முல் லைத்தீவில் முள்ளியவளைக்கு வடமேற்கே சுமார் ஆறரை கிலோ மீட்டர் தொலைவில் விடுதலைப்புலிகளின் நான்காவது விமான ஓடுபாதையை இராணுத்தினர் கைப்பற்றியிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இரண்டரை கிலோ மீற்றர் நீளமும் நூறு மீற்றர் அகலமும் கொண்ட இப்பாதை இன்று சனிக்கிழமை காலை படையினரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்ததாவது: இந்த ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் நிறுத்தி வைப்பதற்காகன ஷெட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களில் ஒரு இடத்தில் விமானக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதிகளில் பெருமளவிலான கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதால் இராணுவத்தினர் மெதுவாக முன்னேறி வருகின்றனர் என்றார்.