிப்பு!

கண்ணிவெடி அகற்றும் பணியை துரிதப்படுத்த மேலும் 5 நவீன இயந்திரங்கள்

கண்ணிவெடி அகற்றும் பணிக்கு 5மில்.டொலர்: யு.என்.எச்.சி.ஆர்.இணக்கம் – ஜெனீவாவில் பேச்சு

கண்ணிவெடிகளின் மேல் அப்பாவிகளை தள்ளிவிட நாம் தயாரில்லை – ஜனாதிபதி

கண்ணி அகற்றும் பணிக்கு அமெ. மேலும் நிதி உதவி – 6 மில்லியன் டொலர் நன்கொடை

கண்ணிவெடி அகற்றல்; 25 மோப்ப நாய்களுக்கு கண்டியில் பயிற்சி

கண்ணிகள் அகற்றும் பணிக்கு 500 இந்திய இராணுவத்தினர்

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு ஜப்பான் நிதியுதவி வழங்கும் – ஜனாதிபதியிடம் யசூசி அகாஷி உறுதி

கண்ணி வெடிகளை அகற்றும் விசேட இந்திய குழுவொன்று இலங்கைக்கு வருகை