செய்திகள்

செய்திகள்

செய்திகள்

‘யாழ். மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்குகொள்கிறேன்’ – அமைச்சர் டக்ளஸ்

a-9-road.jpgஆனை யிறவு மீட்பு மற்றும் ஏ-9 வீதி பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்தது நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இவ்வாறு ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஆணையிறவைப் படையினர் கைப்பற் றியது தொடர்பாகவும் ஏ-9 பாதை முற்று முழுதாக படையினரால் விடுவிக்கப்பட்டது தொடர்பாகவும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்; கடந்த மாதம் யாழ். சென்று அங்கு மக்கள் குறைகளைத் தீர்க்க தினசரி நூற்றுக்கும் அதிகமான மக்களைச் சந்தித்து வருகிறேன். நான் மீண்டும் கொழும்பு சென்றுவிடுவேனோ என எண்ணும் மக்கள் தினசரி முண்டியடித்துக் கொண்டு என்னைப் பார்க்க வருகின்றனர். அவர்களிடம் நான் கூறியிருந்தேன்; இனிமேல் நான் கொழும்பு செல்வதானால், ஏ-9 பாதை திறக்கப்பட்ட பின்னரே செல்வேன். எனத் தெரி வித்திருந்தேன். நான் கூறிய கூற்று இன்று உண்மையாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சி தருகிறது.

ஆனையிறவு கைப்பற்றப்பட்டு ஏ-9 பாதை திறக்கப் படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். அந்த மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன். எனவும் தெரிவித்தார்.

பலஸ்தீன மக்களின் விடுதலைக்கு ஆதரவாக அனைத்து இனமக்களும் ஒன்றுபடவேண்டும் – ரவூப் ஹக்கீம்

rauf_hakeem.jpgஇஸ் ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டிப்பதோடு , பலஸ்தீன மக்களின் விடுதலைக்கு ஆதரவாக சகல இன மக்களும் கட்சி பேதங்களை மறந்த ஒட்டு மொத்தமான ஆதரவை வழங்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மெரைன் கிறான்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மேலும் அவர் உரையாற்றுகையில்; பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இங்கு முன்னெடுக்கப்படும் ஆதரவு போராட்டத்துக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்படுத்தியுள்ள இக் கூட்டமைப்பு தொடர்ந்து செயற்படவேண்டும். இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது முழுமையான ஆதரவைத் தொடர்ந்தும் நல்கும்.

ஹிட்லருக்கு எதிராக செயற்பட்ட நாடுகளுக்கு முன்னுரிமை அளித்து ஐ.நா சபையில் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகள் இன்று இஸ்ரேலின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களைத் கண்டிக்காமல் இருக்கின்றன. அந்தளவுக்கு ஐ.நா பாதுகாப்பு சபை இன்று கையறுநிலையில் இருக்கிறது. அதேநேரம் அரபுலகில் உள்ள பல நாடுகள் இந்த ஏகாதிபத்திய நாடுகளின் பிடியில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதையும் நாம் காண்கிறோம். பலஸ்தீனின் காஸாப் பிரதேசம் ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதற்குப் ஈரானிய அரசின் ஆதரவு இருக்கிறது என்ற பார்வையில் தான் பலஸ்தீனுக்கு எதிராக தாக்குதல் நடைபெறுகிறது. பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்துக்கு அவர்களது விடுதலைக்காக இலங்கையில் உள்ள தமிழ் , சிங்கள ,முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டும் உதவவேண்டும் என்ற முனைப்புடனேயே முக்கிய அரசியல் கட்சிகளும் இணைந்து பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக ஆதரவை வெளிப்படுத்துகிறோம்.பலஸ்தீன மக்களின் விடுதலை என்பது முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விடயமல்ல. ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் விடிவுக்காகவும் , அவர்களுக்கான நீதி, நியாயங்களுக்காகவும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்ற செய்தியை உலகுக்கு இங்கு வெளிப்படுத்துகிறோம்.

இஸ்ரேலின் இத்தாக்குதல்களை வாய்மூடி மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்கும் உலக வல்லரசுகளும் , ஏனைய நாடுகளும் இஸ்ரேலிய இராணுவ பலத்தையும், காஸாப் பிரதேசத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு இயங்குகின்ற ஹமாஸ் அரசாங்கத்தையும் ஒன்றாக சமநிலைப்படுத்திப்பார்க்க முடியாது. அண்மையில் இலங்கை அரசாங்கம் கூட இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் போது ஹமாஸ் இயக்கமும் தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு அறிக்கையை விடுத்திருந்தது. இதனை நாம் எந்த விதத்திலும் நியாயப்படுத்தமுடியாது.

ஹமாஸின் தாக்குதல்களையும் நிறுத்தச் சொல்பவர்கள் கடந்த எட்டு வருட காலத்தில் இஸ்ரேலில் இறந்தவர்களின் தொகை 19 பேர் மட்டும் தான் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். ஆனால், கடந்த 10 நாட்களுக்குப்பின் இஸ்ரேலின் தாக்குதல்களினால் பலஸ்தீனத்தில் 700 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருக்கின்றார்கள். இவர்களில் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் அதிகம் அடங்குகின்றனர். ஐ.நா. சபையின் கீழ் இயங்கும் ஒரு பாடசாலை மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இத்தகைய இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு எதிராகவும், பலஸ்தீனருக்கு ஆதரவாகவும் போராடும் எமது முயற்சி தொடர்ச்சியாக நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் எனவும் ஹக்கீம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கும், படையினருக்கும் இடையே தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பலியாகி விடாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் – ஐ.நா. கோரிக்கை

un-logo.jpgவிடு தலைப் புலிகளுக்கும்,  படையினருக்கும் இடையே நடந்து வரும் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பலியாகி விடாமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. அகதிகள் ஏஜன்சியின் செய்தித் தொடர்பாளர் ரான் ரெட்மான்ட் கூறுகையில், இலங்கையில் தற்போது கடும் சண்டை நடந்து வரும் பகுதிகளில் அப்பாவித் தமிழர்கள் பலியாகி விடாமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பாவிகளுக்கு உரிய பாதுகாப்பினை இலங்கை அரசு அளிக்க வேண்டும். அப்பாவிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 24 அப்பாவிகள் சண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இது கவலை தருகிறது.

கிழக்கு மாவட்டங்களான திரிகோணமலை மற்றும் மட்டக்களப்பிலிருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் மீண்டும் தங்களது பகுதிகளுக்கு திரும்பி வருகின்றனர்.ஆனால் தாங்கள் முன்பு போல சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்றும், ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் இந்த மக்கள் குறை கூறுகின்றனர். இவ்வாறு திரும்பி வந்த 50 குடும்பங்கள் அரசாங்கத்தின் கெடுபிடிகள் காரணமாக மட்டக்களப்பிலிருந்து மீண்டும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். மற்றவர்களும் கூட தங்களது வீடுகளில் தனித்து தூங்க முடியாமல், மொத்தமாக சேர்ந்து தங்கும் அவலம் உள்ளது.

இப்பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் உரிய பாதுகாப்பு தரப்பட வேண்டியது அரசின் கடமையாகும். இதேபோல, தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பி வந்த நான்கு அகதிகள் திரிகோணமலை மாவட்டத்தில் கடத்தப்பட்டுள்ளனர். இது கவலை தருகிறது. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்திலிருந்து 1500 அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். இது வரும் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மறு வாழ்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.  இலங்கையின் வடக்கில் நடந்து வரும் சண்டையை ஐ.நா. அகதிகள் ஏஜென்சி உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்கு இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றார் அவர்.

தொலைபேசியூடாக கொலைமிரட்டல் ஐ.தே.க. எம்.பி. தயாசிறி சபையில் முறையீடு

phone.jpgதொலை பேசி ஊடாக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர நேற்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (09) சிறப்புரிமை பிரச்சினையொன்று முன்வைத்து பேசும்போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறினார்.  “நேற்று (08) இரவு தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலம் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

தொலைபேசியூடாக ஆண் குரலில் பேசிய ஒருவர், நான் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியிலும் சரி அதிகம் கத்துவதாகவும், அரசாங்கத்துக்கு எதிராக பேசுவதை நிறுத்தாவிட்டால் லசந்தவிற்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் ஏற்படுமென்றும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார். அத்துடன், இதுதான் முதலும், இறுதியுமான எச்சரிக்கை என்றும் கூறிவிட்டு பேசியவர் தொலைபேசி அழைப்பையும் துண்டித்துவிட்டார். இன்று அரசாங்கத்துக்கு எதிராக பேசுவது உயிரை பறிக்கும் அளவுக்கு குற்றமாகியுள்ளது. எனவே, இந்த நிலைமைகளை கவனத்தில் கொண்டு எனக்குரிய பாதுகாப்பை அதிகரித்து தருமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், எனது கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் அவர் கூறினார்.

இதேநேரம், இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தெரிவித்தார்.

சக்தி/சிரச நிலையம் மீதான தாக்குதல்; கோட்டே நகரசபை ஐ.தே.க உறுப்பினர் சந்தேகத்தில் கைது

sirasa.jpgதெபா னம, பன்னிப்பிட்டிய, சிரஸ-சக்தி நிறுவனத்தின் மீதான தாக்குதலுடன் தொடர் புடைய நபரென சந்தேகிக்கப்படும் கோட்டே நகரசபை ஐ.தே.க உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை க்குட்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் டிபெண்டர் வாகனமொன்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹரகம பொலிஸார் மேற்படி சந்தேக நபரை நாவல பகுதியிலிருந்து கைது செய் துள்ளனர். மேற்படி நபர் யார் என்பது பற்றி பொலிஸார் வெளியிடவில்லை. இருப்பினும் தாக்குதலுக்கு யார், யார் வந்தார்கள் என்பது பற்றி சந்தேக நபரிடம் விசாரணைகளை நடத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட டிபெண்டர் வாகனம் மஹரகம பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பலஸ்தீனம் இஸ்ரேல் உடனடி யுத்த நிறுத்தமே இலங்கையின் நிலைப்பாடு -அமைச்சர் போகொல்லாகம

bogolagama-1612.jpgபலஸ் தீனத்தின் மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டு அங்கு உடனடியாக யுத்தநிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கம் வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். பாராளுமன்றத்தில் (09) வெள்ளிக்கிழமை காலை ஜே.வி.பி.யினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் அரசு நடத்திவரும் இராணுவ நடவடிக்கையால் இதுவரை 500 க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பாரிய இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கையெடுத்துள்ளதென ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்த ரோஹித போகொல்லாகம மேலும் கூறியதாவது;  காஸா மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் மிகவும் கவனத்துடன் ஆராய்ந்து வருகின்றது. காஸா மீதான இராணுவ நடவடிக்கையால் பாரிய மனித அழிவுகள் இடம்பெற்றிருப்பது குறித்து அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அங்கு யுத்தம் நிறுத்தப்பட்டு சமாதானம் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே இலங்கையரசின் நிலைப்பாடு.

இஸ்ரேல் அரசு நடத்திவரும் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு உடனடியாக யுத்தநிறுத்தமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென இலங்கையரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பலஸ்தீனத்தில் இடம்பெற்று வருகின்ற வன்முறைகளை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு பூரண ஒத்துழைப்பு வழங்குமென ஐ.நா.வின் செயலரிடம் உறுதி வழங்கியுள்ளோம

விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு நியமிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு யாழ். குடாவில் தற்காலிக நியமனம்

teach.jpgவடக்கு மாகாணத்தில் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நிரந்தர நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு யாழ். மாவட்டப் பாடசாலைகளில் தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் யாழ். வலயக்கல்வி அலுவலகத்திலுள்ள மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளன. தற்காலிகமாக எதிர்வரும் மூன்று மாதங்கள் வரை கடமையாற்றுமாறு இவர்கள் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கின்றனர். வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு முதலாம் கட்டமாக 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 287 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2 ஆம் கட்டமாகவும் ஒரு தொகுதி பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இந்த 2 கட்ட நியமனத்தின் போதும் விடுவிக்கப்படாத பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒரு மாதகாலத்தின் பின்னர் அங்கு சென்று தமது கடமைகளைப் பொறுப்பேற்குமாறு கேட்கப்பட்டிருந்தனர். ஆனால், ஒன்றரை மாதங்கள் கடந்திருக்கின்ற நிலையில், மூன்று மாதங்கள் வரை யாழ்.மாவட்ட பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கான தற்காலிக நியமனக் கடிதங்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கத

புலிகளின் நான்காவது விமான ஓடுபாதையை இராணுத்தினர் கைப்பற்றினர் ! -இராணுவ பேச்சாளர்

_army.jpgமுல் லைத்தீவில் முள்ளியவளைக்கு வடமேற்கே சுமார் ஆறரை கிலோ மீட்டர் தொலைவில் விடுதலைப்புலிகளின் நான்காவது விமான ஓடுபாதையை இராணுத்தினர் கைப்பற்றியிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இரண்டரை கிலோ மீற்றர் நீளமும் நூறு மீற்றர் அகலமும் கொண்ட இப்பாதை இன்று சனிக்கிழமை காலை படையினரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்ததாவது:  இந்த ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் நிறுத்தி வைப்பதற்காகன ஷெட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களில் ஒரு இடத்தில் விமானக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதிகளில் பெருமளவிலான கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதால் இராணுவத்தினர் மெதுவாக முன்னேறி வருகின்றனர் என்றார்.
 

வடக்கு ,கிழக்கு விடுதலைப் போராட்டம் மலையக மக்களின் விடிவுக்கு உறுதுணையாக அமையும் – கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீகாந்தா

sl-parlimant.jpgஅர சாங்கத்தின் ஒட்டுண்ணிகளாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் மலையகக் கட்சிகளை மலையக மக்கள் தூக்கியெறியும் போது தான் அம்மக்களுக்கு விடிவு கிடைக்குமென்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான என். ஸ்ரீகாந்தா, மலையக மக்களின் விடிவுக்கு வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டம் உறுதுணையாக இருக்குமென்றும் கூறினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடற்ற மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கல் சிறப்பேற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும் போதே ஸ்ரீகாந்தா இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; இந்த நாட்டில் மட்டுமல்லாது ஆசிய ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் மிக மோசமாக வஞ்சிக்கப்பட்ட மக்கள் பிரிவு அல்லது சமூகமென ஒன்றை அடையாளம் காட்டுவதென்றால் அது மலையக தமிழ் தொழிலாள வர்க்கத்தினராகவே இருக்கும். அமெரிக்காவுக்கு கப்பல் மூலம் வரும் நெருக்குவாரங்களுக்கு மத்தியில் ஏற்றிச் செல்லப்பட்ட ஆபிரிக்க நீக்ரோகளை அடுத்ததாக எமது மலையக மக்களை குறிப்பிடலாம். மோசமாக வஞ்சிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட சமூகம் இது.

1948 ஆம் ஆண்டு மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் அம்மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைத்ததை அடுத்தே மலையக கட்சிகள் பாராளுமன்றத்துக்கு வந்தன. மலையக கட்சிகள் அரசாங்கத்தின் ஒட்டுண்ணிகளாக இருந்து கொண்டு மலையக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். மலையக மக்கள் என்று இவ்வாறான கட்சிகளை தூக்கி எறிகின்றனரோ அன்று தான் அந்த மக்களுக்கு விடிவு கிடைக்கும்.  அத்துடன் வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டமானது மலையக மக்களின் விடிவுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

எரிபொருள் நிலைய உரிமையாளர் சுட்டுக் கொலை

gun_.jpgகாத் தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாப் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய மொன்றின் உரிமையாளர் நேற்று அதிகாலை இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

தம்பிராசா ரவீந்திரன் (50) எனப்படுமிவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்தபோது மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத இருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இவரது சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.